கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தமிழியற் கட்டுரைகள்  
 

எஸ். சிவலிங்கராஜா பி.ஏ. (சிறப்பு), மயிலங்கூடலூர் பி. நடராசன்

 

தமிழியற்
கட்டுரைகள்

-

தொகுப்பாசிரியர்கள் :
எஸ். சிவலிங்கராஜா பி.ஏ. (சிறப்பு)
துணைவிரிவுரையாளர், தமிழ்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்



மயிலங்கூடலூர் பி. நடராசன்
பொறுப்பு அலுவலர்,
கல்விவள நிலையம் - நல்லூர்
யாழ். இந்துக் கல்லூரி.


வெளியீடு
ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
235, காங்கேன் துறை வீதி
யாழ்ப்பாணம்


முதற் பதிப்பு
யூலை 1982

அச்சுப்பதிப்பு :
ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம்
63, B.A தம்பி ஒழுங்கை
யாழ்ப்பாணம்.

ESSAYS ON TAMILOLOGY
(Thamizhiyat kaddutaikal)

Editors :
S. Sivslingarajah B.A. (Hons)
Asst. Lecturer, Department of Tamil
University of Jaffna

Mailangoodaloor P.Nadarajan,
O.I.C, R.C.L.D – Nallur,
Ji Jaffna Hindu College.

விலை ரூபா : 19.00 பதிப்புரிமை


அணிந்துரை


பேராசிரியர் க. கைலாசபதி
கலைப்பீடாதிபதி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.



அண்மைக் காலத்திலே ஆய்வுலகிற்கு அறிமுகமான சொற்களில் ஒன்று தமிழியல் என்பதாகும். தமிழ்க் கல்வியில் ஏற்பட்ட புதிய பரிமாணங்களையும் நோக்கு நிலைகளையும் தொகுத்துக் காட்டும் வகையில் அமைத்தது அச் சொல். இலக்கியம், இலக்கணம், தருக்கம், சாத்தியம் முதலியனவே பல நூற்றாண்டுகளாய்த் தமிழ்க் கல்வியின் பிரதான கூறுகளாய் விளங்கின. மரபுவழித் தமிழறிஞர்களில் ஒருவராய்த் திகழ்ந்த கோப்பாய்ச் சபாபதி நாவலர், திராவிடப் பிரகாசிகை (1899) என்னும் நூலிலே இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல் என்பவற்றையே சிறப்பாக விவரித்திருக்குமாற்றை நோக்குவோர்க்கு இவ்வுண்மை தெளிவாகும். எனினும், சென்ற நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்து மேனாட்டுக் கல்விமுறை நம்பவரிடையே பரவிவந்ததன் பயனாகவும் பொதுவாகவே உலகில் வேகமாகப் பெருகிவரும் அறிவியல் துறைகளின் செல்வாக்குத் தமிழ்க் கல்வியையும் பாதித்தமையாலும், தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்ந்த சில அரசியல், சமூக, கலாசார இயக்கங்களின் விளைவாகவும் தமிழ்க் கல்வியின் பரப்பும் எல்லைகளும் விரிவடையத் தொடங்கின. பாரம்பரியக் கல்லூரியில் இடம்பெற்ற இலக்கியம், இலக்கணம், சாத்திரம் என்பன மட்டுமே அன்றி, தொல்பொருளியல், வரலாறு, புவியியல், மானிடவியல், சமூகவியல், மொழியியல், நாட்டார் வழக்கியல், உளவியல், பொருளியல் முதலியனவும் வௌ;வேறு அளவிலும் வகையிலும் தமிழ் ஆராய்ச்சிக்கு இன்றியாதனவாயின. நமது கல்விக் கொள்கையிலம் நடைமுறையிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்பாகவும் இது அமைந்தது எனலாம். உதாரணமாக, ஓர் இலக்கிய நூலின் காலத்தைக் கணிப்பதற்கு அந்நூல் பற்றிய ஆழமான அறிவு மாத்திரமன்றி மொழி வரலாறு, கல்வெட்டாராய்ச்சி, அரசியல், சமூக, சமய வரலாறு, ஒப்பியல் ஆய்வு முதலியனவெல்லாம் அவசியமாயுள்ளது. அது போலவே, ஒரு நூலின் மூலபாடத்தை நிர்ணயிப்பதற்கு அந் நூற் பயிற்சி மட்டுமேயன்றி, தொல்லெழுத்தியல், கல்வெட்டியல், மொழியியல், அரசியல் - சமுதாய வரலாறு, சமய வரலாறு, இலக்கியத்திறனாய்வு முதலியற்றின் அறிவோடு, பிறமொழிப் பயிற்சியும் முறையியல் உயர்வும் முக்கியமானவையாயுள்ளன. சுருக்கக் கூறின், பரந்த நோக்கும் பல்துறை பயிற்சியும் ஆராய்ச்சி நெறிமுறையும் தமிழ் நூற் புலமையுடன் ஒருங்கிணையும் போது தமிழியல் தழைத்தோங்குகிறது.

தமிழியலின் பரிணாமத்திலே இலங்கைத் தமிழ் அறிஞர்களின் பங்களிப்பு விதந்துரைக்க வேண்டிய அளவுக்கு விசேடமானது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இலங்கையில் இருந்துகொண்டும் தமிழ் நாட்டில் சில காலம் வதிந்தும் (அங்கேயே தமது வாழ் நாளிற் பெரும் பகுதியைக் கழித்தும்) ஈழத்தவர் பலர் தமிழியற்றுறைகளுக்குத் தனித்துவமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். மூலபாடத்திறனாய்வை முதலாவதாக முறையியல் அடிப்படையிற் செய்து புது நெறி வகுத்த சி.வை. தாமோதரம்பிள்ளையிலிருந்து, கல்வெட்டியல்சார் மொழியாராச்சியில் முன்னோடியாய் விளங்கிய பேராசிரியர் க. கணவதிப்பிள்ளை வரையிலும் அவர்களுக்குப் பின்னரும்ட ஈழத்தவர் சிலரின் பணிகள் பாதை சமைக்கும் தன்னையனவாய் இருந்து வந்திருக்கின்றன. அவர்களிற் சிலர் பற்றி இந் நூலிலுள்ள கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.

இலங்கைத் தமிழிலக்கியம் தனக்கெனச் சில சிறப்பியல்புகளைக் கொண்டது என்ற எண்ணமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுபகுதியிலிருந்தே மெல்ல மெல்ல உருவாகி வந்துள்ளது. அவ்வெண்ணம் முதலில் நல்லைநகர் ஆறுமுகநாவலரின் கண்டனச் குரலிலே கேட்கிறது. அதன் தெளிந்த ஒலியை இன்று பண்தமணி சி. கணபதிப்பிள்ளையின் எழுத்துக்களிற் கேட்கிறோம். தோடக்கத்திலே இத்தனித்துவம் சமயத்திலும் கலாசாரத்திலுமே முனைப்பாகத் தென்பட்டதெனலாம். இந் நூற்றாண்டிலே முனைப்பாகத் தென்பட்டதெனலாம். இந் நூற்றாண்டிலே குறிப்பாக முப்பதுகளிலிருந்து - கலை இலக்கியத்திலே தனிச்சிறப்பியல்புகளை அழுத்தம் பெற்று வந்திருக்கின்றன. இன்று, புதுக்கவிதைகளிற்கூடத் தமிழகத்து ஆக்கங்களுக்கும் ஈழத்துப் படைப்புகளுக்கும் சிற்சில வேறுபாடுகளைக் கண்டு கொள்ளலாம் என்று திறனாய்வாளர் கூறுவர். இலக்கிய வளர்ச்சியின் இயக்கவில்லை உணர்பவர்களுக்கு இச் செய்தி வியப்பளிக்க மாட்டாது. அதே வேளையில் தமிழில் ஆய்வு, இலக்கிய சிரு~;டி திறனாய்வுப் போக்கு இவற்றிலே தவிர்க்கவியலாதவாறு தமிழகத்திலும் இலங்கையிலும் சில பொதுப்பண்புகள் உருவாகி வளர்வதையும் நாம் கண்டு கொள்ளலாம். இவற்றையெல்லாம் தமிழ்க் கல்வியில் ஈடுபட்டுள்ள ஆசிரியரும் மாணாக்கரும் மாத்திமன்றி, ஓரளவிற்றுத் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் அக்கறைகொண்ட பொது மக்களும் அறிந்து கொள்ளுதல் விருப்பத்தக்கதும் வேண்டப்படுவதுமாகும். பொதுசன சாதனங்களின் பெருக்கம் இத்தகைய அறிவின் பரம்பலுக்கும் நிச்சயம் உதவ வேண்டும்.

முதற் பகுதியில் உள்ள கட்டுரைகளை கவிதை, புனைகதை, நாடகம் ஆகிய துறைளிலே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஏற்பட்டு வந்திருக்கும் வளர்ச்சிகளையும் செல் நெறிகளையும் அருகருகே வைத்து விவரித்துக்காட்ட, இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகள் தமிழியலிலும் இலக்கிய ஆக்கத்திலும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொண்ட தமிழறிஞர்களை அறிமுகஞ் செய்து வைக்கின்றன. இதனால் ஆய்வுத் துறையிலும் ஆக்கத் துறையிலும் ஏக காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை வாசகர்கள் ஒருவாறு தெளிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். விபுலாநந்தர், கணபதிப்பிள்ளை முதலியோர் ஆய்வாளராகவம் படைப்பாளிகளாகவும் மிளிர்வதைக் காணலாம். மரபிற்கும் நவீனத்துவத்திற்கும் இருந்து வரும் நுண்ணிய உறவினை ஈழத்து இலக்கியத்திலே துல்லியமாய்க் காண முடியும். ஆய்வுலகிலே தமிழியல் எவ்வாறு அலங்கரிக்கப்பட்ட ஒன்றாக உருப்பெற்று விட்டதோ, அவ்வாறே தமிழுலகில் இலங்கைத் தமிழிலக்கியமும் தனியாகவும் சேர்த்தும் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகிவிட்டது. இன்று இலங்கைத் தமிழிலக்கியம் “ அக்கரைச் சீமை” இலக்கியம் என்று வருணிக்கப்படும் நிலைமையைத் தாண்டி தமிழலக்கியத்தின் பிரிக்க இயலாத அங்கமாகி வருவதைத் தமிழகத்து ஆய்வாளரும் திறனாய்வாளரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய துறைகள் உருவாகும்போது, ஆரம்பத்தில் அவற்றோடு நேரடியாகத் தொடர்புயோருக்கு மட்டும் அவற்றில் ஆர்வமும் அக்கறையும் இருக்கும். ஆயினும் சாலக்கிரமத்தில் அவை பற்றிய தகவல்களும் செய்திகளும் விளக்கங்களும் பொது அறிவின் பகுதிகளாக அமைந்துவிடுகின்றன. இலங்கைத் தமிழ் இலக்கியம், தமிழியல் வளர்ச்சி குறித்துப் பொதுநிலை நூல்கள் மிகவம் குறைவு. சில ஆய்வேடுகளே இருக்கின்றன. அவையும் பெரும்பாலும் பல்கலைக்கழகங்களிலே நூலகங்களிற் கிடைப்பனவாயுள்ளன. உயர் கல்வியைப் பயிலும் மாணாக்கரும் ஆய்வாளரும் மாத்திரமன்றி, பொதுவான வாசகரும் இலக்கிய ஆர்வலரும் இரசிகரம் தற்காலத் தமிழ் வளர்ச்சிபற்றி எளிதில் வாசித்தறிந்து கொள்ளக்கூடிய நூல்கள் நம்மிடையே இல்லாமை பெருங்குறை, இக்குறையை ஓரளவில் நிவிர்த்தி செய்யும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது. இது போன்ற பல நூல்கள் வெளிவரக்கூடிய சூழ்நிலை தோன்றும் பொழுதே, சமுதாயத்தில் உண்மையான இலக்கிய உணர்வும் ரசனையும் ஏற்புடையமையும் பரவியிருக்கின்றன என்று துணிந்து கூற முடியும். ஏனெனில் தனித்துறை வல்லுநருக்கு ஏற்ற ஆய்வு நூல்கள் எத்துணை முக்கியமோ அந்த அளவிற்குப் பொதுவான வாசகர்களுக்கு உகந்த செம்மையான நூல்களும் அவசியமாகும். ஒவ்வொரு துறையிலும் ஈடுபாடுடைய கட்டுரையாளர்களை ஒருமுகப்படுத்திப் பலருக்கும் பயன்படத்தக்க இத் தொகுப்பினைத் தயாரித்து அளிக்கும் ஆசிரியர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள். இது போன்ற முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுதல் வேண்டும்.

அறிமுகம்

எஸ். சிவலிங்கராஜா
மயிலங்கூடலூர் பி. நடராசன்

தமிழியற் கட்டுரைகள் என்னும் இந்நூலிலே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளிலான இருபத்தொரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக் கட்டுரைகள் இரண்டு பகுதிகளாகப் பகுக்கபட்டுள்ளன.

முதற்பகுதியிலுள்ள கட்டுரைகள் பொதுவாகத் தமிழ் இலக்கியப் பெருமரபின் மையத்திலே இலக்கிய வடிவங்களையும், அவற்றின் பொருட்போக்குக்கு இடைபுபட்ட செல் நெறிகளையும் மனங்கொண்டே தொகுக்கப்பட்டன. தமிழிலக்கியப் பரப்பினை மனங் கொண்ட போதினும் ஈழத்து இலக்கியப் போக்கினையும் வளர்ச்சிக் கட்டங்களையும் கோடிட்டுக் காட்டுவனவாகவும் அவை அமைந்துள்ளன எனலாம்.

தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் இலக்கிய மரபு, தமிழ் இலக்கியப் பரப்பு என்றதும் தமிழ் நாட்டு இலக்கிய வரலாற்றையே முற்றுமுழுதாக மனங்கொள்ளும் ‘மயக்கநிலை’ இன்றும் பலரிடையே காணப்படுகின்றது. இம் மயக்கத் தெளிவுக்கும் தமிழ் நாட்டு இலக்கியங்களை அருகருகே வைத்து ஆய்வினை மேற்கொள்ளும் வகையிலும் (குறிப்பாகப் புனைகதை) இந் நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஈழத்து இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, நிலைப்பாடு என்பன இக் கட்டுரைத் தொடர்களின் ஊடுபாவாக ஓடுகின்றன எனலாம். ஈழத்து இலக்கிய வரலாற்றை முழுமையாக நோக்கப் புறப்படும் ஆராய்ச்சி மாணவனுக்கு இக் கட்டுரைத் தொகுப்புக் “ கைவிளக்காக’’ வேனும் அமைய வேண்டும் என்று கருதினோம்.. இலக்கிய வரலாற்றிற்குப் பண்பாட்டின் உள்ளுரமும் அத்தியமாகையால் பண்பாடு சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற வேண்டியமை அவசியமாயிற்று.
இந் நூலின் இரண்டாவது பகுதியில் ஈழத்துத் தமிழறிஞர்களின் தமிழ்ப்பணி சிறப்பாகவும் குறிப்பாகவும் விளக்கபப்பட்டுள்ளது. தமிழ்ப்பணி இலக்கிய மேன்மைக்கு ஈழத்தவர்களின் பங்களிப்புக் கணிசமான அளவு கிடைத்திருக்கிறது. ஈழத்து அறிஞர் பலர் தமிழியலின் சில துறைகளில் முன்னோடிகளாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஈழத்துப்ப+தன் தேவனார் இலங்கையைச் சேர்ந்தவர் என்று கூறுவர் ஈழம் என்ற அடைமொழியை மாத்திரம் நம்பிப் ப+தந்தேவனாரை ஈழத்தவர் என்று துணிந்துவிடமுடியாது.

ப+தந்தேவனாரின் பெயரால் இடம்பெறும் பாடல்களில் (குறுந்;தொகை - 34, 189, 360, நற்றிணை - 366, அகநானூறு - 68,231,307) ஈழம் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. ஈழத்துப் ப+தந்தேவனாரை விட்டால் ஈழத்து இலக்கிய வரலாறு யாழ்ப்பாண மன்னர்கள் காலத்துடனேயே துலக்கமடையத் தொடங்குகிறது. வேறு கட்டுரையில் இவ்விடயம் தனித்து ஆராயப்படும்.

யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலிருந்து தமிழ் நாட்டுத் தமிழறிஞர் ஈழத்தில் வந்து வாழ்ந்து தமிழ்ப் பணி புரிவதும் ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் தமிழ் நாடு சென்று வாழ்ந்து தமிழ்பணி புரிவதும் சாதாரணமான நிகழ்வுகள். இவ்விலக்கிய இதரவிதர உறவு இன்றும் இருப்பதை அவதானிக்கலாம்.

யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலிருந்து காணப்படுகின்ற கல்வி, இலக்கிய மரபுகள் இன்றுவரை நின்று நிலைப்பதைப் பாரம்பரியக் கல்வி இலக்கியம் பற்றி வரன் முறையாக ஆராய்வோர் நன்கு அறிவர். ஈழத்து இலக்கிய வரலாற்றின் அறாத்தொடர்ச்சியினை, வளர்ச்சிப் போக்கினைக் கால் அடைவினூடு கண்டு கொள்ளலாம்.

இந் நூலில் இடம்பெறும் ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவகையிற் சிறப்புடையவர்கள் : இலக்கிய வரலாற்றில் இடம்பெற வேண்டியவர்கள் அவர்களுடைய பணிகளும் ஆளுமையும் கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன.

இக் கட்டுரைத் தொகுப்புக்கான “கரு’’ வைக்கொடுத்த தோடல்லாது கரு உருவாகப் பெரிதும் உழைத்து ஊக்கியவர் ஆசிரியர் திரு. சொக்கன். “ கரு’’ இன்று உருப்பெற்று உலா வருகையில் ஆசிரியர் சொக்கன் அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம். சொக்கனின் குன்றா உழைப்பும் குறையா ஊக்கமும் தமிழியற் கட்டுரைகளில் நிறையச் செலவாகியுள்ளன. சொக்கன் என்றும் நன்றிக்குரியவரே.

இக் கட்டுரைத்தொடருக்கு அணிந்துரை எழுதியதோடமையாது அவ்வவ்போது ஆக்கப+ர்வமான ஆலோசனைகளை வழங்கியும் ஊக்குவித்த பேராசிரியர் க. கைலாசபதி அவர்களுக்கு என்றும் எம் நன்றி உரியதாகும்.

இத் தொகுப்புக்கான கட்டுரைகளை எழுதியவர்களில் பெரும்பாலோர் அவ்வத்துறைகளில் ஆய்வுகள் நிகழ்த்தியவர்கள். எம் வேண்டுகோளை ஏற்றுக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுரைகளை ஏழுதியுதவிய கட்டுரையாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

ஈழத்து இலக்கிய உலகுக்குத் தன்னாலான உதவியினைப் பெருமனத்துடன் செய்ய முனைந்த ஸ்ரீ சுப்பிரமணிய அச்சக, பதிப்பக உரிமையாளர் திரு. ஆ. சுப்பிரணமியம் அவர்களுக்கு எம் இதயப+ர்வமான நன்றிகள் உரியன.

பல வழிகளிலும் நூலுக்காக உழைத்த அனைவரையும் அன்புடனும் நன்றியுடனும் பாராட்டுகின்றோம்.

பல்வேறு போக்கினையும் நோக்கினையும் கொண்டு வெளிவரும் தமிழியற் கட்டுரைகள் பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கும் பல்கலைகழக மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கிய வரலாறு பற்றி அறிய ஆவலுறும் வாசகர்களுக்கும் மிகுந்த பயன் தரும் என்று முழுமையாக நம்புகின்றோம்.

நூலை அச்சிடுவதிலுள்ள சிரமத்தையும் அதற்காக ஏற்படும் செலவீனங்களையும் அதை விற்பனை செய்வதிலுள்ள இடர்பாடுகளையும் அறியாததார் இன்று மிகச் சிலரே. இவ்வாறான சூழ்நிலையிலும் தமிழ் மாணவர்களை மனங்கொண்டே இக் கட்டுரை நூல் வெளி வருகிறது.

பொருளடக்கம்

பகுதி ஒன்று

தமிழிலக்கிய வளர்ச்சி
வளர்ச்சி

1. ஈழத்தில் தமிழ்க்கவிதை வளர்ச்சி
எம். ஏ. நுஃமான் பி. ஏ. (சிறப்பு) பி. பில் 1
துணைவிரிவுரையாளர், தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

2. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை 9
சித்திரலேகா மௌனகுரு எம்.ஏ
விரிவுரையாளர்,தமிழ்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

3. தமிழில் நாடக வளர்;சி 15
வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ
விரிவுரையாளர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கழகம்

4. ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்துக்கள் 22
சி.மௌனகுரு எம். ஏ
ஆசிரியர், யாஃ ஒஸ்மானியாக் கல்லூரி

5. ஈழத்துத் தமிழ் நாட வளர்ச்சி 29
வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ

6. தமிழ் நாட்டுச் சிறுகதைகள் 37 கலாநிதி க. அருணாசலம்
விரிவுரையாளர், தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

7. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் 50
கலாநிதி க.அருணாசலம்

8. தழிழகத்துத் தமிழ்ச் சிறுகதைகள் 62
நா. சுப்பிரமணியம் எம்.ஏ
துணைவிரிவுரையாளர், தமிழ்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

9. ஈழத்துத் தழிழ் நாவல் 70
நா. சுப்பிரணியம் எம். ஏ

10. குழந்தை இலக்கியம் 80
எஸ். சிவலிற்கராஜா,பி.ஏ (சிறப்பு
துணை விரிவுரையாளர், தமிழ்த்துறை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

11.பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் 88
சித்திரலேகா மௌனகுரு எம். ஏ

பகுதி இரண்டு

ஈழத்துத் தமிழறிஞர் தொண்டுகள்
12. தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை 95

மயிலங்கூர் பி. நடராசன்
பொறுப்பு அலுவலர், கல்விவள நிலையம் - நல்லூர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

13. நாவல் இலக்கிய மூலவர்
அறிஞர் சித்திலெவ்வை

அ. அப்துல் சமது பி.ஏ. (சிறப்பு) 103
விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கழகம்
அட்டாளைச்சேனை

14. சொற்கலைப் புலவர்
சுவாமி ஞானப்பிரகாசர் 104
வித்துவான் ச. அடைக்கமுத்து (அமுது)
பாடசாலை முன்னாள் அதிபர்

15. தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவர் 122
கலையரசி சின்னையா எம். ஏ.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

16. வித்துவசிரோமணி மறைத்திரு
சி. கணேசையர் 132
மயிலங்கூலூர் பி. நடராசன்


17. முத்தமிழ் வித்தகர்
விபுலானந்த அடிகள் 142

வித்துவான் க. செபரத்தினம் பி.ஏ. டிப். ஏட்.
அதிபர், மட்ஃ பட்டிருப்பு மகாவித்தியாலயம்.

18. கலையருவி கணபதிப்பிள்ளை 150

த. சண்முகசுந்தரம் பி.ஏ.டிப். எட்
ஆசிரியர், தெல்லிப்பளை ய+னியன் னல்லூரி

19. புலவர் பெரியதம்பிப்பிளை 159
எஸ். சிவலிங்கராஜா பி.ஏ. (சிறப்பு)

20. தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 167
வித்துவான் ச. அடைக்கலமுத்து (அழுது)

21. ஈழத்துக் கவிஞர் மஹாகவி 176
எம். ஏ.நுஃமான் பி.ஏ. (சிறப்பு), பி. பில்

22. பொருள் அட்டவணை 185

23. தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்பட்டியல்



தேர்ந்தெடுக்கப்பட்ட
நூற்பட்டியல்

வாழ்க்கை வரலாறும் இலக்கிய வரலாறும்
இருபதில் கவிதை, தமிழவன், ஜெயகுமாரி ஸ்டோர்ஜ்,
நாகர்கோவில், 1971

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்,
சி. மௌனகுரு - மௌ - சித்திரலேகா
எம். ஏ.நுஃமான், வாசகர் ங்க வெளியீடு,
கல்முனை, 1979

இலக்கிய வழி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1964

இலங்கையில் இன்பத் தமிழ், கா.பொ. இரத்தினம்,
கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம், 1960

இலக்கியத் தென்றல்
க.வித்தியானந்தன், தமிழ் மன்றம் கண்டி 1953,

இஸ்லாமிய இலக்கிய கருவ+லம் ஆர். பி.எம். கனி

இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் எம். ஆர். எம். அப்துற்றஹீம்

ஈழத்தில் நாடகமும் நானும், கலையரசு க. சொர்ணலிங்கம்
இலங்கை இளம் நடிகர் சங்கம், 1968.

ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, சில்லைய+ர் செல்வராசன்,
அருள் நிலையம், சென்னை, 1967.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி, கனக, செந்திநாதன், அரசு
வெளியீடு, கொழும்பு 1964

ஈழத்துத் தமிழ் இலக்கியம், கலாநிதி கா. சிவத்தம்பி
தமிழ்ப்புத்தகாலயம், சென்னை, 1978.

ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ஆ. சதாசிவம்
(தொ.ஆ) சாகித்திய மண்டல வெளியீடு, 1966


ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்;ச்சி,
க. சொக்கலிங்கம், முத்தமிழ் வெளியீட்டுக்கழகம்
யாழ்ப்பாணம் 1977.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், நா. சுப்பிரமணியம்,
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம்,1988

ஈழத்து வாழ்வும் வளமும், பேராசிரியர் க. கணவதிப்பிள்ளை
பாரி, நிலையம் னெ;னை , 1962.

ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், சி. கணேசையர்,
திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1939

ஈழநாட்டுத் தமிழ்ச்சுடர் மணிகள், மு. கணபதிப்பிள்ளை

கலையருவி கணபதிப்பிள்ளை - சில நினைவுகள்
த. சண்முகசுந்தரம், அம்பனைக் கலைப்பெருமன்றம்
தெல்லிப்பளை, 1974

குமாரசுவாமிப் புலவர் சரித்திரம், சி. கணேசையர்,
சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1925
குமாரசுவாமிப்புலவர் வரலாறு, கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை,
புலவரகம், சுன்னாகம் ,1970

ஞானப்பிரகாசரும் தமிழராய்ச்சியும்;, ஆ. சிவநேசச்செல்வன், கலைக்கண்
மறுபிரசுரம், 1973

தங்கத்தாத்தா, “தெல்லிய+ர்’’, தமிழ்மணிப் பதிப்பகம்,
யாழ்ப்பாணம், 1961

தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின் பெருமுயற்சிகள்,
பொ. பூலோகசிங்கம், கலைவாணி புத்தகநிலையம்,
யாழ்ப்பாணம், 1970

தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார், ஆ. தேவராசன்,
கிறிஸ்தவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை
கொழும்பு 1980

தமிழ் நாடகம் - ஓர் ஆய்வு, டாக்டர் ஏ. என்.
பெருமான், தமிழ்ப்பதிப்பகம், சென்னை, 1979

தமிழ் நாவல் இலக்கியம், க. கைலாசபதி, பாரி நிலையம்
சென்னை, 1968

தமிழ் நாவல் நூற்றாண்டு - வரலாறும் வளர்ச்சியும்,
பெ. கோ. சுந்தரராஜன் - சோ. சிவபாதசுந்தரம்,
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை , 1977

தமிழ் நாவல் நூற்றாண்டுவிழா ஆய்வரங்கு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு 1978

தமிழியற் சிந்தனை, பேராசிரியர் சு. வித்தியானந்தன்,
முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், யாழ்ப்பாணம், 1979

தமிழில் சிறு கதையின் தோற்றமும் வளர்ச்சியும்,
கார்த்திகேசு சிவத்தம்பி, பாரிநிலையம், னெ;னை, 1967

தாமோதரம், சி. வை. தாமோதரம்பிள்ளை, யாழ்ப்பாணம்
கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக்கழகம்
யாழ்ப்பாணம், 1971

திறவாத படலை, குனக, செந்திநாதன், யாழ். இலக்கிய
வட்டம், யாழ்ப்பாணம், 1972

நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகள்,
கலாநிதி. கு. கைலாசபதமி, மக்கள் வெளியீடு, 1980

நெஞ்சே நினை, ச. அடைக்கலமுத்து (அழுது)
யாழ். முறைமாவட்;ட இலக்கியக்கழகம்
யாழ்ப்பாணம், 1975

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்தின் முக்கிய போக்குகள்
மனோன்மணி ண்முகதாஸ்
யாழ்ப்பாணம், 1978

பைந்தமிழ் வளர்த்த பதின்மர், “சொக்கன்’’ ஸ்ரீலங்கா
அச்சகம், யாழ்ப்பாணம், 1972

மட்டக்களப்புத் தமிழகம், வி.சீ. கந்தையா, ஈழகேசரி
பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்ப சிட்டி,1964

முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம், எம்.கே.செய்யது அகமது,
அரசு வெளியீடு, கொழும்பு 1968

யாழ்ப்பாணப் புலவர், சொ. முருகேச முதலியார், திருநெல்வேலி,
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1979

வாழையடி வாழை, க. செபரத்தினம், அரசு வெளியீடு
கொழும்பு, 19625

வுயுஆஐடு றுசுஐவுஐNபு ஐN ளுசுஐ டுயுNமுயுஇ
மு.ளு.ளுiஎயமரஅயசயn றுதைநலயடரஒஅல டீழழம னுநிழவ ஊழடழஅடிழ.

மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்,

உலக இலக்கியப்பரப்பில் மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்
சண்முகம் சிவலிங்கம் வாசகர் சங்க வெளியீடு, கல்முனை, 1971

மஹாகவியின் கோடை “மஹாகவியின்யும் தமிழ் கவிதையும்’’ சண்முகம், சிவலிங்கம், வாசகர் சங்க வெளியீடு கல்முனை, 1970.

மலர்களும் சஞ்சிகைகளும்

அடிகளார் படிவமலர், விபுலானந்த அடிகளார் சிலை
நிறுவனக்குழுவினர், காரைதீவு (கி.மா) 1969.

இலங்கைத் தமிழ்விழா மலர், யாழ்ப்பாணம், 1951

சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு நினைவு மலர்
ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழாக்குழு,
கொழும்பு 1975.

தமிழ் சாகித்திய தின விழா மலர், இலங்கைக் கலாசாரப்
பேரவை, கொழம்பு 1975.

தவத்திரு தனிநாயகம் அடிகளார் மாட்சி நயப்பு மலர்,
யாழ், மறைமாவட்டக் கத்தோலிக்க ஆசிரியர்
சங்கம், யாழ்ப்பாணம், 1981

நாவலர் நூற்றாண்டு மலர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
சபை, கொழும்பு,1969

பாவலர் துரையப்பாப்பிள்ளை நூற்றாண்டுவிழா மலர்,
மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1972

மணிவிளக்கு
உரைநடை வளர்;ச்சியில் சித்திலெவ்வையின் பங்களிப்பு,
எஸ். எம். கலாலுத்தீன், - ஒக்டோபர் 1978

மறுமலர்ச்சியிக்காலம் - இலக்கியச் சிறப்பிதழ்,
அம்பனைக் கலைப்பெருமன்றம், தெல்லிப்பழை, 1973

மஹாகவி து. உருத்திரமூர்த்தி நினைவு மலர்,
அம்பனைக் கலைப்பெருமன்றம், தெல்லிப்பழை, 1971

ஈழத்திற் பாட நாடகம்’ மயிலங்கூடலூர் பி. நடராசன்,
சிலபொலி, தெல்லிப்பழை, சித்திரை, ஆனி, ஆடி 1971
ஈழத்துப் பா நாடகங்கள் - எம். ஏ. நுஃமான்,
மல்லிகை, ஜனவரி - மார்ச்சு, 1980

“மஹாகவியின் சிறு நாடகங்கள்’, இ. முருகையன்,
மல்லிகை, யாழ்ப்பாணம், ஓகஸ்ட் 1980.

“மஹாகவியின் வாழ்க்கை நோக்கு” எம். ஏ. நுஃமான்,
மல்லிகை, யாழ்ப்பாணம், ஓகஸ்ற், 1979

பிழை திருத்தம்

பக்கம். 9 சித்திரலோகா - சித்திரலேகா
33 கிளங்ஸ்பரி - கிங்ஸ்பரி
36 புதுமைத்தனின் - புதுமைப்பித்தனின்
49 ஜெயகாந்தன் - ஜெயந்தன்
புறப்பை, - பறப்பை
52 தாழையடி - தாழையடி
59 சுவிராயர் - கவிராயர்
99 காலநிதி - கலாநிதி

பகுதி
ஒன்று

தமிழிலக்கிய
வளர்ச்சி

ஈழத்தில்
தமிழ் கவிதை வளர்ச்சி

எம். ஏ.நுஃமான்

பண்டைக்காலம் தொட்டு ஈழநாடு தமிழ் மொழிக்குச் சிறந்த இருப்பிடமாகத் திகழ்கின்றது. சங்க காலத்தில் ஈழ நாட்டிலிருந்தும் பல புலவர்கள் தமிழகம் சென்று தமிழ் மொழியை அலங்கரித்துப் புகழ்பெற்று விளங்கினர். அவர்களுள் ஒருவர் ஈழத்துப் ப+தன் தேவனார் எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தமது ஈழத்து வாழ்வும் வளமும் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். ஈழத்துப் பூதன்தேவனாரால’ எழுதப்பட்ட ஏழு கவிதைகள் அகநானூறு, குறுந்தொகை நற்றிணை ஆகிய எட்டுத் தொகை நூல்களிலே காணப்படுகின்றன. பூதன்தேவனாரை ஈழத்தவராகக் கொண்டால் சங்ககாலம் முதற் கொண்டே இங்கும் கவிதை வளர்த்து வந்திருக்கிறது எனலாம். ஆயினும் ப+தந்தேவனார் ஈழத்தவர்தாமா எனச் சந்தேகிப்போரும் உளர்.

ப+தன்தேவனாரின் பின்னர் 13ஆம் நூற்றாண்டில் இருந்தான் ஈழத்தில் கவிதை நூல்கள் தோன்றியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைத் தமிழ் மன்னர் ஆண்ட காலத்தில் இருந்து இக் காலம் வரை இலங்கையிலே தமிழ் கவிதை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஈழத்திலே கவிதை தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரிந்து ஆராய்வார். ஆயினும் கவிதையின் பொருள், உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஈழத்துக் கவிதை வளர்ச்சியை இரு நிலைப்படுத்தி ஆராயலாம். ஒன்று மரபுவழிக் கவிதை: மற்றது நவீன கவிதை. 20 நூற்றாண்டின் தொடக்கக்காலம் வரை வளர்ந்த கவிதை பொதுவாக மரபுவழிக் கவிதை எனலாம். அதன் பின்னர் உள்ள கவிதையைப் பொதுவாக நவீன கவிதை எனலாம்.

மரபு வழிக் கவிதைகள் பெரும்பாலும் சமயச் சார்பான விடயங்களையே உள்ளடக்கமாகக் கொண்டவை. அரசர்கள். பிரபுக்கள் முதரதனோரின் புகழ் பாடுபவையாகவம் அவை காணப்படுகின்றன. சாதாரண மனிதனும் அவனது அன்றாட வாழ்க்கை அநுபவங்களும் உணர்ச்சிகளும் மரபுவழிக்கவிதையில் அரிதாகவே இடம் பெற்றன. அவ்வகையில் மரபுவழிக் கவிதையின் உள்ளடக்கம் வரையறுக்கப்பட்டதாக அமைந்தது. அதற்காகவே அதன் உருவமும் வரையறுக்கப்பட்டிருந்தது. காவியங்கள், புராணங்கள் என்றும் உலா, பரணி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், பள்ளு, குறவஞ்சி முதலிய பிரபந்தங்கள் என்றும் மரபுவழிக் கவிதை வடிவங்கள் அமைந்துள்ளன. ஆனால், இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சமுதாய மாறுதல்கள் காரணமாகக் கவிதையின் பொருளிலும் வடிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வாறு மாற்றமடைந்த கவிதையையே நாம் நவீன கவிதை என்கின்றோம்.
இதையே,

“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது சோதி மிக்க நவ கவிதை”
என மகாகவி பாரதியும் வருணித்தான்.

மரபுவழிக் கவிதைக்கிருந்த உள்ளடக்க வரையறையை நவீன கவிதை உடைத்துவிட்டது.

இன்னவைதாம் கவி எழுத ஏற்ற பொருள்
என்றில்லை என்பது நவீன கவிதையின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் குண்டூசி முதல் விஞ்ஞான வளர்ச்சியின் சமுதாய விளைவுகள் வரை தங்கள் கவிதைப் பொருளாகக் கொண்டுள்ளனர். கவிதையில் தெய்வங்கள், திருத்தலங்கள், சமயாசாரங்கள் என்பன பெற்ற இடத்தைப் பொது மனிதனும் அவனது நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் பெற்றன. சுருக்கமாகச் சொல்வதானால் நவீன கவிதை சமய நெறியிலிருந்து சமூகநெறிக்கு மாறியது எனலாம். இவ்வுள்ளடக்க மாற்றத்தின் விளைவாகக் கவிதை வடிவங்களும் யாப்பு முறையும் வெகுவாக மாற்றம் அடைந்தன. பழைய பிரபந்தவகைகள் நவீன கவிஞர்களால் கைவிடப்பட்டன. புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றி ஆராயும்போது இவ்விரு கட்ட வளர்ச்சி நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இக்காலப் பகுதியிலிருந்து தான் இலங்கையில் மரபுவழிக் கவிதையின் தொடர்ச்சியான வளர்ச்சியினைக் காண்கின்றோம். தக்கண கைலாச புராணம், கண்ணகி வழக்குரை, திருக்கரைசைப் புராணம், இரகுவம்சம், கதிரைமலைப்பள்ளு முதலியன இக்காலப் பகுதியில் எழுந்த முக்கியமான நூல்களுட் சிலவாகும்.
இவற்றுள்ளோகண்ணகி வழக்குரை, இரகுவம்சம், கதிரை மலைப்பள்ளு முதலியன விதந்து கூறத்தக்கண. சிலப்பதிகாரக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட, கவிச்சுவை நிரம்பிய ஒரு காவியம் கண்ணகி வழக்குரை சகவீரன் என்பார் இதனை எழுதியதாகக் கருதப்படுகி;ன்றது. அரசகேசரி இயற்றிய இராகுவம்சம் மஹாகவி காளிதாசரின் வடமொழிக் காவியத்தின் தமிழாக்கமாகும். நூலாசிரியரின் மொழி விற்பன்னத்தைக் காட்டுவது இது. கதிரைமலைப்பள்ளு, பள்ளு இலக்கியத்தின் முன்னோடி என்று கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

17ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பிய சாதியினர் இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயம் இங்கு வேரூன்றிப் பரவியது. இதன் விளைவாகக் கிறிஸ்தவ சமயச் சார்பான கவிதை நூல்கள் பல இக் காலப்பகுதியில் இலங்கையில் தோன்றின. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பலரும் இஸ்லாமிய சமயத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபந்தங்களை இயற்றினர். இவ்வாறு ஐரோப்பியரின் ஆட்சிக் காலத்திலே ஈழத்துத் தமிழ் கவிதையில் பிறசமயத் தாக்கம் இடம் பெறத் தொடங்கியது. சமயச்சார்பற்ற சில கவிதை நூல்களும் இக்காலப் பகுதியில் எழுந்தன.

ஞாகப்பள்ளு ஞானானந்த புராணயம் அர்ச் யாகப்பர் அம்மானை, யோசேப்புப் புராணம், எம்பரதோர் நாடகம் முதலியன இக் காலப் பகுதியில் எழுந்த கிறிஸ்தவ சமயச் சார்பான நூல்களுட் சில. இவை ஈழத்துத் தமிழ்க்கவிதைக்கு ஒரு புதிய வளத்தை; சேர்ந்தன எனலாம். அருள் வாக்கி அப்துல் காதிறுப் புலவர், அரனார் லெவ்வைப் புலவர், அப்துல் றகுமான் புலவர், சின்ன ஆலிம் அரப்பா போன்ற சிறந்த முஸ்லிம் புலவர்கள் பலர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே ஈழத்தில் கவிதை வளர்ச்சிக்கு உதவினர். அருள் வாக்கி அப்துல் காதிறுப்புலவர் இவர்களுள் முதன்மையானவர் எனலாம். இவர் முப்பதுக்கு அதிகமான பிரபந்தங்களை எழுதியதாகத் தெரிய வருகிறது. சந்தத் திருப்புகழ் இவரது செய்யுளாற்றலைக் காட்டும் ஒரு நூலாகும். சின்ன ஆஸிம் அப்பாவின் ஞானரை வென்றான் ஒரு சிறந்த ஞான நூலாகக் கருதப்படுகின்றது.

இக் காலத்திலே சைவத் தமிழ்ப் புலவர்கள் பலரும் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். சின்னத்தம்பிப்புலவர், மயில்வாகனப்புலவர், வரதபண்தர் ஆகியோர் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த புலவர்களாவர். சின்னத்தம்பிப் புலவரின் மறையை அந்நதாதி , கல்வளை, அந்தாதி, கரவை வேலன்கோவை, பறாளைவிநாயகர் பள்ளு முதலியன அவரது கவிச்சிறப்பைக் காட்டுவன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த பெரு மக்களுள் சுன்னாகம் குமார சுவாமிப்புலவர், க. மயில்வாகனப்புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, புலவர் சுப்பையனார், சுப்பையனார், நவநீத கிரு~;ண பாரதியார் முதலியோர் பிரசித்தி பெற்றவர்கள். புலவர் சுப்பையனாரின் கனனிபுராணம் சமயச் சார்பற்ற தனித்துவமான கவிதை நூலாகும். இதன் அங்கதச் சுவை விதத்து போற்றத்தக்கது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதியின் சம காலத்தவரான பாவலர் துரையாப்பிள்ளை முதல் சமீப காலம் வரை புகழ்ப+த்த வேறுசில கவிஞர் பெரு மக்களும் வாழ்ந்துள்ளனர். சோம சுந்தரப்புலவர், விபுலானந்த அடிகள், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் இவர்களுள் முக்கியமானவர்கள். இவர்கள் வௌ;வேறு அளவில் நவீன சிந்தனையுடைய மரபுவழிக் கவிதைகளாவர். அவ்வகையில் பழைய மரபுக்கும் நவீனமரபுக்கும் இடைப்பட்டவர்களாக நாம் இவர்களைக் கருதலாம். புhவலர் துரையாப்பாப்பிள்ளை சமூக சிந்தனை முதல் ஈழத்துத் தமிழ்க் கவிதையில் புகுத்தியவராவர். இவரது யாழ்ப்பாண சுவதேசக்கும்மி அவ்வகையில் குறிப்பிடத்தக்கது. சோமசுந்தரப்புலவர் ஈழத்தில் சிறுவர் கவிதையின் முன்னோடிகளுள் முக்கியமானவர். இவரது சிறுவர் செந்தமிழ் என்னும் நூலில் உள்ள பல பாடல்கள் பிரசித்தி பெற்றவை. விபுலானந்த அடிகள் தமது கம்பீரமான செய்யுள் நடையிலே சேக்ஸ்பியரின் நாடகப் பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்துத் தமிழுக்கு வளம் சேர்ந்தவர், புலவர் மணியின் பகவத்கீதை வெண்பாவும் இலங்கை மணிந்திருநாடு என்னும் பாடலும் நன்கு புகழ்பெற்றவை. இக்கால சமூகப் பிரச்சினைகள் சிலவற்றைத் தமது கவிதையில் கையாண்ட பெருமை பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்கு உண்டு. அவரது தூவுதும் மலரே, காதலியாற்றுப்படை முதலிய நூல்களில் இதனைக் காணலாம். ஆயினும் அவரது பழமைசார்ந்த மொழிநடை பொருளின் நவீனத்துவத்துக்கு ஊறு செய்து விட்டது என்றே கூற வேண்டும்.

இவர்களின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளங் கவிஞர்கள் மூலம் ஈழத்திலே முற்றிலும் நவீனத்துவம் உடைய கவிதை மரபு ஒன்று தோன்றி வளரத் தொடங்கிற்று. 1940 ஆம் ஆண்டுகளில் இருந்து இப் புதிய மரபை நாம் காண்கின்றோம். அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சினைகள், தனிமனித உணர்வுகள், ஆசாபாங்கள், அநுபவங்கள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளை இவர்கள் எழுதினர். பாரதி பாரதிதாசன் ஆகிய தமிழகக் கவிஞர்களின் செல்வாக்கினால் இவர்கள் தூண்டுதல் பெற்றனர் எனலாம். மஹாகவி, அ. ந. கந்சாமி முருகையன், நீலவாணன், புரட்சிக்கமால் முதலியோர் ஈழத்தில் நவீன கவிதையினை வளப்படுத்தியவர்களில் முக்கியமானவர்களாவர். இவர்களில் நோக்கு தரம் போக்குகளும் வேறுபட்டவை எனினும் தற்கால ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் இவர்கள் முக்கியமானவர்கள் என்பதில் ஐயமில்லை. மஹாகவியின் வள்ளி, குறும்பா, கண்மணியாள் காதை, கோடை, இரண்டு காவியங்கள், ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வெளியும் ஆகிய நூல்கள் அவரது கவிதா மேன்மையை உணர்த்துகின்றன. முருகையனின் நெடும்பகல், வந்து சேர்ந்தன. தரிசனம், கோபுரவாசல், ஆதிபவன், ஒரு வரம் முதலிய நூல்களிலே அவரது தனித்துவமான கவிதைப் போக்கைக் காணலாம். நீலாவணன், புரட்சிக்கமால் ஆகியோர் ஏராளமாக எழுதியிருப்பினும் நீலாவணனின் வழி, புரட்சிக்கமால் கவிதைகள் ஆகிய நூல்களே வெளிவந்துள்ளன. அ.ந. கந்தசாமி புதுமையான சில கவிதைகள் எழுதியிருப்பினும் அவை இன்னும் நூல் உருப்பெறவில்லை.

இவர்களின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான கவிஞர்கள் சிலரும் ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றனர். தமிழ்க்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றனர். 1960 களில் தோன்றிய இப்புதிய பரம்பரைக் கவிஞர்களுட் பலர் சமூக அரசியல் பிரஞ்ஞையைத் தம் கவிதைகளில் பிரதானமாக வெளிப்படுத்தினர். 1970 களிலிருந்து நவீன தமிழ்கவிதையின் ஒரு பிரிவான புதுக் கவிதை அல்லது வசனகவிதையும் இங்கு வளர்ந்து வருகின்றது. பல புதுக் கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவ் வகையில் தா. இராமலிங்கத்தின் காணிக்கை குறிப்பிடத்தகுந்த ஓர் நூலாகும்.

ஈழத்துக் கவிதை வளர்ச்சியிலே மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ஒரு முக்கிய இடமுண்டு. பழங்காலம் முதலே இங்கு மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடை பெற்றுள்ளன. அரசகேசரியின் இரகுவசம்சம் இவ் வகையில் முதல் முயற்சி எனலாம். எனினும் 1960 களின் பின்னரே கவிதை மொழிபெயர்ப்புகள் இங்கு பரவலாகக் காணப்படுகின்றன. சமீப காலத்திலே பல்வேறு நாட்டுக் கவிதைகளை ஈழத்துக் கவிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இவ் வகையில் வியட்நாமிய, சீன, ரூசிய, இந்திய, பல்கேரிய , பலஸ்தீன , ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் பல மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுட் சில தொகுப்புக்களாகவும் வெளி வந்துள்ளன. ஹோ~pமின் கவிதைகள், மாஓ சேதுங் கவிதைகள், பலஸ்தீனக் கவிதைகள், என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கன. நமது கவிஞர்களின் உலகக் கண்ணோட்டத்தை இவை காட்டுகின்றன.

ஈழத்தில் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகையிவ் சிறுவர்களுக்கான கவிதைபற்றியும், சிறிது குறிப்பிடவேண்டும். சிறுவர் கவிதை நவீன கவிதையின் ஒரு முக்கிய பிரிவாகும். மரபுவழிக்கவிதைகளிலே சிறுவருக்கென்று விசேடமாக எழுதப்பட்ட கவிதைகளைக் காண முடியாது. சோமசுந்தரப்புலவரே ஈழத்தில் இத்துறையில் முன்னோடி என்பதை குறிப்பிட்டோம். முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, யாழ்ப்பாணன் ஆகியோரும், இவ் வகையில் குறிப்பிடத்தக்கவர்களே. வித்துவான் க. வேந்தனாரின் பல சிறுவர் கவிதைகள் இன்று பிரபலம் பெற்றுள்ளன. சமீப காலத்திலே பல சிறுவர் கவிதை நூல்களும் வெளி வந்துள்ளன. அம்பியின் அம்பிப்பாடல்கள், எம். சி. எம். சுபைரின் மலரும் உள்ளம் பா. சுத்தியசீலனின் பாட்டு, மழலைத் தமிழ் அழுதம் போன்றவை இவற்றுள் சில.

இவ்வாறு பண்டைக்காலம் முதல் இன்றுவரை ஈழத்தில் தமிழ்க்கவிதை பன்முகப்பட்டு வளர்ச்சியிடைந்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இருபதாம் நூற்றாண்டுத்
தமிழ்க் கவிதை

சித்திரலோக மௌனகுரு

தமிழ் இலக்கியவடிவங்களுள் காலத்தால் மூத்தது கவிதையாகும். இக் கவிதை பண்டுதொட்டு இன்று வரை பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் அடைந்து வந்துள்ளது. இவ்வாறு தமிழ்க் கவிதை அடைந்த வளர்ச்சிகளுள் இருபதாம் நூற்றாண்டில் அது அடைந்த வளர்ச்சி முக்கியதாகும். முன்னைய காலக் கவிதை நெறினியின்று பொருளிலும் வடிவிலும் அதிக அளவு வேறுபட்டதாக இக் காலக் கவிதை நெறி அமைந்தது. இவ்வாறு இக் காலக் கவிதை அடைந்த மாற்றமே அதனைத் தனியே ஆராய்வதற்குரிய காரணமாகவும் உள்ளது.

சங்ககாலம் தொடக்கம் இருபதாம் நூற்றாண்டு வரையும் கவிதை, அரசர்களையும், பிரபுக்களையும் கடவுளர்களையும் பாடும் வழக்கத்தைக் கொண்டுடிருந்தது. இன்னோர் வகையிற் சொன்னால் சமூகதத்தின் உயர் நிறுவனங்களும் சமயமுமே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையும் தமிழ்க் கவிதையின் கருப்பொருளாய் அமைந்திருந்தன. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட ஐரோப்பியர் ஆட்சி தமிழ்க் கவிதையில் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. ஐரோப்பியர் ஆட்சியும் அதனால் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களும் தமிழ்க் சமூகத்தினரின் தத்துவநெறியையும் ஓரளவு மாற்றின. பொதுமக்களும் அவர் தம் பிரச்சினைகளும் கவிதைக்குரிய பொருள்களாயின. எளிய பதம், எளிய நடையிலே கவிதை இயற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலேற்பட்;ட இம மாற்றம் மகாகவி பாரதியாருடன் தொடங்குகின்றது. எனினும் இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் மூலவித்துக்களைப் பாரதிக்கு முன்னரே காணக் கூடியதாகவுள்ளது.

பாரதிக்கு முன்னர் வாழந்த கோபாலகிரு~;ண பாரதியார், அருணாசலக் கவராயர், அண்ணர்மலை ரெட்டியர் முதலியோர் கீர்த்தனை சிந்து முதலிய வடிவங்களிற் கவிதை இயற்றியிருந்தனர். இராமலிங்க சுவாமிகளும் கவிதை முறையில் எளிமையினைப் புகுத்தியிருந்தார். ஆனால் இவர்களால் செய்யப்பட்ட மாற்றங்கள் கவிதையின் உருவங்களாக மாற்றவேயிருந்தன. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்தும் இன்னும் சித்தர் போன்றோரிடமிருந்தும் இன்னும் சித்தர் போன்றோரிடமிருந்தம் சிந்து, கண்ணி, தெம்மாங்கு போன்ற உருவங்களைப் பெற்ற பாரதி புதிய உள்ளடக்கங்களைத் தமது கவிதையிற் கொணர்ந்தார். பாரததேசம் பற்றியும் அத்தேசத்தின் மேன்மை பற்றியும் தேசத்துக் காற்ற வேண்டிய பணிகள் பற்றியும், கவிதை புனைந்தார். பாரதிக்குப் பின்வந்த கவிஞர்கள் பெரும்பாலோர் பாரதியின் வழிகாட்டலால் ஆகர்~pக்கப்பட்டவராயிருந்தனர்.

பாரதிக்குப் பின்னர் தமிழ்க் கவிதை இரு பெரும் பிரிவுகளாய் வளர்ச்சி பெற்றது. ஒன்று யாப்பு நெறிப்பட்ட கவிதை மரபு. மற்றது. வசனகவிதை மரபு.
பாரதி தம் முன்னோர். கையாண்ட அகவல், வெண்பா, விருத்தம், சிந்து கீர்த்தனை முதலாம் யாப்பு வடிவங்களைக் கையாண்டதுடன் தேசவிடுதலை, சமூக விடுதலை முதலிய புதிய உள்ளடக்கங்களையும் தமிழ்க் கவிதையிற் புகுத்தினார். தமிழ்க்கவிதை மரபில் இடம் பெற்ற தெய்வபத்தி, பாரதி காலத்திலே தேசபத்தியாக உள்ளது. பாரதமாதாவைத் தெய்வமாகக் கொண்டார் பாரதி. அவர் தெய்வப் பாடல்களிலும் மனுக்குல விடுதலையின் குரல் ஒலித்தது. பழைய காப்பியத்திற்குப் பதிலாகப் பாஞ்சாலிசபதம் என்ற புதிய குறுக்காவியம். படைத்தார். அதனைப் புதிய காவியம் எனவும் அழைத்தார். மழை, சூரியன், அக்கினி, காற்று முதலிய இயற்கைப் பொருட்களை வைத்துத் தனிப்பாடல்கள் இயற்றினார். சமூகநிலை, சமூக சீர்திருத்தம், தமிழ்மொழி முதலியவை பற்றியும் அவர் கவிதைகள் அமைந்தன. பாரதி உருவாக்கிய இம் மரபினைப் பின் பற்றியவர்களில் முக்கியமானவர்களாக நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, ச.து.சு. யோகியார், தேசிகவிநாயகம்பிள்ளை பாரதிதாசன், கலைவாணன் முதலியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் மரபுவழி யாப்புகளையும் பாரதி சிறப்பாகக் கையாண்ட சிந்து, கீர்த்தனை முதலான பாவகைகளையும் தாமும் கையாண்டனர். தேசிய உணர்வும் சமூக விடுதலையும் இவர்கள் பாடல்களிலும் இடம் பெற்றன. இவை மட்டுமன்றி இயற்கைப் பொருட்கள் குறித்தும் இவர்கள் எளியமையான முறையிற் கவிதை புனைந்தனர்.

இவர்களிற் பாரதிதாசன் தனியாகக் குறிப்பிடப்பட வேண்டியவர். புhரதியைப் பின்பற்றியவராகப் பாரதிதாசன் காணப்படினும், இவர் தமக்கென ஒரு பரம்பரையினரையும் உருவாக்கியவர். தமிழ் மொழிப்பற்று, பெண்விடுதலை, தொழிலாளர் விடுதலை, திராவிட நாட்டுக் கோரிக்கை முதலியன இவர் கவிதைக்குரிய பிரத்தியேகக் கவிப்பொருளாய் அமைந்தன். தனிக்கவிதைகளை மாத்திரமன்றிக் குறுங்காவியங்கள், கவிதை நாடங்கள் முதலிவற்றையும் இவர் புனைந்தார். இவரைப் பின் பற்றிக் கண்ணதாசன், வாணிதாசன், முடியரசன், பொன்னிவளவன் முதலிய கவிஞர்கள் உருவாகினர். இவர்களைப் பழைமையை நாடும் கற்பனாவாதிகள் என விமர்சகர்கள் அழைப்பர். புhரதி மரபில் பாரதிதாசன் வழிவந்தோர் மாத்திரமன்றி இப் பிரிவில் இன்னும் சிலரும் அடங்குவர். ப. ஜீவானந்தம் கே. சி. எஸ். அருணசலம், சிதம்பர ரகுநாதன் முதலியோர் பாரதி பயன்படுத்தி வடிவங்களைக் கையாண்டும், அவரது கனிப்பொருளான தேசப்பற்ற, சமூக விடுதலை முதலிய பொருட்களை வைத்தும் கவிதை செய்தனர்.

இத்தகைய ஒரு கவிதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இதிலிருந்து மாறுபட்ட ஒரு போக்கும் பாரதி கவிதைகளிலிருந்து தொடர்ந்து வந்துள்ளது. பாரதி யாப்பு வடிவில் அமைந்த கவிதை மாத்திரமன்றி வசனத்தில் - ஆனால் எனத்தக்க இறுக்கமும் நயமும் வாய்ந்த - சில படைகளையும் எழுதியுள்ளார். இவற்றை இன்று வசன கவிதை அல்லது புதுக்கவிதை என்கின்றனர். இவற்றில் மரபுக் கவிதையில் காணப்படும் யாப்பமைதியோ, ஓசை ஒழுங்கோ இல்லை. இவ்வகைக் கவிதை வடிவமே இக் காலத் தமிழ்கவிதைகளில் பிரதான இடம் வகிக்கிறது.

பாரதிக்குப்பின் இக்கவிதை மரப்பினை நிலைநிறுத்தியவராகப் பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் போன்றோர் விளங்குகின்றனர். சூறாவளி, கலாமோகினி, கிராமஊழியன், மணிக் கொடி போன்ற அக்காலச் சிறு சஞ்சிகைகளில் இத்தகைய கவிதைகளை இவர்கள் வெளியிட்டனர். ஆனால், இத்தகைய கவிதைகளை இவர்கள் வெளியிட்டனர். ஆனால் ஆரம்பத்தில் இத்தகைய கவிதை வடிவம் மிகுந்த கண்டனத்தைப் பெற்றது. காரசாரமான விவாதங்களுக்குட்பட்டது. எனினும் அது நிலைபெற்றது.

1950க்குப் பின்னர் சி.க. செல்லையா நடத்திய எழுத்து பத்திரிகை புதுக்கவிதை வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்து,சி.சு. செல்லப்பா, தர்மூ, சிவராமு, க. நா. சுப்பிரமணியம், சி. மணி, வைத்தீஸ்வரன் போன்றோர் எழுத்து பத்திர்கைக் காலத்தில் பிரதானமாக வசனக்கவிதை எழுதினார். மனமுறிவு, விரக்தி, அநிநியப்பாடல் போன்ற உணர்வுகள் இவர்கள் கவிதைகளின் பொருளாயின. இவர்கள் கவிதைகளில் விளக்கமின்மை மறைபொருள் ஆகிய மலிந்திருந்தன.

1970ஆம் ஆண்டுகளை அடுத்து வானம்பாடிக் குழுவினர் என்ற குழுவினர் புதுக்கவிதை உலகினுட் பிரவேசித்தனர். இவர்கள் புதுக்கவிதைகளில் புதிய உள்ளடக்கத்தைப் புகுத்தினர். மக்களை எழுச்சியுறப் பண்ண இலக்கிய வடிவங்கள் பயன்படவேண்டும் என்று கூறிய இவர்கள் சமகாலச் சமூக நிகழ்ச்சிகளையும் புதிய சமூக விருப்பையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தினர். நவபாரதி, புவியரசு, விடிவெள்ளி, காமராசன், சிற்பி, அக்கினிபுத்திரன் முதலியோர் இவர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள்.

இன்று தமிழ்நாட்டின் பிரபல்யம் பெற்ற கவிதை நெறியாகப் புதுக்கவிதை நெறி காணப்படுகிறது. ஆரம்பத்தில் இக் கவிதை வடிவத்திற்கிருந்த எதிர்ப்புக்கள் குறைந்துவிட்டன. ஆனால் சில சமயங்களில் இக் கவிதை வடிவம் மூன்று நான்கு வசனங்கள் மட்டும் கொண்டதாக அமைகின்ற ஒருபோக்கையும் காணலாம். 1973 ஆம் ஆண்டு உதயம், நீ என்ற இத்தகைய சூட்டிப்புதுக் கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகின. சில சமயம் இவை விடுகதைகள் போன்றும் தோற்றமளிக்கின்றன.

எவ்வாறாயினும் இன்று நிலைபெற்ற ஒரு இலக்கிய வடிவமாக இப் புதுக்கவிதை வடிவம் காணப்படுகின்றது. வருடந்தோறும் பலர் இக் கவிதைத்துறையில் புதிதாக ஈடுபடுகின்றனர். யாப்பு முதலிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் இலகுவான வெளிப்பாட்டுச் சாதனமாக இது விளங்குவது, பலரும் இதைக் கைக்கொள்ளக் காரணமெனலாம்.

தமிழ் நாட்டுக் கவிதை நெறிக்கும் ஈழத்துத் தமிழ்க் கவிதை நெறிக்குமிடையே பல ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன. ஈழத்திலும் இருபதாம் நூற்றாண்டிலிருந்து கவிதைகளில் ஒரு புதிய மரபு உருவாகியது. சமயத்தின் பிடியிலிருந்து விடுபட்டுக் கவிதை சமூகம் சார்ந்ததாக மாறியது. இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டுக் கவிதைக்கும் ஈழத்துக் கவிதைக்கும் ஒற்றுமை உண்டு. இங்கும் யாப்பு ரீதியான யாப்பு வடிவங்களைப் பயன்படுத்திப் பழைய முறையிற் கவிதை இயற்றுவோரையும் வசனகவிதையைப் படைப்போரையும், காணலாம். அதே சமயம் தமிழ்நாட்டில் முக்கியம் பெறாத இன்னோர் வளர்ச்சியும் இங்குண்டு, மரபுரீதியான யாப்பு வடிவங்களைக் கையாளும் அதே சமயம் பொருள் தொடர்ச்சிக்கும், பேச்சோசைக்கும் முதன்மை கொடுக்கும் ஒரு முறை ஈழத்தில் வளர்ந்துள்ளது. இது ஒரு முக்கிய நெறியாகவும் காணப்படுகிறது.

ஈழத்துத் தமிழ்க்கவிதை வளர்ச்சி தனித்தன்மைகள் கொண்டுள்ளதால் தனியாகவும் தமிழ்நாட்டுடன் ஒப்பு நோக்கியும் ஆராயத்தக்கது.

தமிழில் நாட வளர்ச்சி

க. சொக்கலிங்கம்

தமிழ்மொழியை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என முப்பிரிவுகளாய் வகுத்தகாலம் எது எனத் தெரிந்து கொள்ளப் போதிய சான்றுகள் இல்லை. முத்தமிழ் என்ற சொற்றொடர்ப் பிரயோகம் கி.பி ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவராகக் கொள்ளப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் திருத்தண்டகம் ஒன்றிலேயே முதற்முதற் காணப்படுவதாய் ஆய்வாளர் கூறுவர்.

முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்

என்பது திருத்தாண்டகத்திலே வரும் அடி. சங்ககாலத்தில் (கி.பி 100- 300) எழுந்த இலக்கியங்களில் நாடகம் எனப்படுவது, அபிநயமும் இசையும் இணைந்த ஆடலைத்தான் குறித்திருத்தல் வேண்டும். சோழர் காலத்தில் (கி.பி. 900 -1400) கோயிலை மையமாகக் கொண்;டெழுந்த நாடகங்களாய் இராஜராஜேசுவர நாடகம், ப+ம்புலிய+ர் நாடகம் என்பன கல்வெட்டுக்கள் வாயிலாய் அறியவருகின்றன. ஆனால், இவை நூல்வடிவில் எமக்குக் கிட்டவில்லை. விசயநகர மன்னர் காலத்தில் (கி.பி 1400 - 1800) பள்ளு, குறவஞ்சி ஆகிய பிரபந்தங்களிலே நாடகப் பண்பினை பெருமளவு காணலாம். ஐரோப்பியர் காலத்தில் (கி.பி. 1800 - 1947 ) நாடகமானது தெருக்கூத்து, கம்பனிக்கூத்து (கொட்டகைக் கூத்து நவீன நாடகம் என்ற முப்பிரிவுகளாய் நிலவத்தொடங்குவதை அவதானிக்கலாம். உண்மையின் ஐரோப்பியர் காலத்திலிந்தே தமிழக நாடகத்தின் வரலாற்றினை, வளர்ச்சியை அறிந்து கொள்ளப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன.

நாடகம் ஒரு மேடைக்கலை, சமுதாய நிகழ்களைப் பாத்திரங்களின் தடிப்பினாலும் உரையாடலாலும் மக்களின் முன்பு கலைவடிவமாகக் காட்டி நயக்சுவைப்பதே நாடகக் குறிக்கோள், இந்தக் குறிக்கோளினை நிறைவு செய்யத் தமிழகத்திலே பண்டுதொட்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டே வந்துள்ளன என்பதற்கு ஐயம் இல்லை. ஆனால் இன்று மேடையேறும் நாடகங்கள் தமிழ் நாடக மரபு முறையிலே வளர்த்த கலைவடிவங்கள் என்று கொள்ள இயலாது. ஏனெனிற் கிரேக்க மொழியிற் போலவோ சமஸ்கிருத மொழியிற் பொலவோ தமிழிலே பழைமையான நாடகங்கள் எவையும் கிடைக்கவில்லை.
நாடங்கள் புராதன மக்களின் சமயக் கிரியைகளிலே ஓர் இன்றியமையாகக் கூறாய் விளங்கி வந்துள்ளன என ஆய்வாளர் கூறுவது தமிழ் நாடகத்திற்கும் பொருந்துவதே. சுங்க இலக்கியங்களில் வரும் வெறியாட்டு முதலானவையும் பிற்காலத்திலே சிலப்பதிகாரத்தில் வரும் ஆராய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வேட்டுவரி ஆகியனவும் சமஸ்கிரியைகளின் அடிப்படையில் அமைந்த நாடகங்களே, தொல்காப்பியர் கூறும் நாடகவழக்கு, உலகியல் வழக்கு என்ற இரண்டனுள்ளும் நாடகவழக்கு என்பது மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சற்றே மிகைபட இலட்சிய ப+ர்வமாய் எடுத்துக் காட்டும் முறைமையே. இம் முறையை சார்ந்த பாடல்கள் பலவற்றைச் சங்க காலத்தொகை நூல்களிலே காணலாம். இப் பாடல்கள் அக் காலத்தில் அரங்குகளிலே நாடகங்களாக நடிக்கப்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் மட்டுமன்றி அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் நாடகப் பண்பமைந்த இலக்கியங்கள் பல தமிழிலே தோன்றியுள்ளன. எனினும் விசயநகர மன்னர் கால இறுதிப் பகுதியிலே தோன்றிய குறவஞ்சி, பள்ளு இலக்கியங்கள் தாம் மிக அதிகமான நாடகப் பண்பினைத் தம்முள் அடங்கியவை என்று கொள்வதில் தவறவில்லை. இவற்றைத் தொடர்ந்து ஐரோப்பியர் காலத்திலே கோபாலகிரு~;ண பாரதியார் இயற்றிய நந்தன் சரித்திரக் கீர்த்தனை அருணாசலக் கவியரசர் இயற்றிய பெரிய புராணக் கீர்த்தனை, இராமாயணக் கவியரசர் இயற்றிய பெரிய புராணக் கீர்த்தனை, இராமாயணக் கீர்த்தனை என்பன நாடகப் பணிபினை மேலும் அதிகமாகக் கொண்டு வந்தன.

இவ்விரண்டுவகை இலக்கியங்களிலும் குறவஞ்சி, பள்ளு என்பன நாட்டார் இயல் அடிப்படையில் அமைந்த மரபுவழி நாடகங்களுக்கு வித்திடச் சரித்திரக் கீர்த்தனைகள் கொட்டகைக் கூத்துக்களுக்கு அடிகோலின. நாட்டாரியல்சார் கூத்துகள் நாட்டுக் கூத்துகளாய் நிலைக்க, கொட்டகைக்கூத்துகள் காலப்போக்கில் ஆங்கில நாடக மரபைத் தழுவிய நவீன முறை நாடகங்களுக்கு இடம் அளித்தன.

இலங்கையில் நாட்டுக்கூத்து அல்லது மரபுவழி நாடகம் என்பது தமிழகத்திலே தெருக்கூத்து என அழைக்கப்படும். ஆட்டமும் பாட்டும் மிக அதிகமாக இடம்பெற்று ஓரிரவு முழுவதும் ஆடப்படும் இத்தகைய கூத்துக்கள் புராண இதிகாசக் கவிதைகளாகவோ அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போர் நடத்திய வீரபாண்டியக் கட்டப்பொம்மன் போன்ற வீரர்களின் வரலாறுகளாகவோ அமைவதே பெரும்பான்மை, சமூகத்தின் உயர் வர்க்கத்தினரது அநியாயங்களுக்கெதிராக அவர்களை நையாண்டிபண்ணும் வகையிலே பாடப் பட்டுக் சாமானிய ஏழை மக்களின் அபிலாட்சைகளைப் புலப்படுத்திய பள்ளுப் பிரபந்தங்களின் இடத்தைப் பிற்காலத்தில் இத்தகைய தெருக்கூத்துக்கள் பெற்றுக் கொண்டன. இவற்றோடு கிறிஸ்தவ சமயப் சார்பான கவிதைகளையும் - ஞானசவுந்தரி முதலியவை - கூத்துக்களாக்கி ஆடும் வழக்கம் இருந்தது. எனினும் கிறிஸ்துவக் கூத்துக்கள் இலங்கையிலே பெற்றிருந்த அளவு செல்வாக்கினைத் தமிழகத்திலே பெறவில்லை என்றே சொல்லல் வேண்டும். இத்தகைய தெருக்கூத்துக்களும் கொட்டகைக் கூத்துக்களுமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான தமிழக நாடக நூல்களின் தொகை நூறு என்பது என்பது பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் மதிப்பீடாகும்.

கூடிய அளவு கர்நாடக சங்கீதப் பாடல்களையும் செந்தமிழ் நடையிலே அமைந்த உரையாடல்களையும் உள்ளடக்கிய கொட்டகைக் கூத்துக்கள் தமிழகத்திலே கம்பனி நாடகங்கள் எனப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலந்தொட்டுத் திரைப்படங்களும் முறை நாடகங்களும் செல்வாக்குப் பெற முன்னுள்ள காலம்வரை கம்பனி நாடகற்களே சிறப்புப் பெற்றிருந்தன. நடிப்பிலும் கூடிய அளவு இசைத் திறனுக்கே முதன்மை வழங்கப்பட்ட இத்தகைய நாடகங்களை எழுதியோருள் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப்பிடத்தகுந்தவர். நாடகத்துறையிலே சிறந்து விளங்கிய டி.கே. சண்முகம் இவரைத் தமிழ் நாடகத்தின் தந்தை எனப் போற்றுவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலே ஆங்கிலம் கற்ற தமிழறிஞர் ஆங்கில நாடக பாணியிலே சில நாட்களை எழுதியதோடு புராண, இதிகாச சமூக நாடகங்களை எழுதியும் நடித்தும் மேடையேற்றியும் வழிகாட்டினார். இவர் இவ் வகையில் அறுபது நாடங்கள் வரை எழுதியுள்ளார். நாடகத்தில் ஈடுபடுவோர் பகுப்பறிவு குறைந்த பாமரரே என்ற நிலையை மாற்றிப் படித்த உயர்வர்க்கத்தினரும் அத் துறையிலே ஈடுபட ஊக்கமும் உற்சாகமும் அளித்தவகையிலும் பம்மல் ப. சம்பந்த முதலியார் குறிப்பிடத்தக்கவரே.

1931 ஆம் ஆண்டிலே தமிழகத்திலே திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கும்வரை தொழிற்றுறை சார்ந்த நாடகக் கம்பனிகளும் பொழுதுபோக்கிற்காய் அமைந்த சபாக்களும் நாடகங்களை மேடையேற்றி அக் கலைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தன. பார்சி நாடகமுறை என்ற முறையினைப் பின்பற்றி அழகிய திரைகள் இட்டு, அலங்கார ஆடை அணிகளுடன் புராண, இதிகாச, அலங்கார ஆடை அணிகளுடன் புராண, இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றுவதிலே பெரும் போட்டியே இருந்ததெனலாம். டீ. கே. எஸ். சகோதரர்கள், நவாய் இராசமாணிக்கம் ஆகியோர் நாடகத் துறையிலே தலை சிறந்து விளங்கினர். இவர்கள் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளுக்கே முதன்மையளித்தபோதும் அவ்வவ்போது சமகாலச் சமூக நிகழ்ச்சிகளையும் நாடகத் தவறவில்லை. இந்திய தேசீயப் போராட்டத்தில் தமிழ் நாடகத்துறையும் தனது பங்களிப்பைக் கணிசமான அளவில் வழங்கி நாடகம் சமூக விழிப்புக்கு உதவக்கூடிய கலைச்சாதனம் என்பதைச் செயலிற் காட்டியது.

தமிழக நாடகத்துறையில் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களும் நாடகத்தின் ஒரு பிரிவாகிய வானொலி நாடகத்துறைக்குத் தமது பங்களிப்பைச் செய்து வந்தன: வருகின்றன. நாடகத்தைச் செவிப்புலக் கலை சாதனமாகவும் வளர்க்கலாம். என்பதற்கு வானொலி நாடகங்கள் தக்க உதாரணங்களாகும். இவற்றோடு மேடை நாடகத் துறைக்கு எழுத்தாளரின் பங்களிப்பும் சாமானிளமானதன்று. பி.எஸ். இராமையா, தி. ஜானகிராமன், அரு. இராமநாதன் முதலான எழுத்தாளர்கள் தரமான நாடகங்களை எழுதி நாடகத் துறையை ஊக்கினர்.

எனினும் திரைப்படத்தின் செல்வாக்குத் தமிழக நாடக வளர்ச்சியைப் பெரிதும் பாதித்துள்ளமையையும் மறுத்தற்கில்லை. புதிய பரிசோதனைகளை நடத்தவும் நாடக மேடைக்கலையை வளர்க்கவும் தமிழகத்தில் அண்மைக் காலத்தில் பாரிய முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூறல் வேண்டும். திரைபட நடிகர் மனோர் சோ. முதலியோர் நாடகத்தினை முறையே கட்புலங்களைச் சாதனமாகவும் அரசியற் பிரசார சாதனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான நாடகக் கலைஞர்கள் இவர்களின் வழியையே பின்பற்ற முயன்று வருவதால் நாடக வளர்ச்சி தமிழகத்தைப் பொறுத்தவரையிலே தேக்க நிலையிலேயே உள்ளது எனலாம். வங்காளம், கேரளம் முதலிய இந்தியாவின் மற்றைய மாகாணங்களில் நாடகக்கலை வளர்ந்துள்ள நிலையோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் நாடகம் தவழ் நிலையிலேயே நிற்கிறது எனலாம்.

திரைப்படத்தை மறந்து தூய்மையான நாடக உருவத்தை புலப்படுத்தும் வகையில் அதனை வளர்ப்பதற்கான ஆலோசனைகள் கலையார்வம் கொண்ட தமிழகச் சஞ்சிகைகளிலே எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. சில காலத்திற்குமுன் தெருக்கூத்துப் பாணியில் மேடையேறிய குலேசா நாடகம் கலைத்துறையின் விழிப்புணர்;சியை ஓரளவு எடுத்துக் காட்டியபோதிலும் ( இந்நாடகம் “ கணையாழி” சஞ்சிகையில் வெளியாகியுள்ளது இத்துறையில் தமிழகம் பலபடிவங்கள் மேலேற வேண்டும் என்பதற்கு ஐயம் இல்லை.

ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்துக்கள்

சி. மௌனகுரு

நாட்டுக் கூத்தினைக் கிராமிய நாடகம் எனவும் அழைப்பர். கிராமிய நாடகம் மக்கள் வளர்த்த அழகுக் கலைகளுள் ஒன்று. கிராமிய மக்களின் உணர்வுகளையும் சிந்தனைப் போக்கினையும் வாழ்க்கை முறையினையும் இது வெளிப்படுத்துகிறது. இது ஒரு இனத்தின் தேசியச் சொத்ததாகும். ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான நாட்டுக் கூத்தினை இன்று மறந்து வருகிறது. எனினும் அறிஞர், ஆர்வலர் சிலரது முயற்சியினால் அதனை மீண்டும் தமிழ்ச் சமூகம் நினைக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

ஈழத்தில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் நாட்டுக் கூத்துக்கள் இடையிடையே, நடைபெற்று வருகின்றன. இக் கூத்துக்கள் தென்மோடி, வடமோடி, தென்பாங்கு, வடபாங்கு, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வசந்தன்கூத்து, வாசாமா, காமன்கூத்து எனப் பலவகைப்படும்.

ஈழத்தில் தமிழர் மத்தியில் ஆடப்படும் கூத்துக்களிடையே பாடல் வகைகள் , கதைப்பொருள், கதைப்போக்கு, கூத்து நடத்தப்படும் முறை ஆகியவற்றிற்கிடையே ஒற்றுமை உண்டு. எனினும் பிரதேச வேறுபாட்டிற்கு ஏற்ப அவ்வப் பிரதேசத்தின் தனித்தன்மைகளையும் இவை பெற்றவையாயுள்ளன. மன்னார்க் கூத்துக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயச் சார்புடை யவையாயிருக்க மட்டக்களப்புக் கூத்துக்கள் இந்து மதச் சார்புடையவாயுள்ளன. யாழ்ப்பாணக் கூத்த்தில் ஆர்மோனியம், டோல்கி, கடம் போன்ற வாத்தியக் கருவிகள் இடம் பெற மட்டக்களப்புக் கூத்தில் மத்தளம், என்னும் வாத்தியக் கருவிகளும் மலைநாட்டில் தப்பு என்ற வாத்தியக் கருவியும் இடம்பெறுகின்றன. பிரதேச வேறுபாடுகளே இதற்கான காரணமாகலாம்.

இக் கூத்துக்கள் நவீன நாடகங்களினின்றும் பாத்திரங்கள் தமக்குள் கருத்துப் பரிமாறும்முறை, மேடை அமைப்பு, பழகும் விதம், கதைப்போக்கு ஆகியவற்றில் வேறுபாடுடையன. இவையே இக் கூத்துக்களின் தனித்துவமான அம்சங்களுமாகும்.

நவீன நாடகப்போலக்கூத்து, வசனத்தால் ஆனதன்று, வசனம் மிகக் குறைவாகவே இடம் பெறும். வசனத்தைக் கூடப் பாட்டாகNவு இழுத்துக் கூறுவர். ஞானசவுந்தரி , என்றீக் எம்பரதோர் போன்ற நாடகங்களில் வசனமே இல்லை. ஆடலும் பாடலுமே கூத்தின் அடித்தளமாகும். இன்று ஈழத்தின் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய பகுதிகளிலேதான் கூத்திலே ஆட்ட மரபு பேணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களில் ஆட்ட மரபு கை விடப்பட்டு பாட்டு மரபு மட்டுமே பேணப்படுகிறது.

இக் கூத்துக்கள் ஆரம்பத்தில் வட்டவடிவமான மேடையிலே ஆடப்பட்டிருக்க வேண்டும். மட்டக்களப்பிலே இம் மேடை அமைப்பு வட்டக்களரி என அழைக்கப்படுகிறது. நாற்புறமும் பார்வையாளரைக் கொண்ட வட்டக்களரிமுறை இன்றும் மட்டக்களப்பிலுண்டு. ஏனைய பிரதேசங்களிலம் இம்முறை முன்னர் பயன்படுத்தப்பட்டதாயினும் இன்று முப்பக்கம் அடைக்கலம் பட்டதும் ஒரு பக்கம் பார்வையாளரைக் கொண்டதுமான மேடையமைப்பே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நாடகங்களைப்போல மேடைக்குப் பின்னணியாகக் காட்சிகளை விவரிக்கும் திரைசீலைகள் நாட்டுக் கூத்திற் பயன்படுத்தப்படுவதில்லை கூத்தரின் பாடல்களிலிருந்தே கதை நிகழும் இடங்களையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கூத்தைப் பழக்குபவர் அண்ணாவியார் என்று அழைப்படுகிறார். இவரே கூத்தின் மத்தளம் வாசிப்பவராவார். இவருக்கு உதவியாகத் தாளக்காரர், எடுபார்ப்போர், பக்கப்பாட்டுக்காரர் இருப்பர். இவர்கள் சபையோர் என அழைக்கப்படுவர்.

இக் கூத்துக்களைப் பழக்குவதற்கென்று ஒரு மரபு பெரும்பாலான கிராமங்களில் இன்றும் பேணப்படுகிறது. ஆரம்பத்தில் கூத்தாட விரும்புவர்களின் குரலுக்கும் தோற்றத்திற்கும் ஏற்பப் பாத்திரத் தெளிவு நடைபெறும் அண்ணாவியாரே இதனைச் செய்வார். இது சட்டம் கொடுத்தல் எனப்படும். தினமும் மாலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை கூத்துப் பழகுவர். இது தினமும் கூத்து எனப்படும். கூத்தருக்கு நன்றாக ஆட்டம் கைவரப் பெற்றதும் சதங்கை அணிதல் நடைபெறும். சதங்கை அணிதலின்போது கூத்துப் பகல் ழுமுவதும் ஆடப்படும் பின்னரே கிழமைக் கொருதடவை இக் கூத்தினைப் பழகுவர். இது கிழமைக் கூத்து எனப்படும். அரங்கேற்றுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் உடுப்பு அணியாமல் முழுக்கூத்தினையும் இரவு ழுமுவதும் ஆடுவர். இது அடுக்குப்பார்த்தல் எனப்படும். இவ்வளவும் நடைபெற்ற பின்னரே அரங்கேற்றம் நடைபெறும். இந் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கிராமம் முழுவதும் பங்கு கொள்ளும். சுதங்கை அணிதல், அரங்கேறுதல் என்பன ஊர்ப் பெருவிழாவாகவே கொண்டாடப்படும்.

மக்கள் அறிந்த கதைகளே கூத்தின் கருவாக அமைவதால் எதிர்பாராத திருப்பங்களோ, நாடகத்திற்குரிய ஆரம்பம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி என்ற படி நிலைகளோ கூத்திற் காணப்படா, பெரும்பாலும் கூத்துக்கள் புராண இதிகாசக் கதைகளையும் நாடோடிக் கற்பனைக் கதைகளையும் கருத்துகளாகக் கொண்டுள்ளன. கிறிஸ்தவர் வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவமத சம்பந்தமான கதைகளும் கருத்துகளாகக் கொள்ளப்பட்டன. சமூகக் கருத்துகள் முன்னர் கூத்துக்களாக ஆக்கப்படவில்லை. அறத்திற்கும் மறத்திற்கும் நல்லதற்கும் தீயதற்கும் நடக்கும்; போரில் இறுதியில் நன்மை இறை துணையுடன் வெல்வதையே இக் கூத்துக்கள் சித்தரித்தன. அமங்கல முடிவுகள் கூத்தின் இடம்பெறவில்லை எனலாம்.

கூத்தின் பாடல்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. கூத்தர் பாடலைப் பாடி ஆட மேடையில் நிற்கும் சபையோர் அதனைள இரட்டித்துப் பாடுவர். மீண்டும் மீண்டும் ஒரு பாடல் பாடப்படுவதால் பார்வையாளருக்குப் பாட்டின் பொருள் நன்கு புலப்படுவதுடன் கதைத் தொடர்பையும் அறிய முடிகிறது. நாட்டுக் கூத்தைப் பாடியவர்கள் பொருத்தமான இடங்களிற் பொருத்தமான யாப்புக்களைப் புகுத்தியுள்ளனர். வெண்பா, ஆசிரியப்பா, கலிவெண்பா போன்ற பாக்களும் கலிவிருத்தம், கலித்துறை, கொச்சகம் போன்ற பாவினங்களும் நாட்டுக் கூத்துக்களுக்குரிய தரு, சிந்து, தோடயம், இன்னிசை,கீர்த்தனம், கவி, உலா போன்ற இசையப்பா வகைகளும் கூத்து நூல்களிற் கையாளப்பட்டுள்ளன.
இக் கூத்துக்களுக்குரிய ஆட்ட முறைகளும் தனித்துவமானவை. மட்டக்களப்பில் இவ்வாட்ட முறைகள் பெரிதும் பேணப்படுகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் தன் வரவின்போது ஒரு நீண்ட வரவு ஆட்டத்தை நிகழ்த்தும் அப்போது பல்வேறு வகைத் தாளங்கள் மத்தளத்தில் இசைக்கப்படும். அத்தாளங்கள் வாயாற் சொல்லப்படுகையில் தாளக் கட்டுக்கள் எனப்படும். தாளக் கட்டுகளுக்கு ஏற்பவே. ஆட்ட முறைகள் அமையும். இவ்வாட்டங்கள் ஆண்களுக்கு வேறாகவம் பெண்களுக்கு வேறாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தகத் தாளக்கட்டுகள் வேறுபடுதலும் உண்டு. உலா, பொடியடி, வீசாணம், எட்டு, நாலடி, குத்துமிதி, பாய்ச்சல், ஓய்யாரம், அடந்தை தட்டடடி, குத்துநிலை முதலிய ஆட்ட முறைகள் கூத்திற் பயன்படுத்தப்படும்.

கூத்துக்களை வடமோடி, தென்மோடி எனப்பிரித்து நோக்கும் வழக்குமுண்டு. இரு மோடிகளுக்குமிடையேயான துல்லியமான வேறுபாடுகளை மட்டக்களப்பிற் காண முடிகிறது. ஆடல், பாடல், உடைகள் கூத்தில் உபயோகிக்கும் ஆயுதங்கள் என்பவற்றில் இரண்டிற்குமிடையே வேறுபாடுண்டு. தென்மோடி ஆட்டங்கள் வடமோடி ஆட்டங்களிலும் நுணுக்கமானவை ; பாடல்கள் இனிமையானவை. தென்மோடி நாடகங்கள் கற்பனைக் கதைகளைப் பொருளாகக் கொள்ள, வடமோடி நாடகங்கள் புராண இதிகாசக் கதைகளை பொருளாகக் கொள்கின்றன. தென்மோடிக் கூத்துக்கள் பாரம் குறைந்த உடுப்பினை அணிந்து வாள் மாத்திரம் கொண்டு ஆட, வடமோடிக் கூத்தின் பாரம் கூடிய உடுப்பினை அணிந்து வாள், வில், கதாயுதம், கட்டாரி முதலிய ஆயுதங்களை ஏந்தி ஆடுவர். இன்று இரண்டு மோடிகளிடையேயும் ஆடல், பாடல் தவிர்ந்த ஏனைய அமிசங்களில் வேறுபாடுகளைச் காண முடியாதுள்ளது.

ஐரோப்பியர் வருகையின் முன்னர் இக் கூத்தே ஈழத்தமிழரின் நாடகமாய் இருந்தது. கற்றோரம் கல்லாதோரும் இக் கூத்துக்களைப் பார்த்து மகிழ்ந்தனர். சமய விழாக்களின்போது புதுவரு~ம், தைப்பொங்கல் போன்ற விழாக் காலங்களிலும் இக் கூத்துக்கள் ஆடப்பட்டன. புலவர் கூத்துக்களை எழுதினர் ; அண்ணாவிமார் பழக்கினர். சில இடங்களில் அண்ணாவிமாரே கூத்துக்களை எழுதியும் பழக்கியும் வந்தனர். பல நூற்றாண்டுக் கணக்கான கூத்துக்கள் ஆடப்பட்டமைக்குச் சான்றுகளுண்டு.

கத்தோலிக்கர் வருகையின் பின் ஈழத்துக் கூத்துக்கள் சில புதிய அமிசங்களைப் பெற்றன. யாழ்ப்பாணத்திலும் மன்னார்ப் பகுதியிலும் இத் தாக்கத்தைக் காண முடிகிறது. கிறிஸ்தவக் கதைகளான ஞானசவுந்தரி மூவிராசாக்கள், எஸ்தாக்கியார் முதலியன நாடகங்களாயின. புலசந்தோர், ப+ந்தோழிமார், பபூன் போன்ற பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பண்டைய கூத்தில் கட்டியக்காரன் பெற்ற இடத்தினைப் பின்னர் பப+ன் பெற்றான் ; ஆட்டமுறைகள் கைவிடப்பட்டன.

அதன் பின்னர் தமிழ் நாட்டினின்றும் இங்கு புகுந்த பார்ஸி வழி நாடக மரபும் கூத்து மரபினைத் தாக்கியது. இதுவே வட்டக்களரி முறையினை மாற்றிக் கொட்டகைக் கூத்தாக பண்டைய கூத்தினை மாற்றியது. பார்ஸி வழி நாடகத்தினூடாகப் பல புதிய இராகங்களையும் கூத்துப் பெற்றது. விலாசக் கூத்து இச் சங்கமிப்பில் பிறந்த ஒன்றாகும். விலாசத்தில் கர்நாடக இசையே அதிகம் பயன்படுத்தப்பட்டது.

ஆங்கிலேயர் வருகையுடன் நவீன நாடக மரபு ஈழத்தில் உருவாகியது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாப் படங்கள் இங்கு வரத் தொடங்கின. நவீன நாடக வருகையும் சினிமா மோகமும் கூத்தினைப் பின்னிலைக்குக் கொண்டு சென்றன. படித்தவர்களும் நவநாகரிகக்காரர்களும் கூத்தினைப் புறக்கணித்தனர். கூத்துக் கிராம மக்களைச் சென்றடைந்தது. “ நாட்டுக்கூத்து” என்ற பெயரும் பெற்றது.

1956க்குப் பின்னர் ஈழத்தில் ஒரு தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டதென்பர். இக் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார அரசியல் வளர்ச்சிப் போக்கினால் இது எமது நாடு, எமது இனம், என்ற தேசிய உணர்வு இரு இன மக்களிடையேயும் ஏற்பட்டது. அந்நியர் கலாச்சாரத்திற்கு எதிராக எழுந்த இத்தேசிய உணர்வு தேசியக் கலை வளர்ச்சிக்குச் சாதகமாயிற்று. அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கலாசாரக் கழகம் பண்டைய கூத்துக்களைப் பேணுவதிலும் அண்ணாவிமாரைக் கௌரவிப்பதிலும் கூத்து நூல்களை அச்சிடுவதிலும் பேரூக்கம் காட்டியது. நாடெங்கிலும் அண்ணாவிமார் மாநாடுகள் நடத்தப்பட்டு அண்ணாவிமார் கௌரவிக்கப்பட்டனர். 1960களில் பேராசிரியர் வித்தியானந்தன் பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு பழைய கூத்துக்களை நவீனப்படுத்தி நாடகமாக்கி, கூத்துக்குப் புத்துயிரளித்தார். இதனைத் தொடர்ந்து விழாக்களிலும் சிறு வைபவங்களிலும் கூத்துக்களைச் சுருக்கி மேடையேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூத்து எமது தேசியச் சொத்து என்ற உணர்வு தமிழ் தமிழ் மக்களிடம் உருவானது.

பண்டைய கதைகளை விடுத்துச் சமூக உள்ளடக்கம் கொண்ட புதிய கூத்துக்களும் உருவாகின. கந்தன்கருணை சங்காரம் என்பன இதற்கு உதாரணங்களாகும். 1970களில் நவீன நாடக நெறியாளர்கள் தமது மோடியற்ற நாடங்களில் கூத்தாட்ட முறைகளைக் கலக்கத் தொடங்கின. பரத நாட்டியத்துடன் கூத்து முறைகளையும் கலந்து நாட்டிய நாடகம் தயாரிக்கும் முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன.

தேசிய உணர்வோடு மீண்டும் புத்துயிர் பெற்று மெல்ல வளர்ச்சி பெற்று வரும் இக் கலையை மேலும் வளர்ப்பதும் வழப்பவர்கட்கு உதவிபுரிவதும் தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும்.

ஈழத்தில்
தமிழ் நாடக வளர்ச்சி

க. சொக்கலிங்கம்

பிறநாடுகளிலும் மொழிகளிலும் அமைந்துள்ளவாறு போன்றே ஈழத்துத் தமிழ் மக்களிடையேயும் மேடைக் கலையாகவம் எழுத்திலக்கியமாகவம் நாடகம் நிலவிவருகிறது. கதிரைமலைப்பள்ளு என்ற பிரபந்தம் தமிழிலே தோன்றிய பள்ளுகளுள் முதலிலே தோன்றியது என ஆய்வாளர் சிலர் கொள்வர். இப் பள்ளுப் பிரபந்தமும் பின்தோன்றிய குறவஞ்சிகளும் தமிழகம் போன்றே ஈழத்திலும் நாடகங்கள் தோன்ற முன்னோடிகளாய் அமைந்திருக்கலாம். இவற்றின் வழியிலே இன்று நாட்டுக்கூத்து அல்லது மரபுவழி நாடகம் என அழைக்கப்படும் கலைவடிவம் பிறந்திருக்கலாம். இலங்கையின் வடக்கு, கிழக்கு வடமேற்கு மாகாணங்களில் நாட்டுக்கூத்து ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாய் வளர்ந்து வந்துள்ளது. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை காரணமாக மலையகத்தில் குடியேறிய இந்திய மக்களும் அவர்களின் பரம்பரையினரும் “காமன் கூத்து’’ என்ற நாடகக்வலை வடிவத்தினைப் பரவலாகப் பயன்செய்து வருகின்றனர். ஈழத்து தமிழ் நாட்டுக்கூத்தானது சிங்கள நாடக கலையிலும் தன் செல்வாக்கைப் பதித்துள்ளது. என்றும் “நாடகம்’’ எனச் சிங்கள மக்கள் பெயரிட்டுக் கையாண்டுவரும் கலைவடிவம் இலங்கையித் தமிழருக்கு உரியது என்றும் பேராசிரியர் ஈ. ஆர். சரச்சந்திரா கூறியுள்ளார். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இலங்கையிலே தமிழ் நாடகமானது நவீன முறைகளைச் சார்ந்தது படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகத்தில் வர்த்தக ரீதியான திரைப்படத் தொழில் நாடக வளர்ச்சியைப் பெரிதும் பாதித்தமைபோல இலங்கையிலே பாதிப்பு ஏற்படாமையால் தமிழ் நாடகம் இங்கு அண்மைக்காலங்களில் பல பரிசோதனைகளுடாக வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.

இருபதாம் நூற்றாண்டின் முதற்காலிலே நவீனமுறை நாடகம் இலங்கையில் தமிழரிடையே அறிமுகமாயிற்று. இதற்கு முன்பு இங்குப் பெரிதும் செல்வாக்குப் பெற்றிருந்தவை மரபுவழி நாடகங்கள் என்று இன்று அழைக்கப்படும் நாட்டுக்கூத்துக்களே, ஆட்டம், பாட்டம் இடையிடையே பாட்டைப் போலவே இசையோடு இழுத்துப் பேசும் வசனங்கள் ஆகியவற்றைக் கொண்டு களரிகளிலே ஆடப்பட்டு வந்த கூத்தையே நாட்டுக்கூத்து என்று அழைத்தனர். இந் நாட்டுக் கூத்துகளிலே ஆட்ட நுணுக்கங்கள் சற்றுக் குறைவாய் அமைந்தவை வடமோடி எனவும் ஆட்ட நுணுக்கங்கள் அதிகம் கொண்டவை தென்மோடி எனவும் அழைக்கப்பட்டன. இவை தவிர மாதோட்டப்பங்கு, யாழ்ப்பாணப் பங்கு என்ற வேறு இரு பிரிவுகளும் நாட்டுகூத்தில் இடம்பெற்றன. நாட்டுக் கூத்தைச் சுருக்கி வசனமும் பாட்டும் அமைய எழுதப்படும் வாசாப்பு என்ற ஒரு வகை நாட்டுக்கூத்தும் நிலவியது. இது வாசகப்பா என்ற செந்தமிழ் சொற்றொடரின் திரிபு.

நாட்டுக்கூத்துக்களை மேலும் இரு பெரும் பிரிவுகளுள் அடங்கலாம். சைவசமய மக்கள் ஆடிய நாட்டுக்கூத்துக்கள், கத்தோலிக்க மக்கள் ஆடிய நாட்டுக்கூத்துக்கள் என்பனவே இவ்விரு பிரிவுகளுமாகும். சைவ நாடகங்களிலே போர், வெற்றி, காதல், பத்தி, வீரமரணம் ஆகிய உணர்வுகள் மேலோங்கி நிற்கும். கத்தோலிக்க நாடகங்களிலே சமயப்பிரசாரம், தியாகம், சோகம் ஆகியவை ஓங்கித் தோன்றும். மார்க்கண்டன் நாடகம், வாளபிமன் நாடகம், இராம நாடகம், விசயமனோகரன் நாடகம் முதலியன சைவசமய நாட்டுக்கூத்துகளுக்கு உதாரணங்கள். ஞானசவுந்தரி நாடகம், மூவிராசாக்கள் நாடகம், தேவசகாயம்பிள்ளை என்பன கத்தோலிக்க நாட்டுக்கூத்துக்களு;ககு உதாரணங்கள். ஒப்பிட்டு நோக்குகையில் தொகையால் கூடியவை கத்தோலிக்க நாடகங்களே. நாட்டுக்கூத்துத் துறையிலே கூடிய பணியை அன்று தொடக்கம் இன்றுவரை ஆற்றி வருபவர்கள் கணிசமான தொகையினர் கத்தோலிக்கத் தமிழர்களே எனலாம்.

இந்நாட்டுக் கூத்துக்கள் நவரசங்களை வெளிப்படுத்துவதோடு நில்லாது, சமயப் பிரசாரம் நிகழ்த்துவதோடு அமைந்துவிடாது, சமகாலச் சமுதாய நிகழ்வுகளை அவ்வவ்போது விமர்சனம் செய்யும் வகையிலும் அமைந்திருந்தன. இன்று வளர்ச்சி பெற்றுள்ள நாட்டாரியலுக்கு நாட்டுக்கூத்துக்களின் பங்களிப்பு மிகவும் கணிசமானதே. இலங்கைத் தமிழரின் கலாசார மரபின் தனித்தன்மையைப் பண்டுதொட்டுப் பேணிக் காத்துவருவனவும் இந்த நாட்டுக்கூத்துகளே எனலாம்.

இருபதாம் நூற்றாண்டுத்தொடக்கத்திலே ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியாலும் அந்நிய கலாசாரங்களின் கலப்பினாலும் பாரம்பரிய சிந்தனைகளும் மரபுகளும் ஆட்டங்காணத் தொடங்கின. கிராமங்களின் தனித்தன்மை படிப்படியாக நலிவுறலாயிற்று. நகரத்தை நோக்கிப் படித்தவர்களும் உத்தியோகத்தர்களும் புலம் பெயர்ந்து சென்றபொழுது அவர்கள் தமது பழைய மரபு முறைகளையும் கலை வடிவங்களையும் புறக்கணிக்கத் தொடங்கினர். இந் நிலையிலே நாட்டுக்கூத்தின் இடத்தை நவீன நாடகம் பெற நாட்டுக்கூத்துத் தாழ்வடைந்தது. இக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்த நாடகக் கொம்பணிகள், நாடக சபாக்கள் என்பன தமிழ் நாடகத் துறையிலே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின.

1911 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபை கொழும்புக்கு வந்து நவீனமுறை நாடகங்களை நடத்தத்தொடங்கித் திறந்த வெளியில் நான்கு பக்கமும் மக்கள் அமர்ந்திருந்து பார்க்கும் வட்டக்களரி முறைக்குமாறாக, மண்டபத்தின் ஒரு பக்கத்தில் மேடையிலே நாடகம் நடத்தும் முறையினை அறிமுகம் செய்தது. காட்சிப் பின்னணியாக இறக்கி ஏற்றுத் திரைகளைக் கையாண்டது ; இரவு முழுவதும் விழித்திருந்து கூத்துப் பார்க்கும் முறையினைக் கைவிட்டு நான்கோ ஐந்தோ மணித்தியாலங்களில் நாடகத்தை முடித்துக்கொண்டது. பாடல்கள் முன்னரிலும் குறைவாகவே கையாண்டதோடு வசனத்திற்கும் நடிப்பிற்கும் முதன்மையளித்தமை இந் நாடகசபையின் புதுமையாய் விளங்கியது. இவற்றால், படித்த வர்க்கத்தினரிடையே நாடகத்தின்மீது விருப்பமும், வளர்ச்சியும் உண்டாயின.

இவ்வாறு கவரப்பட்டோரில் முதன்மையானவர் கலையரசு க. சொர்ணலிங்கம். இவர் சகுணவிலாச சபைத் தாபகரும் நாடகாசிரியரும் சிறந்த நடிகரும் இயக்குநருமான சம்பந்த முதலியாரைத் தமது குருவாய் வரித்து அவரால் எழுதப்பட்ட நாடகங்களை மேடையேற்ற முற்பட்டார் ; தமது கலையார்வம், திறமை, செல்வாக்கு யாவற்றையும் பயன்படுத்தி நாடகக்கலையினை இந் நாட்டில் வளர்ப்பதற்காக 1913 ஆம் ஆண்டில் கொழும்பிலே இலங்கா சுபோத விலாச சபையினைத் தாபித்தார். 1914 இல் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி விலாச சபை தொடங்கியது. 1920 இல் மட்டக்களப்பில் சுகிர்த விலாச சபை ஆரம்பமாயிற்று. இச் சபையின் அயரா உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் நாடகக்கலை இலங்கையில் நன்கு வளர்ந்தது எனலாம். இலங்கா சுபோதவிலாச சபையினர் பம்மல் சம்பந்த முதலியோர் எழுதிய நாடகங்களையே நடித்துக் கொண்டிருந்தபொழுது மற்றைய இரு சபையினரும் தம் உறுப்பினர்களைக் கொண்டு இராமாயணம், கந்தபுராணம் முதலாம் நூல்களிலிருந்து சம்பவங்களைத் தெரிந்து நாடமாய் எழுதுவித்து நடித்து வந்தனர். இதனால் நாடகம் எழுதும் துறையிலும் எம்மனோர் ஈடுபட்டமை வரவேற்றற்குரியது.

இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகள் ஈழத்தின் தமிழ் நாடக வரலாற்றிலே குறிப்பிடத்தக்க ஆண்டுகளாகும். நாடகக்கலையினைப் பல்கலைக்கழக மட்டத்தில் உள்ளோரும் ஆதரிக்கத் தொடங்கிய காலம் இது. அக் காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளரால் விளங்கிய கிளங்ஸ்பரி என்ற தமிழறிஞர் மனோன்மணி, சாந்திரகாசம் ஆகிய நாடகங்களை எழுதி வெளியிட்டார். இவை தழுவல், இதிகாச நாடகங்களெனினும் சமூகவிழிப்பையும் நோக்கையும் நாடக பாத்திரங்கள் வாயிலாய் வெளிப்படுத்தின. பெண் சமத்துவத்தை இவ்விரு நாடகங்களும் மிகுதியும் வலியுறுத்தின.

கிங்ஸ்பரியின் மாணாக்கரும் மொழியியல் வல்லுநரும் கவிஞருமான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தமிழ் நாடகத்துறையிலே ஈடுபட்டமை அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்று. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழைக் கையாண்டு சமுதாய மாந்தரின் உணர்வுகளையும் நோக்குகளையும் வெற்றி தோல்விகளையும் இவர் சிறந்த வகையிலே நாடக வாயிலாய்க் புலப்படுத்தினார். இவர் எழுதிய நான்கு நாடகங்கள் நானாடகம் என்ற பெயரிலும் இரு நாடகங்கள் இருநாடகம் என்ற பெயரிலும் நூல்வடிவம் பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த விடுதலைப்போரின் பிதாமகனான “ சங்கிலி’யின் வாழ்வை மையமாகக் கொண்டு இவர் எழுதிய சங்கிலி தலை சிறந்த வரலாற்று நாடகமாகும். ருத்னாவளி என்ற வடமொழி நாடகத்தையும் மொழிபெயர்த்து மாணிக்கமாலை என்ற பெயரில் இவர் வெளிப்படுத்தினார். எந்த வகையில் நோக்கினும் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சியிற் பேராசிரியரின் பங்களிப்பு மறக்க முடியாத ஒன்றேயாகும்.

நாற்பதுகள் போலவே ஐம்பதுகளின் இறுதிப்பகுதியும் தமிழ் நாடக வளர்ச்சியில் இலங்கையைப் பொறுத்தவரையில் நினைவிற் கொள்வதற்கு உரியதே.1956 இல் ஆட்சிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணிக்கட்சி, அதுகாலவரை நிலவிய காலனித்துவமனப்பான்மையினை ஒழித்துக்கட்டி மக்களிடையே தேசிய உணர்வினைப் புகுத்த முற்பட்டது. இவ்வுணர்வின் ஓரங்கமாக இந்நாட்டு மக்களின் கலாசார பாரம்பரியங்களைப் பேணுவதற்கென இலங்கைக் கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் உப குழுக்களுள் ஒன்றாகத் தமிழ் நாடகக் குழு அமைந்தது.

1957 வரை மந்த கதியில் இயங்கிய தமிழ் நாடகக் குழு அவ்வாண்டின் பின்னர் உயிர்த்துடிப்புடன் இயங்கத் தொடங்கியமைக்கு அதன் தலைவராய் அமர்ந்த கலாநிதி க. வித்தியானந்தன் அவர்களே ( இன்று பேராசிரியராயும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயும் விளங்குபவர்) முக்கிய காரணர். இவரின் தலைமைக்குப்பின் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழு தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் மிகப்பல. அன்று வரை புறக்கணிக்கப்பட்ட நாட்டுக்கூத்து கலைக்குப் புத்துயிரளிக்கப்பட்டது. நவீன சாதனங்களின் பின்னணியிலே குறுகிய கால இடைவெளியில் நாட்டுக்கூத்துக்கள் மேடையேற்றப்பட்டு மக்களின் இரசனைக்கு விருந்தாயின. பல்கலைக்கழக மாணவரையே நடிகராய்க் கொண்டு இராவணேசன், கர்ணன்போர், நொண்டிநாடகம், முதலியன இலங்கையில் பிரதான நகரங்களிலெல்லாம் மேடையேற்றப்பட்டன. நாட்டுக்கூத்துக்களின் உயிர் நாடிகளான அண்ணாவிமார் கௌரவிக்கப்பட்டனர். நாட்டுக்கூத்துக்களைப் பாடசாலை மட்டத்திலே போட்டி அடிப்படையில் மேடையேற்றிப் பரிசில்கள் வழங்கப்பட்டன. நாட்டுக்கூத்துக்கள் பல நூல் வடிவில் வெளியிடப்பட்டன. நாடகப் பிரதிப்போட்டி நிகழ்த்தி ஆண்டு தோறும் முதன்மை பெற்ற நாடகப் பிரதிகளை எழுதியோருக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்குகள் மூலம் நாடகம் தொடர்பான சிந்தனைகளை வளர்க்க வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறு ஏறக்குறையப் பத்தாண்டுகளாய் இந் நாடகக் குழு ஆற்றிய பணி தமிழ் நாடகத் துறைக்குப் புதிய இரத்தம் பாய்ச்சியது.

புpற கலைகளுக்குப் போலவே நாடகக் கலைக்கும் புதிய பரிமாணங்களை அமைத்து அதனை வளர்க்கும் பேரார்வம் அறுபதுகளுக்குப் பிறகு பரவலாய் ஏற்பட்டது. பேராசிரியர் சரத்சந்திராவின் மனமே, சிங்கபாகு முதலிய சிங்கள நாடகங்களும், பேராசிரியர் வித்தியானந்தனின் நாட்டுக்கூத்துகளும் இப்புதிய வேட்கையினை நாடகக் கலைஞரிடையே ஏற்படுத்தின. இவற்றின் தாக்கத்தினைக் கொழும்பு, பேராதனை நாடகக் கலைஞரிடையே முனைப்பாகக் காணலாம். ஏணெஸ்ற் மக்கன்ரைர், கலாநிதி ஆ~;லி கல்பே ஆகிய நாடகக்கலை நிபுணர்களின் செல்வாக்கினாலும் அவர்களிடம் பெற்ற பயிற்சியினாலும் அன்று வரை நிலவிய உத்திகளை மாற்றிப் புதிய வடிவில் நாடகங்களை மேடையேற்றும் முனைப்பு இளங்கலைஞர்களிடையே ஏற்பட்டது.

1969 ஆம் ஆண்டிலே “மஹாகவி’’ எழுதிய கோடை என்னும் கவிதை நாடகத்தினை அ. தாசீசியஸ் புதிய முறையிலே தயாரித்து மேடையேற்றினார். இவ் வரிசையிலே முருகையனது குற்றமே நீலவணனின் மழைக்கை, திமிலைத்துமிலனின் முல்லைக்குமரி என்பவையும் மேடையேறின. 1921 இல் முருகையனின் கடூழியம் நாடகம் நா. சுந்தரலிங்கத்தாலம் அதே ஆண்டில் மஹாகவியின் புதியதொருவீடு அ. தாசீசியஸாலும் மேடையேறப்பட்டன. இந்த வரிசையில் மௌனகுரு மேடையேற்றிய சங்காரம் நாடகமும் குறிப்பிடத்தக்கதே இவையாவும் நாடகத்தின் புதிய பரிமாணத்தை நன்கு பிரதிபலிக்கின்றன.

பழைமையான நாட்டுக்கூத்து மெட்டுக்களைப் பயன் செய்தல், ஆடம்பரமற்ற குறியீடுகள், மேடையமைப்புகள், பாத்திரங்கள், பாடுவோர் ஆகியோரிற் பல அரங்கிலிருந்து அவ்வவ்போது சென்று நாடகத்திற் பங்கேற்றல், இடையிடையே கதைத் தொடர்பினைப் பாடலாகவும், வசனமாகவும், மேடையில் இருந்தே இசைத்தும் கூறியும் பணிபுரியும் கூறுவோர் பங்களிப்பு, பாவனைகள் ஆகியவற்றால் நாடகங்கள் புதுமையும் காத்திரமும் பொருத்தி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. பேட்டல் பிறெஸ்ற் முதலிய மேற்றிசை நாடக நிபுணர்களின் நாடகங்கள் பாலேந்திரா, நிர்மலா நித்தியானந்தன் ஆகியோராற் சிறந்த முறையில் தமிழுக்கு அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. பழைமையான நாடக உத்திகள் படிப்படியாய்க் கைநெகிழ்க்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது இலங்கையிலே தமிழ் நாடகத்தின் எதிர்காலம் பிரகாசமாக விளங்கும் என்று நம்பலாம்.


தமிழ் நாட்டுச் சிறுகதைகள்

கலாநிதி க. அருணாசலம்

சிறு கதைக்குத் திட்டவட்டமான வரைவிலக்கணம் கூறுவர் இலகுவானதல்ல. சிறுகதைக்கு வரைவிலக்கணம் கூறப்புகுந்த மேலை நாட்டினரும் கீழை நாட்டினரும் முடிந்த முடிபான வரையறையைக் கூற முடியாது திணறியது மட்டுமன்றிக் காலத்துக்குக் காலம் தமது வரையறைகளையும் மாற்றிக் கொண்டனர். அமெரிக்க எழுத்தாளர் எட்கர் அலன்போ “ அரைமணிமுதல் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற் படித்து முடிக்கக் கூடியது சிறுகதை’ எனக் கூறியுள்ளார். ஆயின் பத்து நிமிடத்திற்குட் படித்து முடிக்கக்கூடிய சிறந்த சிறுகதைகள் பலவும் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும் படித்து முடிக்கக்கூடிய சிறந்த சிறுகதைகளும் இன்று காணப்படுகின்றன. புதுமைப்த்தனின் “பொன்னகரம்’ எஸ். பொன்னுத்துரையின் “சுவை’’ நீர்வை. பொன்னையனின் “சிரு~;டி” முதலியவை அளவிற் சிறியனவே. எனவே பொதுவாகக் கூறுமிடத்துச் சிறுகதை நாவலிலும் பார்க்க அளவிற் சிறியதாகவும் இறுக்கமும் கட்டுக்கோப்பும் முழுமையும் ஒருமைப்பாடும் கொண்ட அமைப்பையுடையதாகவம் இருத்தல் வேண்டும். செம்மையான பாத்திர வார்ப்பும், சொற்சிக்கனமும், உயிர்த்துடிப்பும் செறிவும் திட்பமும் மிக்க நடையும், கதைக்குப் பொருத்தமான தொடக்கமும் முடிவும் சிறு கதைக்கு, இன்றியமையாதன. நீண்ட வருணனைகளுக்கோ சொற்சிலம்பங்களுக்கோ சிறுகதையில் இடமில்லை. சிலவற்றைக் கூறிப் பலவற்றைச் சிந்திக்க வைப்பதாகச் சிறுகதை அமைதல் வேண்டும். சிறுகதை வாழ்க்கையின் சாளரம் என்பர் புதுமைப்பித்தன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிற் செய்யும் இலக்கியம் செழித்து வளர்த்துள்ளபோதும் “ மேனாட்டுச்சரக்கு’’ எனப் புதுமைப்பித்தனால் வருணிக்கப்பட்ட புனைகதை இலக்கியம் தமிழிற் குறுகிய கால வரலாற்றையே கொண்டுள்ளது. புனை கதை இலக்கியத்தின் ஒரு பிரிவான சிறுகதை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டின் முதற் காற் பகுதியிலேயே தமிழிலே தோற்றம் பெற்றதாயினும் குறுகிய காலப் பகுதியுள் அது அடைந்துள்ள வளர்ச்சி விதந்து கூறத்தக்கதாகும். மேனாட்டினர் வருகையினால், குறிப்பாக ஆங்கிலேயரின் வருகையினால் இந்தியாவினதும் அதன் ஒரு பகுதியான தமிழ் நாட்டினதும் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறைகளிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல ஏற்ப்ட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள், நிர்வாகச் சீர் திருத்தங்கள், ஆங்கிலக் கல்விவிருத்தி முதலியன தமிழர் சமூகத்திற் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்திய மொழிகளிலும் இலக்கியங்களிலும் பரவலாக மறுமலர்ச்சி அரும்பத் தொடங்கிற்று. நவயுகஞ் கவிஞரான பாரதியாரும், இக் காலப் பகுதியிலேயே வாழ்ந்து தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் புத்துயிரூட்டினார். மேலை நாட்டினர் வருகையைத் தொடர்ந்து தமிழில் வளரத் தொடங்கிய உரைநடை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் மேலும் செல்வாக்குப் பெற்றுத் தழைக்கலாயிற்று. இத்தகையதொரு சூழ்நிலையிலேயே தமிழிற் சிறுகதை இலக்கியம் தோற்றம் பெற்றது.

தமிழ்ச்சிறுகதையின் தந்தை எனப்போற்றப்படும் வ. வே.சு. ஐயரே (வரகநேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர் 1881 - 1925) தற்கால உருவ உத்திகளுடன் கூடிய பதினெட்டாம் நூற்றாண்டில் வீPரமுனிவரால் எழுதப்பட்ட பரமார்த்த குருகதையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வீரசாமிச் செட்டியாரால் எழுதப்பட்ட விநோதரஸ மஞ்சரியும் தாண்டவராய் முதலியாரால் எழுதப்பட்ட பஞ்சதந்திரமும் திருமணம் செல்வக்கேசவரா முதலியாரால் எழுதப்பட்ட அபிநவக் கதைகளும் சிறிய கதைகளேயெனினும் அவை தற்கால உருவ உத்திகளுடன் கூடிய சிறுகதைகளல்ல. வ.வே.சு. ஐயரது சிறுகதைகள் வெளிவருவதற்குச் சற்று முன்னும் ஐயரது சிறுகதைகள் வெளிவருவதற்குச் சற்று முன்னும் பின்னுமாகச் சிலர் சிறுகதை முயற்சியில் ஈடுபட்டனவராயினும் குறிப்பிடத் தகுந்த வெற்றியீட்டவில்லை. எனினும் அவர்களது முயற்சிகள் தமிழ்ச் சிறுகதைக்கு வளம் சேர்ப்பனவாகவே அமைந்தன. இவ் வகையிலே பாரதியார், அ. மாதவையா, இராமநுஜலுநாயுடு முதலியோரது முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. முhதவையாவின் சிறு கதைகள் கு~pகர் குட்டிக்கதைகள் என்ற தொகுதியாக வெளிவந்தன. இவரது கதைகளிற் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் ஒங்கி ஒலிப்பதையும் கலையம்சத்தையும் மீறும் வகையிற் பிரச்சாரத் தொனி மேலோங்கி நிற்பதையும் அவதானிக்கலாம்;. வ.வே.சு. ஐயர் எழுதியவற்றுள் எட்டுக்கதைகள் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தொகுதியாய் வெளி வந்துள்ளன. சிறுகதைகளில் ரசபாவமும் பெருநோக்கமும் இருக்க வேண்டும் என வற்புறுத்திய ஐயர் தமது கதைகளில் வீரம் தியாகம், காதல், விடுதலை, நாட்டுப்பற்று முதலியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். மனிதனின் பலத்தையும் உயர் பண்புகளையும் விண்டு காட்டிய ஐயர் அவனது பலவீனங்களையும் சிறுமைகளையும் தமது கதைகளில் வெளிப்படுத்தவில்லை ஐயரது கதைகளும் வரதட்சணைக் கொடுமையைப் பிரதி பலிக்கும் குளதங்கரை அரசமரம் என்னும் கதை பல வகையிலும் சிறப்புப் பெறுகின்றது. அவரது கதைகள் பல குறைபாடுபனையுடையனவேனும் முதன் முதலிலே தமிழ்ச் சிறு கதைக்கு உயிரும் உருவமும் கொடுத்துப் பலவிதப்பட்ட பரிசோதனைகளை நடத்தி, கதையின் பொருளிலும் உத்தியிலும் நடையிலும் பிற்காலச் சிறு கதையாசிரியர்களுக்கு வழிகாட்டியாக விளக்கிய ஐயரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றுவது பொருத்தமானதே.

முதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் பெரும் திருப்பத்தை அடைந்தது. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாக்கிரகம் முதலிய மக்களிடையே தீவிரம் பெற்றன. இக்காலப் பகுதியிற் பல துறைகளிலும் பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. எல்லா துறைகளிலும் காந்தியின் ஒப்பற்ற செல்வாக்குப் பெருகத் தொடங்கியது. ஆங்கில ஏகாபத்தியத்திற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள் ஒருபுறம் வலுவடைய மறுபுறம் காந்தியின் கருத்துகளை அடியொறித் தாழ்வுற்று நின்ற பாரத மக்களின் வாழ்வுப் புனருத்தாரணத்திற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இப் பணியிற் சுதந்திரச் சங்கு, தேசபக்தன், தமிழ்நாடு, மணிக்கொடி, ஆனந்த விகடன், கலைமகள், சுதேசமித்திரன், முதலிய பத்திரிகைகள் முன்னின்றுழைத்தன. இப் பத்திரிகைகளுட் சில அரசியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் தீவிர பங்காற்றின. இத்தகைய சூழ்நிலைகள் 1930 களிலே தமிழ் இலக்கிய உலகிற் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. 1930கள் தொடக்கம் 1940களின் இறுதி வரையிலான இக் கால கட்டப் பகுதி தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இக் கால கட்டப் பகுதியிலேயே தமிழ்ச் சிறுகதை இலக்கியம் தமிழ் மண்ணிலே நன்கு வேரூன்றி ஆழமாகவும் அகலமாகவம் வளர்ச்சியடையலாயிற்று. தமிழின் தலைசிறந்த சிறுகதைகள் பல இக்காலகட்டப் பகுதியிலே எழுந்தன. இக் கால கட்டப்பகுதியிற் சிறு கதை எழுதியோருள் ராஜாஜி, கல்கி, தி.ஜ.ர. முதலிடீயாரும் மணிக்கொடி எழுத்தாளர்கள் எனப்போற்றப்படும் புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, மௌனி, சி.சு. செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியன், பெ. கோ. சுந்தரராஜன், பி.எஸ். ருhமையா , லா.ச.ராமாமிர்தம் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்ப் புனைக்கதை உலகிற் பெருஞ் செல்வாக்குடன் திகழ்ந்த கல்கி நூற்றாண்டுக்கணக்கான சிறுகதைகளையும் பல நாவல்களையும் எழுதியுள்ளார். கல்கியின் ஒப்பற்ற பணி தமிழ்ச்சிறுகதையின் அகல வளர்ச்சிக்குக் காரணமாகியதுடன் சிறுகதை இலக்கியம் பொதுமக்கள் மத்தியிற் செல்வாக்கடைவதற்கும் தமிழ்ச் சிறுகதையுலகு பெரும் வாசகர் கூட்டத்தைப் பெறுவதற்கும் வழி வகுத்தது. சாதாரண மக்களும் படித்து விளங்கக்கூடிய வகையில் அவர் கையாண்ட குத்தலும் கேலியும் நகைச்சுவையும் நிறைந்த எளிமையான சிக்கலற்ற சிறியநடை அவரது கதைகளுக்குத் தனிச் சிறப்பையளித்தது. காந்தீயத்தின் செல்வாக்கினைக் கல்கியின் கதைகளிற் பரக்கக் காணலாம். இந்தியப்பண்பாட்டை எடுத்து விளக்குவதற்கும் பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதற்கும் அரசியற் கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்கும் சிறு கதை இலக்கியத்தை முக்கிய சாதனமாகப் பயன்படுத்திய ராஜாஜியின் சிறுகதைகள் உருவத்தாற் சிறப்படையாவிடினும் சிறுகதைப் பொருளில் விரிவை ஏற்படுத்தின.

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக் காலம் ஒப்பற்ற சிறப்பிடத்தைப் பெறுகிறது. 1933 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவரத் தொடங்கிய மணிக்கொடிப் பத்திரிகை 1936 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நின்று, மீண்டும் 1937 ஆம் ஆண்டில் வெளிவரத் தொடங்கிச் சிறிது காலத்தில் மறுபடியும் நின்றுவிட்டது. நீண்டகாலம் பணியாற்றிய பத்திரிகைகளைவிடச் சொற் காலம் பணியாற்றிய மணிக்கொடிப் பத்திரிகையின் பணி போற்றத்தக்கது. தமிழ்ச் சிறுகதையின் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு மணிக்கொடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரும்பணியாற்றினார். தமிழ்ச் சிறுகதை மன்னன் எனப் போற்றப்படும் புதுமைப்பித்தனின் மணிக்கொடி எழுத்தாளர்களுள் முதன்மையானவர். முகாகவி பாரதியாரை மறந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாறும் இல்லை. புதுமைப் பித்தனை மறந்த தமிழ் சிறுகதை வரலாறும் இல்லை எனக் கூறத்தக்க அளவிற்கு தமிழ்ச் சிறுகதையின் பல்வேறான வளர்ச்சிக்கும் தமிழ் சிறுகதை வரலாற்றின் திருப்பத்திற்கும் அரும்பணி ஆற்றியவர். புதுமைப்பித்தன் வ.வே.சு. ஐயரின் கதைகளுடன் தோற்றம் பெற்ற தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ப+ரணத்துவம் பெற்றுப் பொலிவுடன் திகழ்வது புதுமைப்பித்தனது கதைகளிலேயே எனலாம். உலகத்தின் தலை சிறந்த சிறுகதைகளுடன் ஒப்பிடப்கூடிய சிறு கதைகளைத் தமிழ் உலகிற்கு அளித்த பெருமை புதுமைப்பித்தனுக்கேயுரியத. சிறுகதைகள் எழுவோருக்கு முன் மாதிரியாக அவரது கதைகள் திகழ்நதன. அது கால வரை எழுத்தாளர்களாற் புறக்கணிக்கப்பட்ட சமூக பொருளாதாரப் பிரச்சினைகளையும் மற்றவர்களையும் தொடுவதற்கு அஞ்சிய விடயங்களையும் மற்றவர்களாற் பார்க்க மறுக்கப்பட்ட சமூகத்தின் இருண்ட பகுதிகளையும் அசாதாரணத்துணிவுடன் சிறுகதைகளாக்கியவர் புதுமைப்பித்தன், மனித வாழ்க்கையைக் கூர்ந்துநோக்கி அவற்றிற் காணப்படும் முரண்பாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் சிறுமைகளையும் இன்னல்களையும் அநுதாபத்தோடும் வேதனையோடும் அணுகினார். சமூகத்தின் மேல், மத்தியதரை வர்க்கங்களில் உள்ளவரது வாழ்க்கையிற் கவனம் செலுத்தாது சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்ந்து அல்லற்படுவோர்மீது அதிக கவனம் செலுத்திய புதுமைப்பித்தன், அவர்களது நிலையை மனிதாபிமானத்தோடும் ஆத்திரத்தோடும் சோகத்தோடும் சிந்தனையோடும் கேள்வியோடும் கிண்டலோடும் நோக்கினார். அவரது கதைகள் இருட்டிலே இருந்தவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. வெளிச்சத்திலே பகட்டித் திரிந்தவற்றை இருளிற் கோட்டின என்பர். சமுதாயப் புன்மைகள், சாதிக்கொடூரம் , விதவைக் கொடுமை, இளமை மணம், பொருத்தாத் திருமணம், மதமாற்றம், மூடநம்பிக்கைகள், போலிக்கௌரவம் முதலியவற்றை எடுத்துக்காட்டி அவற்றுக்குச் சாட்டையடி கொடுத்தவர் புதுமைப்பித்தன், தமிழச் சிறு கதையின் உள்ள உள்ளடக்கத்திலும் உருவத்திலும் உத்திவகைகளிலும் பல வகைப்பட்ட பரிசோதனைகளைக் கையாண்டு ஒப்பற்ற வெற்றியீட்டிய புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மட்டுமன்றித் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் என்றுமே நீங்காத நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.

சிறுகதையின் உருவச் செம்மையில் அதிக கவனம் செலுத்திய கு.ப. ரா. முனித மன விவகாரங்களுக்கு அடிப்படையாய் அமைவது பாலுணர்வே என்ற நோக்கிற் பெண்மையினை இயல்புகளைத் திறம்படச் சித்தரிக்கின்றன. கு.பா. ரா. சுமூகத்தில் நிலவும் மூடக்கொள்கைகள் அர்த்தமற்ற கட்டுப்பாடுகள், கைம்மைக்கொடுமை முதலியவற்றால் அல்லலுறும் பெண்களின் பரிதாப நிலையை அநுதாபத்தோடு அணுகியுள்ளார். ஆண் - பெண் உறவில் ஏற்படும் மிக நுண்ணிய உணர்வுகளையும் மனச்சிக்கலையும் ஆசை, நிராசைகளையும் தமது கதைகளிலே துல்லியமாகக் காட்டியுள்ளார். கு.ப.ராவின் கதைகள் பொதுவாக உடைந்த மனோரதங்கள், தீய்ந்த காதல்கள், நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றைக் கொண்டன என்பர்.

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் எனப் புகழப்படும் மௌனி எழுதிய கதைகள் குறைந்த அளவினவே எனினும் அவை சிறுகதை வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மௌனியின் கதைகள் பெருமளவிற்குத் தனி மனித சிந்தனை பற்றியனவாகவே அமைந்துள்ளன. மனித மனத்தின் பல்வேறு நிலைகளையும் உணர்வுப் போராட்டங்களையும் குடைந்து குடைந்து காட்டும் மௌனியிளதும் கதைகள் பல, காதல் சம்பந்தப்பட்டவையே எனினும் கு.ப.ரா., லா.ச.ரா. பிச்சமூர்த்தி, அகிலன் முதலியோரது கதைகளிலிருந்து வேறுபட்டவை: தனித்துவமானவை. அவரது கதைகளிற் காதல் அதனாலேற்படும் மன உனைச்சல்களும் சோகமும் பல்வேறு வகையிற் காட்டப்பட்டு;ள்ளன.

மணிக்கொடிப் பத்திரிகையின் தோற்றத்திற்கு அதன் வெற்றிக்கும் மூல காரணராய் விளங்கிய பி. என்.ராமையா பாசம், தியாகம், நாட்டுப்பற்று, மனிதாபிமானம்,பாசம், தியாகம், நாட்டுப்பற்று, மனிதாபிமானம், கடமையுணர்வு முதலியவற்றை உள்ளடக்கமாக் கொண்ட சிறு கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ள பிச்சமூர்த்தியின் ஆரம்ப காலக் கதைகளிற் பாலுணர்வும் பிச்சமூர்த்தியின் ஆரம்ப காலக் கதைகளிற் பாலுணர்வும் அதனால் ஏற்படும் சபலங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவரது பிற்காலக் கதைகளில் வேதாந்த தத்துவ விசாரணையும் ஆன்மீக நோக்கும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. புதுக்கவிதையில் ஆர்வங் கொண்ட பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் நடையைப் போன்றதொரு நடையைத் தமது சிறுகதைகளிலும் கையாண்டுள்ளார். அவர் தமது கதைகளிற் கையாண்டுள்ள விடயமும் நடையும் ஊரவக, உத்தி முறைகளும் அணிகளும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியிலே தனிச்சிறப்பிடம் பெறுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் உருவ அமைப்புக்கு வலுவும் வளமும் ஊட்டும் வகையிற் பல சிறு கதைகளை எழுதியுள்ள லா. ச. ரா. சிறுகதையின் உருவப் பரிசோதனையில் மிகக் கூடுதலான கவனம் செலுத்தி அதில் அதிக அளவு வெற்றியும் கண்டவர் இவரது கதைகள் பல மௌனி, பிச்சமூர்த்தி முதலானோரது கதைப் போக்குடன் ஒற்றுமையுடையனவேனும் அவர்களிடம் காணப்படாத தனித்துவப் பண்பும் புதுமை நோக்கும் இவரது கதைகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சிறுகதையுலகில் நனவோடை உத்திவகையை மிகச் சிறப்பாகக் கையாண்டவர்களில் லா. ச. ரா. முக்கியமானவர். தமிழில்; வரலாற்றுச் சிறு கதைகள் பெருகுவதற்கு வழிகோலும் வகையில் வரலாற்றுண்மைகளுக்கு மாறுபடாத வரலாற்றுச் சிறுகதைகளை எழுதிய நா. சுப்பிரமணியத்தின் சிறுகதைகள் பலவற்றில் மரணபயம், உலக நிலையாமை, கலையின் நிலை பேறு,விதியின் வலிமை முதலியன முக்கியம் பெற்றுள்ளன.

1974 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதையடுத்து இந்தியாவை அரசியல்,பொருளாதார, சமூக பண்பாட்டுத்துறைகளிற் பெரும் மாற்றங்களும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டன் நவயுகப் பண்புகள் வலுப் பெற்றன. சுதந்திரம் பெறும் வரை நிலவி வந்த பாரத ஒற்றுமையுணர்வுகள் நலிந்து பிரதேச, மொழி, இன உணர்வுகள் தலைதூக்கின. இத்தகைய உணர்வுகள் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாக வளர்ந்தன. சி. என். அண்ணாத்துரையின் தலைமையிலே வலிமை வாய்ந்த இயக்கமாகத் திகழ்ந்த திராவிட முன்னேற்றக்கழகம் அரசியற்றுறையிலே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தாவிடினம் சமூக பண்பாட்டுத் துறைகளிற் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திற்று.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து உலக அரங்கில் ஏற்பட்டுவந்த பாரிய மாற்றங்கள் தமிழ் நாட்டினையும் வெகுவாகப் பாதித்தன. 1917ஆம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து பலவித இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் எலகமே மலைப்புறும் வகையில் எழுச்சியுற்றுக் கொண்டிருந்த சோவியத் ர~;யாவின் புதுமை மிகு கருதுகளும் பொதுவுடைமைத் தத்துவமும் இக் காலப்பகுதியிலே தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்தியா எங்கணும் பலரைக் கவர்ந்தன. தமிழ் நாட்டிலே முற்போக்கு இலக்கிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு வீறுடன் செயற்படலாயிற்று. இவற்றுக்குப் பக்கபலமாக மனிதன், சாந்தி, சரஸ்வதி, தாமரை, ஜனசக்தி, தீபம் முதலிய பத்திரைகள் பணியாற்றின. இவை மட்டுமன்றி ஜனரஞ்சகமான பத்திரிகைகள் பலவும் பெருக்கெடுத்தன. இத்தகையதொரு சூழ்நிலை தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப் போக்கிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பலவற்றையும் ஏற்படுத்தியது. துமிழ்ச் சிறுகதை எழுத்தாளருள் ஒரு பகுதியினர் காந்தீயக் கருத்துகளை அடியொற்றிச் சிறுகதைகளைப் படைத்தனர். இன்னொரு பகுதியினர். திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துக்களைச் பிரசாரம் செய்யும் சாதனமாகச் சிறுகதை இலக்கியத்தைப் பயன்படுத்தினர். வேறொரு பகதியினர் இந்தியாவினதம், அதன் ஒரு பிரிவான தமிழ் நாட்டினதும் சமகால அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் பொதுவுடமை மலர்ச்சியின் மூலமே விடிவு காண முடியும் என்ற தளராத நம்பிக்கையுடன் பொதுவுடமைக் கருத்துக்களையும் முற்போக்குச் சிந்தனைகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறுகதைகளைப் படைக்கலாயினர். மேற்குறிப்பிட்ட பகுதியினரிலிருந்து வேறுபட்ட வகையிற் பலர் வர்த்தக நோக்குடன் பாலுணர்வைக் கிளறிவிடும் மட்டரகமான கதைகளையும் வீண்பொழுது போக்குவதற்கேற்ற நகைச் சுவையம்சங்களைக் கொண்ட துணுக்குகளையும் சிறுகதை என்ற பெயரில் எழுதலாயினர்.

1940களில் பிற்பகுதியிலும் 1950களிலும் சிறுகதைத் துறையில் முக்கியம் பெற்றவர்களுள் விந்தன்,ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன், அழகிரிசாமி, சுந்தராசாமி, தி. ஜானகிராமன், அகிலன், நா. பாத்தசாரதி,ஆர்.சூடாமணி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள், இவர்களுக்குச் சுற்றுக் காலத்தாற் பிற்பட்ட எழுத்தாளர்களுள் வையவன், தாமரைமணாளன், வல்லிக் கண்ணன், டி. செல்வராஜ், ஆ. மாதவன், நீல. பத்மநாபன், இந்திரா பார்த்தசாரதி, கிரு~;ணன் நம்பி, கி. ராஜநாராயணன், அழ. கிரு~;ணமூர்த்தி, வீர. வேலுச்சாமி, அ~;வகோல், அசோகமித்திரன், ராஜம்கிரு~;ணன், எம். ஏ. அப்பாஸ், பொன்னீலன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இக் காலகட்டப் பகுதியில் வரலாற்றுச் சிறுகதைகளை எழுதும் முயற்சியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. சி.என். அண்ணாதுரை, புலவர் அரசுமணி, கண்ணதாசன், வே. குபிலன், சாண்டில்யன், கோவி, மணிசேகரன், நா. பார்த்தசாரதி, வே. ரங்கராஜன் முதலியோர் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவர்கள்.

புதுமைப்பித்தனின் பாதையைத் தொடர்;ந்த விந்தன் (வி. கோவிந்தன்) போலி நாகரிகத்தையும் வரட்டுக் கௌரவத்தையும் சமுதாயப்புன்மைகளையும் தமது கதைகளில் ஆவேசத்துடன் சாடியுள்ளார். இவர் சமுதாயக்கொடுமைகளைவிட அக்கொடுமைகளுக்கான காரணிகளைத் தமது கதைகளிலே தெளிவாகச் சித்தரித்துள்ளார். அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்வு பறிக்கப்பட்ட அப்பாவி மக்களிடத்தும் ஏழைகளிடத்தும் அதிக இரக்கத்தை ஏற்படுத்தும் விந்தனது கதைகள் கொடுமைகளுக்கெதிராகப் புரட்சியைத் தூண்டும் பண்பும் மனித உள்ளத்தில் மறைந்து கிடக்குமட் மனிதாபிமான உணர்;வுகளிலே கட்டியெழுமப்பும் வேகமும் கொண்டவை. 1950 களிலே தமிழ்ச் சிறுகதைவளர்ச்சியிலே ஏற்பட்ட திருப்பத்திற்கும் முற்போக்குச் சிந்தனைகள் வலுப் பெறுவதற்கும் விந்தனது கதைகள் துணை புரிந்தன. புதுமைப்பித்தன் வாழ்ந்த காலப் பகுதியிலேயே சிறுகதைகள் ஏழுதத்தொடங்கிய சிதம்பர ரகுநாதன் முற்போக்குக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறுகதையாக்கத்தின் நுட்பங்களை உணர்ந்து இலக்கியத்தரம் குன்றாத சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ள அகிலன் தமது கதைகளிற் காதலை முக்கியமாகக் கொண்டு காதல் நிலையில் ஏற்படும் உணர்வுச் சிக்கல்களையும் உணர்வுப் போராட்டங்களையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். நடைமுறை வாழ்வின் அடித்தளத்திற் காணப்படும் மனித நிலைகளையும் முரண்பாடுகளையும் முக்கியமாகக் கொண்டு பல சிறுகதைகளை அழகிரிசாமி எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் தொடக்கி வைத்த பிரதேச வழக்குப் பிரயோகத்தைச் சிறந்த முறையிற் கையாண்டு பல சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ள ஜானகிராமன் காவேரிப் படுக்கையைக் களமாகக் கொண்டு தஞ்சாவ+ர்ப் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பிரதேசமணம் கமழும் வகையிலே தனது கதைகளிற் பிரதிபலித்துள்ளார்.

மணிக்கொடிக் காலத்தைத் தொடர்ந்து தமிழ்ச் சிறுகதை எழுத்தாளரின் சமூகநோக்கு ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவம் விளக்கலாயிற்று. 1950 களிலிருந்து தமிழ்ச் சிறுகதைகளில் சமூக, பொருளாதாரக் கண்ணோட்டம் முற்பட்ட காலக் கதைகளிலும் பார்க்கத் தௌவு பெற்றிருப்பதையும் சமுதாய நிலை பற்றிய தீட்சணய நோக்கையும் எதிர்காலச் சிந்தனைக்கு வழிவகுக்கும் பண்பையும் அவதானிக்க முடிகிறது. 1960களில் எழுத்தாளர்களுக்கிடையிலும் பத்திரிகைகளுக்கிடையிலும் இடம்பெற்ற இலக்கிய நெறிப்பாடு பற்றிய கருத்து மோதல்களும் முரண்பாடுகளும் சிறுகதை எழுத்தாளர்களைப் பல அணிகளாகப் பிரிய வைத்தன. எனினும் பொதுவாக இவர்களது கதைகளிற் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் ஏற்படும் இன்னல்களும் தொழிலாளர் போராட்டங்களும் வறுமையால் ஏற்படும் சீரழிவுகளும் முக்கியம் பெறுகின்றன.

மணிக்கொடிக் காலத்தில் பின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றிலே தன்னிகரற்றுத் திகழ்பவர் ஜெயகாந்தன் புதுமைப்பித்தனின் பாதையைப் பின்பற்றிய ஜெயகாந்தன் புதுமைப்பித்தனிலும் பார்க்கச் சமுதாயப் பிரச்சினைகளையும் வாழ்க்கை அடிப்படைகளையும் ஆழமாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் மனிதநேயத்தோடும் தீட்சண்யத்தோடும் தமது கதைகளில் அலசியுள்ளார். சமூக, பொருளாதார முரண்பாடுகளைத் தமது கதைகளில் நன்கு பிரதிபலித்துள்ள ஜெயகாந்தன் அம் முரண்பாடுகளைக் கூர்ந்து நோக்கிஅ வை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களையும் அவற்றுக்கான தீர்வுமார்க்கங்களையும் காட்ட முயன்றுள்ளார். அவரது கதைகள் பலவற்றிற் பாலுணர்வு முக்கியத்துவம் பெற்றுக் காணப்படினும் வெறுமனே பாலுணர்வுக்கு முக்கியத்துவமளிக்காது பாலுணர்வுடன் சமுதாயப் பிரச்சினைகளை உணர்ச்சி நிலைகளைப் பாலுணர்வுடன் சமுதாயப் பிரச்சினைகளை, உணர்ச்சி நிலைகளைப் பாலுணர்வு நிலையில் வைத்து நோக்கியும் நுணுக்கமாகச் சித்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜெயகாந்தனுடன் சம காலத்தில் எழுத ஆரம்பித்த சுந்தர ராமசாமியின் ஆரம்ப காலக் கதைகளில் இடம்பெற்ற ஆழமாக சமுதாயப் பார்வையும் உயிரோட்டமும் அவரது பிற்காலக் கதைகளிலே வளர்ச்சியடைந்துள்ளன. புதுமைப் பித்தனுக்குப் பின் தென்பாண்டி நாட்டுத் தமிழைச்சிறப்பாகக் கையாண்டவர்களிற் சுந்தர ராமசாமி முக்கியமானவர். இன்றைய சிறுகதையாசிரியர்கள் பலர் தமிழ்ச் நாட்டின் பின் தங்கிய பகுதிகள் பலவற்றைக் களமாக்கிக்கொண்டு அவ்வப் பகுதிச் சமூகத்தின் அடித்தளத்திலுள்ளவர்களது வாழ்க்கை நிலையையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் சிறுகதைகளைப் பிரதேச மண்வாசனையுடனும் புதிய கருத்து வீச்சுடனும் வேகத்துடனும் எழுதி வருகின்றனர். இன்றைய சிறுகதை எழுத்தாளர்களுள் ஜெகாந்தன், அபராஜிதன், வேந்தன், கே. ராமசாமி, பறம்பை, அ. ஜெகதீசன், ஆழியான், பா. ஜெயப்பிரகாசம், சந்திரபோஸ், பழநியப்பன், வேலுமித்திரன், சார்வாகன், ரவீந்திரன், சாகுந்தலன் முதலியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தவர்கள், தமிழிலே கணிசமான அளவிற்குப் பிற மொழிச் சிறுகதைகளை மொழிபெயர்க்கும் முயற்சியும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆங்கில ர~;ய, வங்க, மலையாள, இந்தி மொழிகளின் சிறு கதைகள் பல தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப் பிறமொழிச் சிறுகதைகள் தமிழ்ச்சிறுகதைகளுக்கு வளம் சேர்ப்பனவாக விளங்குகின்றன.

ஈழத்துத் தமிழ் சிறுகதைகள்

கலாநிதி. க. அருணாசலம்

ஆங்கில மொழியிற் புனைக்கதை இலக்கிய வளர்ச்சி இங்கிலாந்தில் மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா முதலியநாடுகளிலுங் காணப்ப்படுவது போன்ற தமிழிலும் புனைக்கதை இலக்கிய வளர்ச்சி தமிழ் நாட்டில் மட்டுமன்றி ஈழம், மலேசியா முதலிய தமிழர் வாழும் ஏனைய நாடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழ் நாட்டினைப் போன்றே ஈழத்திலும் புனைகதை இலக்கியத்தின் ஒரு பிரிவான சிறுகதை இலக்கியம் இன்று ப+ரணம்பெற்ற ஓர் இலக்கிய வடிவமா வளர்ந்துள்ளது.

பதினொறாம் நூற்றாண்டிலிருந்தே ஈழத்தில் ஐரோப்பியர் ஆட்சி இடம் பெயற்றபோதும் பத்தொண்பதாம் நூற்றாண்டளவில் ஆங்கிலேயர் ஈழம் முழுவதையும் தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்தியதையடுத்தே ஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறைகளிற் பாரிய மாற்றங்கள் ஏற்டலாயின. நுpலமானிய அமைப்புமுறையின் சிதைவு, அரசியற்றுறையிலான சீர்திருத்தங்கள், கல்வி குறிப்பாக ஆங்கிலக்கல்விவிருத்தி, மத்தியதர வர்க்கத்தி;ன் தோற்றம், அரசியல், துறையிற் பொதுமக்கள் பங்குபெறத் தொடங்கியமை, மேலைநாட்டு இலக்கியங்களின் தொடர்பு, தமிழ்நாட்டு எழுத்துக்களின் தாக்கம் முதலிய இன்னோரன்ன காரணங்கள் ஏறத்தாழ 1930 ஆம் ஆண்டையொட்டி ஈழத்திலும் சிறுகதை இலக்கியம் தோன்றுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தின. தமிழ் நாட்டினைப் போலவே ஈழத்திலும் முதலில் நாவல்களே தோன்றின. அவற்றைத் தொடர்ந்தே சிறுகதை இலக்கியம் முகிழ்க்கலாயிற்று, கதாசிந்தாமணி, ஹைதர்~h சரித்திரம், நற்பவளத் திரட்டு முதலிய கதைத் தொகுதிகளில் அமைந்த கதைகள் பழையமரபு தழுவிய கதைகளேயன்றித் தற்கால உருவ, உத்தி முறைகளைக் கொண்ட சிறுகதைகளல்ல. 1930 களிலிருந்தே ஈழத்திலே தமிழ்ச்சிறுகதைகள் உருவப் பிரக்ஞையுடன் எழுதப்பட்டன. இக் காலப் பகுதியிற் சோஇ. சிவபாதசுந்தரம் முதலியோரும் சிறுகதைகளை எழுதும் முயற்சியில் ஆர்வம் காட்டினராயினும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளாய் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோர் விதந்து போற்றப்படுவர். இவர்களது கதைகள் கலைமகள், கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் வெளியாகின. இலங்கையர் கோனின் கதைகளுள் அதிகமானவை வெள்ளிப் பாதசரம் என்னும் தொகுதியாய் வெளி வந்துள்ளன. ஏனையவரது கதைகள் தொகுதிகளாக வெளிவரவில்லை.

பொதுவாக நோக்குகையில் இம்மூவரது கதைகளிலும் மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒரு பிரிவினரான கு.பா.ரா., பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியன், மௌனி ஆகியோரது சிறுகதைகளின் நேரடித் தாக்கமும் மேலைநாட்டுச் சிறுகதைகளின் பாதிப்பும் காணப்படுகின்றன. பழைய வரலாற்றுச் சம்பங்கள் புராண இதிகாசங்களில் இடம்பெறும் நிகழ்ச்சிகள், மனிதனின் மென்மையான உணர்வுகள், மன உணர்வுப் போராட்டங்கள், ஆண், பெண் உறவு, கிராமியப் பண்புகள் முதலியன இம்மூவரது சிறு கதைகளிலும் முக்கியம் பெற்றுள்ளன. இவர்களது சிறுகதைகள் பல ஈழத்தைக் களமாகக்கொண்டு அமைந்துள்ளபோதும் அவை ஈழத்து மக்களுக்கேயுரிய பிரச்சிகனைகளைப் பிரதி பலிக்காமற் பொதுவான மன உணர்வுகளைப் பிரதிபலிப்பனவாகச் காணப்படுகின்றன. இலங்கையக்கோன் சி. வைத்தியலிங்கம் ஆகியோரது கதைகள் சிலவற்றிற் சமூக உணர்வு மெல்லியதாக இழையோடினும் முனைப்புப் பெறவில்லை. எனினும் முன்னோடிகளான இவர்கள் மூவரம் கலைமெருகு குன்றாத வகையில் உருவ அமைதியுடன் தமது கதைகளைப் படைத்தள்ளமை போற்றத்தக்கது. ஈழத்து மண்ணில் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வேரூன்றி வளர்ச்சியடையவும் தமிழ் நாட்டுச் சிறுகதைகளுக்கு ஈடுகொடுத்து நிற்கவும் இம் மூவரும் வழி சமைத்தனர் என்பதில் ஐயமில்லை.

மேற்குறிப்பிட்ட முன்னோடிகளைத் தொடர்ந்ர் 1940 களில் அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம் வரதர் (தி.ச.வரதராசன்) கனக. செந்திநாதன், சொக்கன., க. வேலுப்பிள்ளை, க. சிவகுருநாதன், சு. நல்லையா, தாழையடி, சபாரத்தினம், இராஜநாயகன் முதலியோர் சிறுகதை எழுதும் முயற்சியில் இறங்கினர். 1940 ஆம் ஆண்டு தொடக்கம் ஈழத்துத் தமிழைச் சிறு கதை வரலாற்றிலே ஏறத்ததாழ 1950களின் முற்பகுதி வரையிலான காலப்பகுதியை மறுமலர்ச்சிகாலம் எனலாம். இக் காலகட்டப் பகுதியில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சகல துறைகளிலும் மறுமலர்ச்சிக் கருத்துக்கள் இடம்பெற்ற பொழுதும் சிறுகதை இலக்கியத்திலே அவை அழுத்தம் பெற்றுள்ள இக் காலகட்டப் பகுதியிலே எழுந்த சிறுகதைகள் முற்பட்ட காலக் கதைகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்ட்டனவாகவும் மறுமலர்ச்சிக் கருத்துக்களையும் சமுதாய நல ஈடுபாட்டையும் கொண்டனவாகவும் அமைந்துள்ளமையை அவதானிக்கலாம்.

இந்தியாவில் வீறுடன் செயற்பட்டுக்கொண்டிருந்த காந்தீய இயக்கமும் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் மணிக்கொடிப் பத்திரிகை, அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் வெளியாகிய பத்திரிகைகள் ஆகியவற்றின் இலக்கியப் பரிசீலனைகளும் அவற்றின் தாக்கமும் ஈழத்து இலக்கியத்துறையையும் பாதித்தன. 1930 முதல் வெளிவந்த ஈழகேசரிப் பத்திரிகையும் வீரகேசரிப் பத்திரிகையும் மறுமலர்ச்சிக் கருத்துகளுக்கு வரவேற்பளித்தன. 1943 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையிற் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தது. 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சி என்னும் பத்திரிகை காலத்திற்கொவ்வாத பழைய மரபுகளை நீக்கியும் புதிய சிந்தனை மறுமலர்ச்சிக் கருத்துகள் என்பவற்றை வரவேற்றும் பண்டித மனப்பான்மையை எதிர்த்தும் இலட்சிய வேகத்திற்கும் இலக்கிய வேட்கைக்கும் முக்கியத்துவமளித்தும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையுலகை வளம் படுத்த உதவிற்று. மேற் குறிப்பிட்ட தலைமைகள் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களைப் புதிய பாதையில் வீறுநடை போடத்தூண்டின. அவர்களுக்குப் புத்தூக்கத்தை அளித்தன. இப் புதிய பரம்பரையின் தோற்றத்துடனேயே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறப்படையத் தொடங்கியதுடன் ஆழமாகவும் அகலமாகவும் வளர்ச்சியடைலாயிற்று. ஈழத்துத் தமிழ்ச் சிறு கதைகள் ஈழத்தையே களமாகக் கொண்டு ஈழம் வாழ் மக்களின் பிரச்சினைகளையும் எண்ணங்கள் அபிலாi~களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரதி பலிப்பனவாக அமைய வேண்டும். சமூகச சீர்திருத்தத்துக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும் என்னும் கருத்துகள் இக்காலப் பகுதிகளிலிருந்து வலுப்பெறலாயின. தென் இந்திய மரபை அழுங்குப்பிடியாகப் பின்பற்றும் போக்கினை விடுத்து ஈழத்திற்கெனத் தனித்துவமான இலக்கிய பாரம்பரியம் வளர்வதற்கும் இக் காலப்பகுதி எழுத்தாளர்கள் வித்திட்டனர்.

பழைய போக்கு முற்றாக மாறாது காணப்பட்டபோதும் ஆரம்ப காலச் சிறுகதை எழுத்தாளர்கள் போக்கிலிருந்து பெருமளவு மாறுபட்ட நிலையில் இலக்கியம் சமூகத்தைச் சீர் திருத்தவும் புதியதோர் சமூகத்தை உருவாக்கவும் பயன்படவேண்டும் என்ற துடிப்பு இக் காலப் பகுதி எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகளிற் காணப்படுகிறது. இவர்கள் தாம் வாழும் சமுதாயத்துடன் இணைந்து நின்று தமது கதைகளிற் சமூகப் பிரச்சினைகளைப் பிரதி பலித்துள்ளதுடன் சமூக சீர்திருத்தத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் சிறு கதை இலக்கியத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதன் பிரதிபலிப்பாகச் சிறுகதைப் பொருளில் மாற்றமும் விரிவும் ஏற்படலாயின. சிறுகதை இலக்கியத்தின் நோக்கமும் போக்கும் மாறுபடலாயின. அ.செ. முருகானந்தம் அ. ந. கந்தசாமி வ. அ. இராசரத்தினம், வரதர் ஆகியோரது பல சிறுகதைகள் இவ் வகையில் விதந்து குறிப்பிடத்தக்கது. இப் புதிய பரம்பரையினரின் கதைகள் பலவற்றிற் சமூக, சமய துறைகளிலான சீர்கேடுகளும் ஊழல்களும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வன்மையாகக் கண்டிக்கப்படுவதுடன் வறுமையினால், அல்லலுறும் ஏழை மக்களின் வாழ்வுக் க~;டங்கள், மன வேதனைகள், உக்கி மக்கிப்போன அர்த்தமற்ற சம்பிரதாயங்களும் பழைய மரபுகளும் ஆண்களின் அடக்கு முறைகளுக்கும் உள்ளாகித் தவிக்கும் பெண்களின் பரிதாப நிலைமை, அவர்களது உள்ளக்குமுறல்கள், அவர்கள் முன்னேற வேண்டியதன் அவசியம் முதலிய சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இக் காலப் பகுதி எழுத்தாளர்கள் பலர் ஈழத்தின் வட பகுதியைக் களமாகக் கொண்டு பிரதேச மண்வாசனையுடன் பல சிறுகதைகளைப் படைத்துள்ளனராயினும் அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம் முதலியோர் கிழக்கிலங்கை, மலையகம், கொழும்பு எழுதியுள்ளனர் என்பது மனங்கொள்ளத்தக்கது. பழைமைப்பண்பு, சமயச் சூழல், யாழ்ப்பாணக் கலாசாரம் முதலிய கனக. செந்திநாதனது சிறுகதைகளின் பண்புகளாக மிளித்கின்றன. பிரதேச மண்வாசனை மிகுந்த சிறுகதைகள் பலவற்றை எழுதிய கனக. செந்திநாதன் பழைமையைப் போற்றும் அதே நேரம் பழைமையின் அடியாகப் புதுமையை சேர்ந்த வ. அ. இராசரத்தினம் அப்பிரதேசத்தினைக் களமாகக் கொண்டு கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். க. வேலுப்பிள்ளையின் கதைகளிற் சம்பவங்களிலும் பார்க்கச் சமடபவற்களினடியாகத் தோன்றும் உண்ர்வு நிலை முக்கியத்துவம் பெறுகின்றது. இவர் சிறுகதைத் துறையில் உருவப் பரிசோதனைகள் சிலவற்றைச் செய்து கணிசமான வெற்றியுமீட்டியுள்ளார். சமய, தத்துவ, புராணக்கருத்துக்கள், மனிதனின் பொதுவான இயல்புகள், குணக்கேடுகள், வாழ்க்கை முரண்பாடுகள் முதலிய முக்கியத்துவம் பெற்றுள்ள சொக்கனது சிறுகதைகளில் மனித இன்னல்களைக் கண்டு துன்புறும் வேதனைக்குரல் மேலோங்கிக் காணப்படுகிறது. வரதரின் கதைகள் பலவற்றிற் சமுதாய சீர்திருத்த ஆர்வமும் காந்தீயப் பற்றும் மேலோங்கி நிற்கின்றன. காதல், கற்பு, பெண்மை, வீரம் முதலியவற்றுக்குத் தமது கதைகள் மூலம் புரட்சிக்கரமான கருத்துக்களைக் காட்டியுள்ளார். தாழையடி சபாரத்தினத்தின் சிறுகதைகளிற் கல்கியின் ஆதிக்கம் அதிக அளவிற் காணப்படுகிறது. இவரது சில கதைகள் சமூகத்தைப் பிரதிபலிப்பனவாயினும் பெரும்பாலான கதைகள் கனமற்றனவும் சிக்கலற்றனவுமான விடயங்களையே கொண்டுள்ளன. பொதுவாக மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் அடுத்துவரும் காலப்பகுதிச் சிறு கதைகளில் யதார்த்தப் பண்பு மேலோங்குவதற்கும் முற்போக்குக் கருத்துகள் வலுவடைவதற்கும் ஈழத்திற்கென்ற தனித்துவமான இலக்கிய பாரம்பரியம் உரம் பெறுவதற்கும் வழிகோலின.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதையடுத்து அங்கு அரசியல், பொருளாதார,சமூகத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் போன்று 1948 ஆம் ஆண்டு ஈழம் சுதந்திரம் பெற்றதும் உடனடியாகப் பெரும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஏறத்தாழ 1950 களின் நடுப்பகுதியிலிருந்Nhத பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாயின. 1950 களின் நடுப்பகுதியிலிருந்து தேசிய விழிப்புணர்வு முக்கியம் பெறலாயிற்று. 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படலாயிற்று. இந்தியா தாய் நாடு, ஈழம் சேய் நாடு என்னும் போக்கில் எடுத்ததற்கெல்லாம் தென்னிந்தியாவை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை மாறி ஈழத்துத் தமிழர்களாகத் தாம் வாழ வேண்டும். தமக்கெனத் தனித்துவமானதோர் பாரம்பரியம் உண்டு என்னும் உணர்வும் முக்கியம் பெறலாயிற்று. ஏறத்தாழ 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 களின் பிற்பகுதிவரையிலான கட்டம் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

இக் காலப் பகுதியிலே தேசிய முதலாளித்துவம் தலையெடுத்தமை, இலவசக் கல்வித் திட்டத்தினால் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி, பொதுவுடமை நாடுகளிளின்றும் பரவிய பொதுவுடமைத் தத்துவமும் சோ~லிஸச் சிந்தனையும் அவை சார்பான நூல்களும் இலக்கியங்களும் தமிழ் மொழியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெறத் தொடங்கியமை, சமூகத்தில் நிலவும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அவற்றிற்குரிய அடிப்படைக்காரணிகளையும் மக்கள் மிகுதியாக உணரத் தலைப்பட்டமை, தமிழர் சமூகத்திற் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முக்கிய பிரச்சினைகளாகத் தலையெடுத்தமை, தொழிற் சங்கங்களின் வளர்ச்சி, 1960 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழகம் வரை சுயமொழிக் கல்வி விருத்தியேற்பட்டமை தமிழகத்திலே வீறுடன் செயற்பட்டுக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் ஈழத்து இளைஞர் பலரைக் கவர்ந்தமை முதலியன ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப்போக்கிற் பல மாற்றங்;கள் ஏற்படத் தூண்டுகோலாயின. இத்தகைய மாற்றங்களுக்கு மேலும் உரமூட்டும் வகையில் இக்காலப் பகுதியிலே தீவரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைந்தது. 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1956 ஆம் ஆண்டிலிருந்து செயல் வேகம் பெற்றதுடன் ஈழத்து இலக்கியப் போக்கினை நெறிப்படுத்தும் செல்வாக்கும் செயற்றிறனும் மிக்க முக்கிய நிறுவனமாகவம் பணிபுரியலாயிற்று. இக் காலப் பகுதியிலிருந்து சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் பெரும்பாலோர் இச் சங்கம் முன் வைத்த முற்போக்குக் கருத்துக்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கவரப்பட்டனர் என்பதை இக் காலச் சிறுகதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. இக்காலப் பகுதியிலே தமிழ் நாட்டிலிருந்து ஈழத்துக்கு வருகை தந்திருந்த பகீரதன், நா. பாத்தசாரதி, கி.வா. ஜகந்நாதன் ஆகியோர் ஈழத்து இலக்கியம் பற்றித் தெரிந்த அலட்சியமான கருத்துக்களும் ஈழத்து எழுத்தாளர்களுக்குச் செய்த “ உபதேசங்களும், ஈழச் சிறுகதை வளர்ச்சிக்கு உரமூட்டுவனவாகவே அமைந்தன.

தினகரன், சுதந்திரன், தேசாபிமானி, பாட்டாளி, பாரதி மல்லிகை முதலிய பத்திரிகைகளும் இக் கால கட்டப் பகுதியில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளும் கருத்தரங்குகளும் இலக்கிய நெறிப்பாடு பற்றிய கருத்து மோதல்களும் திறனாய்வும் சிறுகதை இலக்கியம் தக்க முறையில் வளர்ச்சியடைய உதவியாக அமைந்தன. இக் காலப்பகுதியில் எழுத்தாளர் பலரின் சிறுகதைகள் தொகுதிகளாக வெளிவந்தமையும் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைத் வெளிவந்தமையும் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைத் துறையிற் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கன. சிறுகதை இலக்கியத்தை “இழிசனர் இலக்கியம்’’ எனவும் எள்ளிநகையாடிச் சிறுகதைகளிற் பேச்சுத்தமிழ் இடம்பெறுவதை மூர்க்கமாக எதிர்த்து வந்தோர் இக் காலப் பகுதியின் வீறுகொண்ட போக்கிற்கும் எதிர் நிற்கவாசனை இலக்கியம், யதார்த்த இலக்கியம், மண்வாசைன யதார்த்த இலக்கியம் ஆகியன பற்றிய கருத்துகள் வலுவடைந்தன. 1956 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னும் பின்னுமாக எழுதமுற்பட்டவர்களுள் டொமினிக் ஜீவா, டானியல், எஸ். அகஸ்தியர், எஸ். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கம், என்.கே. ரகுநாதன், பித்தன், சிற்பி, என். எஸ். எம். ராமையா, காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், முத்துலிங்கம் , நா.க. தங்கரத்தினம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1960 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகம் வரை சுய தொழில் கல்வி விருத்தியடைந்ததைத் தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் சிறுகதை இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாயின. பல்கலைக்கழக மாணவர் பலரின் சிறுகதைகள் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1960 களிற் சிறுகதை எழுதத்தொடங்கியவர்களுள் மு. தளையசிங்கம், செ. குதிர்காமநாதன், செ. யோகநாதன், பெனடிக்ற்பாலன், செம்பியன்செல்வன், செங்கை ஆழியன், கே. வி. நடரான், தெணியான், க. சதாசிவம் நெல்லை க. பேரன், சாந்தன், மருதூர்க் கொத்தன், புதுமைப்பிரிவை, குந்தவை, பவானி , நந்தி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1960 களின் இறுதியிலும் 1970 களிலும் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் வன்னிய+ர்க் சுவிராயர், திக்குவெல்லை கமாம், அ. யேசுராசா, லெ. முருகப+பதி, சி. சண்முகநாதன், பொ. புத்மநாதன் , எஸ். ஏம். இக்பால், என். கே. மகாலிங்கம் , மருதூர் வாணன், எஸ். பாக்கியசாமி, காவலூர் எஸ்.ஜெகநாதன், ப.அப்டீக், செந்தாரகை, செ. கந்தசாமி, அ. பாலமனோகரன், அ.ஸ. அப்துல் சமது, சட்ட நாதன், அமுதன், வை.மு. திருநாவுக்கரசு, சுதாராஜ், அன்ரனிஜீவா, மு. கனகராசா, கும்பிளான் ஐ. சண்முகன், சசி. கிரு~;ணமூர்த்தி, யாதவன், நீள்கரை நம்பி, சபா. ஜெயராசா, சௌமினி, எம். எம். நூர்டீன், துரை சுப்பிரமணியன், க. நவம், எம். எச். எம். ~ம்ஸ் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இக் காலப் பகுதியில் எழுந்த சிறுகதைகளில் முற்பட்ட காலப்பகுதியிலும் பார்க்கப் பொருள் விரிவையும் அடிப்படையான கருத்து மாற்றங்களையும் அவதானிக்கலாம். முற்போக்குச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படும் இக் காலப் பகுதிச் சிறு கதைகள் காலத்தின் தேவைக்கேற்றனவாகவும் காலத்தின் குரலாகவும் ஈழத்தின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பனவாகவும் சமூகத்தை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செலுத்துபவையாகவும் யதார்த்தப் பண்பு கொண்டவையாகனவும் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. மறுமலர்ச்சிக் காலப்பகுதியில் அங்கும் இங்குமாகத் தொட்டுக் காட்டப்பட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பல இக்காலப் பகுதிக் கதைகளில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. சாதிப் பி;ரச்சினை, சீதனப்பிரச்சினை,சுரண்டற்கொடுமை, வேலையில்லாத திண்டாட்டம் முதலிய இன்றைய எரியும் பிரச்சினைகளைச் சிறுகதைப் பொருளாக்கிய எழுத்தாளர் பலர் அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும் தீர்வு மார்க்கங்களையும் தமது கதைகளில் விண்டுகாட்டத் தவறவில்லை. இக்காலப் பகுதியிற் சிறுகதைத் துறையிற் சிறப்புப் பெற்றவர்கள் பலர் ஈழத் தமிழர் சமூகத்தின் தாழ்த்தப்பட்டபகுதியினரிடையிருந்தும் தொழிலாளர், விவசாயிகள், மீனவர் முதலியோரிடையேயிருந்தும் தோன்றியமையினாற் போலும் அது காலவரை எழுத்தாளர்கள் அதிக கவனம் செலுதாத சமூகத்தின் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களின் தொழிலாளர், மீனவர்,விவசாயிகள் முதலியோரதும் பலவகைப்பட்ட பிரச்சினைகளையும் வாழ்க்கை போராட்டங்களையும் எண்ணங்கள் அபிலாi~களையும் மனிதாபிமானத்துடன் யதார்த்தத்துடனும் தமது கதைகளிற் பிரதிபலித்துள்ளமை நோக்கத்தக்கது. காலப் பகுதி எழுத்தாளர்கள் பலர் கதைகளின் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் பரவலான முயற்சிகளை மேற்கொண்டனர். முற்பட்ட காலப்பகுதி எழுத்தாளர்கள் தொடுவதற்கு அஞ்சிய விடயங்கள் பல இக் காலப்பகுதிக் கதைகளில் விரிவாகவும் ஆழமாகவும் நோக்கப்பட்டுள்ளன. இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் பொதுவுடமை மலர்ச்சியின் மூலமே விடிவு காண முடியும் என்னும் கருத்துப் பலரது கதைகளில் அடிநாதமாக ஒலிக்கின்றது. ஈழத்துத் தமிழர் சமூகப் பிரச்சினைகள் சிறுகதையாசிரியர்களின் அதிக கவனத்திற்குள்ளாகாமை ஆய்வுக்குரியதாகும்.

ஏறத்தாழ 1960 களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப் போக்கிற் குறிப்பிடத்தக்க மாற்றங்;கள் சில ஏற்படலாயின. அது காலம்வரை பிரபலம் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களாய் விளங்கியோர் பலர் நாவல், நாடகம் முதலிய துறைகளிற் கவனம் செலுத்த முற்பட்டனர். ஈழத்துத் தமிழ், சிறுகதைகளின் களம் விரிவடையலாயிற்று, 1960 களில் முற்பகுதிவரை பாரம்பரியமாகத் தமிழ்மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களும் கொழும்பு நகரப் பிரதேசமும் சிறு கதைகளின் களமாக முக்கிய இடம் பெற்றிருந்தன். 1960 களின் பிற்பகுதியிலிருந்து நீர்கொழும்பு, திக்குவல்லை, அநுராதபுரம், குருநாகல், மாத்தறை, மினுவாங்கொடை, இரத்தினபுரி முதலிய சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்தும் இளைஞர் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பலர் தோன்றி இளமை மிடுக்கோடும் வேகத்தோடும் புதிய கருத்து வீச்சுடனும் சிறுகதைகளை எழுதிவருதல் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும். திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், மாத்தளை மக்கள் இலக்கிய வட்டம் முதலியனவும் சஞ்சிகைகள், சிலவும் இவர்களது முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிற் பணியாற்றி வருதல் போற்றத்தக்கது. குறிப்பாகச் கடந்த பதினேழு ஆண்டுகளாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராது உழைத்துவரும் மல்லிகையின் பெரும்பணி விதந்து கூறக்கூடியதாகும்.

1960களின் பிற்பகுயிலிருந்து மலையகத் தொழிலாளர் மத்தியிலேயே பிறந்து வளர்ந்து அவர்களது துயரம் தோய்ந்த வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரச்சினைகளையும் இன்னல்களையும் அநுபவ ப+ர்வமாக உணர்ந்த இளைஞர்கள் பலர் சிறுகதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு முன்பே மலையத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கணசமான அளவு சிறுகதைகள் வெளிவந்துள்ளபோதும் அக்கதைகளிற் காண முடியாத சில சிறப்பம்சங்களை இவ்விளைஞர்களது கதைகளிற் காணலாம். மலையத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் என். எஸ். ஏம். இராமையா, தெளிவத்தை ஜோசெப், மாத்தளை வடிவேல், மலரன்பன், ப+ரணி, மலைச்செல்வன், பன்னீர்ச் செல்வன், சாரல் நாடன், திருச்செந்தூரன், பொ. கிரு~;ணசாமி, நூரளை சண்முகநாதன், மாத்தளை சோமு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். “ தமிழ் நாட்டு எழுத்தாளர்களைவிட இலங்கை எழுத்தாளர்களின் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் எதார்த்தநிலை மிக ஆழமானது நுணுக்கமானது என்று சொல்லலாம். இலங்கை எழுத்தாளர்களின் தனித்தன்மையே சமுதாயப் பார்வைதான்’’ எனத் தமிழ் நாட்டுத் திறனாய்வாளர் ஒருவர் ஈழத்துச் சிறுகதைகள் பற்றிக் கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.

தமிழகத்துத் தமிழ் நாவல்

நா. சுப்பிரணியம்


சமுதாய வளர்ச்சிக்கு ஏற்பக் கலை இலக்கியங்கள் புதிய பரிமாணங்களைப் பெறுவது வரலாற்று நியதி கடந்த நான்கு நூற்றாண்டுகளில் ஐரோப்பிய சமுதாய அமைப்பில் திகழ்ந்த பெருமாற்றங்களினடியாக உருவாகிய “சமூக பொருளாதார’’ உறவுகளால் இலக்கியம் அடைந்த பரிமாணங்கலொன்று நாவல்.

நாவல் (Nழுஏநுடு) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். மத்தியகாலத்தில் இத்தாலியில் வழங்கிய கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்து படித்த ஆங்கிலேயர் அவற்றைப் புதிதாகக் கிடைத்தவை என்ற கருத்தில் “ நாவல்” எனப் பெயரிட்டு வழங்கினர். பின்னர் அவற்றைப் போலத் தாம் புனைந்த காதலுணர்வுக் கற்பனைகளையும் இயற்கையிகந்த சம்பவச் சித்திரிப்புகளையும் அதே பெயரால் வழங்கத்தலைப்பட்டனர். கைத்தொழி வளர்ச்சி, வணிகவளர்ச்சி ஆகியவற்றால் பாரம்பரிய சமுதாய சீர்குலைந்து புதிய சமூக பொருளாதார உறவுகள் உருவான சூழ்நிலையில் நாவல் புதிய உள்ளடக்கத்தைப் பெறத் தொடங்கியது. “ சாதாரண பொது மனிதனின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகள் நடப்பியல்புக்குப் பொருந்தக் கதை வடிவில் புனைந்து கூறும் குறிப்பிடத்தக்க அளவு நீளமுடைய உரைநடையிலக்கியம் ஆக நாவல் பரிணாமம் பெற்றது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் வளர்ச்சிளடைந்த இவ்விலக்கிய வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழுக்கு அறிமுகமாயிற்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஆங்கில ஏகாதிபத்தியத்தின்கீழ் மேனாட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தினால் இந்தியாவிலும் ஈழத்திலும் தேசிய பாரம்பரிய சமூக அமைப்பு நிலை தளர்ந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் பயிற்சியும் மேனாட்டுக் கல்வி முறையும் சமூகத்தில் புதிய மதிப்பீடுகளை உருவாக்கத் தொடங்கியிருந்தன. ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்றான நடுத்தரவக்கம் வலிமிக்கதொரு சமூக சக்தியாக உறுப்பெறத் தொடங்கியது. மேனாட்டுக் கல்வி முறையினாலும் வெளியீட்டுச் சாதனங்களின் வளர்ச்சியினாலும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த அறிவு வளர்ச்சியும் வாசிப்புப் பழக்கமும் இலக்கியத் துறையிலே பெருமளவு தாக்கத்தை விளைவித்தன. அக்காலம் வரை கற்றோர் கற்றுச் சுவைக்கும் வண்ணம் எழுதப்பட்டு வந்த மரபுவழி உரை நடையும் செய்யுளம் புதிய பரிணாமத்தை அவாவி நிற்கின்ற. இத்தரைகய சூழ்நிலையின் தேவையை நிறைவு செய்யும் வகையில் நாவலிலக்கியம் ஆங்கிலத்தின் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகிற்று.

தமிழகத்துத் தமிழ் நாவலிலே முக்கியமான மூன்று வளர்ச்சிக் கட்டங்களை அவதானிக்கலாம். அறிமுகநிலை, பரந்த வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தலையாய இலக்கிய வடிவமாகப் பரிணமித்த நிலை, உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் புதிய எல்லைகளை நோக்கிய வளர்ச்சி நிலை என இக்கட்டங்கள் அமையும். மாயூரம் ச. வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியோர் சரித்திம் தொடக்கிவைத்த அறிமுகத்தை 1896 இல் வெளிவந்த பி. ஆர். ராஜம் ஐயரின் ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் நிறைவு செய்து தரமான முதல் தமிழ் நாவலாக அமைந்தது. அடுத்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் தேக்க நிலைக்குப்பிறகு “கல்கி ரா. கிரு~;ணமூர்த்தி” மு. வரதராசன், “அகிலன் ஆகியோரால் மீண்டும் புத்தொழுச்சி பெற்றது. பரந்த வாசகர் வட்டத்தை நோக்கி இட்டுச் செல்லப்பட்டது. ஏறத்தாழ 1960 ஆம் ஆண்டை அடுத்து உருவத்திலும் உள்ளடக்கத்திலுமான புதிய பரிமங்களை நோக்கி செல்வதை அவதானிக்க முடிகிறது.
பிரதாப முதலியோர் சரித்திரம் முதல் நாவல் என்று வரலாற்று முக்கியத்துவம் பெற்றாலும் கதையம்சத்திலும் அதை வெளிப்படுடத்தும் முறையிலும் சிறப்படையவில்லை. உரைநடை நூல்கள் மூலம் சமுதாயத்திற்கு நலன்தரும் கருத்துக்களை முன் வைக்கலாம் என்ற நோக்கம் கொண்டவர் அவர். தாம் அறிந்த அநுபவித்த பலவற்றையும் கதையில் கூறமுயன்றுள்ளார். கற்பனையான செய்திகளும், கிளைக்கதைகளும் புகுத்தப்பட்டமைந்த இம் முதல் நாவல் “ நாவல்” என்ற வகையின் ஒரு தோல்விகரமான முதல் முயற்சியாக அமைந்தது.

நடப்பியல்புக்குப் பொருந்தும் உண்மைச் சம்பவங்களுடன் கதை மாந்தர் படைப்பு, கதையை வளர்த்துச் செல்லும் முறை ஆகிய பண்புகளில் நிறைவான முதலாவது தரமான தமிழ் நாவலாக அமைந்தது. கமலாம்பாள் சரித்திரம் அமைதியான பண்பான ஒரு குடும்பத்தில் உறவினரால் நிகழும் இன்னல்களும் அவற்றினின்று அக்குடும்பம் மீட்சி பெறுவதுமே இந்நாவலின் கதையம்சம். இதை அடுத்து 1898 ஆம் ஆண்டில் வெளிவந்த அ. மாதவையாவின் பத்மாவதி சரித்திரமும் நடப்பியல்புக்குப் பொருத்தம் கதையம்சத்துடன் தரமான கலைப்படைப்பாக அமைந்தது. பாரம்பரிய சமூக அமைப்பு சிதைவடைந்து புதிய சமூக பொருளாதார உறவுகள் தலையெடுக்கும் ஒரு காலப் பகுதியைக் காட்டும் ஒரு சமூகக் கண்ணாடியாகவும் இந் நாவல் அமைந்தது. பிரச்சினைகளுக்கு வேதாந்த தத்துவ அநுபவத்தில் தீர்வு காண முயல்கிறார் ராஜம் ஐயர், நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை நாடும் மாதவையா அதற்கேற்பச் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைப்பவராகிறார். துரமான கலைப் படைப்புகள் என்ற வகையில் கமலாம்பாள் சரித்திரமும் பத்மாவதி சரித்திரமும் தமிழ் நாவல் வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படைகளை அமைந்தன.

இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் பல நாவல்களும் தொடர்கதைகளும் எழுதப்பட்டபோதும் அவை மேலே குறிப்பிட்ட இருநாவல்களின் இலக்கியத் தரப்பினை எட்டவில்லை. இதனால் தமிழ் நாவல் வரலாற்றில் இக் காலப்பகுயதியில் ஒரு “தேக்கநிலை” நிலவியது.

இத் தேக்கநிலையை உடைத்துத் தமிழ் நாவலுக்குப் புது வாழ்வளித்தவர் என்ற புகழைப் பெறுபவர் “ கல்கி’’ எனப் புனைப்பெயர் தாங்கிய ரா. கிரு~;ணமூர்த்தியவர்கள். பத்திரிகையாசிரியராகத் திகழ்ந்த இவர் வாரந்தோறும் தொடர்கதைகளை எழுதினார். இதன் விளைவாகப் பத்திரிகை வாசகர் மத்தியில் “ நாவல் வாசகர்’’ என்ற புதிய “ வாசகர் வட்டம்” உருவாயிற்று தேசிய விடுதலை உணர்வும் தமிழரது பண்பாட்டுப் பாரம்பரியச் சிறப்புக்களை மீளப்பார்த்து மகிழும் ஆர்வமும் தலைதூக்கிய சூழ்நிலையில் பத்திகைமூலம் “ தொடர்கதைப்” பணி புரிந்த “ கல்கி” கள்வனனின் காதலி, தியாகப+மி, அலையோசை, முதலிய சமூக நாவல்களையும் பார்த்திபன்கனவு , சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், ஆகிய வரலாற்று நாவல்களையும் எழுதினார். தியாக ப+மியும் அலையோசையும் விடுதலைப் போராட்ட உணர்வைக் “ கரு” வாகப் கொண்டவை. பாத்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் மூன்றும் தமிழர் அந்நியரால் அடிமைப்படுத்தப்படுவதற்குமுன் அடைந்திருந்த நாகரிக வளர்ச்சியைத் திருப்பி பார்க்கும் ஆவலைத் தூண்டும் இயல்பின.

இன்றைய திறனாய்வு நோக்கில் மேற்படி நாவல்கள் சம்பச் சுவையும் செயற்கையான கதைப்புணர்ப்பும் கொண்டவை போலக் காட்சியளித்தாலும் தமிழ் நாவலைப் பொது வாசனை நோக்கி இட்டு வந்து ஒரு தலையாய இலக்கிய வடிவம் என உணரச் செய்த பெருமை இவற்றைச் சாரும்.

“ கல்கி’ யின் சமகாலத்தில் தமிழ் நாவல் எழுதியவருள் முக்கியமான இருவர் மு. வரதராசனாரும் அகிலனுமாவார். சுமூகத்துக்கு நல்லொழுக்கம் போதித்தல் என்ற நோக்குடன் நாவல்கள் எழுதினார். மு. வரதராசன் திருவள்ளுவர், மகாத்மாகாந்தி , பேர்னாட்~h முதலியவர்களது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைப் புலப்படுத்துவதற்கு ஏற்ற பாத்திரங்களைப் படைத்து சில் ஒரு முள், கயமை காவியமோ, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள், கயமை, பெற்ற மனம், அல்லி முதலியன தமிழ் நாவலுக்குக் கற்றறிந்த உயர்மட்ட வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. இந் நாவல்களிலே உணர்ச்சியைவிடச் சிந்தனையே முதன்மை பெற்றதால் கலைப்படைப்பு என்ற வகையில் இவை சிறப்புப் பெறவில்லை.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் பொருளாதார முரண்பாடுகளையும் கண்டு சீர்திருத்தம், பேச விழைந்த அகிலனின் படைப்புகளில் “ காதல்” உணர்ச்சியே அடி நாதமாகக் அமைந்தது. நெஞ்சினலைகள், பாவை விளக்கு ஆகிய படைப்புக்களில் இவரது இலக்கிய நோக்கையும் போக்கையும் இனங்காணலாம்.

தமிழ் நாவல்களின் இத்தகைய போக்குகள் 1960 ஆம் ஆண்டை அடுத்து ஓரளவு மாற்றம் பெறத் தொடங்கின “ கதை” யினைச் சம்பவச் சுவையுடன் சித்தரிப்பது, அறம்போதிப்பது,உணர்ச்சிய+ட்டுவது என்ற நிலைகளைக் கடந்து தனிமனிதனையும் அவன் வாழும் சமுதாயத்தையும் பண்பாடு, மரபு ஆகிய திரைகளை விலக்கி “ இன’ங்கண்டு விமர்சனம் செய்வது என்ற கட்டத்தைத் தமிழ் நாவல் அடைந்தது. இது நாவலின் உள்ளடக்கம், உருவம் ஆகியவற்றிலே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதோடு சாதாரண வாசகரனையைக் கடந்த உயர்மட்ட இரசனைத் திறனையும் தோற்றுவித்தது. கதையம்சம் முதன்மையிழந்து கதைமாந்தரின் குணவியல்புகள் முதன்மை பெற்றன. இலட்சியப் பாங்கான உணர்வுகளோடு சமூகப் பிரச்சினைகளை அணுகும் முறை மாற்றமடைந்து நடைமுறைச்சாத்தியமான, இறிவுப+ர்வமான அணுகுமுறை தலைதூக்கியது. மனிதனின் இயல்பான உணர்ச்சிகள் அவனைப் பாதிக்கும் புறக்காரணிகள் ஆகியவற்றை அவன் வாழும் இயற்கைச் சூழலோடு பொருத்தி நோக்கி மதிப்பிடுவதுதான் படைப்பாற்றலின் அடிப்படை என்பது உணரப்பட்டது.

இவ் வகையில் நாவல்கள் படைக்க முயன்றவர்களில் ஒரு சாரார் தனி மனிதனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் “ பாலியல்” அம்சத்துக்கு முதன்மை கொடுத்தனர். இன்னொரு சாரார் இயற்கைச் சூழலுக்கும் பிரதேச வாழ்க்கை முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என்பவற்றிற்கு முதலிடம் தந்தனர். வேறொரு சாரார் பொதுவுடமைக் கோட்பாட்டினடிப்படையில் சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களை முன் வைத்தனர்.

பாலியல் அம்சத்துக்கு முதன்மை கொடுத்தவர்களில் தி. ஜானகிராமன் முக்கியமானவர், இவரது மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு ஆகிய நாவல்கள் பாலியல் தொடர்பான மரபு - மரபு மீறல் உணர்வுகளைப் பிரதிபலிப்பன. தஞ்சாவ+ரைச் சார்ந்த கிராமப்புறச் சூழலே இவரது பெரும்பான்மையான நாவல்களின் கதை நிகழ்களமான அமைந்தது. “ பாலியல்’’ பிரச்சினையை நகரச் சூழலில் பொருத்தி நோக்கி எழுதப்பட்ட நாவல்களில் த. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால் என்பது குறிப்பிடத்தக்கன. நீல பத்மநாபனின் பள்ளிகொண்புரம் நாவலையும் இவ் வகையில் சேர்க்கலாம்.

இயற்கைச் சூழல் பிரதேச வாழ்க்கை முறைகளின் சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு முதன்மை தந்து எழுதியவர்கள் சூழல் மாறுபடுவதற்கேற்ப மனித குணவியல்புகளும் சடங்கு சம்பிரதாயங்களும் மாற்றமடைவதை இனங்காட்டத்தக்க வகையில் பல தலை முறைகளைத் தமது கதைகளுக்குள் காட்ட வேண்டியவர்களாயினர். சடங்கு ; சம்பிரதாயங்கள் தொடர்பான நுணுக்க விவரங்களை விரிவாகச் சித்தரிக்க முனைந்தனர். இவ்வாறு எழுதப்பட்ட நாவல்களில் நுச்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, நீல பத்மநாபனின் தலைமுறைகள், ஆ. மாதவனின் புனலும் மணலும், ராஜநாராயணின் கோபல்ல கிராமம் ஆகிய தரமான படைப்புக்கள், தமிழ் நாட்டின் கிராமப் புறங்கள் சிலவற்றில் பண்பாடு தொடர்பான தகவற் களஞ்சியங்கள் என இந் நாவல்களைக் குறிப்பிடலாம். இத்தகைய நாவல்களைப் பிரதேச நாவல்கள், வட்டார நாவல்கள், மண் வாசனை நாவல்கள் என்றும் வழங்;குவர். ராஜம் கிரு~;ணனின் குறிஞ்நித்தேள் நாவலும் இவ் வகையினதெ. அவர் தமிழ் நாட்டின் பல்வேறு தொழில்சார் கிராமங்கட்கும் சென்று தகவல் திரட்டி அவ்வவ்பிரதேச நாவல்களைப்படைத்து வருகிறார்.

பொதுவுடைமைக் கோட்பாட்டினடிப்படையில் சமூக மாற்றத்துக்கான கருத்துக்களை முன் வைத்த நாவல்களில் சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் 1953 இல் வெளிவந்தது. இது நெசவாளர்; வாழ்க்கையில், அரசாங்க ஐவுளிக் கொள்கை ஏற்படுத்திய தாக்கத்தை எதிரொலித்தது. டி. செல்வராஜ் மலரும் சருகும், தேநீர் கு. சின்னப்பாரதியின், தாகம், பொன், பொன்னீலனின் கரிசல் ஆகியன இவ் வகையில் குறிப்பிடத்தக்க படைப்புகள், தமிழ் நாட்டின கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் நிலமற்ற விவசாயிகள், கூலித் தொழிலாளர் ஆகியோர் மத்தியிலும் உருவாகிவரும் சிந்தனை மாற்றத்தைக் காட்டும் கண்ணாடிகளாக இவை அமைந்துள்ளன எனலாம்.

தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்கள் நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்கதைகளாக நூல்வடிவம் பெபெறாது உள்ளவை பல ஆகலாம். இப்பொழுது தொடர்கதை, மாதநாவல் பிரசுரம், குறுநாவல், நெடுங்கதை ஆகிய வகைகளில் மாதந்தோறும் ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகள் வெளிவருகின்றன. இப்பெரும் பரப்பில் இலக்கியத் தரமுள்ள வளர்ச்சிப் போக்கை இனங்காண முயல்கையில் மேலே நோக்கிய வண்ணம் மூன்று முக்கிய கட்டங்களே தெளிவாகப் புலப்படுகின்றன. தொடர்கதைகளாக, சஞ்சிகைகளில் வெளிவருவதையும் மாதநாவல் பிரசுரங்களாக “ அசுர” கதியில் உற்பத்தி செய்யப்படுபவையம் சமகால வாசகரது தொகையைப் பெருக்குவதையே நோக்கமாகக் கொள்வதால் இலக்கிய வளர்ச்சிப்பாதையில் “சுவடு” பதிக்கத் தவறிவிடுகின்றன. எனினும் இது பொது விதியல்ல. வளர்ந்து வரும் நூற்பிரசுரச் செலவு எழுத்தாளர்கள் சுயமாக நாவல்களை வெளியிடத் தடையாகவுள்ளது. ஆயினும் சமூகப் பொறுப்புணர்வுடைய எழுத்தாளர்கள் “ அணி’’ திரண்டு தரமான நாவல்களைப் படைப்பது, தரமான உயர் ரசனையைப் பேணுவது தமிழகத் தமிழ் நாவலின் எதிர் காலத்துக்கு ஒரு “ பச்சை விளக்கு” ஆக அமைகின்றதெனலாம்.

ஈழத்துத் தமிழ் நாவல்

நா. சுப்பிரமணியம்

தமிழகத்திலே தமிழ்நாவல் எழுதப்படத் தொடங்கிய பத்தொண்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே ஈழத்திலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாயின. கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த சமூக சிந்தனையாளர் தாம் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மக்களுக்குப் பண்படத்தக்க வகையில் கதை வடிவிலே தரமுற்பட்டுள்ளனர். மேனாட்டிலக்கியப் பயிற்சி, மேனாடுகளினதும் மத்திய கிழக்கு நாடுகளினதும் சமய கலாசாரத் தொடர்பு, தமிழ் நாட்டுத் தொடர்பு ஆகியன இத்தகைய முயற்சிகளைத் தூண்டிநிற்கின்றன எனலாம். ஆயஜனும் இக் காலப் பகுதியில் வெளிவந்த ஈழத்து நாவல்கள் நாவலிலக்கியப் பண்புகளில் நிறைவு பெறாத வீர சாகசக் கதைகளாகவே அமைந்தன. மேலும் இவற்றின் கதையம்சம் ஈழத்து மண்ணுக்குரியனவல்ல.

ஈழத்தின் முதல் தமிழ் நாவலான சித்திலெவ்வையின் அசன்பேயுடைய கதை (1885) எகிப்திய ராஜவம்ச வீரனொருவனது சாகசங்களையும் காதலையும் புனைந்துரைப்பர். எஸ். இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தைகதை (1891) “ அலுமான்ய’’ தேச வீரவாலிபர்களது கதை, திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை தமிழ் நாட்டில் எழுதிய மோனாங்கி (1895) அந்நாட்டு நாயக்கர் வரலாற்றில் ஒரு சம்பவத்தைக் கருவாகக் கொண்டது.

ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்ட முதல் நாவல் என்ற சிறப்பு 1905ஆம் ஆண்டில் வெளி வந்த வீரசிங்கள் கதை அல்லது சன்மார்க்க ஜயம் நாவலுக்குரியது. இதை எழுதிய சி. வை. சின்னப்பிள்ளை ஈழத்து மக்களின் சாதாரண கிராமப்புற வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் புலப்படுத்தும் வகையில் நாவல் எழுத வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். யாழ்ப்பாணத்து மல்லாகம் கிராமத்தைச் சார்ந்த வீரசிங்கன் என்ற வாலிபனைத் தலைவனாகக்கொண்டு எழுதப்பட்ட இந்நாவலும் நாவற் பண்பு நிறைவு பெறாத வீர சாகசக் கதையாகவே அமைந்தது. ஈழத்துச் சமூகக் களம் இந் நாவலில் முக்கியத்துவம் பெறவில்லை.

ஈழத்து மக்களது சமுதாயப் பிரச்சினைகளுக்கு முதன்மை நல்கி நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களையும் உணர்ச்சி ப+ர்வமான கதை மாந்தரையும் கொண்டு கதை புனையும் போக்கு 1914 ஆம் ஆண்டிலே மங்கள நாயகம் தம்பையா என்ற பெண்மணி எழுதிய நொறுங்குண்ட இருதயம் நாவலோடேயே தொடங்குகின்றது.

புத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப் பகுதி வரை சமய அடிப்படையிலான சமுதாய சீர்திருத்த நோக்கமே தமிழிலக்கியத்தைப் நெறிப்படுத்தும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது. கிறிஸ்தவ மி~னரியினருக்கும் நாவல் மரபு பேணிய சைவர்களுக்குமிடையே நிலவிய “ போட்டி நிலை’’ சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சமயம் சார்பான தீர்வுகளை முன் வைக்கும் இயல்புகளைத் தூண்டி நிற்கிறது. இத் தூண்டுதலின் இலக்கிய வெளிப்பாடுகளிலொன்றாகவே மங்கள நாயகம் தப்பையாவின் நாவல் அமைந்தது. மக்கள் மத்தியில் சமயப் பிரசாரம் செய்வது நோக்கமானதால் நடைமுறை வாழ்க்கைச் சம்பங்களையும் அவற்றினடிப் படையிலான பிரச்சினைகளையும் உணர்வுப+ர்வமாக அணுகிச் சித்திரிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாயிற்று.

சுன்மார்க்க சீவியத்தின் மாட்சியை உபதேசத்தால்
விளக்;குவதிலும் உதாரணங்களால் உணத்துவது
மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி
இத்தகைய எழுதத் துணிந்தேன்…………….

என்று தமது நோக்கத்தை வெளிப்படுத்தும் ஆசிரியை கிறிஸ்தவ சமய அடிப்படையிலான வாழ்க்கையையே “சன்மார்க்க சீவியம் ’’ என்று கொண்டார். கணவனின் கொடுமைகளுக்காளாகி “இதயம்” நொறுங்குண்ட “ கண்மணியொன்றை பெண் கிறிஸ்தவ பாதிரியாரொருவரது இதமான போதனைகளால் அமைதியடைகின்றாள். பொருளாசை, அந்தஸ்துணர்வு அன்பில்லாதவாழ்க்கை சுமையாக அமைவதையும் இந் நாவல் உணர்த்துகின்றன.

இந் நாவலை அடுத்துக் கால்நூற்றாண்டுக் காலப்பகுதியில் ஏறத்தாழ ஐம்பது நாவல்கள் எழுதப்பட்டன சமகால சமூகப் பிரச்சினைகளைக் கதைப் பொருளாகத் தேர்ந்தும் மேனாட்டுக் கதைகளை மொழிபெயர்த்து தழுவியும் இவை எழுதப்பட்;டன் சத்திய வேத பாதுகாவலன், இந்துசாதனம் ஈழகேசரி முதலிய பத்திரிகைகள், தொடர் கதைகளாக நாவல்கள் எழுதப்படுவதற்குச் சாதனங்களாயின. தமிழ் நாட்டிலிருந்து மர்மப் பண்பு நாவல்களும் சம்பச் சுவை நாவல்களும் ஈழத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டன. நாவல் வாசிப்பதற்கான பழக்கம் அதிகரித்தது.

இக் காலப் பகுதியில் வெளிவந்த நாவல்களில் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை எழுதிய கோபால நேசரத்தினம் (1926 - 27) துரைரத்தினம் நேசமணி ( 1927 - 28) ஆகியன குறிப்பிடத்தக்கவை. கிறிஸ்தவ மி~னரியினரின் சமயப் பிரசார நோக்கில் கண்டிப்பதான கதை பொருளில் அமைந்தது. கோபால நேசரத்தினம். பிற கல்வி வசதிகளற்ற நிலையில் தம்முடைய கல்விக் கூடங்களை நாடிவரும் ஏழைப் பிள்ளைகளைப் பாதிரிமார் எவ்வாறு ஆசை காட்டி மதம் மாற்ற முயல்கின்றனர் என்பதும் சைவத் தாய்க் குலத்தால் அது எவ்வாறு முறியடிக்கப்படுகின்றதென்பதுமே இந் நாவல்களில் கதையாக விரிக்கிறது. சீதனப்பிரச்சினையால் மனைவியை அவளது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தீயவர் கவாசத்தால் ஒழுக்கம் தவற முயல்கின்ற கணவனை அம் மனைவியின் நற்பண்புகள் எவ்வாறு மீட்டெடுக்கின்றன என்பது துரைரத்தினம் நேசமணி நாவலின் கதையம்சம்.கிறிஸ்தவ மதமாற்றப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டு காசிநாதன் நேசமலர் ( 1924) என்ற வொரு நாவலையும் இவர் எழுதியுள்ளார். சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் சைவத் தமிழ்ப் பெண் குலத்தின் பங்கு எத்தகையது என்பதை இவரது மூன்று நாவல்களும் எடுத்துக்காட்டுகின்றன.

மங்களநாயகம் தப்பையாகவும் திருஞான சம்பந்த பிள்ளையும் தத்தம் சமய நோக்கிற்கமையச் சமூகப் பிரச்சினைகளை அணுகி உயிரோட்டமுள்ள கதைமாந்தரைப் படைத்;துள்ளனரென்றும் புனைகதையிலக்கியத்துக்கு (நாவலுக்கும் சிறுகதைக்கும்) இன்றியமையாத பண்புகளிலொன்றான உணர்ச்சிப+ர்வமான அதன் உரைநடை அமைப்பில் கவனம் செலுத்தவில்லை. உள்ளத்தில் உருவாகும் உணர்ச்சி பேதங்களையும் கற்பனைகளையும் உள்ளவாறே வாசகருள்ளத்திற் பதியவைப்பதற்குப் பயன்படும் வகையில் ஊடகமாக அமைவதே புனைகதைக்குரிய உரைநடையின் பண்பும் பயனுமாகும்.

தமிழகத்தில் ராஜம் ஐயரின் கமலம்பாள் சரித்திரத்துடனே உருவாகி வளரத் தொடங்கி விட்ட இந் நடை - மறுமலர்ச்சிநடை - இக்கால ஈழத்து நாவலாசிரியர்களது கவனத்தைக் கவரவில்லை. கருத்தை முதன்மைப்படுத்தி வசன இலக்கியம் படைக்க முற்பட்ட ஈழத்து இக்கால நாவலாசிரியர்களிற் பலர் கதை சொல்லும் முறை பற்றியோ அல்லது மொழியைக் கையாளும் முறைபற்றியோ சிந்தித்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

ஏறத்தாழ 1940 ஆம் ஆண்டை அடுத்து ஈழத்துத் தமிழ் நாவலில் ஒரு புதிய திருப்பம் உருவாகியது சமுதாயத்துக்குப் பயன்படத்தக்க கருத்துக்களைக் கூறுவதற்கான “ கதை’ வடிவம் என்ற எண்ணம் மாற்றமடைந்து அது ஒரு கலைவடிவம் என்ற உணர்வு தலை தூக்கியது. மரபுரீதியாலான இலக்கியச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டுப் புதுமைநாடும் ஆர்வமும் புதியது படைக்கும் ஆவலும் மேலோங்கின. மேல்நாட்டு நாவல்களையும் தமிழ்நாட்டு நாவல்களையும் வாசித்து அவற்றின் அருட்டுணர்வால் ஏற்பட்ட இப் புத்தெழுச்சிக்கு அக் காலப்பகுதியில் பத்திரிகைச் சாதனங்கள் களம் அமைத்தன. ஈழகேசரிப் பத்திரிகையின் பணி இவ் வகையில் வரலாற்றுச் சிறப்புடையது. சமகாலத் தமிழ்நாட்டின் நவீன இலக்கிய விழிப்புணர்ச்சியோடு ஈழத்து எழுத்தாளர் கொண்டிருந்த “ எழுத்துத் தொடர்பு’’ சிந்தனை வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது. ஈழத்து மண்ணின் பண்பாட்டம்சங்களைக் கலாப+ர்வமாகப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் “ ஐம்பது” களின் முடிவில் தேசிய உணர்வுச் சாயலைப் பெற்றது.

எழுபதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதினார். மொழிபெயர்ப்பும் தழுவலும், மர்மப் பண்பு, காதல், சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் என்ற பல வகைகளில் இவை இனங்காணத்தக்கன. ஆங்கில, பிரெஞ்சு, ஜேர்மனிய, ரூசிய, வங்க மொழி நாவல்கள் பல மொழிபெயர்த்தும் தழுவியும் தமிழிற் கொணரப்பட்டன. இலங்கையர்கோன், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை , யாழ்ப்பாணம் தேவன், அ. செ. முருகானந்தம், அ.ந. கந்தசாமி முதலியோர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர். ரஜனி என்ற புனைபெயர் தாங்கிய கே.வி.எஸ்.வாஸ், எம். ஏ. அப்பாஸ் ஆகியோர் மர்மப் பண்பு நாவல்களை எழுதினர். க.தி. சம்பந்தன், க. சச்சிதானந்தன், சு. வே. முதலியோர் காதல் குடும்ப உறவுகள் சார்ந்த நாவல்களைப் படைத்தனர். சம்பந்தனின் பாசம் தாகூர், கொண்டேகர் ஆகியோரது உத்தி முறைகளை நினைவ+ட்டும் வகையில் சுவையாக எழுதப்பட்ட காதல் நாவல்.

யாழ்ப்பாண மண்ணின் மணத்தையும் சமூகப் பிரச்சினைகளையும் நாவலாக வெளிக் கொணர்வதில் அ. செ. முருகானந்தம், கனக. செந்திநாதன் இருவரும் முன் நின்றனர். முருகானந்தனின் புகையில் தெரிந்த முகம் (1950) கனக, செந்திநாதனின் விதியின்கை என்பன குறிப்பிடத்தக்கன. வ. அ. இராசரத்தினம் கிழக்கிலங்கை மண்ணின் மணத்தோடு கொழுகொம்பு (1955 - 56) என்ற காதல் - தியாக உணர்வுக் கதையை எழுதினார். தனியார் நிறுவனங்களின் பாடசாலை ஆசிரியர்களது பிரச்சினைகளைச் சொக்கன் செல்லும்வழி இருட்டு நாவலில் சித்தரித்தார். மலையகத்துத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் இன்னல்கள் ஸி.வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன், எல்லைப்புறம், நந்தியின் மலைக்கொழுந்து (1962), கோகிலன் சுப்பையாவின் தூரத்துப்பச்சை (1964) ஆகிய நாவல்களில் இலக்கியமாயின.

இக்காலப்பகுதி நாவல் வரலாற்றுக்கு ஒரு புதிய பரிணாமத்தைத் தொடுத்த பெருமை இளங்கீரனின் தென்றலும் புயலும் (1955), நீதியே நீ கேள் (1959) நாவல்களைச் சாரும். சுhதி ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்ததாழ்வு, தமிழர் - சிங்களவர் இனவேறுபாடு ஆகிய பகைப்புலங்களில் காதலைப் பொருளாகக் கொண்டு இவர் எழுதிய நாவல்கள், பொதுவுடமைக் கோட்பாட்டில் சமுகப்பிரச்சினைகட்குத் தீர்வுகாணும் கருத்தோட்டத்துடன் அமைந்தன. அதற்கேற்ப வர்க்க வகை மாதிரியான பாத்திரங்களைப் படைத்த கதையை வளர்த்துச் சென்றுள்ளார்.

எஸ். பொன்னுத்துரை எழுதிய தீ (1961) பாலியற் பிரச்சினையைப் பொருளாகக் கொண்ட பரிசோதனை முயற்சி என்ற வகையில் குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டை அடுத்து தமிழக நாவல்களைப் போலவே ஈழத்து நாவலிலும் சமுதாய விமர்சனப் பண்பு தலைதூக்கலாயிற்று. கதையம்சம் பின் தள்ளப்பட்டுச் சமூகப் பிரச்சினைகளின் இயங்கியலான வளர்ச்சியே நாவலுக்குப் பொருளாயிற்று. ஐம்பதாம் ஆண்டை அடுத்துத் தமிழலக்கியத்துறையில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய பொதுவுடமைச் சிந்தனையின் தர்க்கரீதியான வளர்ச்சியாக இது அமைந்தது. 1965 ஆம் ஆண்டில் இப்போக்கிற்கு வகை மாதிரியான செ. கணேசலிங்கனின் நீண்டபயணம் நாவல் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை எரிமலைபோல் வெடித்துக் குமுறிய காலச் சூழலே இதன் பகைப்புலம். இந் நூலைத் தொடர்ந்து சடங்கு (1966) போர்க்கோலம் (1969) ஆகிய சாதிப் பிரச்சினை நாவல்களையும்’ அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்ட செவ்வானம் ( 1967) தரையும் தாரகையும் (1968), மண்ணும் மக்களும் (1970) நாவலையும் எழுதி ஈழத்து நாவலுக்கு ஒரு புதிய கட்ட வளர்ச்சியையும் உயர் வாசக ரசனையையும் ஏற்படுத்தினர். தமிழகத்திலே பதிப்பிக்கப்பட்ட இந் நாவல்கள் தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மத்தியில் ஈழத்து நாவலுக்கு ஒரு கணிப்பைப் பெற்றுக்கொடுத்தன.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமப் பகுதியில் உயர் சாதியினரின் அடக்குமுறைக் கெதிராகப் போராடும் அடிமட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஒரு கட்டத்தைக் கடப்பதை நீண்டபயணம் காட்டுகிறது. அப்போராட்டப் பயணத்தின் இன்னொரு கட்டத்தைப் போர்க்காலம் காட்டுகிறது. புனிதப் பிணைப்பான திருமணம் உயர்சாதியினரின் சடங்கு சம்பிரதாயங்களாற் சீரழிவதைச் சடங்கு காட்டுகின்றது. இப் பிரச்சினைகளுக்குப் பொதுவுடமைக் கோட்பாட்டினடிப்படையில் தீர்வு நாடுகிறார் செ. கணேசலிங்கன் சாதிப்பிரச்சினை நாவல்களில் கே. டானியலின் பஞ்சமார் (1972), செங்கை ஆழியானின் பிரளயம் (1975) தி. ஞானசேகரனின் புதிய சுவடுகள் (1977) ஆகியனவும் குறிப்பிடத்தக்கவை. டானியல், கணேசலிங்கனைப்போல் வர்க்க ரீதியான இணைந்த போராட்டத்தில் தீர்வு நாடுகின்றார். செங்கை ஆழியானும் ஞானசேகரனும் பிரச்சினையின் இயல்பான வரலாற்றுப் போக்கை மனிதாபிமான நோக்கில் இனங்காட்டுகின்றன.

செல்வானம் - “ 1964 - 65 கூட்டரசாங்க ஆட்சிக் காலப்பகுதியில் கொழும்பு நகரின் நடுத்தர வர்க்கம் முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கங்களைப் பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். நடுத்தர வர்க்கம் முதலாளி வர்க்கத்தால் முதலில் ஈர்க்கப்பட்டாலும் ஈற்றில் தொழிலாளி வர்க்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கின்றது. நடுத்தர வர்க்கத்தின் பலவீனங்களை எடுத்துக்காட்டுவது தரையும் தாரகையும், நிலமற்ற விவசாயிகளின் போராட்டத்தைக் கற்பனை செய்து காட்டுவது மண்ணும் மக்களும் கணேசலிங்கனின் இந் நாவல்களை அடு;தது சி. சுதந்திரராஜவின் மழைக்குறி (1975) அரசியல் பொருளாதார அம்சங்கட்கு முக்கியம் தந்து எழுதப்பட்டது.

மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களது, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்ட உணர்வை யோ. பேனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் (1968) நாவல் சித்தரித்தது. தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்ட சூழ்நிலையில் சூழவுள்ள கிராம மக்களுக்கும் தோட்ட தொழிலாளர்க்குமிடையிலேற்பட்ட முரண்பாட்டை ஒரு சமூக வரலாற்றுத் தரவு எனத்தக்க வகையில் சி;த்தரித்தது தி. ஞானசேகரனின் குருதிமலை (1979).

இன உணர்வு தலைதூக்கி நிற்கும் எல்லைப் புறமான திருகோணமலையைச் சார்ந்த ஒரு தமிழ் இளைஞன் உணர்ச்சிகளுக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கும் இடையில் ஈடுகொடுத்து நிற்கும் மனவளர்ச்சியைப் பெறுவதைக் கலாப+ர்வமாகச் சித்தரித்ததன் மூலமே ஈழத்து நாவலுக்கு வயது வந்து விட்டது என்பதைக் காட்டியது க. அருள் சுப்பிரணமயிணத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1973)

குடந்த பதினைந்தாண்டுகட்கு மேலாக சமுதாய விமர்சனப் பண்புடன் ஈழத்துத் தமிழ் நாவல் அடைந்துவரும் வளர்ச்சியை இனங்காட்டும் வகையில் மேற்கூறிய நாவல்கள் அமைந்துள்ளன. சமுதாய விமர்சனத்தின் ஒரு கூறான இயற்கைச் சூழலுக்கும் பிரதேச வாழ்க்கை முறையினை சடங்கு - சம்பிரதாயங்கட்கும் முக்கியம் தரும் பிரதேச நாவல் என்ற துறை கடந்த பத்து ஆண்டுகளாகத் தனிவளர்ச்சி பெற்று வருகின்றது. 1973 இல் அ. பாலமனோகரன் எழுதிய நிலக்கரி இவ் வகையில் தரமான முதல் முயற்சிகளாகும். வன்னிப் பிரதேச விவசாய மண்ணின் சித்திரம் இது.

உயர் கல்வியைத் தமிழிற் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டு இருபதாண்டுகளாகின்ற. இதன் விளைவாக ஈழத்தின் பல்வேறு கிராமப் புறங்களும் கல்வித் தரமும் சமூகப் பார்வையுமுடைய ஒரு புதிய தலைமுறை இலக்கிய ரசனையும் எழுத்தார்வமும் கொண்டதாக உருவாயிற்று. 1972 இல் வீரகேசரி நிறுவனம் தொடங்கியநூற் பிரசுரப்பணி இத் தலைமுறையினர்க்கு உந்து சக்தியாயிற்று. பிரதேச நாவல் முயற்சி முனைப்பாக்கியது. இதன் முதற் பிரவமே நிலக்கிளி. தொடர்ந்து ஈழத்தின் பல்வேறு கிராமப் புறங்களும் ஈழத்து நாவலின் களம் ஆயின. ஏ.ரி. நித்தியகீர்த்தியின் மீட்டாதவீணை (1974) .வை அஹமத்தின் புதிய தலைமுறைகள் (1976), எஸ். ஸ்ரீ ஜோன் ராஜனின் போடியார் மாப்பிள்ளை (1976), தாமரைச் செல்வியின் சுமைகள் (1977), ஞானரதனின் புதிய புஸ்ரீமி (1977), செங்கை ஆழியானின் வாடைக்காற்று (1973), காட்டாறு (1977) , க. சதாசிவத்தின் நாணயம் (1980) ஆகிய இவ் வகை நாவற்போக்கை இனங் காட்டுவன. இவற்றுட் காட்டாறு குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலத்தில் தீவரமடைந்துள்ள ( சிங்கள -தமிழ் ) இவ்வுணர்வும் அதன் சமகால விளைவுகளும் தமிழ் நாவலுக்குப் பொருளாகத் தொடங்கியுள்ளன. அருளரின் லங்காராணி (1978), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ஒரு கோடை விடுமுறை (1981) ஆகிய இவ்வகை நாவல்கள் ஈழத்துத் தமிழ் நாவலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திசையை உணர்த்தி நிற்கின்றன என்று கொள்ளலாம்.

கடந்த நான்காண்டுகளாகத் தமிழக நாவல்கள் சஞ்சிகைகளின் கட்டற்ற இறக்குமதியாதல் ஈழத்து நாவல் வெளியீட்டுத்துறை தேக்கமடைந்துள்ளது. இந் நிலையில் மாற்றம் அவசியம் என்பது இலக்கிய ஆர்வலர்களால் உணரப்படுகின்றது.

குழந்தை இலக்கியம்

எஸ்.சிவலிங்கம்



சமூகத்தின் தவிர்க்க முடியாத தேவைகளை ஒட்டியே இலக்கியங்கள் தோன்றுகின்றன. மக்கனின் தேவை, விருப்பு, ஆர்வம் ஏதோ ஒரு வகையில் புதிய பதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவிக்கின்றன. இந்த வகையில் பண்டுதொட்டே பயின்று வந்த இலக்கிய வகைகளுள் குழந்தை இலக்கியமும் ஒன்றாகும். குழந்தை இலக்கியம் தமிழில் எப்போது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. தமிழில் குழந்தை இலக்கியம் தொல்காப்பியர் காலத்திலே வழங்கி வந்துள்ளது என்பர்.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வரும்,
பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருண்மர பில்லாப் பொய்ம் மொழியானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழியானுமென்
றுரைவகை நடையே நான்கென்ன மொழிப

என்ற சூத்திரத்திற்கு உரையெழுதிய பேராசிரியர் பொருண் மரபில்லாப் பொய்மொழிpயானும்” என்னும் தொடருக்குப் பின்வருமாறு உரை கூறுவர்.

“ஒரு பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. அவை ஓர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தன. வென்று அவற்றுக் கியையாப் பொய் படத் தொடர் நிலையான் ஒருவனுழை ஒருவன் சற்று வரலாற்று முறையான் வருகின்றன”.

இவ்வுரைப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு தொல்காப்பியர் காலத்திலேயே குழந்தைக் கதைகள் வழங்கிவந்தன என்று கூறுவர். தமிழில் குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், என்னுந் தொடர்கள் ஒரு பொருளையே குறித்து நிற்கின்றன. மேலைத்தேயங்கள் போலத் குழந்தை இலக்கியம் நுண்மையாகப் பகுக்கப்பட்டு ஆக்கவோ, ஆராயவோபடவில்லை. “ தமிழில் சிறுவர் இலக்கியம் என்று சிறப்பாகக் குறிப்பிடக்கூடியது ஒப்பீட்டளவில் மிகக் குறைவு’’ என்று பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டிருப்பது மனங் கொள்ளத்தக்கது. தொல்காப்பியர் காலத்திலேயே குழந்தை இலக்கியம் தமிழில் வழங்கி வந்தது என்பதைப் பலரும் கட்டிக் காட்டியுள்ளனர்.

தமிழில் குழந்தை இலக்கியம் என்று பெரும்பாலோர் குழந்தைக் கவிதைகளையே கருதுவர். இலக்கியம் எனிற் கவிதைதான் என்ற இறுக்கமான பாரம்பரியத்தின் விளைபொருளாக இது அமைந்திருக்கலாம். பொதுவாகச் குழந்தை இலக்கியம் என்னும் போது குழந்தைக் கவிதைகள், குழந்தைக்கதைகள், குழந்தைகளுக்கான நாவல்;கள், நாடகங்கள் என்பன யாவும் அடங்கும்.

குழந்தை இலக்கிய வகைகளுள் குழந்தைகளுக்கான சினிமாக்கள், குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான சித்திரமங்கள் என்பவற்றையும் சிலர் அடங்கி ஆராய்வர்.

குழந்தை இலக்கிய வளர்ச்சியில் சினிமா, வானொலி பத்திரிகைகள் என்பன குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

துமிழ் மொழியில் முதன் முதலிலே தோன்றிய இலக்கியம் கவிதையே. அதுவும் வாய்மொழியாகத் தோன்றியது என்பது இன்று ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டுள்ளது. குழந்தை மனம் இசையால் மிக இலகுவாக ஈர்த்தப்படும். அழுகின்ற குழந்தையைத் தாய் தாலாட்டித் தூங்க வைப்பதை நாம் இன்று காண்கிறோம். இசையால் இசைவுபட்ட குழந்தை காலப்போக்கில் இலகுவான, ஒத்திசையுள்ள பாடல்களைவ வாய்விட்டுப் பாடுவதையும் நாம் அவதானிக்கலாம். குழந்தைகளுக்காகப் பெரியவர்களால் பாடப்பட்ட பாடல்களும், குழந்தைப் பாடல்கள் நாட்டார் வழக்கில் வழங்கி வருகின்றன. இலகுவான, மென்மையான இழுமென் ஓசையுள்ள பாடல்களைக் குழந்தைகள் மிக இலகுவாகப் பாடத் தொடங்கிவிடுவார்.
தமிழ் இலக்கியப்பரப்பில் முதன்முதலிலே தோன்றிய குழந்தைப்பாடல்களும் நாடோடிப் பாடல்களே. நாட்டுப்புற அல்லது நாட்டார் இலக்கிய அடியாக மேலே கிளம்பிய எழுத்தாக்கியங்களையும், குழந்தைகளுக்குரியன, முதியோருக்குரியன என்று பகுப்பாய்வு செய்யக் கூடிய வகையிலேயே அமைந்துள்ளன.

நமது கல்விப்பாரம்பரியத்திலே இரு வகையான கல்விமரபுகள் உண்டு. ஒன்று மரபுரீதியான திண்ணைப் பள்ளிக்கூட மரபு. மற்றைய நிறுவன ரீதியான பாடசாலைகள். இந்த இரண்டு அமைப்புகளுக்குள்ளும் சிறுவர்கள் தம் ஆரம்பக்கல்வியைக் கற்று வந்தனர். இவ்விரண்டு அமைப்புகளுக்கும் சிறுவர்களுக்கு ஆரம்பத்தில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, வெற்றிவேற்கை போன்ற நீதிநூல்களே போதிக்கப்பட்டன.
சிறுவர்களுக்குப் பொருள் விளங்காதபோதிலும், இவற்றின் என்றே அழைக்கப்பட்டன. தமிழில் கவிதை, பாடல், செய்யுள் என்னும் பதப்பிரயோகங்களும் ஒரு பொருளை கருதி வந்துள்ளமையையும் அவதானிக்கலாம். சிறுவர்களுக்கு மனனப் பயிற்சியை ஏற்படுத்தும் வகையில் ஒளவையரால் “அருளிச்’’ செய்யப்பட்ட ஆத்திசூடியை ஆற்றல் வாய்ந்த மகாகவியான பாரதியார் கூடப்பின்பற்றியமை கவனிக்கத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலே தோன்றிய குழந்தை வரலாற்றில் முதன் முதலே தோன்றிய குழந்தை இலக்கியங்கள் மேற்காட்டியவையேயென்றும் ப+வண்ணன், டாக்டர் முத்துச்சண்முகன் முதலியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குழந்தைக் கவிதைகளை வசதிகருதி நாம் இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று தனிப்பாடல்கள், மற்றையது கதைப்பாடல்கள். இந்த இரண்டு வகையுள்ளும் தனிப்பாடல்களே பெருமளவு வெளிவந்துள்ளன. இவற்றில் குழந்தைகள் காணும் காட்சிகள், நிகழ்ச்சிகள், விருப்பு, வெறுப்பு என்பன அடங்குகின்றன.

தமிழ்க் கூறும் நல்லுலகிலேயே முதன் முயற்சியாகச் சிறுவர் பாடல் என்ற “ உணர்’’ வோடு 1935 ஆம் ஆண்டு க. ச. அருணந்தி அவர்களாற் தொகுக்கப்பட்ட பிள்ளைப்பாட்டினையே குறிப்பிட வேண்டும். பாடசாலைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அருணந்தியவர்களாற் தொகுக்கப்பட்ட “பிள்ளைப்பாட்டு’’ மூலம் பல நல்ல குழந்தைக் கவிஞர்கள் உருவாகினர், நவாலிய+ர் சோமசுந்தரப் புலவர், பீதாம்பரன், பஞ்சாட்சரஐயர், ஜே.எஸ். ஆழ்வாப்பிள்ளை, க. சின்னத்தம்பி முதலியோர் குறிப்பிடக் கூடியவர்கள். இக் குழந்தைக் கவிஞர்கள் முதலியோர் குறிப்பிடக் கூடியவர்கள். இக் குழந்தைக் கவிஞர்கள் அனைவரும் ஆசிரியர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குழந்தை இலக்கிய வரலாற்றில் க.ச. அருணந்தியவர்களால் தொகுக்கப்பட்ட பிள்ளைப் பாட்டிற்குத் தனியான ஒரு முக்கியத்துவம் உண்டு.

“ சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை எண்ணற்ற குழந்தைக் கவிஞர்கள் ஈன்றெடுத்தது. அந்தக்கவிஞர்களின் குழந்தைப் பாடல்களை அப்போதே ஒன்று திரட்டி கே. எஸ். அருணந்தி என்பவர் பிள்ளைப்பாட்டு என்ற பெயரில் வெளியிட்டார். குழந்தை இலக்கியம் கொடி கட்டிப்பறக்கும் நம்நாட்டில் 1970இல் தான் அப்படிப்பட்ட குழந்தைக் கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது”

என்று ப+வண்ணன் குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது.

ஈழத்துக் குழந்தைக் கவிஞர்களுள் சோமசுந்தரப் புலவர் மு. நல்லதம்பி, அல்லைய+ர் செல்லையா, பண்டிதர் க. வீரகத்தி, இ. நூகராஜன், வேந்தனார், அப்பிகைபாலன் சத்தியசீலன், அமிர்தநாதன், ஸ{பைர், சரணகைய+ம், கோசுதா முதலியோர் குறிப்பிடக் கூடியவர்கள்.

தமிழ் நாட்டுக் குழந்தைக் கவிஞர்களாகத், தமிழ்க் கவிதை வரலாற்றின் மையப்புள்ளியாகவும், திருப்புமுனையாகவும் அமைந்த பாரதியார் தொடங்கி, அவர் பரம்பரையிலான, பாரதிதாசன், கவிமணி, கம்பதாசன் அழ வள்ளியப்பா போன்ற நூற்றாண்டுக்கணக்கான குழந்தைக் கவிஞர்களைக் சுட்டிக்காட்டலாம். அழ. வள்ளியப்பாவுக்குக் “ குழந்தைக் கவிஞர்’’ என்ற நிலையான பெயர் அவரின் பங்களிப்பினைக் காட்டுகிறது எனலாம்.

குழந்தைகளுக்குப் பரிச்சயமான இனிய, அழகிய சொற்களையும் நிகழ்ச்சிகளையும் மனங்கொண்டு எழுந்த குழந்தைக் கவிதைகள் தமிழில் பெருமளவு இல்லையென்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஈழத்துக் குழந்தைகள் கவிதைகளுள் ஆடிப்பிறப்பு, சுத்தரி வெருளி போன்றனவும், வேந்தனாரின் “ அம்மாவும்” கவிஞர் செல்லையாவின் இளம்பிறையும் இ. நூகராஜனின் “பட்டுச் சட்டையும் க. வீரகத்தியின் பலூனும் அவை பிறந்த நாட்தொடக்கம் குழந்தைகளாற் படிக்கப்படுவதையும், இலக்கிய விமர்சகர்களாற் பாராட்டப்படுவதையும் அவதானிக்கலாம்.

வகை மாதிரிக்குக் கவிஞர் செல்லையாவின்
“அம்மா வெளியே வா அம்மா
ஆழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனைத்
துண்டாய் வெட்டின தாரம்மா? ’’ - என்ற

இளம்பிறைப் பாடலைச் சுட்டிக் காட்டலாம்.

குழந்தைக் கவிதைகளுள் இன்னொரு வகையானவை கதைப்பாடல்களாகும். பெரும்பாலான கதைப் பாடல்கள் குழந்தைகளின் மனதில் நீதியை நிலைநிறுத்துவனவாகவே அமைந்துள்ளன. தனிப்பாடல்களைவிடக் கதைப்பாடல்களைக் குழந்தைகள் ஆர்வத்துடன் படிப்பதையும், கேட்பதையும் காணலாம். “ கதைப்பாடல்களில் கருத்துக்களிலும் பார்க்க நிகழ்ச்சிகளும், காட்சி வருணணைகளுமே இயல்பாய் இடம் பெற வேண்டும்’’என்று பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் தாடி அறுத்த வேடன், பவளக்கொடி கொழுக்கட்டைப் பொன்னன் போன்ற கதைப்பாடல்களைச் சிறப்பானவையெனக் குறிப்பிடலாம். பிள்ளைப்பாட்டு, அம்பிப்பாடல், குழந்தைக் கவிதைகள் போன்ற தொகுதிகளிலும் சிறப்பான கதைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்பான கதைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பிள்ளைப்பாட்டில் இடம்பெறும் கரவெட்டி க. சின்னத்தம்பி இயற்றிய

“தேசஞ் சுற்றிப் பார்ப்பதற்குச்
சென்ற தொரு சீமான்
சென்ற தொரு சீPமான்
செத்தது போற் கிடந்த தொரு
சிறுகுரங்கைக் கண்டான்
சிறுகுரங்கைக் கண்டார்’’


என்று தொடங்கும் கதைப்பாடல் “குண்டுடுக்கி, குடுகுடுக்கி” - என்ற குறவஞ்சிப்பாட்டின் இசை தழுவிய சிறப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைப்பாடல்கள் அழகான,பொருத்தமான படங்களுடன் பெரிய எழுத்துக்களில் அச்சிட வேண்டிய அவசியமுடையவை. பாட்டுக்கு ஏற்ற படமும், இசையும் குழந்தைகளை இலகுவில் கவர்ந்து குதுகலிக்கச் செய்யும்.

குழந்தைகளுக்கான கதைகள் தமிழில் மிக அருந்தலாகவே காணப்படுகின்றன. ஈழத்தில் குழந்தைக் கதைகள் எழுதியவர்களாக ஆறுமுகநாவலர், குமாரசாமிப்புலவர், அழகசுந்தரதேசிகர், சோ. நடராஜன் முதலியோரைச் சுட்டிக் காட்டலாம். இவர்கள் எழுதிய கதைகள் பாடநூல்களின் தேவையையொட்டியே அமைந்தமையால் குழந்தைகளின் உள, உணர்வுகளை எந்த அளவுக்குப் பாதித்தன என்பது ஆராய்வதற்குரியது. தமிழ் நாட்டில் பாரதியாரில் இருந்து ப+வண்ணன் வரை குழந்தைக் கதைகள் எழுதியுள்ளனர். குழந்தைக்கதை எழுத்தாளர்களுள் ப+வண்ணனுக்குக் குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உண்டு. தமிழில் பெரும்பாலான குழந்தைக் கதைகள், குழந்தை, சிறுவர், இளைஞர் என்ற பாகுபாடின்றி எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.

சித்திரக் கதைகள் ஈழத்தில் பெருமளவு வெளிவரவில்லை. குறிப்பாகத் தப்பியோடிய தோழர்கள், பாடசாலைக்குச் சென்ற யானை, குரங்கின் தீர்ப்பு போன்ற விரல் விட்டு எண்ணக் கூடியவையே வெளிவந்துள்ளன. தமிழ் நாட்டில் ஓரளவு சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் பெரும்பாலான வீரசாகசங்கள் நிரம்பியவையாகவும் விடுப்பார்வத்தைத் தூண்டுபவையாகவும், அதி அற்புத மாயாஜாலங்கள் பொருந்திய கதைகளாகவே காணப்படுகின்றன. ஒப்பீட்டு அடிப்படையில் தமிழில் சித்திரக் கதைகள் மிக, மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

குழந்தைகளுக்கான நாவல்களும் தமிழில் குறிப்பிடக் கூடியளவுக்கு இல்லையென்றே கருதலாம். ஈழத்தில் க. நவசோதி எழுதிய ஓடிப்போனவன் என்ற நாவலைச் சுட்டிக்காட்டலாம். குழந்தை இலக்கியப்பரப்பில் சிறுவர் நாவல்கள் “ சுயசரிதைகளாக’’ அமைந்தமையையும் அவதானிக்கலாம். பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவரும் பாங்கிலேயே சில நாவல்கள் “இழுபட்டுப் போவதையும் அவதானிக்கலாம்.

குழந்தைகளுக்கான நாடகங்களும் அவ்வாறே அமைந்துள்ளன. குழந்தைகள் படிப்பதற்கும், குழந்தைகள் நடிப்பதற்கும் என்று இரு வகையான நாடகங்கள் அமைந்துள்ளன. பாடநூல்களில் இடம் பெறும் நாடகங்கள் இரண்டு நிலையிலும் பயன்படுத்தப்படுவதும் கண்கூடு. சர்வதேசக் குழந்தைகள் ஆண்டினையொட்டிக் குழந்தை சண்முகலிங்கம் தயாரித்தளித்த கூடிவிளையாடுபாப்பா என்னும் நாடகம் குழந்தைகளுக்கான நாடக வரலாற்றில் குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. லவகுசா, வீரசிவாஜி போன்ற புராண, வரலாற்று நாடகங்கள் குழந்தைகளுக்கான அமைப்பட்டபோதும் அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றனவா என்பது ஆய்வுக்குரியதே.

குழந்தை இலக்கியத்தைச் செழுமைப்படுத்த இன்று ஏற்ற கருவியாகப் பயன்படுசது - பத்திரிகைகளும், வானொலியும், தொலைக்காட்சியுமேயெனலாம். குழந்தைகளுக்கென்றே வெளிவரும் பத்திரிகைகள் மேல்நாடுகளில் மிக மிக அதிகமாகும். தமிழில் அம்புலிமாமா, பாலமித்திரா போன்றவை விதந்தோதக் கூடியவை ஈழத்தில் பொதுவான இலக்கியப் பத்திரிகைகள் போலவே பல சிறுவர் சஞ்சிகைகளும் தோன்றி மறைந்துள்ளன. கண்ணன், கரும்பு, கண்மணி முதலியவை இவ்வகையுள் அடக்கக்கூடியவை.

தமிழில் குழந்தை இலக்கியம் சிறப்புற அமைய அவர்களின் உள்ளம், வயது, சூழல், என்பவற்றை விஞ்ஞானரீதியாக அறிந்து, அளந்து, கவிதை, கதை நாடகம் என்பன படைக்கப்பட வேண்டும்.


பொதுசனத் தொடர்புச் சாதனங்கள்

சித்திரலேகா மௌனகுரு

புராதன காலத்திலிருந்து நவீன காலம் வரை எல்லாச் சமூகங்களிலும் ஏதோ வகையிலான தொடர்பு முறையை இருந்து வந்துள்ளது. இத் தொடர்பு முறைமையே சமூக அலுவலங்கள் ஒழுங்காக நடைபெறுவதற்கும் சமூகப்பாரம்பரியம் ஒரு தலைமுறையிலிருந்து இன்னோர் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கும் துணை புரிகின்றது. இத் தொடர்பு பல்வேறு சாதனங்கள் வழியாக ஏற்படுகிறது. பண்டைக் காலத்தில் பறையறைந்து ஒரு செய்தியைத் தெரிவிப்பதிலிருந்து இன்று வானொலி மூலமோ தொலைக்காட்சி மூலமோ அறிவி;த்தல் கொடுக்கும் நிலைவரை இத்தொடர்பு முறையில் பல்வேறு வகைகளும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன.

இன்று பொது சனத்தொடர்பு சாதனங்கள் என்ற சொற்றொடருக்குக் குறிப்பிட்ட திட்டவட்டமான பொருள் உண்டு. கருத்துகளைக் கூறவும் செய்திகளை அறிவிக்கவும் ஊடகங்களாக விளங்குபவையே பொதுசனத் தொடர்பு சாதனங்கள் - ஆயளள ஆநனயை எனப்படுகின்றன. அதாவது இத் தொடர் பொது சனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு உதவும் சாதனங்களைச் குறிப்பிடுகின்றது. ஒரே சமயத்தில் பல்வேறு மக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நான்கு சாதனங்களை இன்றைய உலகிற் காணலாம். பத்திரிகை, வானொலி, சலனப்படம், தொலைக்காட்சி ஆகியவை இவையாகும். இவையே இன்று பல்வேறு நாடுகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொதுசனத் தொடர்புச் சாதனங்களாக விளங்குகின்றன.

இத்தொடர்பு சாதனங்களுக்கும் உலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப இயந்திர வளர்;சிக்குமிடையே தொடர்பு உண்டு. உலகம் அடைந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பெறுபேறுகளாகவே இத் தொடர்புச் சாதனங்கள் உருவாகின எனக் குறிப்பிடுவது பொதுத்தமானது. பத்திரிகை,வானொலி, சலனப்படம், தொலைக்காட்சி ஆகிய இத் தொடர்புச் சாதனங்கள் யாவும் ஒரே காலத்தில் உருவாகின, பயன்பட்டன என்பதற்கில்லை. இச் சாதனங்களுள் காலத்தால் முந்தியது பத்திரிகையாகும். மனிதன் தனது கருத்துக்களை ஏனையோருடன் பரந்துபட்ட முறையில் பகிர்ந்து கொள்ள உதவிய முதலி தொழில் நுட்ப சாதனம் பத்திரிகை. இது அச்சுக்கலையை அடிப்படையாகக் கொண்டது. உடலுழைப்பும், நீண்ட காலமும் தேவைப்படும் கையெழுத்துமுறை போலன்றி அச்சிற் பதிப்பிக்கும் முறை இலகுவதாகவும், ஒரே சமயத்திற் பல்லாயிரம் பிரதிகளை உண்டுபண்ணக் கூடியதாகவும் அமைந்தது. கண்ணூன்றியும் கருத்தூன்றியும் படிக்கவேண்டிய கையெழுத்தைப் போலன்றி அச்செழுத்திற் பார்வையைப் படரவிடுதல் மூலமே வி~யத்தைக் கிரக்கிக்கமுடிந்தது. இத்தகைய அச்சுக்கலையின் முக்கியமான ஒரு விளைபொருளாகத்தான் பத்திரிகை தோன்றியது. இவ்வாறு கூறுவதனால் 1976 ஆம் ஆண்டு முதலாவது அச்சுக்கூடம் அமைக்கப்பட்டதுமே பத்திரிகை மூலம் தொடர்பு கொள்ளுதல் உண்டானது என்பது பொருளல்ல. உண்மையில் இங்கிலாந்தில் அச்சுமுறை அறிமுகமாகி ஒன்றரை நூற்றாண்டுகளின் பின்னரேயே, செய்திகளுக்கு முக்கியமளிக்கும், ஒழுங்கான இடைவெளிகளி;ல் பிரசுரமாகும் பத்திரிகை வெளிவந்தது. பின்னர் அச்சுக்கலை பரவிய நாடுகளிளெல்லாம் பத்திரிகையும் பிரதானமான பொதுசனத் தொடர்பு சாதனமாக வளர்;சியடைந்தது.

சலனப்படம், வானொலி, தொலைக்காட்சி ஆகிய சாதனங்கள் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் தொடர்புமுறைகளில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தின. இச் சாதனங்கள் மூலம் அறிய அல்லது மகிழ்வடைய விரும்பும் ஒருவருக்கு எத்தகைய தகுதிகளும் தேவையில்லை. உதாரணமாக, பத்திரிகை தகுதிகளும் தேவையில்லை. உதாரணமாக பத்திரிகை மூலம் அறிய வேண்டின் வாசிக்கத் தெரிந்திருப்பது அவசியம். ஆனால் வானொலி, தொலைக்காட்சி ஆகியரவ மூலம் அறிவதற்குப் பார்க்கவோ கேட்கவோ முடியுமானால் போதும் அதாவது மனித புலன்களே போதுமானவை, இவற்றுக்கப்பால் வேறு தேவைகள், வானொலி, தொலைக்காட்சி மூலம் அறிவதற்கு வேண்டியிருக்கவில்லை. முன்னேறறம் இத் தொடர்புச் சாதனங்களின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காலாயமைந்தது.

இலங்கையில் சமீபகாலமாகத்தான் இப்பொழுது சனத்தொடர்புச் சாதனங்கள் பயன்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் பாரம்பரிய முறையிலேயே தொடர்பு கொள்ளப்பட்டது. (முன்பு திருமண வைபவமானால் வீடுவீடாகச் சென்று அழைத்தலையும் இன்று பத்திரிகையில் அழைப்பு விடுத்தலையும் உதாரணங்களாகக் கூறலாம்) ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தில் அச்சுக்கூடங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக அமைக்கப்பட்டதையடுத்து இங்கு பத்திரிகைகள் தோன்றின இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியாகிய பத்திரிகைகள் கிறிஸ்தவ சமயப் பிரசாரத்துக்காக, சமய தத்துவங்களை மக்களுக்கு அறிவிக்கும் பணியையே முதன்மையாகச் செய்தன. ஆனால் காலப்போக்கில் செய்திகளுக்கு முக்கியமளிக்கும் நிலைமை ஏற்பட்டது.

பத்திரிகைத் துறையையடுத்து மிகமிகச் சமீபுகாலமாகத்தான் வானொலியும், சலனப்படமும் இங்குத் தொடர்புச் சாதனங்களாகப் பயன்பட்டன. தொலைக்காட்சியோ ஓரிருவருடங்களுக்குள்ளேயே பிரபலம் பெற்றது. எனினும் நாட்டின் சகலபகுதிகளையும் தொலைக்காட்சி எட்டும் நிலை வெகு தூரத்தில்லை.

பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் ஏற்படும் தொடர்பு முறைக்குக் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. இவை இத்தொடர்பு முறைக்கே பிரத்தியேகமானவையுமாகும். முதலாவதாக இத் தொடர்பு ஒரு வழித் தொடர்பாகும். வாசிப்பவருக்கோ கேட்பதற்கோ பார்ப்பவருக்கோ உடனடியாகத் திரும்பப் பேவோ, மேலும் தெளிவை நாடவோ, கேள்வி கேட்கவோ முடியாது. பார்ப்போர் அல்லது கேட்போரின் உடனடித் தொடர்புக்கு இடமின்றியிருந்தலால் பொதுசனத் தொடடர்புக்குச் சாதனங்கள் மூலம் ஏற்படும் தொடர்பு ஒரு பக்கத் தொடர்பாக அமைகிறது.

இரண்டாவதாக இச் சாதனங்கள் தமது வாசகர், பார்வையாளர், கேட்போர் ஆகியோர் எவர் எனத் தேர்ந்தெடுக்கின்றன. வானொலியில் ஒலிபரப்பப்படும் விவசாய நிகழ்ச்சி விவசாயிகளைக் கருத்திற் கொள்கிறது. சிறுவர் நிகழ்ச்சி சிறுவர்களுக்காக அளிக்கப்படுகிறது. இது போலவே பத்திரிகைகளும் தமது வாசகர் கூட்டத்தை ஏற்கனவே நிர்மணம் செய்து அதற்கு ஏற்றது போலச் செய்திகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் அமைகின்றன. யாழ்ப்;பாணத்திலிருந்து வெளிவரும் “ஈழநாடு’’ எனும் பத்திரிகை யாழ்ப்பாணத்து மக்களை வாசகர்களாகக் கொள்வதால் அப்பகுதி சார்ந்த செய்திகளை அதிகமாக வெளியிடும். இவ்வாறு ஒரு பக்கம் சாதனங்கள் தமது வாசகரை அல்லது பார்வையாளரைத் தேர்ந்தெடுக்க, மறுபுறம் வாசகர் அல்லது பார்வையாளர் தமக்கு எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கச் சுதந்திரம் உடையவராய் உள்ளனர். வானொலியைக் கேட்பதா அல்லது பத்திரிகையை வாசிப்பதா என்பதை அவர் தீர்மானிக்கிறார்.

மூன்றாவதாக இச் சாதனங்கள் பரவலாக அதிக அளவான மக்களைச் சென்றடையும் திறன் பெற்றிருப்பதால் மிகக் குறைந்த சாதனங்களே தேவைப்படுகின்றன. முன்பு செய்தியை நாடுழுமுக்கத் தெரிவிப்பதாயின் பலர் பல்வேறு பகுதிகளில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் வானொலி அறிவிப்பின் மூலம் ஒரே நேரத்தில் எல்லாப் பகுதிகளுக்கும் செய்தியைத் தெரிவிக்க முடியும்.

நான்காவதாக, இச் சாதனங்கள் முடியுமானவரை அதிக அளவு பார்வையாளரை வாசகரைக் கவரவேண்டியுள்ளன. இதனால் வாசகரிலும் பார்வையாளரிலும் மிகச் சாதாரண தரத்தோரையே இவை தமது இலக்காகக் கொள்கின்றன. அப்போதுதான் பொது மக்கள் இச் சாதனங்களை நாடமுடியும். எனவே மிக எளிமையான, இலகுவான முறையில் செய்திகளைத் தயாரிக்க வேண்டும். தொலைக்காட்சியில் காட்சித் தொகுப்பு அமைதல் வேண்டும். இவற்றில் பயன்படுத்தப்படும் மொழிநடை மிக எளிதில் புரிவதாகவும் ஏற்கனவே பரிச்சயமானதாகவும் இருத்தல் வேண்டும்.

ஐந்தாவதாக பொதுசனத் தொடர்புக்கும் இத் தொடர்பு இடம்பெறும் சமூகத்துக்கும் பரஸ்பர தொடர்புண்டு; ; பரஸ்பர பாதிப்புண்டு. இச் சாதனங்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் செல்வாக்குச் செலுத்துவது மாத்திரமின்றி, சமூகத்தின் மேற்கூறிய நிலைகளாலும் கருத்துக்களாலும் பாதிக்கவும் படுகின்றன. சமூகத்தின் பிரபல்யம் பெற்றிருக்;கும் கருத் தோட்டங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை இத் தொடர்புச் சாதனங்கள் வெளியிடுகின்றன. அதே நேரம் ஒரு குறிப்பிட்ட கருத்தை, பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதிலும் பிரதான பங்கு வகிக்கின்றன.

இதுகாறும் கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்போது, பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் நவீன தொழில் நுட்பவளர்ச்சின்படியாகத் தோன்றியவை என்பதும், பரந்துபட்ட மக்களை நோக்கிச் செயற்படுகின்றன. என்பதும்,அவற்றுக்கெனச் சில பிரத்தியேகமான இயல்புகள் உண்டென்றும் பெறப்படும்.

பகுதி
இரண்டு

ஈழத்துத்
தமிழ்
அறிஞர்கள்

தமிழ் வளர்த்த
தாமோரம்பிள்ளை

மயிலங்கூடலூர் பி. நடராசன்

(தோற்றம் : 1832 - 09 - 12
தந்தையார் : சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை
தாயார் : பெருந்தேவி

பாடசாலைப் பரிசோதகரான தந்தையிடம் ஆரம்பக்கல்வி.
முத்துக்குமாரகவிராயரிடம் உயர்இலக்கண இலக்கியக்கல்வி.
தெல்லிப்பழை ஆங்கில கலாசாலையில் ஆரம்பக்கல்வி.
1844 - 1852 வரை யாழ். சர்வசாத்திர கலாசாலையில் கல்வி.
ஆசிரியர்கள் : கறல் விசுவநாதபிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை,
சி.ரி. மிக்ஸ், ஆசியர்களே பண்டிதர் என அழைத்தனர்.

1852 இல் கோப்பாய் போதனா வித்தியசாலை ஆசிரியர் ஆனார். பார்சிவல் பாதிரியார் அழைப்பில் சென்னை சென்னை சென்று தினவர்த்தமானி ஆசிரியரானார். மேல் நாட்டோர்க்குத் தமிழ் பயிற்றல். பின் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் பதவி. 1857 இல் பட்டதாரியானார். 1871 இல் பீ. எல். தேர்வு சித்தி. கள்ளிக்கோட்டை இரசாங்க வித்தியசாலையில் ஆசிரியர். பின் கணக்காளர் பதவி. 1881 இல் இளைப்பாறினார். 1887 இல் புதுக்கோட்டை சமஸ்தான நீதிபதி. மோழி ஆய்வு நிறுவனங்களில் உறுப்பினர் பாரத அரசு இராவ்பகதூர் கௌரவப்பட்டம் வழங்கியது.

ஈழ நாட்டின் தனித்தன்மையான மரபு வழிக் கல்வியும் மேல்நாட்டு நவீன கல்வி முறையும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சங்கமித்தன. இவ்விரு வகைக் கல்வி முறைகளும் தந்த நலன்களையெல்லாம் தமதாக்கிக் கொண்டு ஈழ நாட்டிலே சிலர் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த தமிழ்த்தொண்டினைப் புரிந்தனர். இவர்களுள் நல்லை நகர் ஆறுமுகநாவலரும், சிறுப்பிட்டி வை. தாமோதரம்பிள்ளையும் குறிப்பிடத்தக்கோர். “ நல்லைநகர் ஆறுமுகநாவலார் தோன்றியிராவிட்டால் சொல்லு தமிழ், கருதி, புராணம், ஆகமம், பிரசங்கநெறி அனைத்தும் அழிந்திருக்கும்’ என்பது பிள்ளையவர்களின் மதிப்பீடு. “இலக்கண இலக்கியங்களிலே மிக வல்லவரும் சென்னை முதல் ஈழ மீறாகவுள்ள தமிழ்நாட்;டு வித்துவான்களில் தமக்கு இணையில்லாதவருமாகிய தாமோதரம்பிள்ளை” என்பது நாவலரின் நற்சான்று.

இன்று தமிழ்மொழி மிகப்பழைய நூல்களைக் கொண்டதாகவும் அதனால் உலகப் புகழ் பெற்றதாகவும் விளங்க நாவலரும் பிள்ளையவர்களும் மேற்கொண்ட பதிப்பு முயற்சிகளே காரணமாகும். பனை ஓலை ஏட்டிலே இராம பாணத்துக்கும் கறையானுக்கும் இரையாகி அழிவும் நிலையிலிருந்த ஏடுகளைத் தொகுத்து ஆராய்ந்து அச்சிற் பதித்து வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட முதல்வர் நாவலர். அவருக்குப் பின்னர் அவருடைய ஆசியோடு பதிப்பு முயற்சியில் ஈடுபட்டவர் சி.வை. தாமோதரம்பிள்ளை, பிள்ளையவர்களே தமிழ்த் தாத்தா எனப்போற்றப்படும் உத்தமதானபுரம் வே. சாமிநாதையருக்கும் பதிப்புத்துறையில் முன்னோடியாகவும் ஊக்கமூட்டுபவராகவும் அமைந்தார். பழந் தமிழ் நூல்களை அச்சிற் பதித்து வெளீயிட்டு அவற்றுக்குச் சாகாவரம் அளித்த மும்மூர்த்திகள் என இம் மூவரையும் போற்றுவார்.

பிள்ளையர்களின் தமிழ்ப்பணி பன்முகப்பட்டது. எனினும், அவருக்குப் பெருமையும் புகழும் தருவது அவர் மேற்கொண்ட நூற்பதிப்புப் பணியேயாகும். 1852 ஆம் ஆண்டளவில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் விரிவுரையாளராய் இருந்த போதே தமது இருபதாம் வயதில் பிள்ளை நீதிநெறி விளக்க உரைபதிப்பின் மூலம் பதிப்பாளர் ஆனார். தமிழகத்துக்குச் சென்று அங்குப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஏட்டு நூல்களைத் தேடித் தொகுப்பதிலும் ஆராய்வதிலும் ஈடுபட்டிருந்தார். பதிப்புத்துறையில் ஆறுமுகநாவலருக்குத் துணை செய்தார். 1868 இல் நாவலர் ஆராய்ந்து கொடுத்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரையை நாவலரின் வழிகாட்டலுடன் அவரது மேற்பார்வையிற் பதித்தார். பிழையின்றி நூல்களைப் பதித்தலிற் புகழ் பெற்ற நாவலரிடம் தாம் பெற்ற நுணுக்கமான பயிற்சியே பிள்ளையின் பிற்காலப் பதிப்புக்களின் சிறப்புக்குக் காரணமாயமைந்தது.

நாவலருடைய மறைவுக்குப் பின்னர், பிள்ளையவர்கள் தாமே பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். வீரசோழியம் (1881) இறையனார் களவியலுரை (1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியரை (1885) இலக்கணவிளக்கம் (1889), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை (1891), தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியரை (1892) ஆகிய இலக்கண நூல்களையும் தணிகைப்புராணம் (1883), கலித்தொகை (1887), சூளாமணி (1889) ஆகிய இலக்கியங்களையும் அச்சிற் பதித்தார். 1897 இல் அகநானூறு மணிமிடை பவளப் பகுதியைப் பரிசோதித்துப் பதிக்க முயன்று கொண்டிருந்தார். எனினும் உடனலமின்னையாலும். 1901 தை முதலாந் திகதி இயற்கையெய்தியதனாலும் அகநானூற்றை அவர் அச்சிற் பதிக்க முடியாமற்போய்விட்டது. அகநானூற்றை மட்டுமன்றி ஏனைய எட்டுத்தொகை நூல்களையும் பிரசுரிக்கும் நோக்குடன் ஆராய்ந்தார். இதிற் புறநானூற்றரை ஈற்றில் 140

செய்யுளும் பரிபாடல் ப+ரண பிரதியும் பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் கடைசிப் பத்தும் இன்னும் அகப்படவி;ல்லை.” என்று குறிப்பிடுவது அவரது இடைவிடாத தேடுதல் முயற்சியைக் காட்டுகிறது.

அன்றைய நிலையிற் பதிப்பு, முயற்சி பகீரதப் பிரதேயத்தனமானது.

“தூக்கினாலன்றே தெரியும் தலைச்சுமை, பரிசோதனாசிரியர் படுங் க~;டமும் அரிய பழைய நூலைச் சுத்த மனச் சாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க்கன்றி விளங்காது எனக்கு வே. சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி.

என்ற கூற்றுப் பிள்ளையவர்கள்பட்ட இன்னல்களை விளக்குவதாகும்.

இவற்றைவிடப் பண நெருக்கடியும் பெரிதாய் இருந்தது. அது பற்றிப் பிள்ளையவர்களே உளம் நெகிழ்ந்து வருமாறு கூறுகிறார்.

“தேடுவாரும் பரிபாலிப்பாருமின்றி ஒன்றென்றாய் அழிந்து போகும் அருமையான பழைய தமிழ் நூல்களைப் பாதுகாத்தற் பொருட்டு அடியேன் ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து அச்சிடுவதிற் புத்தகங்கள் விலைபோகலாம் நேரிடும் க~;டம் பணக் குறைவினால் எனது முயற்சி மிகத் தாமசப்பட்டு நடைபெறுகின்றது. லோகோபகாரமாய் யான் கையிட்ட இத் தொழிலைத் தற்காலம் சர்வகலா சோதனைச் சங்கத்தில் எனக்கு வரும் பரீட்சாநிவேதனம் ஒன்றைக்கொண்டே நடத்தி வருகின்றேன். அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கே முன்னே பின்னே என்று கட்டி வருகிறது.

நூற்பதிப்பு முயற்சியிற் பிள்ளையவர்களின் நோக்கும் தன்னை ஒறுத்துத் தமிழை வளர்த்த பாங்கும் நன்கு புலப்படுகின்றன.

பிள்ளையின் நூற்பதிப்புப் பணியிலே குறிப்பிடத்தக்க மற்றோர் சிறப்பு அவரது பதிப்புரைகளாகும். நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி என்று போற்றப்படும் மகாகவி பாரதியாரையே அவரது பதிப்புரைகள் பெரிதும் கவர்ந்துள்ளன. சின்னச் சங்கரன் கதையில்,

“சென்னப்பட்டணத்திலே சி.வை. தாமோதரம்பிள்ளை என்று ஒரு மகாவித்துவான் இருந்தாரே, கேள்விப்பட்டதுண்டா? ஆவர் சூளாமணி என்னும் காவியத்துக்கு எழுதிய முகவுரையாரைக்கொண்டேனும் படிக்கச் சொல்லியாவது கேட்டதுண்டா?

என்று ஒரு பாத்திரத்தின் மூலம் பிள்ளையின் பதிப்புரைச் சிறப்பைப் பாரதியார் எடுத்துக் காட்டுகிறார். புண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், புலவர் சொ. முருகேச முதலியார் முதலியோர் பிள்ளையின் பதிப்புரைகள் நூலாக வெளிவர வேண்டும் என்று விரும்பினார்.

“சி. வை. தூ. புதிப்புரைகளைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் தாமோதரம்பிள்ளை என்ற பெயரில் வெளியிடுதல் நன்று. பதிப்புரைகள் அவ்வவ்காலத் தமிழ்ச் சரித்திரமாய் உயர் வகுப்பு மாணவர்க்கு இன்றியமையாதனவாய் அமையும்’’.

என்ற பண்டிதமணியின் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாமோதரம் பேராதனைப் பல்கலைக்கழத் தமிழ்ச் சிறப்புமாணவர்களுக்குப் பாட நூலாய் அமைந்துள்ளது.

கோல்ட்வெல் ஐயரிலிருந்து கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை வரை தமிழிலக்கிய வரலாற்றைக் கால அடிப்படையின் பாகுபாடு செய்துள்ளனர். நிரம்பிய தமிழ்ப் புலமையும் உலக இலக்கிய வரலாறு பற்றிய அறிவும் நிறைந்த தமிழர் என்ற வகையில் இலக்கிய வரலாற்றுக் காலப் பாகுபாட்டை மேற்கொண்ட முன்னோடி பி;ள்ளையவர்களே. 1881 ஆம் ஆண்டு தாம் பிரசுரித்த வீர சோழியப் பதிப்புரையில் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தை எட்டுக் கூறுகளாக வகுத்துள்ளார். அபோத காலம் (வாய்மொழி இலக்கிய காலம்) அட்சரகாலம் (ஆதி இலக்கிய காலம்) (முன்) இலக்கண காலம், சமுதாய காலம் (முச்சங்ககாலம்) அநாதார காலம் (புத்தர் காலம்) சமண காலம், இதிகாச காலம், ஆதீன காலம் என்பன அவர் வகுத்த காலப்பாகுபாடுகள். இக் காலப் பாகுபாடு இலக்கியத்தின் முக்கிய உந்து சக்திகளை அடிப்படையாகக் கொள்வதில்லை என்று கூறப்பட்டாலும் முன்னோடி முயற்சி வகையிற் சிறப்புடையது.

பதிப்பாளர், இலக்கிய வரலாற்று ஆசிரியர் என்ற வகையில் மட்டுமன்றி நூலாசிரியர் என்ற வகையிலும் தாமோதரனார் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார். இவர் கட்டளைக் கலித்துறை என்ற நூலை யாத்தார். சூளாமணியை உரை நடையில் எழுதி வெளியிட்டார். செய்யுளும் உரையும் கலந்த சைவமகத்துவம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். நட்சத்திரமாலை என்பது இவர் எழுதிய பிறிதொரு நூல். நாவலரை அடியொற்றி 6ஆம் 7ஆம் பாலபாடம் என்னும் வாசக நூல்களையும் வெளியிட்டார்.

ஆறுமுக நாவலரை உரைநடையின் தந்தை எனப் போற்றுகிறது. தமிழுலகம். நூவலரின் வாரிசான பிள்ளையும் உரைநடை ஆற்றல் மிக்கவராய் விளங்கினார். பதிப்புரைகளும் சூளாமணி வசனமும் பிறவும் இவரது உரை நடையாற்றலுக்குச் சான்றாகும். இவரது உரைநடை பொருளுக்கேற்ப இறுக்கமானதாகவே எளிமையானதாகவோ அமைந்தது. இலக்கண விளக்கப் பதிப்புரை மிகவும் திட்பமும் தருக்கவாதமும் மிக்கதாயுமுள்ளது. கலித்தொகைப் பதிப்புரை நாவலரின் கண்டன நடையை ஒத்ததாகவுள்ளது. பதிப்புரைகளில் நூற்பதிப்பு அநுபவங்களை எடுத்துரைக்கும்போது வாசகருடன் நேரே உரையாடுவது போன்றே எளிய நடையைப் பயன்படுத்தியுள்ளார். நாவலரும் இதுபோலவே பொருளுக்கும் நூலின் வாசகர் தரத்துக்குமேற்ற நடையைப் பயன்படுத்தியிருப்பது நோக்கத் தக்கது.

குhலந்தோறும் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றி அவர்களை அறிஞர்களாக்கித் தமிழ்க் கல்விப்பாரம்பரியத்தைக் காப்பதும் சிறந்த தமிழ்ப்பணியாகும். நாவலர் சிதம்பரத்திலும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு சிற்றூர்களிலும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவிக் கல்விப் பணியாற்றியது போலத் தாமோதரனாரும் 1878 இல் ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவிக் கல்விப்பணி ஆற்றினார். மருகேச பண்டிதர் தலைமையாசிரியராகவம் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ஆசிரியராகவும் அமர்த்தப்பட்டனர். முருகேசபண்டிதரின் பின் குமாரசுவாமிப் புலவர் தலைமையாசிரியரானார். தொல்காப்பியம், நன்னூல், முல்லையந்தாதி, கம்பரந்தாதி, தணிகைப்புராணம், கந்தபுராணம், இரகுவம்சம் முதலிய நூல்கள் ஏழாலைப் பாடசாலையிற் கற்பிக்கப்பட்டன. 1878 இல் முதன் முதலில் தாமோதரனார் வேண்டுகோட்படி நாவலர் பெருமான் அப்பாடசாலை மாணவர்களைப் பரீட்சித்தார். அவரைத் தொடர்ந்து முருகேச பண்டிதர், ந. ச. பொன்னம்பலபிள்ளை, சபாரத்தின முதலியோர், சரவணமுத்துப் புலவர் முதலியோர் காலத்துத்துக் காலம் தேர்வுகளை நடத்தி மாணவர் தேர்ச்சிக்குச் சான்று வழங்கினார். குமாரசுவாமிப் புலவரின் நுண்மாண் நுழைபுல விருத்திக்குப் பிள்ளையின் பாடசாலையே சிறந்த களமாயிற்று. வித்துவான் ப. சிவானந்தையர் முதலிய பேரறிஞர்களை உருவாக்கியதும் அப் பாடசாலையில் புலவர் வழங்கிய கல்வியே இருபத்திரண்டு ஆண்டுகள் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டுப் பாடசாலையை நடத்தினார். நோய்வாய்ப்பட்ட பின்னர் 1898 இல் பாடசாலையை மூட நேர்ந்தது. புலவரும் பல மாதங்கள் தொடர்ந்து வேதனம் வழங்கப்படாத நிலையிலும் தமிழ்ப்பணி செய்கிறோம் என்ற நோக்குடன் கற்பித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையவர்கள் ஆரம்பாத்தில் தமது தந்தையாரிடமும் பின்னர் சேனாதிராச முதலியாரின் சமகாலத்தவரும் நண்பருமான சுன்னாகம் முத்துக்குமார கவிராயரிடமும் கல்வி கற்றுப் பேரறிஞரானார். பின் தெல்லிப்பழை அமெரிக்கமி~ன் வித்தியாலயத்தில் ஆங்கிலக்கல்வி பயின்றார். 1844 இல் வட்டுக்கோட்டைச் சர்வசாத்திகலாசாலையில் சேர்ந்து 8 வருடம் பயின்று கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம், வானியல் ஆகிய பாடங்களில் சிறப்புச் சித்தி பெற்றார். ஆசிரியராகிய நெவின்ஸ் பண்டிதன் என்றே இவரை அழைப்பர். சென்னை சென்ற இவர் முதலில் பத்திராதிபராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழக முதல் நிலைத் தேர்விலும் பட்டத்தேர்விலும் சித்தியெய்தினார். சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். பல்வகைப்பட்ட அறிவே இவரது பல்வேறு தமிழியற் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்தது.

சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், கலாசாலை ஆசிரியர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், பத்திராதிபர், பாடசாலை, நிறுவுநர், உரைநடை வல்லார், இலக்கிய வரலாற்றாசிரியர் முதலிய நிலைகளில் நின்று தமிழ்ப் பணியாற்றியுள்ளார். பிள்ளையவர்களின் பன்முகபடுத்தப்பட்ட தமிழ்ப்பணிகளை மதிப்பிடும்போது,

சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களது சரித்திரம்
தமிழ்ச் சரித்திரமாகவே முடிந்திருக்கிறது.

என்று பண்டிதமணி கூறுவது மிகச் சிறந்த மதிப்பீடே என்பதில் ஐயமில்லை.

நாவல் இலக்கிய மூலவர்
அறிஞர் சித்திலெவ்வை

அ.ஸ.அப்துஸ்ஸமது

(சித்திலெப்பை 1838 ஜூலை 11 இல் கண்டி மாநகரிற் பிறந்தவர். இவரது தகப்பனார் எம். எல்.சித்திலெவ்வை: இலங்கையின் முதலாவது முஸ்லிம் சட்டத்தரணியாவார். இலங்கையின்
முதலாவது முஸ்லிம் சட்டத்தரணியாவார். இவரும் தந்தையைப் போல் சட்டத்தரணியாகப் பயின்றவர். மார்க்கக் கல்வியையும் அறபு மொழியையும் கஸாவத்தை ஆலிம் அப்பாவிடம் கற்றார். இவரது பெயர் முஹம்மது காசிம் மரைக்கார் என்பதாகும். எம்.சி. சித்திலெவ்வை என்று பெயர் வழங்கப்பெற்ற இவருக்கு “ஆலிபுபில்லா’’ என்னும் கௌரவப்பட்டமும் உண்டு.

1862 இல் மாவட்ட நீதிமன்றத்திலும் 1864இல் உயர் நீதி மன்றத்திலும் சட்டத்தரணியாகவும், 1874 இல் கொழும்பு முனிசி பல். நீதிபதியாகவும் கடமையாற்றினார். இவரது மனம், சட்டத் தொழில் செய்வதைவிடச் சமூகத்தொண்டும், அறிவியற்பணியும் செய்வதிலே ஆர்வம் கொண்டது. இதன் விளைவாக 1891 இல் கொழும்பில் “ முஸ்லிம் கல்விச் சங்கம்’’ ஒன்றை அமைத்தார். அப்பொழுது எகிப்திலிருந்து பிரிட்டிசாரால் தேசப்பிர~;டம் செய்யப்பட்டு இங்கு வந்த அறபி பா~h என்ற பெரியாரும். இவருக்கு உதவியாக இருந்தார். முதலில் கொழும்பு புதிய சோனகத்தெருவில் மத்ரசதுல் கைரியாவையும் மருதானையில் மத்ரசதுஸ் ஸாஹிறாவையும் (சாஹிறா கல்லூரி) அமைத்தார். கண்டியில் முஸ்லிம் பெண்களுக்கென ஒரு பாடசாலையையும் ஸ்தாபித்தார். தொடர்;ந்து கம்பளை, பொல்காவல, கேகால, குருநாகல், ஹட்டன், நுவரேலியா, பதுளை முதலாம் இடங்களிலும் முஸ்லிம் பாடசாலைகளை அமைத்தார்.

சட்டசபையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் இடம்பெறவேண்டுமென்று பாடுபட்டார். முஸ்லிம் நேனிலும் மற்றும் ஆங்கில இதழ்களிலும் இது பற்றிக் கட்டுரைகள் எழுதினார். இதன் விளைவாக ஜனாப். ஏ. எல். எம். ~ரீபு சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். அறிஞர் சித்திலெப்பை தம் அறுபதாவது வயதில் 1898 பெப்ருவரி 8இல் இறையடி எய்தினார்.

ஈழத்துத் தமிழ் உரை நடை வரலாற்றில் அவசியம் குறிப்பிடப்படவேண்டிய ஒருவர் அறிஞர் சித்திலெவ்வை ஆவர். பத்திரிகை ஆசிரியராகவும், படநூல்கள், நவீனம், சரித்திரம், ஆன்மீக நூல்கள் என்பவற்றின் ஆசிரியராகவும் இருந்து அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. 19ஆம் நூற்றாண்டில் நிலவிய ஆங்கிலக்கல்வி முறையும் ஆங்கில இலக்கியங்களும் புதிய மதிப்பீட்டாளர்களை உருவாக்கத் தொடங்கின. தாம் கொண்ட கருத்தைப் பல திறம்பட மக்களின் மத்தியில் நிலைய+ன்றச் செய்வதற்கு, செய்யுள் பிரபந்த முறைகளைவிட, உரைநடையாக்கம் இலகுவானதும், மக்களிடையே மாற்றங்களை உண்டாக்கும் தன்மையதும் என்பதும் அப்போது மனதிற் கொள்ளப்பட்டது. எனவே, இக் காலப்பகுதியில் ஆறுமுகநாவலரின் இலக்கியப் பங்களிப்புகள் எவ்விதம் சமூக அரசியல் கலாசார விழிப்புணர்ச்சியொன்றை ஏற்படுத்திற்கே அவ்விதம் அறிஞர் சித்திலெவ்வையின் இலக்கியப் பணியும் முஸ்லிம் சமுதாயத்திடையே தாக்கத்தை ஏற்படுத்திற்று.

ஆறுமுகநாவலர், அறிஞர் சித்திலெப்வையினும் பதினொறு வயது மூத்தவர் . அவரது பணியினையும் அறிவாற்றலையும் சித்திலெவ்வை பல இடங்களில் வியந்தோதி நிற்கிறார். ஆதலால் அவர் வழி இவர் நின்று பணியாற்றினார் என்பதை ஜனாப் எஸ். எம். கமால்தீன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“ சித்திலெவ்வையின் இலக்கிய ஆக்கங்களை ஆய்வதற்கு முற்படும்போது நாம் ஆறுமுகநாவலர் அவர்களது உரை நடை ஆக்கங்கள், சமகாலத் தமிழறிஞரிடையே ஏற்படுத்திய தாக்கத்தினை எளிதில் உணரக்கூடியதாக உள்ளது. சிறப்பாகச் சித்திலெவ்வை அவர்கள் பல வகைகளில் நாவலர் அவர்களது இலக்கிய வழி நின்று பணிபுரிந்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த சமய, கலாசார, அரசியல், விழிப்புணர்ச்சியை நாவலர், சித்திலெவ்வை போன்றோரின் உரைநடை ஆக்கங்களுக்கு உந்து சக்தியாக அமைந்தது எனலாம்”
(- உரைநடை வளர்ச்சியில் சித்திலெவ்வையின் பங்களிப்பு)

அறிஞர் சித்திலெவ்வை சிறந்த கல்விமான் ; சமுதாய உயர்ச்சிக்காகத் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ; தம் செல்வத்தினைச் செலவு செய்தவர்: முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர், அவர்களது கல்வி வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். இந்தப் பணிகளுக்கெல்லாம் ஆதார பலமாக அவர். கைக்கொண்டது பேனா முனையையேயாகும். ஒரு போர் வீரனது வாள்முனை சிந்தும் இரத்தத்தை விட, ஓர் எழுத்தாளனது பேனாமுனையிலிருந்து சொட்டும் மை புனிதமானது என்ற நபிநாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை மனத்திற்கொண்டு இவர் தம் பணியை ஆற்றத் தொடங்கியதன் விளைவாக இவர் தமிழிலக்கிய வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டார்.

“முஸ்லிம்களுள் முதல் உரை நடை ஆசிரியர்கள்,
கஸஸ_ல்அன்பியா என்னும் நபிமார் சரித்திரம்
எழுதிய பவள மாநகர் ஜான் சாகிபு லெவ்வை ஆலிம்
என்பவரும் அதே ஊரைச்சேர்ந்த முகம்மது லெவ்வை
ஆலீம் என்பவருமாவர்’’

என்று அறிஞர் ஆர்.பி.எம். கனி இஸ்லாமிய இலக்கியக் கருவ+லம் என்ற நூலிற் குறிப்பிடுகிறார். இவ்விருவருக்கும் பிறகு சிறந்த உரைநடை ஆசிரியராக விளங்கியவர் அறிஞர் சித்திலெவ்வை ஆவார். இவர் அறபு ஆங்கிலம், தமிழ், சிங்களம் என்னும் நான்கு மொழியும் தெரிந்தவர். தம் கல்வியை ஆங்கில மொழி மூலமே கற்றுச் சட்டத்தரணியாகவும் நீதிபதியாகவும் கடமையாற்றியவர். எனினும் இவரிடத்தமைந்த இலக்கண சுத்தமான தமிழ் அறிவும் ஆற்றலும் வியக்கத்தக்கணவாக இருந்தன. பத்திரிகை ஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் விளங்கும் அளவுக்குத் தமிழ் அறிவு கைவரப்பெற்றவராகவும் திகழ்ந்தார்.

இவருடைய தமிழ்ப்பணிகள் பன்முகப்பட்டவை. பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். அருமையான ஞானநூல்களை எழுதியுள்ளார் : பாடநூல்களை ஆக்கி அளித்தார் ; சரித்திர நூல்களையும் தந்தார் : நாவல் ஒன்றையும் எழுதி உதவினார். இவை ஒவ்வொன்றிற்கும் வேறுபட்ட அறிவும் ஆற்றலும் இவரிடத்தே அமைந்திருந்ததுபோல, மொழிநடை கைவந்தவராகவும் விளக்கினார். இவர் முஸ்லிம் நேசன் (1882) என்ற பத்திரிகையைத் தொடங்கி ஆறு வருடங்கள் நடத்தினார். இது முஸ்லிம்களின் கல்வி, அரசியல், சமூகம் முதலியவற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. இது பற்றிய இவர் குறிப்பிடுகையில்,

“இத் தேசத்திலுள்ள முஸ்லிம்கள் கல்வி அறிவில்
ஆதிக அசட்டையாக இருக்கிறார்கள். மற்றுஞ் சாதி
யார்களெல்லோரும் நாளுக்குநாள் கல்வியிலும்
சீர்திருத்தத்திலும் தேறி வருகிறார்கள். இதற்காக நாம்
உலமாக்கள், கல்விமான்களுடைய உதவியுடனே
ஒரு பத்திரிகையைப் பிரசுரஞ் செய்து வருகிறோம்
ஆனால் அப்பத்திரிகையிலே கல்வியின் மேன்மைகளை
எவ்வளவு சொன்னாலும் அதைக் குறித்து எவ்வளவூன்றினாலும்
அவைகள் பலன் கொடுப்பது சுணக்கமாக இருக்கிறது’’


என்கிறார் இதிலிருந்து அப் பத்திரிகையின் நோக்கம் என்னவென்பது புலனாகிறது.

ஞானதீபம் (1892) ஆன்மிக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் வேரூன்றி இருந்த ஆன்மீக வாழ்வின் தத்துவார்த்தங்கள் பற்றியும் ஆன்மீக வாழ்வில் தத்துவார்த்தங்களை பற்றியும் இவர் இதில் எழுதினார். இவ்வாறு ஆன்மீக இரகசியங்களை எடுத்துக் காட்டி எழுதியதைச் சிலர் விரும்பவில்லை. அவ்வாறு விரும்பாதோரில் ஆலிம்களும் இருந்தனர். இவ்வேளை ஆலிம்களைக் கண்டித்து எழுதவும் இவர் தவறவில்லை. “ ஆலிம்களில் இரண்டு வகையினரென்றும் ஒரு வகை “ உலமா உல் ஆகிறா’ வென்னும் மறுமையைப் பற்றிப் பேசுகிறவர்ளென்றும், மற்றது “ உலமா உஸ்ஸ_உ’ என்னும் பொருளையும், கெடுதியையும், சம்பாதிக்கிறவர்களென்றும், இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களின் கருத்தொன்றை எடுத்துக் காட்டினார். இதிலிருந்து இவர் பாமர ம்களிடையே அறிவையும் உணர்ச்சியையும் ஏற்படுத்த முயன்ற அதேவேளை, அறிவு சார்ந்த ஒரு வர்க்கத்தினரிடையே அறிவின் தெளிவை ஏற்படுத்தவும் பாடுபடவேண்டி இருந்தது. ஞான தீபத்தை இரண்டு ஆண்டுகள் இவர் நடத்தினார்.

நாவலரைப் பின்பற்றி இவர் முஸ்லிம் மாணவர்களுக்கெனப் பாடநூல்களை எழுதினார். அவைகளுள் அறபு கற்கும் மாணவர்களுக்கென அறபு இலக்கண சம்பந்தமான நூல்கள் ஒரு பகுதி. இவ் வரிசையில் “ஹிதாயத்துல் காசிமியா’, “துஹல்’’ என்பன இரண்டு நூல்களாகும். மற்றவை, தமிழ்ப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு, இலக்கணம் சம்பந்தப்பட்டனவாகும். முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை எழுதப்பட்ட இந்நூல்கள் பற்றிச் சித்திலெவ்வை அவர்கள் குறிப்பிடுகையில் “ முதலில் நான் சிறு பிள்ளைகளின் உபயோகத்திற்காக முதலாவது புத்தகத்தை எழுதினேன். இந் நூலில் எளிய சொற்களும், வாக்கியங்களும் உள்ளன. இந்த முறையை அனுசரித்தே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பாடநூல்களையும் எழுதினேன் இரண்டாவதாக நான் ஓர் இலக்கண நூலை மூன்று பாகங்கள் கொண்டதாக எழுதினேன். இவையெல்லாம் இலங்கைப் பாடசாலையில் பயிற்றப்படுகின்றன. என்கிறார்.
நாவலரைப்பற்றி அறிஞர் சித்திலெவ்வைக்கு உயர்ந்த எண்ணமும் மதிப்பும் உண்டு. அவர் சென்று வழியிலேயே இவரும் சென்று இப் பாடநூல்களை எழுதினார். அதமனோடு, இவருக்குள்ள இலக்கண ஞானத்தையும் பின்வரும் பந்தியொன்று எடுத்துக்காட்டி நிற்கின்றது. அப்பந்தி வருமாறு :

“ இற்றைக்குச் சில காலத்துக்கு முன் சரவணப் பெருமாளையார் நன்னூலுக்குக் காண்டிகை உரை செய்தார். அதனையே இப்பொழுது நன்னூல் உரையாகப் படிந்து வருகிறார்கள். அதிலுள்ள சூத்திரங்களும் உரைகளும் அதிகப் பிரயாசைப்பட்டுக் குரு மூலமாகப் படித்தாலன்றி, அவைகளை நன்றாய் அறிந்து, அவதானிக்கக் கூடாதவைகளாக இருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணத்திலே கீர்த்தி பெற்றிருந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை என்னுமிலக்கண நூல்களைச் செய்தார். அவைகள் இலேசாயிருந்தலாற் பெரும்பாலும் வாசித்தறியக்கூடிய நூல்களாம்’’.

மேற்கூறிய பந்தி சித்திலெவ்வையின் உரைநடைக்கும் உதாரணமாக விளங்குகின்றது. ஆனால், “சுறுத்துஸ்ஸலாத்’’ என்னும் மார்க்க சம்பந்தமான நூல் ஒன்றிலும், “மெய்ஞ்ஞானப் பேரமுதம்’’ என்னும் பொருள் பட்ட ‘அஸ்றாறுல் ஆலம்’’ என்னும் நூலிலும் இவர் கையாண்ட நடை சற்று வேறுபட்டது. இஸ்லாம் சம்பந்தமான மரபுச் சொற்களையும் கவைச் சொற்களையும் இவற்றில் உபயோகிக்கவேண்டி இருந்ததால் கணிசமான அற்புச் சொற்கள் கலந்த ஒரு வசன நடையாக அவை இருந்தன. அந்த நடையில் இக்வான்கள் (-சகோதரர்கள் சிர்று (- இரசியம்), றஹமத் ( அருள்) ஸமான் ( யுகம்), பனாவுடைய மக்காம் (பொய்யான நிலை) இவ்வாறான சொற்களைக் கையாண்டு செல்கிறார் அஸ்றாறுல் ஆலம் பல்வேறு இஸ்லாமிய ஞானவான்களின் கருத்துக்களையும் தொகுத்து, ஞானவழிச் செல்வர்களுக்கு ஓர் பேரமுதமாகப் படைக்கப்பட்டதாகும். பன்னூலாசிரியர் அறிஞர் ஆர். பி. எம். கனி இதனைப் புதிய பதிப்பாக வெளியிட்டுள்ளார். இது பற்றி இவர் குறிப்பிடுகையில் “ நான் தத்துவ நூல்களுள் என்னை மிகச் கவர்ந்தது அறிஞர் சித்திலெவ்வையின் அஸ்றாறுல் ஆலம் ஆகும். என்கிறார்.

“ சுறுத்துஸ்ஸலாத்’’ என்னும் இஸ்லாம் சம்பந்தமான நூல் அறபுத் தமிழில் எழுதப்பட்டதாகும். அதாவது அக் காலத்தில் முஸ்லிம்களில் அநேகர், குர்ஆனை அறபு எழுத்து முறையாகவும், தமிழைப்பேச்சு முறையாகவுமே அறிந்திருந்தனர். எனவே இவர்களுக்கு விளங்கும் படியாக அறபெழுத்தில் தமிழ் மொழியை எழுதும் ஒரு வழக்கம் இருந்தது. இம் முறையில் அச்சங்கள் அமைத்து இஸ்லாம் சம்பந்தமான நூல்களை அச்சிட்டு வந்தனர். இதில் கணிசமான அளவு அறபுச் சொற்களே கலந்திருக்கும். இத்தகைய அறபுச் தமிழ் நூலாகக் “ “சுறுத்துஸ்ஸாலாத்’’ அமைந்திருந்தது.

பேரறிஞர் சித்திலெவ்வை பத்திரிகை ஆசிரியராக, சமய அறிஞராக, தமிழ் மொழி வல்லாளராக, இருந்ததோடமையாது சிறந்த சரித்திர ஆசிரியராகவும் இருந்தார். அவரியற்றிய சரித்திர நூல்களாவன. துருக்கி கிரேக்க சரித்திரம், உமறுபா~h யுத்த சரித்திரம், இலங்கைச் சோனகர் சரித்திரம் என்பனவாகும். இவை சரித்திரப் பாங்கான ஒருவகை விறுவிறுப்பான நடையில் அமைந்திருந்தன. ஈழத்து முஸ்லிம்களின் வரலாறு பற்றி இது வரை வெளியான ஒரேயொரு நூல் இலங்கைச் சோனகர் சரித்திரமாகும்.

உமறு பா~hவின் யுத்தசரித்திரத்தில் சித்திலெவ்வை கையாண்டுள்ள பல சொற்கள், சிறப்பாக ஈழத்து முஸ்லிம்களிடையே வழங்கும் பேச்சு மொழியாக இருப்பது கவனிக்கத்தக்கது. அவ்வாறான சில சொற்கள் வருமாறு : வலோற்காரம் (பலாத்காரம்) பிகில், (ஊதுகுழல்) அழற்சி ( ஆத்திரம்) துலாம்பரம் ( தெளிவு), செந்தழிப்பு ( செழிப்பு), உத்தரங்கள் (மறுமொழிகள்), திடுக்காட்டம் (அதிர்ச்சி), சத்துராதி (எதிரி), சக்கிருத்தார் ( காரியதரிசி), வீதிறு ( கண்ணாடி) தவறணை (மதுக்கடை).

ஜனாப் சித்திலெவ்வையின் பணியும் ஆற்றலும் பன்முகமாகச் செயல்பட்டவாறு பெரிதும் வியப்புக்குரியதாகும். அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளிலெல்லாம் அவர் வெற்றியே பெற்றார். தென்னிந்தியாவில் தென்னாலிராமன் என்னும் விகடகவியைப்பற்றி நகைச்சுவையான பல கதைகள் உண்டு. இவனைப்போல் அறபு நாட்டில் வாழ்ந்த விதூ~கன் அபுநுவாஸ், இவன் நிகழ்த்திய நகைச்சுவைச் சம்பவங்களையெல்லாம் தொகுத்து அபுநுவாஸ் கதைகள் என்னும் நுஸலொன்றையும் ஜனாப் சித்திலெவ்வை வெளியிட்டார்: அபுநுவாஸ் அப்பாசிய காலத்தவன். இவனுடைய நகைச்சுவைக் கதைகள் மூலம் அக் காலத்து மன்னர்களின் குணம், நடை இயல்புகளையும் அறியக் கூடியனவாக இருந்தது.

அறிஞர் சித்திலெவ்வை இலக்கியப் பணிகளுக்கெல்லாம் மணிமுடி வைத்தாங்போலச் செய்த ஆக்கம் அஸன்பேயின்கதை என்னும் சமூக நவீனத்தை எழுதி வெளியிட்டதாகும். “ ‘ஆயிரத்தொரு இரவு’ என்னும் அராபிய கதையினைப் படித்த தாக்கத்தினாலோ அல்லது ஐரோப்பியர் கால உரைநடை இலக்கிய எழுச்சியினாலோ தூண்மப்பட்டு இவர் இந் நவீனத்தைப் படைத்தார். இது பல்வேறு முக்கியத்துவங்களைப் பெற்றது. தமிழிலெழுந்த முதல் நவீனம் என்ற பெருமையைப் பெற்றது. தேவநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) ஆகும். இதுபோல ஈழத்திலே எழுந்த முதல் நவீனம் என்ற சிறப்பை அஸன் பேயின் கதை (1885) பெறுகிறது. அதேவேளை தமிழிலெழுந்த இரண்டாவது நவீனமும் ஈழத்தவரான, திருகோணமலை இன்னாசித்தம்பி எழுதிய ஊசோன் பாலந்தை கதை (1891) ஆகும் என்பதும் நாம் பெருமைப்படும் வி~யமாகும்.

“அஸன் பேயின் கதை” சுருக்கம் வருமாறு : சிறு (எகிப்து) தேசத்துக் காயிர் பட்டணத்து ய+சுபுபா~h என்னும் இராவம்சத்தவருக்கு மகனாகப் பிறந்து தீயோராற் கடத்தப்பட்டு, பம்பாயில் ஜகுபர் என்பாரிடம் வளரும் குழந்தைக்கு “அஸன்’’ எனும் பெயர் சூட்டப்படுகிறது. பதினென்கு வயதில் ஜகுபரை விட்டுப் பிரிந்து வஞ்சகர் பலரின் சூழ்ச்சிகளுக்கு இலனக்காகித் தப்பும் அஸன், கல்கத்தா சென்று அங்கு ஆங்கில தேசாதிபதியின் நட்பைப் பெறுகிறான். அவராதரவில் கல்வி கற்று முன்னேறிப்பல தடைகளைக் கடந்து தனது தாய் தந்தையரை அடைந்து மகிழ்நதோடு ஆங்கிலப் பெண்ணொருத்தியின் காதலைப் பெற்று மணம் முடித்து இன்பவாழ்வு வாழ்கிறான்.

இக்கதைப்பற்றி நா. சுப்பிரமணியம் எம். ஏ. அவர்கள் ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள் என்ற கட்டுரையில் குறிப்பிடுவது:

இக்கதை மத்திய கிழக்கு நாடுகள், வட இந்தியா ஆசியப் பிரதேசங்களுடன் தொடர்புள்ளதொரு சம்பவக் கதை, அராபிய இரவுக் கதைகளில் ஈடுபாடு கொண்டவரும் ஈழத்து இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னோடியுமான பிள்ளையின் பரந்துபட்ட கிளைக்கதைப் போக்குகளினின்றும் வேறுபட்டதாக, விறுவிறுப்பானதும் ஓரளவு மர்மப் பண்புள்ளதுமான கதையாக அமைகிறது’’

சித்திலெவ்வை இந் நவீனத்தில் கையாளும் மொழி நடை மற்ற நூல்களில் அவர் கையாண்ட மொழி நடைமுறையினின்றும் வேறுபட்டது. ஒரு நாவலுக்குரிய வருணனைப் பாங்கும் எளிய இனிய வசன நடையும் இந் நாவலை அவர் விறுவிறுப்பாக நடத்திச் செல்லப் பெரிதும் உதவுகின்றன. அஸன்பேயின் கதையின் நாயகியான பாளினாவைப் பின்வருமாறு அவர் வருணிக்கிறார். “ இவளழகு மிகவம் வியக்கத்தக்கதாயிருந்தது. அவன் முன்பு அநேக அழகான ஸ்திரிகளைப் பார்த்திருந்தாலம் இவளைப் போன்றே இயற்கையழகு வாய்ந்த ஒரு பெண்ணையும் இது வரையிலும் பார்த்ததில்லை. துலையில் நிறுத்தக் குகையில் உருக்கி அச்சில் வாங்கப்பட்ட தங்கச்சிலையோ அல்லது உறைந்த பனிக்கட்டியைத் திரட்டி உருவாக்கப்பட்ட சித்திரப் பாவையோ, என்று கண்டோ அதிசயிக்கத்தக்க அவளுடைய மேனியையும், கிருபை என்னும் சுடர் விட்டிலங்கி எதிர்பார்த்துப் போர் செய்கின்ற இரண்டு செண்டைமீன்களையொத்த இணைவிழிகளையும் முருக்கம் ப+வையும் பவளத்தையும் பழிக்கத்தக்க இதழ்களையும் முல்லை மொக்குகளை அல்லது ஆணி போன்ற முத்துக்களை வரிசையாக சேர்த்துக் கட்டியதைப் போன்ற தந்தப் பந்திகளையும் அன்னத்தில் கழுத்தோ அல்லது வலம் புரிச் சங்கோ என்று சொல்லத்தக்க நீண்ட கழுத்தையும் கொண்டவர்’’;.

இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தம் கை வண்ணத்தைக் காட்டி, நவீன இலக்கிய எழுச்சியிலும் தம் பங்களிப்பைச் செய்த சித்திலெவ்வையின் தமிழ்த் தொண்டு, காலத்தை வென்று நிலைத்து விட்டது. அறிஞர் என்ற அடைமொழிக்குப் பொருத்தமாகப் பத்திரிகை ஆசிரியராக, ஞானநூல் மேதையாக, பாட நூல்களின் தொகுப்பாளராக அறபியிலும் தமிழிலும் இலக்கண விற்பன்னராக இவர் விளங்கினார். இத்தோடு இப் பணி நின்றுவிடவில்லை. தமிழலக்கியத்தின் நவீன துறையான நாவலிலும் கை வைத்து ஒரு சாதனையை நிறுவினார். இவருடைய அறிவும் ஆற்றலும் தமிழ்ப் புலமையும் ஒப்பற்றவை. இவருடைய சமூகத் தொண்டுக்காக முஸ்லிம் சமுதாயம் இவருக்குக் கடமைமப்பட்டிருப்பதுபோலத் தமிழ்ச் தொண்டிற்காகத் தமிழ் கூறும் நல்லுலகமும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர் ஆற்றிய அரும்பணிகளின் விளைவுகள் காலநதியில் கரைந்துவிடாது இன்றும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பெருமைமிக்கது.

சொற்கலைப் புலவர்
சுவாமி ஞானப்பிரகாசர்

வித்துவான் ச. அடைக்கலமுத்து

(நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் மானிப்பாயில் ஆதிக்கல்விமான்கள் மரபில் புகழ்ப+த்த குடும்பத்தில் பிறந்தவர் (1875) இவர் குழந்தையாய் இருக்கும்போது தந்தையார் சாமிநாதர் இவ்வுலகை நீத்தார். இளம் விதவை தங்கமுத்து, அச்சுவேலியில் மறுமணம் செய்து கொண்டார். சிறிய தந்தையார் தம்பிமுத்துப்பிள்ளை பத்திராசிரியராயும் பதிப்பாசிரியராயும் புலவராயும் இருந்ததோடு சொந்தமாய் ஒரு அச்சியந்திரசாலையையும் வைத்திருந்தார். இந்தப் பின்னணியில் ஞானப்பிரகாசர் வளர்ந்து, அச்சுவேலியிலும் யாழ். சம்பத்திரியார் கல்லூரியிலும் படித்து, புகையிரதப் பகுதியில் இலிகிதராகப் பணியாற்றி வந்த வேளையில் உத்தி யோகத்தை உதறிவிட்டுக் கத்தோலிக்க குருவாகச் சேர்ந்து கொண்டார்.

இவர் திருப்பலி செய்த இடம் நல்லூராகும். எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஞானப்பிரகாசர், பல பழைய நூல்களைப் பதிப்பித்தார். சிறியவும் பெரியவுமாக எழுபது நூல்களை எழுதி முடித்தார். பதினொரு மொழிகளைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றார். வரலாற்றுத் துறையிலும் பல நூல்களை வெளியிட்டார். சமயத்துக்கு அரும் பணியாற்றினார். தமிழ்ச் சான்றோர்களின் நண்பனாயிருந்தார். தருக்க சாத்திரம், தமிழ் அமைப்புற்ற வரலாறு, தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி, தமிழ் ஒப்பியல் அகராதி என்பன அவரியற்றிய சிறந்த நூல்களாகும். தமிழே உலக மொழிக் குடும்பத்தின் தாய் என நிலைநாட்ட முயன்றார். 1947 இல் இறையடி சேர்ந்தார்.

“ ஒவ்வொரு மொழியும் ஓர் ஆலயம்’’ என்றார் அறிஞர் சாமுவேல் யோன்சன். தமிழ் மக்களும் தங்கள் இனிய மொழியை ஓர் ஆலயமாக எண்ணிப் போற்றுவதில் வியப்பில்லை. ஒரு நாட்டின் கலை, பண்பாடு, நாகரிகம், செயலாக்கம் அறிநெறியனைத்தையும் வளர்க்கும் ஊட்டச்சத்துள்ள உணவு மொழியேயாகும்.

தமிழ்ச் செல்வி சாதி, இன, மத, வேறுபாடுகளின்றிப் போற்றத்தக்க பெருமைக்குரியவள். அந்த அன்னைக்குப் பிற சமயத்தினரைப் போலவே கத்தோலிக்கரும் அரும்பணியாற்றியுள்ளனர். காவியங்களை இயற்றியும் தமிழ் உரைநடையின் தந்தையாயிருந்தும் அகராதியமைத்தும் அச்சுவித்தைக்கு அடிகோலியும் மேடைப் பேச்சை அறிமுகஞ் செய்தும் சிறுகதை, நாவல் என்பவற்றுக்கு அரிச்சுவடாயிருந்தம் அவர்களாற்றிய பணிகள் பலவாகும்.

இந்த வரிசையில் வீரமாமுனிவருக்குப் பின்னர் தமிழ் தொண்டாற்றியவர்களில் சுவாமி ஞானப்பிரகாசர் தலை சிறந்தவராய் விளங்குகின்றார். அவருக்குச் சொற் கலைப் புலவர் எனப் பட்டம் அளித்துப் பாராட்டிய வேளையில் பசுமலைச் சோமசுந்தர பாரதியார்,

தமிழ் நாட்டில் சிலை செய்து பாராட்டப்பட வேண்டியவர் சுவாமிகள், நதிகள்
எல்லாம் கடலில் சென்று சங்கமிப்பதுபோல மொழிகளெல்லாம் சுவாமிகள்
உள்ளத்தில் வந்து ஒன்று கூடுகின்றன.

என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செந்தமிழ் மொழியே செகமொழிக்கு உயிரென
விளக்கப் புகுந்த வித்தகச் செம்மல்
பைந்தமிழ் வளர்த்த பன்மொழிப் பண்தன்
ஐந்தமிழ் வல்லோன் அறிவுப் பொழிலோன்
எனக் கவிஞர் யோகி சுத்தானந்தர் கூறிச் சென்றார்.

ஞானப்பிரகாசர் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்ததில்லை ; சீமைக்குச் சென்று திரும்பியவருமல்லர், பிற மொழிகளைக் கற்பதற்கு ஆசிரியர்களைத் தேடி அலைந்தவருமல்லர். தமது சொந்த முயற்சியாலே அறிவுத் துறையில் முன்னேறி அறிஞர் வரிசையில் முன்னணியில் திகழந்தார். பல்கலைக்கழக மூதவை உறுப்பினராயும் விளங்கினார்.

பண்டிதர் ஒருவர் அவரிடம் வந்து “ ஐயா, தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை யாரிடம் பாடங் கேட்டீர்கள்?’’ என்று வினாவியபோது, சுவாமியார் உடனே “ இளம்ப+ரணர் சேனாவரைய+ர், நச்சினார்க்கிளியர், பேராசிரியர் என்போரிடத்தில் கற்றுக் கொண்டேன்’’ என்று கூறிச் சிரித்தார். பண்டிதர் விழித்தார். ஏனெனில் தொல்காப்பியத்துக்குச் உரை எழுதியவர்கள் இவர்களே!

ஞானப்பிரகாசருக்கு எழுத்தும் பேச்சும் இருகண்களாகும். புத்தகச் குவியல்களின் மத்தியில் மூழ்கிக் கிடப்பதைப் பல எழுத்தாளர்கள் குறிப்பிடத் தவறியதில்லை. சிறியவும் பெரியவுமாக அவர் எழுதி அச்சேற்றிய நூல்கள் எழுபதுக்கு மேலாகும். தென் நாட்டிலும் ஈழத்திலும் நடந்த எந்தத் தமிழ்ச்சான்றோர் அவைகளிலும் அவர் சிறப்பான இடம் பெற்றார். பேச்சுக்கலையின் அவர் ஒரு சிகரம் எனக் கூறலாம். அவருடைய உரைகளில் வரலாறுகள், பழந்தமிழ் வழக்குகள், ஆராய்ச்சிகள், பழமொழிகள், திருக்குறல், சித்தர் பாடல்கள் என்பன வந்து பொங்கி நுரைக்கும்.

பரந்த ஆராய்ச்சியாலும் நுண்ணறிவாலும் ப+த்த கருத்துக்களை வெளியாக்கப் பத்திரிகைகளையே துணையாகக் கொண்டார். அவருடைய பல நூல்களில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பத்திரிகையில் வெளிவந்திருப்பதைக் காணலாம். தமது கருத்துக்களை நியாய ப+ர்வமாக யாராவது மறுத்து எழுதினால் அவற்றைப் புனர் ஆலோசனை செய்ய அவர் எண்ணினார். மேலும், நூல்களை வாசிப்போர் தொகையிலும் பத்திரிகை படிப்போர் தொகை கூடியதென்ற எண்ணம் அவருக்கு இல்லாமற்போகவில்லை.

மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்தி வந்த செந்தமிழ் என்ற வெளியீடு தமிழ் அறிஞர்களால் அக்காலத்தில் போற்றப்பெற்றது. சுவாமி அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல அதிலே வெளிவந்திருப்பதைக் காணலாம். கலாநிலையம், கலைமகள் என்பவற்றிலும் சத்திய நேசனிலும் சுவாமியாருடைய கட்டுரைகள் காணக் கிடக்கின்றன. ஈழநாட்டில் சுவாமி அவர்களுடைய கட்டுரைகளைத் தாங்கி வெளிவராத பத்திரிகைகளே இருந்ததில்லை. ஈழ நாட்டில் சிறப்புடன் வெளிவந்த ஈழகேசரி சுவாமிகளின் இனிய நண்பனாய் இருந்து உதவிற்று. காலனிலும் அடிக்கடி எழுதி வந்தார். யாழ். ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கம் நடத்தி வந்த கலாநிதி என்ற சஞ்சிகையில் தொடர்ந்து எழுதி வந்ததோடு, சொற்பிதிர்வழி என்ற தொடர் கட்டுரையை வித்தியா சமாச்சாரப் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார். மனித வரலாறு எனும் அனைத்துலக மொழி ஆராய்ச்சி ஏட்டில் திராவிடமொழி அமைப்பைவிட்டு எழுதிய கட்டுரைகளை நாம் காணலாம்.

ஞானப்பிரகாசர் எழுதிய நூல்களை வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சமயநூல்கள், பிர சங்கப் பிரசுரங்கள், தமிழராய்ச்சி நூல்கள் என வகுக்கலாம். அவர் குரப்பட்டம் எனும் திருப்பட்டம் பெற்ற இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1901) காணப்பெற்ற சமய அறநெறி நூல்களைக் கணக்கிடவேண்டுமாயின் கைவிரல்களே போதுமானவையாகும். அவற்றின் வசனநடையும் மணிப்பிரவாளமாய் வடசொற்கள் கலந்து கற்றோர்க்கன்றி மற்றோர்க்குப் பயன்படாதவையாயின. கோடைகாலத்திற் பெய்த பெருமழைபோல இந்த வரட்சியை நீங்கிய பெருமை சுவாமி அவர்களுக்கே உரியது.

செபநூல்களையும் ஞானவாசகங்களையும் ஆக்கியும் கோவைக் குருமார்களுடைய நூல்களைப் புதுக்கிப் பதிப்பித்தும் இறையியல், மெய்யியல் நூல்கள் பலவற்றை மொழிபெயர்ந்து அச்சிட்டும் பிரசங்க நூல்களை எழுதியும் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டும் பழைய நாடகங்கள் வரலாறுகளை நூல்வடிவிலமைத்தும் அவர் செய்த பணிகள் சமயத்துக்கு மாத்திரமன்றித் தமிழுக்குச் செய்த சேவையாகவும் மதிப்பிடக்கூடியவை ஆகும்.

சொற்களைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசருடைய நூல்களெல்லாம் வசனநடையிலே வெளிவந்துள்ளன. அவருடைய வசனநடை ப+வைப்போல் மிருதுவானது. அவருடைய “ சாமிநாத ஐயர் அவர்களுடைய வசனநடையும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசருடைய வசனநடையும் நண்பர்கள் போலக் கைகோத்துச் செல்வதைக் காணலாம்.’’ என எழுத்தாளர்களைப்பற்றி அக்காலத்தில் எழுதிய அறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். சுவாமி அவர்களுக்குச் செய்யுள் இயற்றும் திறமை இருந்தும் அவர் அதில் அதிகம் ஈடுபடவில்லை. சமயப்பாடல்களை எழுதியதோடு நிறுத்திக்கொண்டார்.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உயர்தர வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய நூல்கள் தமிழில் கிடைக்கவில்லை. தாவரவியல், விலங்கியல், பௌதிகம், இரசாயணம், தத்துவம், தருக்கம் முதலான பாடங்களைப் படிக்க இடர்ப்படவேண்டியதாயிற்று. “ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’’ என்று பாரதியார் தேவையை உணர்ந்து குறிப்பிட்டார்.

தருக்கம் பயிலுவோர்க்கு “தருக்க சங்கிரகம் அன்னம்பட்டீயம்’’ என்றொரு சிறு நூலேயிருந்தது. அது காலத்துக்கும் தேவைக்கும் ஏற்றதாய் இருக்கவில்லை. எனவே தருக்கம் பயிலும் மாணவர்க்கு ஒரு நூல் இன்றியமையாதது எனக் கண்ட சுவாமியார் தருக்க சாஸ்திரச் சுருக்கம் என்ற நூலை வெளியிட்டார். சுருக்கமாயினும் அது முந்நூறு பக்கங்களைக் கொண்டது. கல்வித் திணைக்கள அதிபதியே நூலைப் பெரிதும் பாராட்டியுள்ளார். இருபத்தொரு நூல்களிலிருந்து ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இந்நூல் பால பண்டித. பரீட்சைக்குப் பல காலம் பாடப் புத்தமாக இருந்ததை இங்கு குறிப்பிடல் நன்றாகும்.

பழைய நாகரிகத்தின் புகழ் படைத்தவர்களாய் இனிமையான மொழியை உரிமை கொண்டவர்களாய்த் தென்னிந்தியாவைத் தங்கள் தாயகம் என்று கூறும் தமிழ் மக்களுடைய தொன்மையும் பழக்க வழக்கங்களும் திணைப் பகுப்புகளும் பற்றி ஆராய்ந்தபோது ஆச்சரியமான உண்மைகளை புலனாயின. இவற்றிலிருந்து தமிழரின் ப+ர்விக் சரித்திரமும் சமயமும் என்ற நூலை எழுதினார்.

சுவாமிகளுடைய தமிழ்த்தொண்டு என்ற மாணிக்க கங்கையில் மொழியாராய்ச்சியில் செய்த பணிகள் என்ற மணிகளை இனிநோக்குவோம். பண்டைய தமிழ் நூல்களில் காலத்தால் முற்பட்டது. “ தொல்காப்பியம்’’ என்னும் இலக்கண நூலாகும். அதனை “ ஒல்காப்புகழுடைத் தொல்காப்பியம்’’ என அறிஞர் போற்றுவர். தொல்காப்பியர், “ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ ( தொல் சொல் 155) எனக் கூறிப் போந்தார். ஆனால் இடைக்காலத்தில் சொற்களின் உண்மைப் பொருளை அறிவதில் மயங்கும் நிலை ஏற்பட்டபோது, சொற்களை இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என வகுத்து, கருத்துப் புலப்படாத சொற்களை இடுகுறிப் பெயர் என எழுதினார் இலக்கண நூலார். தொல் காப்பியர் பிறிதோரிடத்தில் “மொழிப் பொருள் காரணம் விழிப்பத்தோன்றா’’ என்று கூறியிருப்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டும்.

தொல்காப்பியனாரே கைவந்த துணியாத துறையில் தமது அறிவு நுட்பத்தாலும் பன்மொழிப் புலமையாலும் ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டார் சுவாமிகள். மொழிநூலூக்கும் இலக்கணநூலுக்கும் நூலும் சீலையும் போலத் தொடர்பிருந்தாலும் மொழிநூல் வேறு : இலக்கணநூல் வேறு. ஞானப்பிரகாசர் மொழிநூல் துறையில் கால்வைக்குமுன் எழுந்த இரண்டொரு நூல்கள் இலக்கண ஆராய்ச்சி நூல்களேயன்றி மொழி நூல்களல்ல எனச் சுவாமியவர்கள் செந்தமிழ் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

வளருகின்ற ஒரு மொழியில் காலத்துக்கு ஏற்றவாறு சொற் கூட்டங்கள் பெருகுவதும், பிறமொழிச் சொற்கள் கலப்பதும் சொற்கள் புதிய கருத்துக்களைத் தாங்குவதும் இயற்கையாகும். தமிழ் மொழியிலும் அவ்வாறு பல்கிப் பெருகிய ஒரு தொகைச் சொற்களைக் களைந்தபின் தௌ;ளி எடுக்கும் தூய தமிழ்ச் சொற்களை ஆராய்ந்தால் அவை ஒரு சிறங்கை அளவினதாகும் என்பது சுவாமிகளின் கருத்தாகும்.

தமிழ்ப்பெருங்;குடி மக்கள் தொடக்கத்தில் பயன்படுத்திய சொற்கள் எவை ? அவை எவ்வாறு கிளைத்தெழுந்தன? என்பவற்றைத் “தமிழ் அமைப்புற்ற வரலாறு என்னும் நூலில் ஆராய்கின்றார். பல நூற்றுக்கணக்கான சொற்கள் ஒத்த இனம் கொண்ட கூட்டம் கூட்டமாய் வருவதையும் அவற்றில் குடும்பச்சாயல் போன்ற ஒற்றுமையிருப்பதையும் அவர் பல்வேறு எடுத்துக் காட்டுகளால் புலப்படுத்தியுள்ளார்.

மானிட அறிவு விரிவடைந்த வரலாறுகளை யாராய்ந்த மாக்சுமுல்லர், சுறேதர் என்ற அறிஞர்களின் மொழி உற்பத்திக் கொள்கையையும் கருத்தோடு நோக்கினார். தமிழ்மொழிப் பரபுக்குக்கு மூலவோர் இடம்பற்றிய சுட்டுக்களே எனத் துணிந்து அ,இ, உ எனும் மூன்று சுட்டுக்களோடு எகரத்தையும் சேர்த்துக் கொள்கிறார். “கு” மொழியில் இன்றும் எகரம் ஒரு சுட்டாய் இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார். இக் சுட்டுகள் இடம் பற்றியும் தொழில் பற்றியும் பெருகி வளர்ந்த உண்மையைக் கோவை கோவையாகத் தூக்கி காட்டுகிறார்.

இவ்வாறு ஆராய்ந்தபோது தமிழ்ச் சொற்களின் சில தூதுக்கள் பிறமொழிகளில் கலந்திருப்பதை அவர் அறிய நேரிட்டது. வட மொழியில் இருந்தே தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தோன்றின என்று தமிழ் நாட்டறிஞர் கொண்டிருந்த கருத்தை எடுத்தெறிந்தார். வடமொழியில் சில திராவிடச் சொற்கள் குடி புகுந்திருப்பதையும் வெளியிட்டார்.

தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியில் ஆறு பாகங்களே வெளிவந்துள்ளன. எஞ்சியுள்ள பதினான்கு பாகங்களையும் எழுதி; முடிக்க யாராவது வருவார்களா என்பது சந்தேகமே! ஒரு பல்கலைக் கழகம் செய்து முடிக்க வேண்டிய பணியைச் சுவாமியவர்கள் தன்னந் தனியாகச் செய்து கொண்டு வந்தார். சொல்லாராய்ச்சியில் ஈடுபட்ட உயர் திரு. தேவநேயப் பாவாணருக்குத் தமிழக அரசு துணை புரிந்தாயினும் பயன் கிட்டியதாகத் தெரியவில்லை.

ஆரிய மொழிகளுடன் தமிழுக்குள்ள தொடர்புகளையிட்டு டெயிலி நிய+ஸ் (னுயடைல நேறள ) பத்திரிகையில் பல கட்டுரைகளை வெளியிட்டார். எபிரேய மொழியைக் கற்றபின்னர், அம் மொழி சுமேரிய மொழியின் கிளை மொழியென அவர் கருதியதோடு, சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமுள்ள தொடர்புகள் பற்றி இலங்கையின் ப+ர்வீகம் என்ற இதழிலும், உலக மொழி வரலாற்றுப் பத்திரிகையிலும் எழுதித் தம் கருத்தை நிலைநாட்ட இனிது முயன்றார். இவற்றால் தமிழே உலகத்தாய் மொழி என நிரூபிக்க எண்ணினார். அவர் கருத்துக்களை இன்னும் பிற அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தியாவின் ப+ர்வ வரலாறுகளை ஆராய்ந்தவரும் இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சிக் கழகத் தலைவரும் பம்பாய்ப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான அறிஞர் கெரஸ் அவர்கள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன சிந்துநதிப் பள்ளத்தாக்கின் கற் சாசனங்களை வாசிக்கச் சுவாமி ஞானப்பிரகாசரிடமே வந்தாரென்றால் அது தமிழ்க் குலத்துக்கே பெருமை தரும் செய்தியன்றோ!

தங்கத் தாத்தா நவாலிய+ர்
சோமசுந்தரப் புலவர்

கலையரசி சின்னையா

(சோமசுந்தரப்புலவர் யாழ்ப்பாணத்தில் நவாலியென்னுமிடத்தில் பிறந்தார் (1878) 1899 ஆம் ஆண்டிலிருந்து நாற்பது ஆண்டுகள் அதாவது 1939 ஆம் ஆண்டு வரை வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி என வழங்கும் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். சிறு வயதிலேயே செய்யுளியற்றும் ஆர்வமுடையவராக இருந்த புலவர் செய்யுள் இலக்கியங்களையே அதிகம் எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் சமய சம்பந்தமானவையாகவே உள்ளன. சமயத்திற்கப்பால் சமூக தேசிய உணர்வுகள் புலவர் இலக்கியம் படைத்தமைக்கு இலங்கை வளம், மருதனஞ்சலோட்டம், தால விரலாசம் முதலான நூல்களும் வேறு சில தனிப்பாடல்களும் சான்றாக உள்ளன. இவற்றைவிடக் குழந்தைகளுக்கேற்ற தனிப்பாடல்கள், கதைப் பாடல்கள் என்பவற்றையும் புலவர் இயற்றியுள்ளார். புலவரின் ஆக்கங்களில் அதிகமானவை நூலுருப் பெற்றுள்ளன. நூலுருப் பெறாதவை இந்து சாதனம், ஈழகேசரி, சுதேச நாட்டியம், செந்தமிழ் செல்வி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. செய்யுள் இலக்கியங்களை இயற்றித் தமிழ்ப்பணி புரிந்த புலவர் சமயத் தொண்டுகளும் செய்துள்ளார். வட்டுக்கோட்டையிலும் நாவாலியிலும் புலவர் நடத்தியு சைவசித்ததாந்த வகுப்புகளும் புராண வகுப்புகளும் அவரின் சமயப்பணிக்குச் சான்றாகும். புலவர் நடத்திய சைவ பாலிய சம்போதினி என்னும் பத்திரிகை சைவ சித்தாத்தத்தையும் சைவ சாரத்தையும் விளக்குவதாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்துப்ப+தன் தேவனார் காலம் முதலாக இன்று வரை ஈழத்திலே தோன்றிய புலவர்களுள் சிலரே ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தினை பெற்றுள்ளனர். அத்தகையோர் வரிசையில் வைத்தெண்ணாத் தகுந்தவராகவம் 20 நூற்றாண்டின் ஆரம்பகாலப் புலவர்களுள் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகவும் சோமசுந்தரப் புலவர் விளங்குகின்றார். அத்துடன் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்த புவலர்கள் வரிசையிலும் சோமசுந்தரப்புலவருக்கு முக்கிய இடமுண்டு. சோம சுந்தரப் புலவரின் இலக்கிய பணியினை அவர் காலப் பின்னணியில் வைத்து மதிப்பிடுமிடத்துத்தான் அவரின் இலக்கிய பணியின் சிறப்பினையும் ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் அவர் பெறும் முக்கியத்துவத்தினையும் நாம் முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.

20 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் ஈழத்தில் எழுந்த செய்யுளிலக்கியங்களுள் பெரும்பாலானவை சமயசம்பந்தமானவையாகவே அமைந்துள்ளன. சில காலப் பகுதிகளில் முக்கியமாக 17ஆம், 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் சமயமே இலக்கியத்தின் தனிப்பொருளாக அமைந்துள்ளது எனக் கூறத்தக்க வகையில் சமய உள்ளடக்கம் பெற்ற இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. தலங்களையும், தலங்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களையும் போற்றுவனவாகவும் சமயக் கடவுளரைப் போற்றுவனவாகவும் விரதங்களைப் போற்றுவனவாகவும் அவை அமைந்துள்ளமையைக் காணலாம். பெரும்பாலும் பிரபந்த இலக்கியங்களாகத் தோற்றம் பெற்ற அவற்றில் மரபுவழிவந்த யாப்புக்களை - அதாவது விருத்தம், கட்டளைக்கலித்துறை, வெண்பா, கலிவெண்பா, கொச்சகம் என்பனவே செல்வாக்குப் பெற்றிருந்தன. இந் நிலையிலிருந்தே - அதாவது சமயத்தைப் பொருளாகக் கொண்டு மரபு வழி வந்த யாப்புக்களினால் பிரபந்தங்களைப் பாடும் நிலையிலிருந்த ஈழத்துச் செய்யுளிலக்கிய மரபானது 20 நூற்றாண்டின் நடுப்பகுதியில் மாற்றமடைந்தது. சமயத்தை முக்கிய பொருளாகக் கொண்டிருந்த ஈழத்துச் செய்யுளிலக்கிய தேசியம் சமூகம் என்பனவற்றை முக்கிய பொருளாகக் கொண்டு, புதிய யாப்புக்களை வரவேற்று வளர்ச்சியடைந்தமையினை 20 நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எழுந்த கவிதைகளில் காணலாம். இப் புதிய கவிதைப் போக்குக்கால் கோளிடப்பட்ட 20 நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பழைய செய்யுள் ஓரளவு அருகத் தொடங்கியதெனினும், 20 நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த புலவர்களுள் சிலர் பழைய செய்யுள் மரபைப் பெரிதும் போற்றினார். அவர்களுள் சுன்னாகம் குமாரசாமிப்புலவர், வறுத்தலைவிளான் மயில்வாகனப் புலவர், முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி, வண்ணை நெ. வை. செல்லையா, சோமசுந்தரப்புலவர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலப் புலவர்களான இவர்களுடன் ஒப்பிடுமிடத்து, சோமசுந்தரப் புலவரே 20 ஆம் நூற்றாண்டின ஆரம்பத்ததில் சமயத்தைப் பொருளாகக் கொண்ட மரபுவழிபட்ட பிரபந்த இலக்கியங்களை அதிகம் பாடினார் எனலாம்.

“ அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடு மாறுமுகப் பதுமம் ……….’’ முருகனைப் போற்றிப் பதினெட்டாவது வயதிற் பாடத்தொடங்கிய சோமசுந்தரப் புலவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை சமய உள்ளடக்கம் கொண்டவையாகும். தலங்களையும் அவற்றில் எழுந்தருளியுள்ள தெய்வங்களையும் போற்றும் பிரபந்தங்களாகவும் முருகன், நாமகள், இலக்குமி முதலான தெய்வங்களின் மேலான பிரார்த்தனைப் பாடல்களாகவும் சைவ சமய உண்மைகளை விளக்கும் பாடல்களாகவும் அவை விளங்குகின்றன.

துலங்களின் அடிப்படையில் பெரும்பாலான தமது சமகாலப் புலவர்களைப் போன்று பதிகம் ஊஞ்சல் என்னும் இரண்டு பிரபந்தங்களையும் அதிகம் பாடிய சோமசுந்தரப்புலவர் அத்துடன் அமையாது கலம்பகம் நான்மணிமாலை, அட்டகம், அந்தாதி, திருப்பள்ளியெழுச்சி, சிலேடைவெண்பா ஆகிய பிரபந்தங்களையும் பாடியுள்ளார். தலங்களின் அடிப்படையில் புலவர் பாடிய பிரபந்தங்கள் யாவற்றையும் சிறந்தன எனக் கூறமுடியாதெனினும் புலவரின் பதிகங்கள் சிலவற்றினதும் அட்டகிரிக்கலம்பகம், நல்லையந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா ஆகிய இலக்கியங்களினதும் சிறப்பினைப் போற்றாதிருக்க முடியாது. கதிரைச்சிலேடை வெண்பாவில் ஒவ்வொரு வெண்பாவி;ன் முதலிரண்டடிகளும் கதிர்காமத்தின் சிறப்பினைச் சிலேடை நயத்துடன் கூறுகின்றன. கதிரைத்தலத்தின் பெருமையினை விளக்குமிடத்துப் புலவர் கதிர்காமத்திற்குச் சிறப்பாக உரிய செய்திகளையும் கதிர்காமத்திற் காணக்கூடிய காட்சிகளையும் சிலேடைகள் மூலம் விளக்கியுள்ளமை சிறப்பாக உள்ளது. கதிர்காமத்தில் முருகக் கடவுள் உறையும் பேடகம் யானைமேல் ஏற்றி வலம் செய்யப்படும். அதனையும் அத் தலத்திலே தினைமா விளக்குகள் ஏற்றப்படும் நன்மையையும் சேர்த்து, முருகன் உறையும் பேடகம் யானைமேல் ஏறும் கதிரை ( கம்பமா - யானை ) என்றும் நல்ல பசுவின் நெய்யில் எரியும் விளக்குகள் தினைமாவாகிய திகழியிலே ஏறும் கதிரை (கம்பமாதினைமா) என்;றும் சிலேடையாக அமைந்துள்ளார்.

நம்பனுறை பேடகமு நல்லாவி னெய்விளக்குங்
கம்பமா வேறுங் கதிரையே

எனும் அடிகளிற் காணலாம்.

பிரார்த்தனைப் பாடல்களுள் நாமகள் புகழ்மாலைப் பாடல்கள் ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் சோமசுந்தரப்புலவருக்குச் சிறப்பிடத்தினை அளிக்கக் காரணமாயுள்ளன. சிவனருள் பெற்ற மணிவாசகர் சிவன் ஆட்கொண்டமை வியந்தும் அவன் அருளை வேண்டியும் உள்ளம் உருகிப் பாடிய பாடல்களைத் திருவாசகத்திற் காண்பதுபோல், நாமகள் அருள் பெற்ற சோமசுந்தரப் புலவர் நாமகள் தமக்கு அருள் புரிந்தமையை எண்ணியும் அவள் அருளுக்காக ஏங்கியும் நாமகள் சிறப்பினை எடுத்தோதிப் பாடிய பாடல்களை நாமகள் புகழ் மாலையிற் காணலாம். புலவர் நாமளைத் தமிழ்த் தெய்வமாகப் போற்றியமையால், தமது காலத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட தன்மையினையும் நாமகள் மேற்பாடிய பாடல்களில் ஆங்காங்கு குறிப்பிட்டுள்ளார்.

சைவசித்தாந்தக் கட்டளைக்கும்மி, பதிபசுபாச விளக்கம்
என்னும் செய்யுள் நூல்களும் உரையும் செய்யுளும் கலந்தமைந்த உயிரினங்குமரன் என்னும் நாடகமும் சைவ சமய உண்மைகளை விளக்குகின்றன. இவற்றுள் சைவசித்தாந்தக் கட்டளைக்குமிடையில் சைவசித்தாந்தக் கருத்துக்களை எளிமையான கும்மிப்பாடல்களிலே தெளிவாக விளக்கியதன் மூலம் சைவசித்தாந்தக் கருத்துகளைச் செய்யுளில் எளிமையாக விளங்கிய சிறப்பினைச் சோமசுந்தரப்புலவர் பெறுகிறார். ஊயிரிழங் குமரன் நாடகம் சைவசித்தாந்தக் கருத்தினைக் கதை மூலம் விளங்குகிறது. இந் நூலிலும் புலவர் சமூகக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். புலவர் எழுதிய கந்தபுராணக் கதைகளும் அவைகளுணர்த்தும் உண்மை நூற் கருத்தும் என்னும் நூலும் சைவசமய உண்மைகளையே விளக்குகிறது.

சமய சம்பந்தமான பாடல்களில் விருத்தம், கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, வெண்பா ஆகிய யாப்புகளையே புலவர் அதிகம் கையாண்டுள்ளார். மரபு வழி வந்த யாப்புகளிற் பாடியபோதும் அத்தகைய யாப்புக்களைக் கையாண்ட சமகாலப் புலவர்களின் ஆக்கங்களோடு ஒப்பிடுமிடத்துச் சோமசுந்தரப்புலவரின் சமய சம்பந்தமான பாடல்கள் எளிமையான நடையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வெளிமையும் சமய சம்பந்தமான ஆக்கங்களிற் சிறப்பாக நாமகள் புகழ்மாலை, உயிரிளங்குமரன் நாடககம் ஆகியவற்றிற் சமூகக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளமையும் சமயப் பிரபந்தங்களைப் பாடிய சமகாலப் புலவர்களிலிருந்து சோமசுந்தரப் புலவரை வேறுபடுத்துகின்றன.

தமது சம காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான புலவர்களைப் போன்று சமய சம்பந்தமான பாடல்களை மட்டும் சோமசுந்தரப்புலவர் ஆக்கியளித்திருந்தால் ஈழத்தின் பழைய செய்யுள் மரபினைத் தழுவி எளிமையும் கவித்துவமும் நிரம்பிய சமயசம்பந்தமான செய்யுளிலக்கியங்களை ஆக்கியவர் என்ற அளவிலே அவரின் இலக்கியப்பணி அமைந்திருக்கும் . ஆனால், சோமசுந்தரப் புலவர் சமய சம்பந்தமான பாடல்களுடன் காலத்திற்கேற்பத் தேசிய சமுதாய உணர்வுடைய பாடல்களையும் பாடியமையால் ஈழத்தில் புதிய கவிதைக்கும் வழி காட்டியாக விளங்குகின்றார்.

ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய காலத்தில் ஆங்கிலக் கல்வியிலும் மேனாட்டு நாகரிகத்திலும் மோகம் கொண்ட ஈழத்தவர் தமது மொழி பண்பாடு என்பவற்றை மறந்தார். இவற்றைக் கண்ட ஈழத்தறிஞர்கள் சிலர் சிறப்பாக சேர். பொன். இராமநாதன் சேர். பொன். அருணாசலம், சேர். ஜேம்பீரிஸ், சேர். பாரன் ஜயத்திலகா ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டின ஆரம்ப காலத்தில் ஈழத்தவரின் மொழி பண்பாடு என்பனவற்றைப் பேண வேண்டும், சுயாட்சியைப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் அவற்றிற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேற்பட்ட இத்தேசிய விழிப்புணர்வு அக்காலத்தில் வாழ்ந்த ஈழத்துப்புலவர்கள் சிலரின் பாடல்களிலும் பிரதிபலித்தது. பாவலர் துரையப்பாபிள்ளை சோமசுந்தரப் புலவர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.

சோமசுந்தரப்புலவர் சமய சம்பந்தமான பாடல்களை அதிகம் பாடியவிடத்தும், தமது காலச் சமூகக் குறைகளை ஊன்றி அவதானித்து, அவற்றைக் கண்டு மனம் வருந்;தி, அக்குறைபாடுகளை நீக்க வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தமையினாலேதான் சமய சம்பந்தமான பாடல்களிற்கூட அவற்றைக் குறிப்பாகப் புலப்படுத்தினார். நாமகள் புகழ் மாலையில் தமிழ் மொழியின் ஆதரிக்கப்படாத நிலையினைத் - தமிழ் மொழியினை மக்கள் புறக்கணிப்பதை உணர்த்தியமையும், உயிரிளங்குமரன் நாடகத்தில் கமத்தொழில்; நெசவுத் தொழில் என்பவற்றை மக்கள் கைவிடப்பட்டமையினால் வறுமையேற்பட்டது என்று கூறி அத் தொழில்களின் சிறப்பினை விளக்கியமையும் சாதிவேற்றுமை பாராட்டக்கூடாது எனக் கூறியமையும் அந்நியரின் உணவு உடை என்பவற்றில் மோகங்கொண்டுள்ளமை நம் மக்கள் தமதுணர்வு உடையாகக் கொண்டுள்ளமையினைக் காட்டியமையும் அதற்குச் சான்றாகின்றன.

………. குரமமடம் புகுந்த வுருவிலாக் காமன்
கல்விச் சாலையை யொற்றழிப் பித்துக்
தாய்மொழி மடவார் வாய்மொழி யாக்கிச்
சமயமும் லீPலா சமயமாய்ச் செய்து
நிகரில் தீக்கை நிருவாண மாக்கிச்
சந்நிதா னங்கள் தந்நிதா னம்விடக்
குன்றிலுங் குழியினும் விழுத்திவரு கின்றான்
………. இன்னும்
புதியவ னென்போன் ப+மியிற் புகுந்து
கோலவா டவர்தங் குடுமியை யரிந்தும்
வீசையை முக்கால் வீசங் குறைந்து
மந்நிய ருடையூண் தம்முடை ய+ணாய்
மன்னிய, பலவித மாறுதல் புரிந்து வருகின்றான்

எனவரும் உயிரளங்குமரன் நாடகத்தின் பகுதிகள் இங்கு நோக்கங்கள் இவ்விதம் சமய சம்பந்தமான ஆக்கங்களிற் சமூக நோக்கினைப் புலப்படுத்திய புலவர் தேசிய, சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் சில செய்யுள் நூல்களையும் தனிச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார். இலங்கை வளம், மரதனஞ்சலோட்டம், தாலவிலாசம் ஆகிய நூல்களையும் செந்தமிழ் மக்கட்கு ஒரு வேண்டுகோள், தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்க வேலைகள், பனைமரக்கும்மி, பஞ்சமில்லை, ஆடுகதறியது ஆகிய தனிச் செய்யுட்களையும் அவ்வகையிற் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

புலவரின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வினைச் சிறபாகப் புலப்படுத்தும் இலங்கை வளத்தில் இலங்கை வளத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் தொழில் முன்னேற்றத்திலும் புலவருக்கிருந்த அக்கறை வெளியாகின்றது. செந்தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பாடல் தமிழ் மொழியின் பெருமையினையும் ஆங்கில மொழி மோகத்தினால் தமிழ்த்தாய்க்கு ஏற்பட்ட அவலத்தினையும் கூறி, அந்நிலைiயை நீக்கித் தமிழ்மொழியைப் போற்றுமாறு மக்களை வேண்டுவதாக அமைந்துள்ளது. இவை தவிர்ந்த தால விலாசம், பனைமரக் கும்மி, யாழ்ப்பாணம் தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்க வேலைகள், பஞ்சமில்லை ஆகிய பாடல்கள் பொது அடிப்படையில் நோக்குமிடத்து நாட்டின் பொருளாதார வளம்கருதிய பாடல்களாகவே அமைந்துள்ளன. தேசியப் பொருட்களைப் போற்ற வேண்டும். அந்நியப் பொருட்களுக்குப் பதிலாகத் தேசியப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பனையிலிருந்து பெறப்படும் பொருட்களினால் பல்வேறு கைத்தொழில்களை விருத்தி செய்வதுடன், உணவுப் பொருட்களையும் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி தமது பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற கருத்துக்களின் வெளிப்பாடாக அமைந்த அப்பாடல்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் தேசிய பொருட்களின் பயன்பாட்டிலம் புலவர் ஈடுபாடு கொண்டிருந்தமையைக் காட்டுகின்றன.

வாய்ச்சிட்ட கற்பக தாருவெ னும்பனை
மதுரப் பழத்தினை யாமறந்தே
ஈச்சம் பழத்திற்கு வாய+றிக் கைப்பொருள்
இழுக்கின்ற வாறென்ன ஞானப்பெண்ணே
செங்கதி ரோன்மடு மிந்தப் பலகாரம்
செய்துவைத் துத்தின்ன மாட்டாம
லங்கே பிறர்சமைத் திங்கே விடுமவைக்
காசைப்பட் டோமடி ஞானப்பெண்ணே

என்னும் பாடல்கள் உதாரணமாக நோக்கத் தக்கன. “ ஆடு கதறியது’ என்னும் பாடல் புலவர் காலத்தில் சமூகத்தில் நிலவிய கொடுமையினை பலியிடும் கொடிய வழக்கத்தினை நீக்க வேண்டும் என்ற கருத்தில் எழுந்த சீர்திருத்தப் பாடலாக உள்ளது. இவற்றைப் பார்க்குமிடத்து சமயசம்பந்தமான பாடல்களை ஆக்குவதில் அதிக கவனஞ் செலுத்தியிராவிடில் காலத்தின் குரலாகப் பல சமூக தேசிய உள்ளடக்கம் கொண்ட பாடல்களைப் புலவர் பாடியிருப்பார் என எண்ணத்தோன்றுகிறது. சமூக தேசியக் கருத்துக்களின் வெளிப்பாடாக அமைந்த புலவரின் பாடல்களில் புதிய யாப்புக்களே பெரிதும் பயின்று வந்துள்ளன.

இந்தவகையிற் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்த சோமசுந்தரப்புலவர் தாமியற்றிய குழந்தைப் பாடல்கள் மூலம் ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் தாம் பெற்ற சிறப்பிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார். திரு.கே. எஸ். அருணாந்தி அவர்களின் தூண்டுதலினால் குழந்தைப்பாடல்களை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஈழத்துப் புலவர்களுள் சோமசுந்தரப் புலவரே ஈழத்துக் குழந்தைகளின் அறுபவத்திற்கேற்ற சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். புலவர் அதிக குழந்தைப் பாடல்களைப் பாடவில்லையெனினும் அவர் சிறந்த குழந்தைக் கவிஞராகப் போற்றப்படுவதற்கு அவர் பாடிய குழந்தைப் பாடல்கள் சிறப்புடன் அமைந்தமையே காரணமாகும். புலவர் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல்கள் சிறுவர் செந்தமிழ் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. அந் நூலில் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல்களுடன், குழந்தைகளுக்கு விளக்கசுடியவையான, புலவரின் மற்றைய நூல்களில் அமைந்த இலகுவான பாடற் பகுதிகள் சிலவும் இலகுவான தனிப்பாடல்களாகவம் கதைப் பாடல்களாகவும் புலவர் பாடிய குழந்தைப் பாடல்களுள் ஆடிப்பிறப்பு , சுத்தரிவெருளி, புழுக்கொடியல் எலியுஞ் சேவலும், பவளக்கொடி முதலான பாடல்கள் குழந்தைகளுக்கேற்ற சிறந்த பாடல்களாகும். இக் குழந்தைப் பாடல்கள் ஓரளவு யாழ்ப்பாணப் பண்பாட்டினைப் பிரதிபலிப்பனவாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சிறந்த குழந்தைப் பாடல்களைப் பாடியதனால், குழந்தைப் பாடல்கள் இயற்றுவதில் தமிழ்நாட்டுப் புலவர்களுக்குக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை முன்னோடியாக அமைந்ததுபோன்று ஈழத்துப் புலவர்களுக்குச் சோமசுந்தரப் புலவர் முன்னோடியாக அமையும் சிறப்பு ஏற்பட்டது.

இவ்விதம் பழந்தமிழ்ச் செய்யுள் மரபினைப் போற்றிக் கவித்துவம் நிரம்பிய பிரபந்தங்கள் சிலவற்றை அளித்தும் காலத்திற்கேற்ற வகையில் சமூக, தேசியக் கருத்துக்களைக் கவிதைப் பொருளாக்கி மறுமலர்ச்சி கவிதைக்கு வித்திட்டும் குழந்தைப் பாடல்களுக்கு வழி காட்டியும் சோமசுந்தரப் புலவர் செய்த இலக்கியப் பணிகள் அவருக்கு ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் சிறப்பாக ஓரிடத்தினை அளித்துள்ளன.

வித்துவசிரோமணி
மறைத்திரு. சி. கணேசையர்

மயிலங்கூடலூர் பி. நடராசா
(பிறப்பு : 1-4-1879 பிறந்த ஊர்: புன்னாலைக்கட்டுவன். தந்தையார் : சின்னையர். தாயார்: சின்னம்மா
பெரிய தந்தையாகிய கதிர்காம ஐயரிடம் புன்னாலைக்கட்டுவான் சைவப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி.
வித்துவசிரோண்மணி ந.ச. பொன்னம்பலபிள்ளையிடமும் அவர் மறைவுக்குப்பின் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடமும் கல்வி

காசிவாசி செந்திநாத ஐயரிடம் ஐயந்தெளிந்தார்.

21ஆம் வயதில் வண்ணார்பண்ணை விவேகாநந்த வித்தியாலயத்தில் ஆசிரியப்பணி ஆரம்பம். ஆசிரியர் தராதரப்பத்திரம் பெற்றார். பல பாடசாலைகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 32 ஆம் வயதில் அன்னலக்குமியை மணந்தார்.

1921 முதல் 1932 வரை சுன்னாகம் பிராசீன் பாடசாலையில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்.

1932க்குப்பின் வறுத்தலை விளானில் அமைந்த ஆச்சிரமத்தில் கருகுலக் கல்வி முறையிற் கற்பித்தல்

1938 இல் பொற்கிளி பெற்றார்.

1951இல் தமிழக விஞ்ஞானி கே. எஸ். கிரு~;ணன் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார்.

1952 இல் வித்துவசிரோமணிப் பட்டம் பெற்றார்

8-11-1958 இல் மறைவு

ஈழத்துத் தமிழ்த் தொண்டர் வரிசையை ஈழத்துப் ப+தன் தேவனாரிலிருந்து தொடங்கும் மரபு உளது எனினும் தொடர்ச்சியான வரலாறு யாழ்ப்பாணத் தமிழரர் காலத்தில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் வாழ்ந்த அரசகேசரியுடன் ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். இம் மரபில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த நல்லைநகர் ஆறுமுகநாவலர் ஒரு திருப்பு முனையாகிறார். அவர் வாழ்ந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் வாழ்ந்த, வாழ்கின்ற மரபுவழித் தமிழ்த் தொண்டர்களை நாவலர் மரபினர் என்பது வழக்கு. நாவலர் மரபு வழி அறிஞராய் இருந்த போதிலும் நவீன துறைகள் பலவற்றையும் - சிறப்பாக உரை நடையைத் - தமதாக்கிக் கொண்டார். இதனால் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் நவீன தமிழ் உரை நடையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். தமிழகமே அவரைச் சிறந்த பதிப்பாளர் , உரையாசிரியர், இலக்கண விற்பன்னர் எனப் போற்றுகிறது.

நூவலரின் மருகரான வித்துவசிரோண்மணி ந. ச. பொன்னம்பலபிள்ளை நாவலரின் மாணவராகவும் ந. ச பொன்னம்பலம்பிள்ளை நாவலரின் மாணவராகவும் வாரிசாகவும் விளங்கினார். சுன்னாகத்தில் வாழ்ந்த நமச்சிவாய தேசிகர், முருகேச பண்டிதர், நாகநாத பண்டிதர் முதலிய பேரறிஞர்களிடம் பயின்று பேரறிஞராய் விளங்கியவர் அ. குமாரசுவாமிப்புலவர். புலவர். நூவலரிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றவர். வித்துவசிரோண்மணி, புலவர் ஆகிய இருபெரும் அறிஞர்களிடமும் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வட மொழி, சமயம் என்பவற்றையும் பயின்றவர், புன்னாலைக்கட்டுவன் மறைந்திரு சி. கணேசையர் இதனால் அவர் இரு மரபுகளிலுமுள்ள அறிவு நலம் அனைத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தொண்டராய் விளங்கினார்.

ஐயரவர்களுடைய தமிழ்த்தொண்டு பரந்துபட்டது மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைதல், சிறுவர்களுக்கான எளியநடை நூல்களை எழுதுதல் இலக்கிய - வாழ்க்கை வரலாற்று நூல்களை யாத்தல், தொல்லிலக்கியங்களுக்கு உரை வகுத்தல், இலக்கண நூல்களை உரைவிளக்கக் குறிப்புக்களோடு பதிப்பித்தல், செய்யுள் இலக்கியம் படைத்தல் ஆகிய பல்வகைத் தொண்டுகளிலும் ஐயரவர்கள் ஈடுபட்டார்கள்.

நூலிலே அன்பு வைத்து அதன்பாலுள்ள வி~யங்களை
வேளிப்படுத்தலையே தனி இன்பமாகக் கொண்டு பலகாலம்
ஆராய்ந்து பதிப்பிக்கும் முயற்சியுடையார் சிலருள் ஐயர் ஒருவர்

எனத் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் ஐயர் அவர்களைப் பாராட்டியுள்ளார்.

அறிவினால் ஏழையாகிய ஒருவனுக்கு அறிவுத் தானம் வழங்குதலே தலை சிறந்த தொண்டு என்பர். வித்துவசிரோமணி, புலவர் ஆகியோரிடம் தமிழின் துறைகள் யாவும் ஐயத்திரிபறக் கற்ற ஐயரவர்கள், புலவரிடம் வடமொழியையும் துறைபோகக் கற்றார். வாழ்நாள் முழுவதுமே மாணவராய் இருந்த ஐயர் அவர்கள் இருபது ஆண்டுகள் தொடர்ந்து கல்வி கற்றபின் ஆசிரியராகப் பதவியேற்றார். கற்பித்தலை வாழ்வுக்கு வருவாய் தரும் தொழிலாய்க் கொள்ளாது தமிழ்த் தொண்டாகவும் கற்கும் தொழிலின் நிறை நிலையாகவுமே அவர் கருதினார். ஆசிரியர் தராதரப் பத்திரம்பெற்ற ஐயரவர்கள் ஆரம்பத்தில் ஆசிரியராயும் பின் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவான பாடசாலைகளிற் கற்பித்தபோது சூழலில் வாழ்ந்த பல மாணவர்களுக்கு உயர் இலக்கண இலக்கியங்களைக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1921 ஆம் ஆண்டு மரபுவழிக் கல்வியை நிறுவன அடிப்படையில் ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கம் நிறுவப்பட்டது. இச் சங்கம் பிரவேச அ பண்டித, பாலபண்டித, பண்டிதத் தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டது. இத் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களைப் பயிற்றுவதற்கெனச் சுன்னாகத்தில் பிராசீன பாடசாலை நிறுவப்பட்டது. இவ்வுயர்கல்வி நிறுவனத்தில் ஐயரவர்கள் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரானார். இக் காலத்தில் தொல்காப்பிளம் கற்பித்தலிலும் உரைகளை நுணுகி ஆராய்வதிலும் ஐயரவர்கள் ஈடுபட்டார். தம் ஆசிரியர்களிடம் பயின்றவற்றைவிடத் தம் நுண்ணுணர்வாலும் ஐயரவர்கள் புதிய இலக்கண முடிவுகளை அறிந்து தெளிந்து கொண்டார்.

1932க்குபின் வறுத்தலைவிளானில் அமைந்த தமது இல்லத்தை நாடிவரும் மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும் நூலாராய்ச்சி செய்வதிலும் அறிஞர்களோடு உரையாடுவதிலும் ஈடுபட்டு வந்தார். இக் கால கட்டத்தில் ஐயரவர்களிடம் கற்று வல்லவர்களான மாணவர் தொகை எண்ணரியது. இம் மாணவர்களுள் அவரது அணுக்கத் தொண்டராய் இருந்து நெடுங்காலம் பயின்று இலக்கணத் துறையில் ஐயரது வாரிசு என்னும் பெருமை பெற்றவர். மயிலிட்டி தெற்கைச் சார்ந்த பண்டிதர் இ. நுவசிவாயம் அவர்கள். பண்டிதர் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கணவித்தகர்ப் பட்டமே ஐயரவர்கள் தமது மாணவர்களுக்;கு வரையாது வழங்கிய கல்விக் கொடைக்குச் சான்றாகும் ஐயரவர்களது கல்வித் தொண்டின் சிறப்புக்கு அவரது மாணவர் பெற்ற பட்டமே உரைகல்லாகும்.

சோழவந்தான் அரசன் சண்முகனார் தமிழகத்துப் பேரறிஞர்களுள் ஒருவர். அதிதீவர விவேகமும் நுண்மாண் நுழைபுலமும் மிக்கவர். அவர் தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத்துக்கும் புத்துரைகண்டு சண்முகவிருத்தி என்ற நூலை எழுதியவர். இவ்வறிஞருக்கும் ஐயர் அவர்களுக்கும் இரு பெயரொட்டு ஆகுபெயர். அன்மொழித்தொகை என்பன தொடர்பாகக் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. சண்முகனார் இரண்டும் வேறுவேறு என்றார். ஐயரவர்கள் இரண்டும் ஒன்றே என்றார். இவரது கருத்துக்களுக்கும் ஏற்புடைய வாதங்கள் செந்தமிழ் ஏட்டில் தொடர்ந்து வெளி வந்தன. இருவரும் முன் வைத்த கருத்துக்கள் அறிஞர்கள் கருத்தைக் கவர்ந்தன. ஈற்றில் ஐயர் அவர்கள் தம் கட்டுரைகள் மூலம் கூறிய கருத்தே தக்கத என அறிஞருலகம் ஏற்றுக் கொண்டது.

கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியர் உரை நயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, பிறிதுபிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், தொகை நிலை, சிறுபொழுதாராய்ச்சி போன்ற பல கட்டுரைகளைப் பல்வேறு இதழ்களில் ஐயரவர்கள் எழுதினார்கள். இக் கட்டுரைகள் திட்ப நுட்பம் செறிந்தவை : பரந்த நூலறிவையம் நுண்ணறிவையும் புலப்படுத்துவன. இவரது கட்டுரைகளைத் தமிழகம் எவ்வளவு ஆர்வத்துடன் எதிர் பார்த்தது என்பவதற்குச் செந்தமிழ்ப் பத்திராதிபரும் பேரறிஞருமான மு. இராகவையங்கார் எழுதிய கடிமொன்றே சான்று பகரும். தாங்கள் “ தொனி’’ என்னும் அரிய வி~யம் அனுப்பிய பின்பு வேறு வி~யம் அனுப்பாமைக்குப் பலர் ( அவாவுடன்) வருந்துகிறார்கள் தயை செய்து “ இராமாவதாரச் செய்யுட் பாடாந்தர’ த்தின் தொடர்ச்சியை அனுப்பிவரின் உபகாரமாம்.’’ ஐயரது கட்டுரைகள் பல்வேறு விடயங்கள் தொடர்பான ஐயங்களைத் தீர்ப்பனவாயும் அறிவ+ட்டுவனவாயும் இருந்தன.

தாம் வாழ்ந்த காலத்தில் முதல் நிலை அறிஞராக விளங்கிய ஐயுரவர்கள் சிறுவர்களுக்காக எளிய உரை நடையில் குசேலர் சரிதம் என்ற நூலை எழுதியுள்ளார். தமது ஆசிரியரான குமாரசுவாமிப்புலவர் சரித்திரத்தையும் ஈழநாட்டுப்புலவர் சரித்திரத்தையும் ஓரிரண்டு வருடத்து நூற்பழக்கமுள்ள பொது மக்களும் புரிந்து கொள்ளும் உரைநடையில் எழுதியுள்ளார்.

நூலாசிரியன் ஒருவன் தான் எழுதும் மொழி நடையைப் பொருளுக்கேற்றதாகவும் கற்போரின் தரத்துக்கு ஏற்றதாகவும் அமைந்துகொள்வது அவசியமாகிறது. இதனை நற்குணர்ந்த ஐயரவர்கள் வேறுபட்ட உரைநடைகளைக் கையாண்டுள்ளார்.

கண்ட பொழுதே கண்ணனைக் கண்டதுபோல்
மகிழ்ச்சியுற்றார் வழிவந்த வருத்தமும் தீர்ந்தார்
கண்ணன்பாற் கனநிதி பெற்றவரை ஒத்தார்
அப்பொழுதே அவ்விடத்தில் நில்லாது தாவி
விரைவாக நடக்கத் தொடங்கினார்

இது ஐயரவர்கள் குசேலர் சரித்தத்தில் கையாண்டுள்ள நடை. இது பாடசாலைச் சிறுவர்களுக்கேற்ப எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேகதூதக் காரிகையுரையில் ஐயரவர்கள் எழுதிய உரை நடை வேறுபட்டதாக உள்ளது. அவ்வுரைநடை கற்றோர்க்குரியதான உயர்ந்த தரத்தில் உள்ளது. பின் வரும் பகுதி ஓர் எடுத்துக்காட்டாகும்.

இம் மேகதூதக் காரிகையென்னும் நூல் இன்ப
மென்னும் ஒன்று பயப்பச் செய்ததேயாம். இந்
நூல் முந்நூலுள் எந்நூலெனின் வழிநூலேயாம்.
எதன் வழியாக்கப்பட்டதெனின் கவிகளைச் சுவை
படச் செய்யும் காளிதாச மகாகவியினாலே வட
மொழியிலே இயற்றப்பட்ட மேகசந்தேசமென்னும்
நூலின் வழியாக்கப்பட்டதே.

நூலைக் கற்பவர்களுக்கேற்ப உரைநடை மாறுபட வேண்டுமென்பதை உணர்ந்தே அவர் செயற்பட்டார் என்பதை “ ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்’ முகவுரையில் உள்ள பின்வரும் பகுதி உறுதி செய்கிறது.

இச் சரிதங்களிலுள்ள வாக்கியங்களுள் வரும் தொடர்
மொழிகளுட் பெரும்பாலான படிப்போர் எளிது
ணரற்பொருட்டு சந்தி நோக்காது பிரி;த்தெழுதப்
பட்டும் புலவர்களுடைய இயற்பெயர்களுட்சில
இலக்கண விதி நோக்காது வழங்கி வந்தபடியே

கம்பனுக்கு நிகராகக் காவியம் செய்யும் எண்ணத்துடன் வடமொழி மகாகவி காளிதாசனின் இரகுவசம்சத்தைத் தமிழில் பார காவியமாகப் பாடினார் அரச கேசரி. இந்நூலை ந.ச. பொன்னம்பலப்பிள்ளை அவர்களை அச்சிற் பதித்து வெளியிட்டார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் “ இரகுவம்சக் கருப்பொருள்’’ என்ற பெயரில் நூலிலுள்ள முக்கிய பாடல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். ஈழத்தின் உயர்ந்த இலக்கியச் சொத்தான இந் நூலைக் கற்கும் மரபு தொடர்ந்து நிலவியது. வித்துவசிரோமணியிடமும் புலவரிடமும் இந் நூலை ஐயரவர்கள் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார் புலவரிடம் வடமொழி இரகுவம்சத்தையும் பயின்றார். பிராசீன பாடசாலையில் சமஸ்கிருதப் பேராசிரியராக விளங்கிவரும் சமஸ்கிருதத்தில் நிறைந்த அறிவுபெற்றவருமான வி. சிதம்பரசாஸ்திரியிடமும் தம் ஐயங்களைத் தெளிந்து கொண்டார். பரந்த இப் பயிற்சி காரணமாக உரை காண்டதற்கு அரிதான இந் நூலுக்கு ஐயரவர்கள் வரிவான புத்துரை எழுதினார். இவ்வுரை ஐயரவர்களின் பரந்த இலக்கிய அறிவையும் நுணுகிய இலக்கண அறிவையும் செய்யுட்சுவை உணர்வையும் புலப்படுத்துகிறது.

அகநானூறு என்ற சங்க நூலின் முதல் நூறு பாடல்களுக்கும் ஐயரவர்கள் புத்துரை எழுதியுள்ளார். இவ்வுரையின் ஒரு பகுதி ஈழகேசரி இதழ்களில் வெளிவந்தது. நாணிக் கண்புதைத்தல் என்ற ஒரு துறைக் கோவைக்கும் ஐயரவர்கள் புத்துரை எழுதியுள்ளார்.

ஐயரவர்களின் நிறைந்த தமிழறிவின் வெளிப்பாடாக விளங்குவது அவரது தொல்காப்பியம் உரைவிளக்கக் குறிப்புக்களாகும். தொல்காப்பியம் சங்க காலத்தை ஒட்டி எழுந்த இலக்கணநூல். பல நூற்றாண்டுகளுக்குப் பின் அதற்கு உரைகள் எழுந்தன. ஏட்டு வடிவில் இருந்த பழைய உரைகளை அடிக்கடி பெயர்த்தெழுதும்போது பிழைபன் மலிந்தன. இதனால் கற்போர் பொருள் உணர முடியாது துன்பமுற்றனர். நாவலர் பெருமான், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரைத் தொடர்ந்து ஐயரவர்களும் தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் செம்மை செய்து பாதுகாக்க முயன்றார்.

இரண்டு பேரறிஞர்களிடம் முறைப்படி பெற்ற கல்வி, பல ஆண்டுகள் திரும்பத்திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்த அநுபவம், பல உரைகளையும் ஏடுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பெற்ற தெளிவு, சரியானதை உணரும் மனப்பக்குவம், தாம் கற்றவை, உணர்ந்தவை கற்கும்போது எழுந்த ஐயங்கள் என்பவற்றைக் குறித்து வைத்து மீண்டும் மீண்டும் ஆராயும் மனப்பாங்கு என்பன ஐயரவர்களை இப்பெரும் பணியில் ஈடுபடத் தூண்டின. தாம் பிழைகள் எனக் கண்டவற்றையும் அவற்றுக்குப் பொருத்தமான திருத்தங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு அறிஞர்களது ஒப்புதலையோ திருத்தங்களையோ பெறுவதில் ஐயரவர்கள் என்றும் பின்னின்றது கிடையாது. சுரியான மூலபாடத்தைக் கண்டறிய வேண்டுமென்பதற்காகத் தாம் நேரடியாகத் தமிழகம் சென்றார். அல்லது தகுவாய்ந்த தமது மாணவர்களை அறிஞர்களிடம் அனுப்பி உரிய திருத்தங்களை உறுதி செய்து கொண்டார். தமது வாழ்நாளிற் பெரும் பகுதியை ஐயரவர்கள் தொல்காப்பியம் ஆய்விலேயே செலவிட்டார்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை (1935) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை (1938) தொல்காப்பியம் பொருளதிகாரம் ( இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியரும் (1943) தொல்காப்பியம் பொருளதிகாரம் ( முதலாம் பாகம்) முன்னிந்தியல்களும் நச்சினார்க்கியமும் (1948) ஆகியவற்றை ஐயரவர்கள் உரைவிளக்கக் குறிப்புகளோடு பதிப்பித்தார்கள். ஞா. தேவநேயப்பாவாணர், அ. ப+வாரகம்பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி முதலியோர் பின்னளில் வெளியிட்ட தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புக்களுக்கு ஐயரவர்களே வழிகாட்டியாக விளங்கினார்.

மாணவராயிருந்த காலமுதல் ஐயரவர்களின் அணுக்கத் தொண்டராகவும் உசாத்துணைவராகவும் விளங்கிய இலக்கணவித்தகர், பண்டிதர் இ. நுமசிவாயம் அவர்கள்,

தொல்காப்பியமாகிய பெருங் கடலிற் புகு
வோர்க்கு ஐயரவர்களின் குறிப்புக்கள் மரக்கலம்
போல உதவுவன. இது ஐயர் தொண்டுகளில் மிக
உயர்ந்தது

என்று கூறுவது ஐயரின் இலக்கணத் தொண்டின் சிறந்த மதிப்பீடாக உள்ளது. பதிப்புத் துறையில் அளப்பரிய சாதனைகள் செய்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் “ உங்கள் பதிப்புக்கள் மிக்க திருப்தியை உண்டு பண்ணுகின்றன’’ என்று பாராட்டியிருப்பது ஐயரவர்களின் புகழ் உடம்பை விளக்கம் செய்வதாய் அமைகின்றது.
ஐயரவர்களது மிகுபுகழ் குடத்துள் விளக்காக ஒடுங்கிவிடாது குன்றின் மேலிட்ட தீபமாக ஒளிர வழி வகுத்தவர் சுன்னாகம் திருமகள் அழுத்தக உரிமையாளரும் ஈழசேகரி ( தமிழ்) சேகரி ( ஆங்கிலம்) ஏடுகளின் வெளியீட்டாளருமான திரு. பொன்னையா அவர்களே. ஐயரவர்களது நூல்களை எல்லாம் பல்லாயிரம் ரூபா செலவில் வெளியிட்டு அவரது தமிழ்த் தொண்டை நிலைபெறச் செய்தவர் நா. பொன்னையா அவர்களே.

ஐயர் அவர்கள் கசடறக் கற்றவர்: கற்றபடி ஒழுகியவர் இறுதிக் காலத்தில் கற்பனவும் இனி அமையும் என்று தெளிந்து இறைவன் திருவடிகளையே இடைவிடாது நினைத்து வாழ்ந்தவர். அவரது பத்தியின் வெளிப்பாடாக அவரது வழிபடு கடவுளாகிய வறுத்தலை விளான் மருதடி விநாயகர் மீது இருபா இருபஃது, அந்தாதி, கலிவெண்பா,கலிநிதித்துறை, ஊஞ்சல் முதலிய பல்வகைப் பிரபந்தங்களையும் பாடினார். இவற்றைவிட வாழ்ந்துக் கவிகளாகவும் சாற்று கவிகளாகவும் எண்ணற்ற செய்யுள்களைப் படைத்தளித்துள்ளார். இவை அவரது செய்யுள் ஆக்கும் திறனை வெளிப்படுத்துவன.

ஐயரவர்கள் வாழும்போதே தமிழகமும் ஈழமும் அவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் பெருமை பெற்றன. அவரது அறுபதாண்டு நிறைவின்போது (1938) தமிழறிஞர்களும் புரவலர்களும் பாராட்டி விழா எடுத்துப் பொற்கிழி வழங்கினர். 1951 இல் தமிழகத்துத் தமிழ் வளர்ச்சிக் கழகம் திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் நிகழ்த்திய நான்காம் தமிழ் விழாவில் ஐயரவர்களுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தது. 1952 ஆம் ஆண்டு ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கம் தனது இருபத்தொண்பதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது நடத்திய முதலாவது சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் ஐயரவர்களுக்கு வித்துசிரோமணி என்ற பட்டத்தை வழங்கிப் பெருமை பெற்றது.

ஈழத்தில் இரு வகையான கல்வி மரபுகள் நிலவுகின்றன. ஒன்று மேல்நாட்டு மரபில் அமைந்த அகலக் கற்றலை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக் கழகக் கல்வி முறை. மற்றையது மரபு வழிவந்த உயர் கல்வி முறை. இது ஆழக் கற்றலை அடிப்படையாகக் கொண்டது. இக் கல்வி மரபு மேல்நாட்டுக் கல்வி மரபின் தாக்கத்தால் அழிந்துபடாது காத்தவர் நாவலர் பெருமான் இம் மரபினை முன்னெடுத்துச் செல்பவராக அமைந்தவர் ஐயர் அவர்கள் உயர்கல்வி நிறுவனமாக இயங்கி வந்த ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இம் மரபைக் காக்க ஐயரவர்கள் அயராது உழைத்தார். ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் அஞ்சல் வழியாகத் தமிழைக் கற்றுப் பண்டிதத் தேர்வுகளுக்குத் தோற்ற வழி செய்யும் திட்டமொன்றைக் கலாநிலையத்தினர் வகுத்தார்கள். ஐயரவர்கள் இத்திட்டத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவற்றின் மூலம் ஐயரவர்களும் பிறரும் உருவாக்கிய மாணவர் பரம்பரை ஒன்று இன்றும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இம் மரபுக்குப் புத்துயிர் கொடுத்து நவீன அம்சங்களையும் புகுத்தி, பல்கலைக்கழக கல்விக்கு ஈடாக இதனையும் வளர்த்துச் செல்வது அவசியமாகும்.

முத்தமிழ் வித்தகர்
விபுலானந்த அடிகள்

வித்துவான் க. செபரத்தினம்

(ஈழவள நாட்டின் கிழக்கு மாகாணத்திலே, மட்டக்களப்புக்குத் தென் திசையிலுள்ள காரைதீவில் 29- 03 - 1892 இல் விபுலானந்த அடிகள் பிறந்தார். தந்தையார் பெயர் சாமித்தம்பி : தாயார் : கண்ணம்மை, இடப்பட்ட பெயர் மயில்வாகனம்

தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிற் பெரும் புலமையும் இலத்தீன், மலையாளம், சிங்களம் முதலிய மொழிகளில் அறிவும் பெற்றிருந்தார். பயிற்சி பெற்ற ஆங்கிவ ஆசிரியராகவும் விஞ்ஞான டிப்ளோமாப் பட்டதாரியாகவும், தமிழ்ப் பண்டிதராகவும் பி. எஸ். சி (டீ.ளுஉ) பட்டதாரியாகவும் இவர் விளங்கினார். ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய மயில்வாகனனார் 1922 இல் துறவு ப+ண்டு 1924 இல் சுவாமி விபுலானந்தர் என்னும் துறவுத்திருநாமம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 19.07.1947 இல் இறையடி சேர்ந்தார்.

தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று

என்னும் வள்ளுவர் வாக்கிற் கிணங்க, விபுலானந்த அடிகளும் புகழுக்கேதுவாகிய குணத்தோடு தோன்றி புகழ்பட வாழ்ந்து, புகழோடு மறைந்தவராவார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய பெரியார்களுள் அடிகள் பெற்றுள்ள உயரிய இடமானது மேலே கூறிய கூற்றினை உறுதி செய்து நிற்பதனைக் காண்கிறோம்.

விபுலானந்த அடிகள் முத்தமிழையும் முறையாகக் கற்று நிறைந்த புலமை பெற்றிருந்தார். இதனால் அவர் ஆற்றிய தொண்டானது, தமிழ் மொழியின் முத்துறைகளையும் வளர்த்திடுவதாய் அமைந்துள்ளது. அடிகளின் துறவு வாழ்க்கையும் பன்மொழி அறிவும் கணித விஞ்ஞானப் புலமையும் அவரது சீரிய தமிழ்த்தொண்டுக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.

தமிழ்மொழியின் தொன்மை பற்றியும் பரந்துபட்ட தமிழ் இலக்கிய வளம் பற்றியும் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அடிகள் எழுதியுள்ளார். துரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழ், கரத்தைத் தமிழ்ச் சங்க இதழான தமிழ்ப்பொழில், இராமகிருஷ்ண சங்க இதழான, தமிழ்ப்பொழில், இராமகிருஷ்ண சங்க இதழான, ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம் ஆகியவற்றிலும் கலைமகள், செந்தமிழ்க்கல்வி முதலிய சஞ்சிகைகளிலும் அடிகளின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவற்றுட் பல கட்டுரைகளை திரு அருள் செல்வநாயகம் என்பவர் விபுலானந்த ஆராய்வுகள், விபுலானந்த செல்வம், விபுலானந்த வெள்ளம் முதலிய நூல்களில் தொகுத்து வெளியிட்டுள்ளார். அடிகளாரின் அச்சிடப்படாத சில கட்டுரைகள் விபுலானந்த அழுதம் என்னும் நூலில் திரு. அருள் செல்வநாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளளன.

விபுலானந்த அடிகளால் இயற்ற்பட்ட நடராஜ வடிவம் - தில்லைத்திருநடனம் என்னும் வசன நூலானது உரை மன மிறந்துநின்றதொரு தனிக்கடவுள், ஆன்மாக்கள் மீது வைத்த பேரளினாலே, அவ்வருளே வடிவமாகத் தோற்றுவான் என்னும் உண்மையினையும் அத் திருவருளின் ஐந்தொழில்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. உமாகேசுவரம் என்னும் வசன நூலானது இறைவன் மாதொரு பாகனாமர்ந்துள்ள நுட்பத்தினை விளக்குகின்றது.

அடிகள் கையாண்ட எழுத்து நடையானது, கற்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளத்தக்க செந் தமிழ் நடையாகும். இவற்றினைக் கற்றுணர்ந்த அறிஞர்கள் அடிகளின் மதிநுட்பத்தினையும் ஆராய்ச்சித் திறனையும் எழுத்து வன்மையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். தமிழ் உரை வரலாறு என்னும் நூலி;ல் ஆசிரியரான பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள், “ விபுலானந்த அடிகள் நடையிலே ஓசைச் சிறப்பும் செறிவும் உண்டு. பொருளைப் புலப்படுத்துவதற்குரிய சிறந்த சொற்களைத் தெரிந்து வாக்கியங்களில் அமைத்து அழகுற எழுதும் இயல்பு அவருக்குண்டு’’ எனத் தமது நூலிலே எழுதியுள்ளமையை இங்கு குறிப்பிடலாம்.

விபுலானந்த அடிகள் மிகச் சிறந்த செய்யுள்களையும் ஆக்கித் தமிழ்மொழியை வளப்படுத்தியுள்ளார். தமது பன்னிரண்டாவது வயதிலேயே.

ஆம்புவியிற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவு தீட்டி
வம்புசெறி வெண்கல வல்லியருள் எனக்கூட்டி வைத்த …………

எனத் தொடங்கும் பாடலைத் தமது குரு வணக்கப் பாடலாகப் பாடி குழந்தைப் புலவர் எனப் பாராட்டப்பட்ட அடிகள், மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணியசுவாமியார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிசுவாமி இரட்டை மணிமாலை (1606) கோதண்ட நியாயபுரிக் குமரவேள்மணிமாலை கணேச தோத்திர பஞ்சகம் ( 1911 - 12 ) என்னும் பிரபந்தங்களை இயற்றி, அவற்றினைத் தமது இருபத்து மூன்றாவது வயதிலே ( 1915) பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இப் பிரபந்தங்களில் இழையோடியிருக்கும் பத்திச் சுவையும் தமிழ்ச் சுவையும் படித்து இன்புறத்தக்கன. இவற்றை விட மஹாலஷ்மி தோத்திரம், குருதேவர் வாக்கியம், தேவபாணி, தில்லி மாநகர்த் திருமருமார்பன் திருக்கோயிற் காட்சி முதலியனவும் கங்கையில் விடுத்த ஓலை, ஈசனுக்கும் மலர் என்பனவும் அடிகளின் உயரிய சிந்தனையின் விளைவுகளாம்.

அறிவற்றங் காக்குமெனும் அறிவுரையை எழுதி
அறநெறியால் இன்பமெய்தும் அமைதியையும் எழுதி
உறுநட்பு நிலைபெறுமென் றுறுதிப்பா டெழுதி
ஓதுவிபு லாநந்தன் உரையிவையென் றெழுதி

கங்கையில் விடுத்த ஓலை என்னும் படைப்பிற் காணப்படும் ஒலி அமைப்பும் பொருட்செறிவும் உணர்ச்சிப் பெருக்கும் சங்கச் சான்றோரின் பாடல்களை நினைவுகூரச் செய்கின்றன. ஈசன் உவக்கும் இன்மலர் என்னும் பாடல்களில் வரும் “ உள்ளக் கமலம்’’ “ கூப்பியகைக் காந்தன்’’ “நாட்டவிழி நெய்தல்’’ என்னும் உயரிய உருவங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நிற்கின்றன.

மொழி பெயர்ப்புப் பணிமூலமும் விபுலானந்த அடிகள் தமிழ் மொழியைச் சிறப்படையச் செய்துள்ளார். கருமயோகம், ஞானயோகம், விவேகானந்த ஞானதீபம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை, விவேகாநந்தர் சம்பாஷனைகள் என்பன அடிகள் மொழி பெயர்த்த நூல்களாம். இவற்றைவிட வங்கக் கவிஞர் ரவீந்திரநாததாகூரின் கார்டனர் என்னும் பாடல்களைப் ப+ஞ்சோலைக் காவலன் என்னும் பெயரில் அழகாக மொழிபெயர்த்துத்துள்ளார். ஆங்கிலப் புலவர்கள் சிலரின் படைப்புகளும் அடிகளால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. செகசிற்பியரின் ஜூலியஸ் சீசர் என்னும் நாடகத்தி;ன் ஒரு பகுதியை.

அஞ்சினர்க்குச் சமமரண மஞ்சாத நெஞ்சத்து
ஆடவனுக் கொருமரண மமனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந்
துன்மதி மூடரைக் கண்டாற் புன்னகை கொள்பவன்
யான்

என மூலச்சுவை குன்றாது, அழகு தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளமை அடிகளின் மொழி பெயர்ப்புத் திறமையை தந்துள்ளமை அடிகளின் மொழி பெயர்ப்புத் திறமையை விளக்கி நிற்கிறது. அதனுடன், ஆங்கில வாணி என்னும் பாட்டிடையிட்ட உரைத்தொடர் நிலையானது, ஆங்கில மொழிக் கவிநயத்தினைத் துய்த்திட ஆங்கிவ மொழிப் புலமையற்றவர்களை ஆற்றுப் படுத்துவதாய் அமைந்துள்ளது.

நவநீத கிருஷ்ண பாரதியார் பாடிய தனிச் செய்யுள்களின் தொகுப்பாகிய உலகியல் விளக்கம் என்னும் நூலில் பதிப்பாசிரியராய் விபுலானந்த அடிகள் பணியாற்றியுள்ளார். அடிகளின் பதிகத்தினையும், கடவுள் வாழ்த்தினையும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட முன்னுரையினையும் கொண்டு 1922 இல் வெளியிடப்பட்ட உலகியல் விளக்கமானது, தமிழ் இலக்கியப் ப+ங்காவை அழகு செய்யும் மலர்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

இராம கிருஷ்ண சங்கத்தின் ஆங்கில மொழி இதழ்களான வேதாந்த சேகரி, பிரபுத்த பாரதம் என்பவற்றின் ஆசிரியராய்ப் பணி புரிந்த அடிகள், அவற்றிலே தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் தமிழ்ப்புலவர்கள் பற்றியும் ஆராய்ச்pசக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர்கள் சிலரின் ஆக்கங்கள் மொழி பெயர்க்கப்பட்டு மேற்படி இதழ்களிலே வெளியிடப்பட்டன. இவற்றின் பிறமொழி பேசுவோரும் தமிழ் மொழியின் பெருமையினை அறிந்து போற்றிட வழி ஏற்படலாயிற்று.

திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்

என்னும் பாரதியின் வேட்கை, இங்கு நிறைவு பெறுவதைக் காண்கிறோம்.

அடிகள் ஆற்றிய தமிழ்த்தொண்டுகளுள் இசைத் தமிழ் நூலாகிய யாழ் நூலை ஆக்கிய அளித்தமையே உயர்ந்து, சிறந்ததாய்த் திகழ்கிறது. தமிழ் இசைக் கலை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விரித்து விளக்கும் இந்நூல், சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையிலே யாழாசிரியர் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்குமான விளக்கமாய் அமைந்திருக்கிறது வழக்கொழிந்து போன இசை நூல் இலக்கணத்தை வகுத்துரைப்பதாகவும் பண்களின் உருவத்தை விளக்குவதாகவும் பண்களை இசைத்தற்கு வேண்டிய அலகு நிலைகளுக்குரிய விளக்கத்தினைத் தருவதாகவும் அமைந்துள்ள யாழ். நூலானது, பழந்தமிழ் இசைமரப்பிற்கு புத்துயிர் அளிக்கும் உயரிய நூலாகப் போற்றப்படுகிறது. வில்யாழ், பேரியாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் ஆகியவற்றினையிட்ட பொதுவான விளக்கத்தினையும், சகோடயாழினையிட்ட சிறப்பான விளக்கத்தினையும், யாழ் நூலிலே காணலாம். சகோடயாழின் வடிவத்தினையும் இயல்பினையும் இயக்கத்தினையும் வெகு நுட்பமாக விளக்கி நிற்கிறது. அத்துடன் தேவாரப் பதிகங்கள் முழுவதற்குமான யாப்பமைதி, கட்டளையமைதி சுவையமைதி முதலியவற்றினை விளக்கி அவ்வற்றிகுரிய பண்களின் உருவங்களையும் தந்து நிற்கும் இந் நூலானது, தேவாரங்களைப் படிப்போர்க்குப் பேருதவியாக அமைந்திருக்கிறது. அடிகள் தமக்கிருந்த பூதநூலறிவையும் கணித நூலறிவையும் முத்தமிழ்ப் புலமையுடன் ஒன்றிணைந்து ஏறத்தாழப் பதினான்கு ஆண்டுகளாய் மேங்கொண்ட ஆராய்;ச்சியிள் பயனாகப் பாரதியார் ஆதித்த இறவாத புகழுடைய புதுநூல்களுள் ஒன்றான யாழ்நூல் என்னும் அருங்கலை நிதியமானது 1947 ஆம் ஆண்டு ய+ன் 5ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது.

நாடகத் தமிழ் வளர்ச்சிக்கும் அடிகள் தமது பங்களிப்பைச் செய்துள்ளார். ஆங்கிலம் என்னும் மொழிகளில் அடிகள் கொண்டிருந்த புலமை, மதங்க சூளாமணி என்னும் நாடகத் தமிழ் நூலின் ஆக்கத்திற்குப் பெரிதும் உதவிற்று. இந் நூலின் முதலாம் இயலாகிய உறுப்பியல்களிலே, தமி;ழ் இலக்கண இலக்கியங்கள் கூறும் நாடகத் தமிழ் பற்றிய கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் இயலாகிய எடுத்துக் காட்டியலிலே ஆங்கில நாடகாசிரியரான கெசசிற்பியரின் பன்னிரண்டு நாடகங்களின் சிறப்பியல்புகள் விளக்கப்பட்டுள்ளன. மூன்றாம் இயலாகிய ஒழிபியலிலே ஆரியமொழிப் புலவர் தனஞ்சயன் முதலானோர் நாடகம் பற்றிக் கூறியுள்ள கருத்துகள் தரப்பட்டுள்ளன. ஆரியம், ஆங்கிலம், செந்தமிழ் என்னும் மும்மொழிகளையும் ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்து அவை, நாடகமரபு பற்றிக் கூறும் கருத்துக்களைக் கண்டறிந்து எழுதப்பட்ட நாடகத் தமிழ் நூலாம் மதங்க சூளாமணியானது 1926 ஆம் ஆண்டில் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

மகாகவி பாரதியின் படைப்புகளைப் பழைய மரபிலே வந்த அறிஞர்கள் ஏற்க மறுத்த காலத்திலே, பாரதியாரின் பெருமையினை இனங்கண்டு அறிந்துகொண்ட விபுலானந்த அடிகள், பாரதி கழக மொன்றினை அமைத்துப் பாரதி பாடல்களை இசையுடன் பாடுவித்து, பாரதியாரின் பெருமையினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வழி செய்தார். இதன் பின்னரே பாரதியின் புகழ் தமிழகமெங்கும் பரவத் தொடங்கியது. அடிகள் ஆற்றிய இத் தமிழ்த்தொண்டானது, தமிழ்ச் இலக்கியப் போக்கில் ஒரு திருப்பு முனையாய் அமைத்துவிட்டது. இதனால் பாரதியுகம் விரிந்து பரந்திட வழி ஏற்பட்டது.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்;த்தல் வேண்டும்

என மகாகவி பாரதி விரும்பினார். இதனை நடைமுறைப்படுத்துவதற்குக் கலைச்சொற்கள் இன்றியமையாதவையாய் இருந்தன. இதனை விபுலானந்த அடிகள் உணர்ந்தார். இதன் பயனாக அடிகளைப் பொதுத்தலைவராகவும் அறிஞர்கள் பலரை உறுப்பினர்களாகவும் கொண்ட சொல்லாக்கக் கழகம் ஒன்று 1934 ஆம் ஆண்டிலே அமைக்கப்பட்டது. இக் கழகத்தின் அயராத பணியினால் கலைச் சொற்கள் என்னும் அகராதி நூலொன்று 1938 ஆம் ஆண்டில் வெளியிடப்படலாயிற்று. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட இந் நூலில் பதினாயிரம் கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இக் கலைச் சொற்களைப் பயன்படுத்தி,

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

நூல்கள் பல, புதிது, புதிதாக ஆக்கப்படுவதனைக் காணும் போது அடிகளின் இத் தமிழைத் தொண்டினைப் பாராட்ட வேண்டியவர்களாயிருக்கின்றோம்.

இவ்வாறு விபுலானந்த அடிகள், முத்தமிழ் வளர்ச்சிப்பணியில் அயராது பாடுபட்டு, செந்தமிழ்ன் சிறப்பினை வெளிநாட்டவர் போற்றிடவும் பிறநாட்டு இலக்கியச் செல்வங்களைத் தமிழ் நாட்டவர் போற்றிடவும் வழிசெய்து, இறவாத புகழுடையது புது நூல்களை ஆக்கி அளித்து, மகாகவி பாரதியின் புகழினை பாரறியச் செய்து பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியிற் சேர்ந்து உழைத்துத் தமது இறுதி மூச்சிருந்தவரை, சீரிய தமிழ்த் தொண்டாற்றியுள்ளமையைக் காண்கிறோம்.

கலையருவி கணபதிப்பிள்ளை

த. சண்முகசுந்தரம்

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது தமிழ்ப்பேராசிரியராகவும் கலைப்பீடாதிபதியாகவும் இருந்தவர் பேராசிரியர் கந்சாமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை. தந்தையார் பருத்தித்துறையைச் சேர்ந்த தும்பளையில் ஆயுர் வேத வைத்தியராக இருந்தார். 1903 ஆம் ஆண்டிலே தோன்றிய கணபதிப்பிள்ளை தம் தந்தையாரின் மேற்பார்வையில் தமிழ் கற்றார். பின்னர் இவர் தும்பளை நான்மறையோன் மகாதேவையர் முத்துக்குமாரசுவாமி ஐயரிடம் வடமொழியையும் தமிழையும் பழைய மரபுவழி கற்றார். பின்னர் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் ஆங்கிலம் கற்றுத் தேறினார். அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே சேர்ந்து வடமொழி, பாளி ஆகியவற்றைக் கற்று இலண்டன் பல்கலைக்கழகக் கலைமானி சிறப்புத் தேர்வில் முதலாம் வகுப்பிலே தேறினார்.

புகழ்பெற்ற தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் மகனும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கிங்ஸ்பரி தேசிகரின் பணிப்புப்படி அண்ணாமலை பல்கலைக்கழகஞ் சென்று விபுலானந்த அடிகளார், சொல்லின் செல்வர். இரா. பி. சேதுப்பிள்ளை ஆகியோரிடம் கற்று வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகம் புகுந்து மொழியியல் விற்பன்னர் இரால்பு இரேணர் என்பார் வழிகாட்ட ஆராய்ச்சி செய்து கலா நிதிப்பட்டம் பெற்றார். 1936ஆம் ஆண்டில் ஈழம் திரும்பிய கலாநிதி கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே சேர்ந்து விரிவுரையாளராய்ப் பணிபுரிந்தார். ஈற்றில் பேராசிரியராய்ப் பணிபுரிந்தார். 1963 இல் இப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1963 ஆம் ஆண்டிலே மறைந்தார்.

பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தலைசிறந்த ஆராய்ச்சியாளர் : பட்டதாரி மாணவருக்குத் தமிழைத் திறம்படச் சொல்லிக்கொடுத்தார். ஆராய்ச்சி மாணவருக்கு ஒப்பில்லாத வழிகாட்டியாகவும் இவர் திகழ்ந்தார். தமிழ் ஆர்வத்தை அப்போதைய மாணவரிடம் பரப்பினார். அதுமட்டுமன்று, இவர் சிறந்த நாடகாசிரியர். சேந்தமிழ்ச் செய்யுள் பலவற்றையும் அவ்வவ்போது தீட்டினார். ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார். மேலையந்தேயத்துப் புனை கதைகளைத் தமிழில் வடித்துக் கொடுத்தார். சிறந்த வானொலி பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தார். சாசனவியல் ஆராய்ச்சியில் இவருக்குப் பெரம் புலமை இருந்தது. ஈழத்து மக்கள் கலை மறுமலர்ச்சியின் ஈடு இணையற்ற முன்னோடியாக இவர் திகழ்ந்தார். ஆகவே, இவரின் நல்லாசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளை இவரைக் கலையருவி என அழைப்பதிற் பெருமை கொள்வார். வற்றாத அருவி இவரது கலைப்புலமை பாய்ந்து கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்தில் இவர் தொடர்ச்சியாக 29 ஆண்டு நற்பணி புரிந்து வந்தார். ஆகவே இவரின் பல்கலைக்கழகத் தமிழ்த் தொண்டு பற்றி முதலில் ஆராய்வதே பொருத்தம். ஆந்தக் காலத்துத் தமிழ் மாணவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பது பொறுப்பான அலுவல். அவர்களுக்கு “டமிள்’’ தெரியாது பிரித்தானியப் பேரரசு தன் ஆட்சியை இலங்கையில் நடத்திய காலம் அது. எங்கும் ஆங்கிலம். நுடை உடை பாவனை பேச்சு எல்லாம் ஆங்கில மயம்.. அப்படியான நிலையில் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அந்தக் காலத்துத் தமிழர் நிலையைப் பேராசிரியரே தனக்குரிய பாணியில் தாளித்த சுவையான தமிழில் சொல்வார் “பலாப்பழம்’’ உண்பதற்கு மேசைக்கத்தி, கரண்டி, முள்ளுத் தேடியலைந்த மாந்தர் வாழ்ந்த காலம் அது தமிழைப் போதிப்பதுடன் மட்டும் நில்லாமல் இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச் சங்கமூலம் தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப் பண்பாட்டில் நாட்டத்தையும் ஏற்படுத்தினார். இலங்கைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச் சங்க ஏடாகிய இளங்கதிர் உருவாக இவர் முன்னின்று உழைத்தார். தமிழ் நாடகங்களை எழுதிப் பட்டதாரி மாணவர்களைக் கொண்டு நடிக்க வைத்தார். இப்படி இவர் பல்கலைக்கழக மட்டத்தில் புரிந்த பணி இம்மட்டன்று.

இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி முழுமையான பல்கலைக்கழகமாக 1942 இல் மாறியது. இதன் முதலாவது தமிழைப் பேராசிரியராக இருந்தவர் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள். எமது நாட்டில் தேவைக்கு,தழிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் தமிழ்க் கல்வி நெறியினை மாற்றியமைக்க விபுலானந்தருக்கு உறுதுணையாகக் கணபதிப்பிள்ளை நின்று உழைத்தார்.பல்கலைக்கழகப்பட்டப்பின்படிப்பிற்குரிய ஆராய்ச்சிகளில் குறிப்பாக ஈழம் பற்றிய ஆராய்ச்சிகளில் மாணவர் ஈடுபட வேண்டும் என்பதை வற்புறுத்தி அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை பேராசிரியர் கணபதிப்பிள்ளையையே சாரும். இன்று ஈழத்துப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகளிலிருந்து தமிழ்த்தொண்டு புரிகின்ற பேராசிரியர்கள் யாவரும் கணபதிப்பிள்ளை என்ற “அச்சிலே வார்த்து எடுக்கப்பட்டவர்கள்” இறுதிவரை தம்மைத் தமிழ் மாணாக்கனாகவே கருதி வந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை தாமும் கற்றார், மற்றையோரையும் கற்கும்படி தூண்டினார். வழிநடத்தினார், தாமும் நடந்து காட்டினார். மேற்பார்வை செய்தார். தம் மறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதே இவரின் குறிக்கோள். துமிழ்ச் சாசனவியல் ஈழத்திலே நன்கு வளர உழைத்தவர் பேராசிரியர்.

ஆராய்ச்சியாளர் நடுவே இவர் பெரும் பொலிவுடன் திகழ்ந்தார். அதே நேரத்தில் தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பொதுமக்களை இவர் ஒரு போதும் மறந்ததில்லை மக்கள் இல்லாமல் மொழி இல்லை: பண்பாடு இல்லை என்பது இவரின் கோட்பாடு ஆகவே, இவர் புதிய துறைகளில் ஈடுபட்டு தளர்ச்சியுற்றிருந்த தமிழ் அன்னைக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் உழைத்தார். தம் நல்லாசிரியர்களான கிங்சுபரி அடிகளார் (அழக சுந்ததேசிகர்) விபுலானந்த அடிகளார் ஆகியோரைப் பின்பற்றி ஆக்க இலக்கிய முயற்சியிலும் பேராசிரி;யர் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறைக்கே சிறப்பான பேச்சுத் தமிழில் இவர் எட்டு நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவற்றுள் ஆறு நாடகம் இருநாடகம் என்ற பெயரில் அச்சில் வந்தன. யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னன் சங்கிலியை நாடக நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாடகம் சங்கிலி இதன் நீண்ட முன்னுரை ஆராய்ச்சி மாணவருக்கு அரிய விருந்து. ஈழத்துத் தமிழ் மக்களின் மத்தியில் இந்த நாடகம் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இரத்தினாவளி என்னும் வடமொழி நாடக நூலை மாணிக்கமாலை என்ற பெயரில் மிகவும் நல்ல செந்தமிழ் மொழிபெயர்த்தனர். இந்த நூல் இங்கிலாந்துப் பல்கலைக்கழக தேர்விற்குப் பாட நூலாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுத் தமிழில் நாடகத்தை எழுதிப் புது வழியை ஏற்படுத்திய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை இத் துறையில் முன்னோடியாய் இருந்தார் என்ற பாராட்டைப் பெற்றார்.

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று யாராவது பேசினால் அல்லது இந்தக் கருத்துப்படப் பேசினால் பேராசிரியர் கணபதிப்பிள்ளை பொங்கி எழுந்து விடுவார். புதிய துறையில் எல்லாம் தமிழ் வளர வேண்டும் என்பதும் பேராசியரின் இலட்சிய வெறி. ஆங்கிலேயரின் சிறந்த படைப்புகளை யாராவது அவ்வப்போது மொழிபெயர்த்து வெளியிட்டால் அந்த முயற்சியை அவர் பாராட்டுவார். ஆங்கில மொழியில் உள்ள இலக்கிய நூல்களைப் போல ஐரோப்பிய மொழிகளில் உள்ள படைப்புக்களை எல்லாhம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை வற்புறுத்துவார் பேராசிரியர். இதனாலேதான் செருமானிய மொழியில் தியோடர் சுதோம் என்பவர் எழுதிய இம்வென்வே என்ற நூலைப் ப+ஞ்சோலை என்ற பெயரிலே தழுவி எழுதி வெளியிட்டார். தப+ என்பவர் பிரஞ்சு மொழியில் எழுதிய இரட்டையர் என்ற நூலை வாழ்க்கையின் வினோதங்கள் என்ற பெயரில் எழுதி அச்சேற்றினார். இத் துறையில் மேலும் உழைக்க வேண்டும் என்பது இவரின் பேரவா. இந்த முயற்சி கைவிடவில்லை. இவரின் தமிழாக்கங்கள் சில கையெழுத்துப் பிரதிகளாகவே முற்றுப் பெறாத நிலையில் இருக்கின்றன.

குழந்தை இலக்கியத்தில் பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் ஈடுபாடிருந்தது. பாரதியாரின் பாப்பாப் பாடல்களுக்கு இவர் அருமையான விளக்கம் கொடுப்பார். இலங்கை வானொலியில் குழந்தைகளுக்குக்கான நிகழ்ச்சிகளை அவ்வப்போது தயாரித்து ஒலிபரப்பி வந்தார். பஞ்ச தந்திரக் கதைகளைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் எழுதி ஒலிபரப்பி வந்தார். இந்த எண்ணம் பேராசிரியரின் உள்ளத்தில் எப்போதும் கொழுந்து விட்டு எரிந்தது. ஐரோப்பாவைச் சேர்ந்த “ குழந்தைப் பிள்ளைக் கதையாளர்” செய்த முயற்சி யாவற்றையும் பாராட்டுவார்.

அந்தேசன் என்பார் எழுதிய சிறுமி நூலைத் தமிழ் மரபுக்கு ஏற்றவாறு நீரா மங்கையர் என்ற பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான கதைகளை வெளியி;ட முயற்சி செய்தார். இது கை கூடவில்லை. இதுவும் கையெழுத்துப் பிரதியாகவே இருக்கிறது.

பண்ணிசை, நாட்டார் பாடல், கூத்து என்பவற்றிலும் பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பெரும் ஈடுபாடிருந்தது. இவர் பெரிதும் விரும்பிக் கற்கின்ற நூல்களில் ஒன்று சிலப்பதிகாரம், சிலப்பதிகார வரிப்பாடலில் பெரிதும் உள்ளத்தைப் பறி கொடுத்தவர் பேராசிரியர். இந்தப் பாடல்களைப் பின்பற்றி அவர் எழுதிய பாடலில் ஒன்று.

கருவிழிகள் தனைநோக்கிக் காதலினாற் கட்டுண்டு
சிறுமிநின தழகினிற் சிக்கினேன் காணெண்றாய்
சிறுமியென தழகதனிற் சிக்கநின்றா யாமாகில்
கருவிகள் தாம்வாடிக் கவினழிந்து போங்காலும்
திருவினையா யென்றழைத்துச் சேர்ந்தெனை நீ
அரவணைப்பாயே

அண்ணாவிமார், கூத்துப்புலவர் ஆகியோர் எல்லோரையும் பேராசிரியர் பாராட்டுவார். நாட்டார் பாடல்களை “இழிசனர் வழக்கு’’ என எள்ளி நகையாடியவர் வாழ்ந்த காலம் அது. நாட்டார் இலக்கியம்,மக்கள்கலை, கூத்து என்பவற்றில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் கணபதிப்பிள்ளை, ஈழத்திற்கே சொந்தமான கண்ணகி வழக்குரையை 1953 ஆம் ஆண்டிலே வார இதழ் ஒன்றில் தொடர்ச்சியாக வெளியிட்டார். ஆனால், அத்தொடர் நிறைவு பெறவில்லை. மக்கள் கலைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. இவரின் ஆர்வத்தினால் தூண்டப்பெற்ற பேராசிரியர். சு. வித்தியானந்தன் இந்த நாட்டு மக்கள் கலைக்கு ஆற்றிய தொண்டு இன்று நாடறிந்த அலுவல்.

தனித்தமிழ் இயக்கம் ஈழத்திற் பரவ வேண்டும் என்பதற்காகப் பெரிதும் உழைத்தவர் பேராசிரியர். இதனால் இவருக்குப் பலத்த எதிர்ப்பும் இருந்தது. கணபதிப்பிள்ளை என்ற பெயரை மாற்றி ஈழத்துக் குமூஉ இறையனார் என்ற பெயரில் கட்டுரை, செய்யுள் பலவற்றையும் எழுதினார். நாடக பாத்திரங்கள் என்பதை “ நாடகத்துள் வரும் ஆடவர் அரிவையர்’ என எழுதுவார். தம் ஆக்கங்களில் இயன்ற அளவு வடமொழிச் சொற்களை விளக்குவார். மேலை நாட்டுக்குச் சொற்கள் யாவும் செந்தமிழ் வடிவம் பெற வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பானவர். இதனைக் கடைப்பிடிக்க அவர் பெரிதும் முயற்சி செய்து வந்துள்ளார்.

“தமிழ்ப் புலவர் ஒருவர் வாழும்போதே அவனைப் பாராட்டப்படவேண்டும். இறந்த பின்னர் இந்திரனை சந்திரனே என்பதிற் கருத்தில்லை என்பது பேராசிரியரின் தளராத நம்பிக்கை இதற்காக இவர் பெரிதும் உழைத்தார். பல எடுத்துக்காட்டுக்களைத் தரலாம். ஆனால் அவற்றுள் பல எடுத்துக்காட்டுக்களைத் தரலாம். ஆனால் அவற்றுள் மூன்றை மட்டும் இங்கே குறிப்பிடலாம். திருவாசகத்துக்கு உரை கண்டுகொண்டிருந்த வெண்ணெய்க் கண்ணனார் நவநீத கிருட்டின பாரதியாரைப் பாராட்டும் விழாவில் இவர் கலந்து கொண்டார். ஐயரை வாயார வாழ்த்தினார். பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை எழுதிய இலக்கியவழி என்ற நூலை இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிற்குப் பாட நூலாக்கிய பெருமை பெரிதும் பேராசியரையே சாரும். அது மட்டன்று சக்கரவர்த்தி இராககோபாலாச்சாரியார் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் என்னும் அந்தப் பேரறிஞர் அவர் வாழும்போதே பாராட்ட்னார் பேராசிரியர்.

ஈழத்துத் தமிழியல் ஆராய்ச்சி மேலும் வளர வேண்டும் என்பதில் பெரிதும் ஈடுபாடுடையவர் பேராசிரியர். தாமும் ஆராய்ந்து எழுதினார். மற்றவரையும் ஆராய்ந்து எழுதும்படி தூண்டினார். கிட்டத்தட்ட 40 ஆராய்ச்சிக் கட்டுரைகளைப்; பல்வேறு இதழ்களுக்கு அவ்வவ்போது எழுதினார். இவற்றுள் வையாபாடல் வசனம் ஒன்று. ஈழத்துத் தமிழர் வாழ்வை ஆராய இந்த வெளியீடு பெரும் உதவியாய் இருந்தது. பன்மொழிப் புலவரான இவருக்க ஆங்கிலம், பிரஞ்சு செர்மன், சிங்களம், பாளி, வடமொழி, தெலுங்கு, துளு, மலையாளம் ஆகிய மொழிகள் நன்கு தெரியும்.

அதனுடன் வேத, ஆகம கால வடமொழியில் இவர் விற்பன்னர். இந்தப் பெரும் புலமை காரணமாய் மொழியியலை சாசனஇயலை நன்கு கற்றுத் தேறினார். மாணவருக்கு திறம்பக் கற்பித்தார். கலாநிதிப் பட்ட ஆராய்ச்சிக்கு இவர் இலண்டன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்பித்த கட்டுரை ஆழ்ந்த புலமை வாய்ந்தது. இதனை முன்னோடியாகக் கொண்டு பின்வந்தவர்கள் ஆராய்ந்தனர். இது தட்டச்சுப்பிரதியாகவே இன்றும் இருக்கிறது. அச்சிலே வரவில்லை. இந்த அரிய ஆராய்ச்சி மற்றவர்களுக்கு வழி காட்டியாய் அமைந்தது.

பா இயற்றுவதில் இவர் கைதேர்ந்தவர். காலத்திற்குக்காலம் அரிய பாடல்களை யாத்தார். இவர் எழுதியவற்றுள் அச்சில் வந்தவை காதலி ஆற்றுப்படை தூவுதும் மலரே என்பன இக் கால வாழ்க்கையைச் செந்தமிழ் மரபையொட்டிப்படம் பிடித்துக்காட்டுவது காதலி ஆற்றுப்படை தூவுதும் மலரே என்னும் தொகுப்பு நூலில் முக்கியமானவை கதைப்பாடல்கள் அவை “ சீதனக் காதை’’ விந்தை முதியோன்’’ “ தீவெட்டிக்கள்ளர்’ இன்னும் பல பாடல்கள் ஈழத்துத் தேசிய இதழ்களில் வெளிவந்தவை வெளிவந்து எல்லோர் பாராட்டையும் பெற்றன.

தம் நல்லாசிரியராம் முத்தமிழ் வித்தக விபுலானந்த அடிகளார் வழி நின்று இயல், இசை, நாடகம் ஆகியவற்றை வளர்க்க இவர் செய்த அரும்பெரும் முயற்சி போற்றப்பட வேண்டியது. சங்கப் புலவர் ஈழத்துப் ப+தன் தேவனார் தொடக்கம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வரை தமிழ் வளர்த்த பரம்பரை ஒன்று எமது நாட்டிலே இருக்கின்றது. இந்தத் தமிழ் மணிகள் வரிசையில்தான் தமிழ் அருவியெனப் பாய்ந்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை.

வற்றாத ருவிபோல, கலையருவியாக, பண்பு நிரம்பிய மனித அருவியாக ஓடிக் கொண்டிருந்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. இந்தக் கலையருவிக்குத் தன்னலம் இல்லை. தமிழ் நலம் மட்டுமே இருந்தது. ஆடல் வல்லான் மீது பெரும் அன்பு கொண்டவர் இவர். பிறர் போற்றுவதையும் துஸற்றுவதையும் பொருட்படுத்தாமல் தமிழ்ப்பணி செய்து வந்தார். 1968 ஆம் ஆண்டு மறைந்தார். தன்னடக்கமாக வாழ்ந்து தமிழ்ப் ப+ங்காவை வளம்படுத்திய அருவி வற்றியது. ஆனால் அதன் கலைப்பெருக்கி ஒருபோதும் வற்றவில்லை. இந்தப் பெருக்கு அவர் ஆக்கித் தந்த மாணவர் பரம்பரை மூலம் ஓடிக் கொண்N;ட இருக்கின்றது. பேராசிரியர் பதவியை 1947 இல் இவர் ஏற்றபோது இவரின் மாணவர் இவருக்கு வழங்கிய பாராட்;டு மடலிலிருந்து ஒரு பாட்டு.

ஓங்கிடு நற்றமிழ் மாணவர்
யாமிங் கொருங்கு கூடி
தேங்கிடு நின்கலைப் பண்போ
நிலவுக நித்த மின்றே
ஈங்குநின் சீர்தனைப் போற்றியே
வாழ்த்தை இயல்பு கின்றோட
நீங்கிடும் பல்லிடர் நிற்கும்
தமிழினி நிச்ச யமே

முத்தமிழும் நிலைத்து நிற்க உழைத்தவர் கலையருவி கணபதிப்பிள்ளை


புலவர் பெரியதம்பிப்பிள்ளை

எஸ். சிவலிங்கராஜா
(புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மண்டூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலவர் மண்டூர் வண்ணக்கர் சோ. ஏகாம்பரப்பிள்ளை அவர்களுக்கும் சின்னத்தங்கம் அம்மையாருக்கும் மகனாய் 1899 ஆம் ஆண்டு சனசரி 8ஆம் நாள் பிறந்தார்.

பத்து வயதிலே சூடாமணி நிகண்டு, கந்தபுராணம், பாரதம், திருச்செந்தூப்புராணம் முதலிவற்றைப் புலோலி சந்திரசேகர ஆசிரியரிடம் பாடங் கேட்டவர்.

ஆறுமுகநாவலரின் காவிய பாடசாலையில் கல்வி நன்கொடை பெற்றுச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் கற்றவர். விபுலானந்தரின் தொடர்பால் தம் அறிவை மேலும் வளப்படுத்திக் கொண்டவர்.

திருக்கோணமலை இந்துக்கல்லூரி, மட். ஆர்ச். சிசிலியா மகளிர் பாடசாலை, மட்ஃ அர்ச் அகுஸ்தினார் ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின் சில காலம் உபதபாலதிபராகவும் பணியாற்றியபின் மட். அரசினர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

பல பட்டங்களையும் பல மாணவர்களையும் பெற்ற புலவர் மணியவர்களின் நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவர் 18 - 9 - 1978 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.)

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளைக்குத் தனித்துவமானதோர் இடமுண்டு. மட்டுநகர் தந்த தமி;ழறிஞர்கள் சுவாமி விபுலாநந்தருக்குப் பின் விதந்து போற்றப்பட வேண்டியவர் புலவர் மணியவர்கள். புலவர் மணியின் தமிழ்த் தொண்டில் மட்டக்களப்பின் மண் வளமும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியக் கல்வி மரபும் பளிச்சிடுவதை அவதானிக்கலாம். பல்வேறு பட்டங்களையும் புகழ் மாலைகளையும் அவ்வவ்போது பெற்ற பெரிய தம்பிப்பிள்ளையவர்கள் புலவர் மணி என்ற பெயராலேயே கவரப்பட்டார். ஆதலால் அப்பெயரே அவருடன் ஒட்டி நின்று நிலைக்கும் பெயமாயிற்று.

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நிலவிய மரபு வழிக் கல்வியின் பிரதிநிதிகளாய் நாம் இருவரைத் தரிசிக்கலாம். ஒருவர் பண்டிதமணி சி. கணபதிப்பி;ள்ளை மற்றவர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை. இவ்விரு “பிள்ளை’ களும் இலங்கையின் இரு தமிழ் “ மணி’களாய் மதிக்கப்பட்டனர். முன்னவர் இன்றும் நம்மிடையே வாழ்கின்றார். புலவர்மணி 1978 இல் அமரராயினார். இவ்விரு “ மணி களும் ஒரு சாலைமாணாக்கர். ஒருவரை ஒருவர் உண்மையாய் அறிந்தவர்கள். அளந்தவர்கள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைப் பற்றித் புலவர் மணி பல இடங்களிற் குறிப்பிட்டுள்ளார். அண்மையிற் புலவர் மணி எழுதிய உள்ளதும் நல்லதம் என்னும் கட்டுரைகள் ஏறத் தாழ அவரின் வாழ்க்கை வரலாறு தான். அதிற் பல இடங்களிளல் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மரபு வழிக் கல்வியின் “ பழுத்த பழமாய்’ வாழ்ந்த புலவர் மணி மரபு வழிக் கல்வியின் கடைசிக் கொழுந்தாய் வாழும் பண்டிதமணியைப் பின்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்;டுள்ளார்.

பரீட்சை தொடங்கி விட்டது. முழுதம் வாய்ப்பாடமாகவே மறுமொழி சொல்ல வேண்டும் எழுத்துப் பரீட்சையேயில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து முடிந்தது பரீட்சை. புள்ளி அடிப்படையிற் கண்ட பரீட்சை முடிவில் சி. கணபதிப்;பிள்ளை திறமைச் சித்தியில் முதலாமிடம் பெற்றார். எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது.
சி. கணபதிப்பிள்ளையும் நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகளில் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள். அவர் சற்றே மூத்தவர். எங்களுள் அக்கிர ப+சை ( முன்னீடு) பெறுவதற்கு உரியவர் அவரே,

என்று குறிப்பிட்டுச் சொல்லுவதிலிருந்து புலவர் மணியின் “ஆழ்ந்தகன்ற புலமை’ யை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

புலவர்மணியவர்கள் தமிழை மரபு ரீதியில் வரன் முறையாகக் கற்றவர். யாழ்ப்பாணம் புலோலிய+ர் சந்திர சேகர உபாத்தியரிடம் தொடங்கிய இவரது தமிழ்க் கல்வி, வண்ணார் பண்ணைக் காவிய பாடசாலையிற் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் முற்றிப் பழுத்துக் களியாகியது. மட்டக்களப்புப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் கல்வி உரத்தைக் கனிவாக வளர்த்தவர் புலவர்மணியவர்கள் எனலாம்.

ஆழ்ந்த தமிழ்ப் புலமையின் வெளிப்பாடுகளில் ஒன்றாக “ குருபக்தி’’ யைப் புலவர்மணியிடம் நிரம்பக் காணலாம். “ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்ற ஆன்றோர் வாக்;குக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் புலவர்மணி. தமது பகவக்கீதை வெண்பாவில் தமது குருவணக்கத்தை மிகச் சிறப்பாகச் செலுத்தியுள்ளார். 19 ஆம் நூற்றாண்டின் பழம்பெட்டி எனத் தம்மை அறிமுகஞ் செய்யும் புலவர்மணி தமது ஆசிரியர்களை அப்பழைமைப் பாணியிலேயே நினைவு கூறுகிறார்.

சந்திரசேகர உபாத்தியாயர், குமாரசுவாமிப்புலவர், விபுலானந்தர் ஆகியோரை அவர் வணங்கியே பகவத்கீதை வெண்பாவைப் பாடுகிறார்.

வண்மைத் தமிழ்க்கு வரம்பு வடமொழியின்
உண்மைத் தெளிவுக் குரையாணி - கண்மணியென்
சுன்னைக் குமார சுவாமிப் புலவனடி
சென்னிக் கியான்செய் சிறப்பு

புலவர்மணியின் புலமையை அளந்தறிய இக்குரு வணக்கத்தைப் “பதச்சோறாகக்’ கொள்ளலாம்.

பல்வேறு யாப்பு வடிவங்களையும் கையாண்டு செய்யுள் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் புலவர்மணி. இது காவிய பாடசாலை வழங்கிய நன்கொடையெல்லாம். பல வகையான யாப்பு வடிவங்களிலும் பரிச்சயம் இருந்தபோதும் வெண்பா யாப்பில் புலவர் மணிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. விபுலானந்தருக்கு யாழ்நூல் பெருமை தேடித் தந்ததுபோலப் புலவர்மணிக்குப் பகவத் கீதை வெண்பா பெருமை தேடித் தந்தது. புலவர் மணியின் ஆக்கங்களுள் காலங்கடந்தும் நின்று நிலைக்கப்போவது பகவத்கீதை வெண்ணபா எனலாம். புலவர்மணி பகவத்கீதையை வெண்பாவாகப் பாடுவதற்கு மூலபாடமாகப் பாரதியாரின் பகவத் கீதையையே கையாண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமொழி ஆங்கிலம் இவற்றிலும் புலவர்மணி கணிசமான புலமையைப் பெற்றிருந்தபோதும் மிக அடக்கமாகத் தமது மொழிபெயர்ப்புப்பற்றி முகவுரையில் குறிப்பிட்டமை அவரது சத்திய நேர்மைமையே சுட்டுகிறது எனலாம். பகவத்கீதை வெண்பா பிறந்த கதையைப் பகவத்கீதை வெண்பா முதலாம் பாகத்தில் (கருமயோகம்) விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் மணியவர்களிடம் தமிழ்ப்புலமை சிறந்து காணப்பட்டமைக்கு அவரது பிறந்த ஒரு காரணம் கவிதை ஏற்ற இயற்கைச் சூழலம் பண்பாட்டுப் பாரம்பரியப் பின்னணியும் மட்டு நகரின் கொடைகள். தம் பிரதேசத்தைப் பற்றி ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுவார்.

…. என்னைப் பெற்ற தாய்நாட்டிலே, இயலிசை நாடக
அமைதிகள் இயல்பாகவே அமைந்துள்ள இனிய
நாட்டிலே, நிலவளம்போல் மனவளமும் வாய்ந்த
மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாநாட்டிலே ……….

உண்மையான ஒரு புலவனுக்கு இருக்க வேண்டிய தாய்நாட்டுப் பற்றுப் புலவர் மணியிடம் நிரம்பக் காணப்பட்டது. இப்பற்றே இவர் தமது பன்முகப்பட்ட கல்விப்பணியைத் தம் நாட்டிற்கு வழங்க மூலகாரணமாக அமைந்தது. புலவர் மணியினுடைய கவிதை நூல்கள் பல வெளி வந்துள்ளன. அவர் இயற்றிய தனிப் பாடல்கள் பல மிகப் பிரசித்தம் வாய்ந்தவை. புலவர் மணியின் தேசிய நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அமைந்த இலங்கை மணித் திருநாடெங்கள் நாடே’’ என்ற பாடல் நாடறிந்த பாடலாகும். புலவர்மணி, பகவக்கீதை, வெண்பா ( கரும யோகம், பக்தியோகம், ஞானயோகம்) சீவகசிந்தாமணி ( பாலசரிதை நாடகம்) விபுலானந்தர் மீட்சிப்பத்து, மண்டூர்ப் பதிகம், சொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுரர் பதிகம், சிற்றாண்டிப் பதிகம், மாமாங்கப்பதிகம், சர்வ சமய சமரசப் பதிகம், இலங்கைப் புகையிரதப் பெருவிபத்து 1923 முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவை அவ்வவ்போது அச்சு வாகனம் இவர்ந்தவை அண்மையில் புலவர்மணி கவிதைகள் என்ற பெயரில் இவை தொகுப்பாக வெளிவந்துள்ளன.

புலவர்மணியின் செய்யுள்கள் 18ஆம் 19ஆம் நூற்றாண்டின் தன்மையனவாய்ப் பெருமளவு அமைந்த போதும், குறிப்பிடத்தக்க சமகாலச் சமூக சிந்தனையுடையனவாகவும் காணப்படுகின்றன. இலங்கை முழுவதற்கும் உணவளிப்போம். கூட்டுறவு, பொருட் காட்சி போன்ற பாடல்களை வகைமாதிரிக்குச் சுட்டலாம்.

புலவர் மணியின் பாடல்கள் பல, சிலேடை நயம் பொதிந்தவை. “ நெல்லும் அசீஸ்துரைக்கு நேர்’’ என்று முடியும் சிலேடை வெண்பா காளமேகப் புலவரை நினைவ+ட்டுவதாய் அமைந்துள்ளது. “சட்டம்” என்ற தலைப்பில் புலவர் மணியின் கவிதைத் தொகுப்பில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அப்பாடல்.

சட்ட மென்பது வேசரி யேயதைக்
தழுவி நிற்கிறது வேசரி பேயிட்ட

என்று தொடங்கிச் சிறப்பான சிலேடைப் பொருளைத் தருகின்றமையை அவதானிக்கலாம். நாயக்கர் காலப் புலவர்களைப் போலச் சந்தர்ப்பங்களுக்குத் தக்க வகையில் சிறப்பாகவும் நையாண்டியாகவும் பல பாடல்களைப் புலவர் மணி பாடியுள்ளார். புலவர் மணியின் கவிதைகள் பிறந்த கதையை அவருடனிருந்தே சொல்லக் கேட்பது இன்பமளிப்பதாகும்.

புலவர் மணியின் உரைநடையும் தனிதன்மை வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கிய “உரம்’’ அவர் உரை நடைக்கு உதவியாக அமைந்திருக்கலாம்.’’ “ எளிய பதம் எளியநடை என்ற வகையிலேயே இவரது கட்டுரை நடைசெல்லும். இவரின் சிற்சில இடங்களில் பண்டிதமணியின் உரைநடைக்கு ஒப்பானதாகவும் அமைந்திருக்கிறது. புலவர்மணியின் உரைநடை ஒரே சீரானதாகவன்றிக் காலதேச வர்த்த மானங்களுக்குத் தக வளைந்தும் நெகிழ்ந்ததும் ஏறியும் இறங்கியும் செல்லும் தன்மையுடையது அவரின் நடையின் தனிச் சிறப்பே அதுதான் “ உணர்வு’ க்குப் புலவர்மணி முக்கியத்துவம் கொடுத்தார் என்று கொள்ளலாம்.

1913ஆம் ஆண்டு எனக்கு வயது பதினாலு ஆங்கிலத்தில் ஒரேழுத்தும் தெரியாது. முதலாம் வருட வகுப்பில் சேர்ந்து கொண்ட என்னை அவ்வகுப்பிலுள்ள சிறுவர் சிறுமியர் அண்ணாந்து பார்க்கிறார்கள் பெரிய உருப்படி: சுன்னக்கொண்டை: சட்டையில்லை : கிளுகிளுத்துச் சிரிக்கிறார்கள். இதென்ன கருநாடகமென்று.

புலவர்மணியின் உரைநடைக்கு இதை ஒரு வகை மாதிரியாகக் கொள்ளலாம். பல்வேறு தலைப்புக்களிலும் இவர் எழுதும்போது விடயத்திற்குத் தக்கதாக உரை நடைமுறையினையும் மாற்றியமை சிறப்பாகக் குறிப்பிடக் கூடியது.

புலவர்மணியவர்களின் உரைநடைச் சிறப்பினை இவரது மேடைப்பேச்சுக்களிலே சிறப்பாகக் காணலாம். “ மட்டக்களப்புப் பகுதியில் புலவர்மணி ஏறாத மேடையுமில்லை பேசாத பேச்சுமில்லை’’ என்று கூறுவார்கள் இலக்கிய இரசனை சொட்டச் சொட்டப் புலவர்மணி பேசும் பொழுது வள்ளுவரின் “கேட்பார்ப் பிணிப்பக்கேளாரும் வேட்ப’’ என்ற குறளுக்கு இலக்கணத்தைக் கண்டு கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், சந்திரகேர ஆசிரியரிடமும் பெற்ற பயிற்சி உரையாசிரியர் என்ற வகையில் உதவியது போலவே’’ “நயம்பட உரைக்கும்’’ ஆற்றலையும் வழங்கியது எனலாம். இச் சிறப்புக்கு உறுதுணையாக இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தமையும் குறிப்பாக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராய் வாழ்ந்தமையும் அமைந்தன எனலாம். கற்பிக்கவும் கற்பிக்கவும் கற்பித்த பேராசானல்லவா அவர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வாழ்வு புலவர் மணிக்குப் “பட்டை தீட்டியது’’ எனலாம். இதனாற்றான்போலும் எஸ். டீ. சிவநாயகம் “ புலவர்மணி ஒரு வைரவமணி’’ எனக் குறிப்பிட்டார். அவரின் கூற்று நூற்றுக்கு நூறு பொருத்தமானதே.

புலவர்மணி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்த போதிலும் அவரின் ஆளுமை புலப்பட ஆசிரியப் பணி வாய்ப்பாய் இருந்தது. புலவர்மணியைப்பற்றி அவரது “உள்ளதும் நல்லதும்’’ என்ற நூலில் முன்னுரையில் எஸ்.டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத் தக்கது அனைவரும் அறிய வேண்டியது.

ஆவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்தமொழி பெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த இலக்கிய ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த பக்தர், சிறந்த நண்பர், சிறந்த சீர்திருத்தவாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகையாளர்.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வகையிலும் சிறப்புற்று வாழ்ந்தத புலவர் மணி இலக்கியமும் சமூகமும் ஒன்றே என்ற உணர்வோடு இவ்விரு பணியையும் ஒன்றாகக் கருதியே வாழ்ந்து வந்தனர். மட்டக்களப்பு மண்ணின் தனித்துவம் பேணிய அதே வேளையில் புலவர்மணி பிரதேசம் கடந்த கேண்மையுடனும் நட்புடனும் பண்புடனும் வாழ்ந்தார். இதனால் இவரின் புகழும் நாடு பரந்த, நாடுகள் கடந்த புகழாயிற்று.

ஈழத்து இலக்கிய வரலாற்றினை எழுதப் புகுவோர் மட்டக்களப்பையும் புலவர் மணியையும் மறத்தல் கூடாது என்பதற்காகவே புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணி மன்றம் குன்றா உழைப்பையும் குறையா ஊக்கத்தையும் கொண்டு செயற்படுகின்றது எனலாம். புலவர் மணி இந்தத் தலைமுறையின் தலைமக்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே.

தமிழ்த்தூதர்
தனிநாயக அடிகள்

வித்துவான் ச. அடைக்கலமுத்து

(தனிநாயக அடிகளாரின் இளமைப் பெயர் சேவியர் என்பதாகும். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர் காவற்றுறையிலும் யாழ். பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார். குருமாணவராகச் சேர்த்து கொழும்பிலும் உரோமாபுரியிலும் சமயக் கல்வியைக் கற்றுத் தேறிக் குருவானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றார். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தனிநாயகமெனப் பெயர் புனைந்து கொண்டார். தமிழ் அறிவும் தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய்ப் பிறநாடுகளுக்குச் சென்று தமிழின் சிறப்புக்களையிட்டு உரைகள் நிகழ்த்தினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுரை ஆற்றினார். தமிழ்த்தூது, ஒன்றே உலகம் என்ற தமிழ் நூல்களையும் எழுதியதோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப் பண்பாடு என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வந்தார். தமிழாராய்ச்சி மாநாடு இவருடைய சிந்தையின் செல்வமே! 1913 இல் மலர்ந்த அடிகள் 1980 இல் இயற்கை எய்தினார்.

துமிழன்னைக்குப் பேரிலக்கியங்களைப் புனைந்த அழகு செய்தனர். புலவர்கள். இலக்கணங்களை எழுதி அவளுடைய கன்னித்தமைக்கு அழியாத பாதுகாப்பளித்தனர் அறிஞர். ஊரை நூல்களையும் சிறுகதை, நாவல்களையும் எழுதி அவளை வளப்படுத்தியோர் பலராவர். தமிழின் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒப்பியல் ஆய்விலும் ஈடுபட்டவர்களுக்கும் ஒரு சிலர் இருக்கிறார்கள்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அளவிடற்கரிய
பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளை விஞ்சி;யோர்
எவருமில்லை

எனப் பேரறிஞர் குலேந்திரன் அவர்களை குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.

ஈழ நாட்டிலும் தமிழகத்திலும் தனிநாயக அடிகளிலும் பார்க்கத் தமிழை நன்குகற்ற அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிகளாருடைய தமிழ்ப்பற்றினையும் பணிகளையும் நோக்கும்போது அவருக்கிணையான இன்னொருவரைக் கண்டு கொள்வது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தனி நாயகம் சமயக்குரு, பேராசிரியர், ஆராய்;ச்சியாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல்வீரன், உயர்ந்த இடத்தை அளிக்கும் அன்பான நட்பாளன்.

என்னை நன்கு இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே

என்ற திருமூலர்வாக்கிற் சிந்தையைப் பறிகொடுத்தவர்

உரோமா புரியில் சமய உயர் படிப்பினைப் படித்த போது ஆங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி, தமிழோசை செய்தவர் தனிநாயகம். நாற்பது மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவருடன் அவர் பயின்றபோது பரந்த உலக மனப்பான்மையும் குறையாத மொழிப்பற்றும் தமக்கு ஏற்பட்டதாய் அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் இன, மொழி, மத, தே வேறுபாடுகளின்றித் தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் பேதாற்றி அனைத்துலகிலும் அந்த நிதியங்களை அள்ளிச் சொரிந்தார். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது அவருடைய சிந்தையிற் ப+த்த செந்தாமரையாகும். ஆவர் எங்கு சென்றாலும் அற்கு இந்த அமுத வாக்கை உரைக்கத் தவறியதில்லை.

தூத்துக்குடியில் துறவியாகப் பணி புரிந்த தனிநாயகம் அவர்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். தமிழ்ச் சான்றோராய் அங்;கிருந்த ஆயர் றேச் ஆண்டகை அவர்கள். அண்ணாமலையில் சிறப்புப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டபோது தமிழ் அன்னையின் பொன் நிறமான சாயல் அவருள்ளத்தில் ப+ங்குழல் ஊதியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் எண்ணியதில் வியப்பில்லை. தூத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை அமைத்துப் பல நூல்களை அச்சேற்றி வந்தார்.

கத்தோலிக்க துறவிகள் சிலர் மொழியார்வத்தில் ஈடுபடுவதற்கான சில வாய்ப்புகள் உண்டு. கத்தோலிக்கத் துறவிகள் யாவரும் தமிழ், ஆங்கிலம்,இலத்தீன் சிங்களம் எனும் மொழிகளை அறிந்தவர்களே! தனிநாயகம் அடிகள் உரோமாபுரியில் கற்கும்போது இத்தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவருடைய ஆற்றலினால் பிரான்சியம், இஸ்பானியம், ஜேர்மன் மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக்கம், சமஸ்கிருதம், போர்த்துகேயம்,உரூசியம், மலாய் முதலான மொழிகளையும் அறிந்து கொண்டார். இவற்றால் தமிழிலக்கியங்களையும் கருத்துக் குவியல்களையும் பிற மொழிச் செல்வங்களோடு ஒப்பு நோக்குவது அவருக்கு இலகுவாயிற்று.

யாழ்ப்பாணத்தில் 1951இல் நடைபெற்ற தமிழ் விழாவில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் அவருடைய பன்மொழி ஞானம் புலனாயிற்று.

ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசை மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்கு மெனின் தமிழ் இரக்கத்தின் மொழி - பத்தின் மொழி - எனக் கூறுவதம் இனிது பொருந்தும்.

என்றும் அவர் பேச்சில் குறிப்பிட்டார்.

தமிழார்வம் கொண்ட அடிகளார் தாம் செல்லும் நாடுகளிலே தமிழின் தொன்மை, மென்மை பத்தி இலக்கியங்கள் பற்றியெல்லாம் விதந்துரைந்தார். தமிழரின் பண்பாடு பற்றி உரைகள் நிகழ்த்தினார் : கட்டுரைகள் எழுதினார்: வானொலிகளில் உரை செய்தார். அந்தந்த நாட்டு மக்கள் தமிழ் மொழியிடத்து ஆர்வமும் தமிழ்ப்பண்பாட்டில் கருத்தும் தமிழ் இலக்கியங்களில் ஆர்வமும் கொள்ள அத்திவாரமிட்டார். பல மொழிகளை அவர் அறிந்திருந்தமையால் அந்தந்த நாட்டு வரலாறும், பண்பாடு முதலியவற்றோடு தமிழ்த் திருநாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடுகளை ஒப்பிட்டுக் கருத்துக்களை உரைத்தபோது கேட்போருக்குத் தமிழில் பற்றும் தமிழ் இலக்கியக் கருத்துக்களை அறிவதில் அவாவும் பண்பாடுகளை நோக்குவதில் ஊக்கமும் ஏற்படுவது இயல்பேயன்றோ!

1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, யப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று கல்விச் சுற்றுலாச் சொற்பெருக்குகளை நடத்தினார். அப்போது தமிழிமொழி, கலாசாரம், வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுதல் நன்றென்று பலர் வேண்டினர். இதன் பயனாகத் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கத் தமிழ் பண்பாடு (வுயஅடை ஊரடவரசந) என்ற ஆங்கில முத்திங்கள் வெளியீடு ஒன்றை 1952 இல் வெளியிட்டார். முதலாவது இதழிலே பேராசிரியர் மீனாட்சி சுந்தரனார், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரநாதச் செட்டியர் முதலிய பேரறிஞர்கள் எழுதியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டு காலம் வெளிவந்து பெரும் பணி புரிந்தது.

உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தார். ஒற்றுமை அமெரிக்கா, தென்னாபிரிக்கா, யப்பான், இங்கிலாந்து போர்த்துக்கல், கனடா, இத்தாலி, சோவியத் ஒன்றியம், யேர்மனி, வியட்னாம், மேற்கிந்தியத் தீவுகள் என்பவற்றுக்குச் சென்று திரும்பினார். சில நாடுகளுக்குத் திரும்பச் சென்றதும் உண்டு. இதனால்தான் அவரைத்தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகள் எனச் சிறப்புப் பெயர் கொண்டு அன்பர்கள் அழைப்பராயினர். மேலும் தமிழ்த்தூது என்ற நூலை எழுதியமையால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவதும் பொருத்தும். தமிழர் பண்பாடே அவர் தூதின் உட்பொருளாய் அமைந்ததெனலாம். தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களை அவர் நிகழ்த்திய பேருரையொன்றில் பின்வருமாறு கூறுகிறார்.

தமிழர் பண்பாடுகள் பலவற்றை தமிழிலக்கியங்களில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப்பான்மை ஒரு கொள்கை. அதனால்தான் புறநானூற்றில் யாதும் ஊரே யாவரும் கேள{ர் என்றும் வள்ளுவத்தில் யாதானும் நாடாமல் ஊராமால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. விருந்தோம்பல் ஒரு சிறந்த கொள்கை. பிறரன்பு ஈகை, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே, எனும் கருத்து அகத்தினை புறத்தினை மரபு, மானமென்றால் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத்தூய்மை, விடாது முயலல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற மனநிலை, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட்சியம் என்பன தமிழர் பண்பாட்டில் அரிய சில கோட்பாடுகளெனக் கூறலாம்.

என உரைத்திருக்கின்றார்.

தனிநாயக அடிகள் உலகிலுள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழின் சிறப்பியல்புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் எடுத்துச் சொற்பெருக்காற்றியுள்ளார். வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் (ஐனெயைn ளுவரனநைள) என்றால் சமஸ்கிருதம் பற்றிய அறிவினையே குறிக்கும். தமிழ் இடம் பெறவில்லை. அடிகளாரின் அயரா முயற்சியால் உலகின் பல பல்கலைக்கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுவதோடு தமிழியல் துறையை அனைத்துலக அறிவுத் துறையாக்கிய பெருமையும் அடிகளாருக்கே உரியதாகும்.

“திருவாசகம் எனுந்தேன்’’ எனப் போற்றப்பெறும் திருவாசகத்தில் அடிகளாருக்கு அளவற்ற ஈடுபாடுண்டு. திருக்குறல் போன்ற ஒழுக்க நூல் உலகில் எங்கணும் தோன்றியதில்லை என்பது அவருடைய உறுதியான முடிவ. இயற்கையிலும் சிறப்பாக மலர்ச்சிகளிலும் அவருக்கு ஒரு கண். இறைவனின் கைவண்ணத்தை இவற்றில் கண்டு மகிழ்ந்தார். மலர்களைத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தியதுபோல வேறெந்த இனமும் பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அடிகளார் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். ஆயினும் தன்னந்தனியனாய் இருக்கும்போது தமிழ் நூல்களையே விரும்பிப் படிப்பர். அமெரிக்காவிலும் அவ்வாறே தாம் செய்ததாக குறிப்பிடுகிறார்.

தமிழ்த்தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் இரு நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தில் இயற்கையின் இடம், திருவள்ளுவர், தமிழர்பண்பாடும் நாகரிகமும், தமிழரின் மானிடவியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

வேற்று நாடுகளில் தமிழ் மணத்தைப் பரப்பியதோடு, ஆங்காங்குள்ள தமிழராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மொழியின் செம்மையையும் தமிழர் பண்பாடுகளையும் தெளிவு படுத்தியும் வந்தார். செக்கோசிவாக்கியா, சோவியத் நாடு என்;னும் நாடுகளுக்குச் சென்றபோது, செம்பியன், கண்ணன் என்ற தமிழ்ப் பெயர்களைக்கூடச் சிலர் தம் பிள்ளைகளுக்;கு இட்டு அழைப்பதைக் கண்டு வியப்புற்றார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் தமிழரின் ப+ர்வீக மரபுகள் இழையோடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். மேலும் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் சிதையாமலும் இன்றும் வழக்கிலிருந்து அறிந்து நயந்தார்.

தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப்பட்டு இது வரை மறைந்திருந்த தப்பிரான் வணக்கம், போத்துக்கீச - தமிழ் அகராதி என்பவற்றை விஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து முதல் நூலை அச்சேறுவித்தார். வத்திக்கான் நூற் கூடத்தை ஆராய்ந்து திருத் தொண்டர், திருமலர் என்னும் பழைய நூலைக் கண்டறிந்தார். பாரீசுப் பட்டின கூடத்தில் இன்னும் அச்சேறாத பழைய தமிழ் நூல்களும் ஏடுகளும் இருப்பதையறிந்து தமிழுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச்சேறிய முதலாவது தமி;ழ் நுலைப் போர்த்துக்கேய பொருட்காட்சி நிலையத்தில் கண்டறிந்தார். அந்நாட்டில் ஐரொப்பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவத இலக்கண நூல் கையெழுத்;துப் பிரதியாகவே இன்னும் இருப்பதையும் எடுத்துரைத்தார்.

தனிநாயக அடிகள் மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பகுதியில் விரிவுரையாளராய் இருந்த போது 1964 இல் இந்தியாவில் தலைநகரில் கலை பண்பாட்டியல் ஆய்வாளர்களின் 22 ஆவது மாநாடு நடைபெற்றது. உலகின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் தமிழ்ப் பயிற்சியுடைய பிற மொழி அறிஞர்களும் அங்கே கூடினார்கள். தமிழகத்துப் பேராசிரியர்கள், ஈழத்து அறிஞர்கள் பலர் தில்லி நகரில் கூடியிருந்த வேளையில் உலகு தழுவிய தமிழமைப்பு ஒன்றை உருவாக்க அடிகளார் முனைந்தார். இதன் பயனாக ஒரே நாளில் உலகத் தமிழராய்ச்சி மன்றம் உருவாயிற்று. அடிகளார் தனிநாயகமே அதன் செயலாளர் நாயமாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக் கொண்டனர்.

1966 இல் உலகு தழுவிய தழிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழகத்துக்கு வெளியே கோலாலம்ப+ரில் நடத்தி முடித்தமை ஓர் அரிய சாதனை என்றே கூறலாம். தமிழர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பார்கள் என்ற பழிச் சொல்லைத் துடைத்தெறிந்து உலக அரங்கில் தனது பெருமையைத் தமிழனும் உயர்த்தி வைக்க வல்லவன் என்ற புதிய வரரலாற்றைத் தொடக்கிய காலம் அது.

துனிநாயக அடிகளை மலேசிய முதலமைச்சரே பாராட்டினார். 1968 இல் தமிழ் நாட்டில் சென்னையிலும் 1970 இல் பிரான்சு தேசத்தில் பாரீசிலும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. நான்காவது மாநாடு 1974 இல் பெரிய புள்ளிகளின் எதிர்ப்பையும் அரசாங்க தடைகளையும் தாண்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அவ்வேளை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை வகித்த பேராசிரியர் வித்தியானந்தன்.

இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனிநாயக அடிகளார் சாதித்தவை எவை? துமிழ் இலக்கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தழிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்க்கே உரியது என்ற கொள்கையை இவர் தகர்த்தெறிந்து விட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்;குட்பட்டிராது பரந்த விரிந்து பல துறைகளில் விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்;ச்சியே தமிழராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்துவங்கள், தொல்பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்புகள், தமிழ் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னோரன்ன பல துறைகளிலும் தமிழராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது……… மேலும் இவரது தொண்டினால் பிறநாடுகள் பலவற்றிலுள்ள பல்கலைக்கழகங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழாராய்ச்சியில் அப் பல்கலைக்கழப் பேராசிரியர்கள் ஈடுபடுகின்றனர்……. இப்பொழுது தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப் பல்கலைக்கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்று வருகின்றது……….

எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறு தமிழியல் ஆய்வில் புதிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தும் பிற நாடுகளில் தமிழின் சிறப்பையும் பண்பாடுகளின் உயர்வையும் அறியவைத்தும் பன்மொழி அறிவால் ஒப்பியற் அறிஞர்களை அணுகியும் இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டும் எழுதியும் உரையாற்றியும் அடிகளார் செய்த பணிகளால் அவர் திருவுருவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைபெற்றுவிட்டது.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி

எம்.ஏ. நுஃமான்
(1927 - 1971) இவரது சொந்தப் பெயர் து. ருத்திரமூர்த்தி. அளவெட்டியில் சாதாரண குடும்பத்தில் 9 -1 -1927 இல் பிறந்தார். உயர்கல்வி பெற முடியாமையால் தமது 19ஆம் வயதில் ஒரு கிளாக்காகக் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்றார். 28 வயதில் திருமணம் செய்தார். மனைவியில் பெயர் பத்மாசனி, பாண்டியன் சேரன், சோழன் இளியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன் 1967 இல் இலங்கை நிருவாகச் சேவைப் பரீட்சையில் (ஊ.யு.ளு) சித்தியடைந்து மாவட்டக் காணி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடமையாற்றி 1970 இல் அரச கரும் மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பதவியேற்று மீண்டும் கொழும்பு சென்றார். 1971 ய+ன் 20 ஆம் திகதி இருதய நோயினால் மரணமடைந்தார்.

இதுவரை வெளிவந்துள்ள மஹாகவியின் நூல்கள் :

வள்ளி (1955) குறும்பா, (1966) கண்மணியாள் காதை (1968)
கோடை (1970) ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971)
இரண்டு காவியங்கள் (1974),வீடும் வெளியும் (1973), புதிய
தொரு வீடு (ஆறு நாடங்கள் தொகுப்பில் 1979)

ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகள் பிரதானமானவர் மஹாகவி உள்ளடக்கத்திலும் உருவத்திலும் இவர் கவிதைகளில் புகுத்திய புதுமைகள் பல. யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார்.மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதைகளில் வெளிப்படுத்தினார். சாதாரண மக்களின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளாகக் கொண்டவர் புதிய காவியங்கள். பாடநாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு பங்கு வகித்தார். பழைய யாப்பு வடிவங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினார். கிராமிய வழக்குச் சொற்களைக் கவிதைகளில் தாரளமாகக் கையாண்டார். இக் காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறுகிறார்.

மஹாகவி தமது பதினான்காவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதர் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் தந்நம்பியையோடும் சூடிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளார். 1943 இல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிரகமாகத் தொடங்கின. கிராம ஊழியன், மறுமலர்ச்சி ஈழகேசரி, ஆனந்தன் போன்ற இதழ்களில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசுரமாயின. ஆரம்பத்தில் மஹாகவி சில சிறு கதைகளும் எழுதியுள்ளார். வேதாந்தம், பிரமசாரி, பரமசிவம் , ஈகை, உலகம் கோணலானது, நஞ்சு போன்றவை இவற்றுட் சில. எனினும் இவர் கவிதைத் துறையையே தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். சுமார் முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளப்படுத்தி வந்துள்ளார். நூற்றுக்கணக்கான கவிதைகளும் இசைப் பாடல்களும் காவியங்களும் பாநாடகங்களும் அவர் எழுதியுள்ளார். மஹாகவியின் சுமார் முப்பது ஆண்டு காலக் கவிதை முயற்சிகளில் தேக்கமற்ற சீரான வளர்ச்சிப் போக்குகளைக் காணலாம். 1960 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பின்னணியில் வாழ்க்கையை நோக்கும் தன்மை அவரிடம் காணப்படுகின்றது. சடங்கு ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களையும் கோடை, முற்றிற்று, புதிய தொருவீடு ஆகிய பாடநாடகங்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத்தார்.
மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை இன்றைய நடைமுறை வாழ்க்கை யதார்ர்த்த ப+ர்வமாகக் கவிதையில் சித்தரித்துக் காட்டியவை தமிழ்க் கவிதைக்கு மஹகவி வழங்கிய முக்கிய பங்களிப்பு ஆகும்.

இன்னiவைதாம் கவிஎழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திரும்பிச்
சொல்லாதீர்: சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள்;; மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்

என்று தம் ஆரம்ப காலத்திலேயே அவர் எழுதினார். “ நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதையில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்துவரல் அவசியமாகும்’’ என்று பிற்காலத்திலும் அவர் எழுதினார்.

இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்கங்கள்
இன்றைய காலத் திழுப்புக்கள் எதி;ர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட் டுக்கள்

ஆகியவையே கவிதையில் இடம்பெற வேண்டும் என்று அவர் சொன்னார் . இதுவே அவரது கவிதைக் கொள்கையாகும். சமகாலப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை,யதார்த்தம் ஆகியவையே அவரது கவிதைக் கொள்கையின் அடிப்படையாகும். அவரது பெரும்பாலான கவிதைகளிலும் காவியங்களிலும் மேடைப் பாநாடகங்களிலும் நாம் இதனைக் காணலாம். கற்பனா வாதப் பண்புகள் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் காணப்படும்போதிலும் யதார்த்தப் போக்கே அவரது பிரதான படைப்புகளின் முக்கிய பண்பு ஆகும். இந்த வகையில் அவர் காலத்துப் பெரும்பாலான கவிஞர்களில் இருந்து மஹாகவி தனித்துவத் துலங்குகின்றார்.

பேதங்களும் முரண்பாடுகளும் அற்ற ஒரு சமத்துவமான சமூக வாழ்வையே மஹாகவி தமது கவிதைகளில் வலியுறுத்தியுள்ளார். எல்லா வகையான இடர்களையும் வென்று மனிதன் வாழ்வில் முன்னேறிச் செல்வான் என்பதே இவர் தக்குத் தரும் செய்தியாகும். ஆழமான மனிதாபிமானமும் வாழ்க்கையின் மீதும் மனித வல்லமையின் மீதும் ஓர் ஆழமான நம்பிக்கையும் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.

கொண்டுவா பார்ப்போம்
கொலை எருமை ப+ட்டிய நின்
வண்டியினை எனது வாசலுக்கு!
நான் இங்கே
சூழ்வேன், சுழல்வேன், சுமப்பேன், சுவைத்திருப்பேன்
வாழ்வேன் மடியும் வரை

என்று ஒரு கவிதையில் மஹாகவி எமனுக்குச் சவால் விடுகிறார். மரணத்துக்கு அஞ்சாமையை இதில் நாம் காண்கிறோம். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகள் ஊடாக வளர்ந்து செல்கிறான், அவ்வகையில் மனிதன் மரணிப்பதில்லை என்ற ஒரு கருத்தையும் மஹாகவி முன் வைத்துள்ளார்.

அன்று பிறந்து இன்று இறப்பதுள்
ஆய தன்றுநாம் மானிட வாழ்குகாண்
அப்பனே மகனாகி, வளர்ந்து உயிர்
ஓய்நலன்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை ………

என்ற தத்துவத்தை இவர் தமது சாதாரண மனிதனது சரித்திரம் என்ற காவியத்திலும் முற்றிற்று என்ற பாடநாடகத்திலும் வலியுறுத்துகின்றார். மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் இத்தகைய நம்பிக்கைக் குரல் நவீன தமிழ்கவிதைக்கு அவர் கொடுத்த ஒரு பலமாகும்.

யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வே மஹாகவியின் பெரும்பாலான முக்கிய கவிதைகளின் கருப்பொருளாக உள்ளது. கிராமப்புற வாழ்க்கையை மஹாகவி போல் கவிதையில் கொண்டு வந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் நகர வாழ்க்கையின்மீது வெறுப்பும் கிராமத்தின்மீது அளவிறந்த சோகமும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் செல்வேன், கிராமம் முதலிய கவிதைகளில் இப் பண்பைக் காணலாம். இக் கவிதைகள் கிராமத்தை இவர் இலட்சிய ப+மியாக நோக்குகின்றார். ஆனால் இவரது பிற்காலப் படைப்புக்களிலே கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் மோதல்களுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கோடை, புதியதொரு வீடு முதலியவற்றை உதாரணமாகக் காட்டலாம். கிராமிய வாழ்வை யதார்த்த ப+ர்வமாகச் சித்தரிக்கும் இப்படைப்புகள் தமிழ்க் கவிதைக்கு ஒர புதிய வளத்தைக் கொடுத்துள்ளன எனலாம்.

கிராமப்புற வாழ்வை மட்டுமன்றி நகரப்புற வாழ்வையும் மஹாகவி தம் கவிதையின் கருப் பொருளாகக் கொண்டுள்ளார். நகரப்புற நாகரிகத்தினால் உருவாக்கப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள் விவசாயிகள், திருடர்கள் முதலியோர் இவரது சில கவிதைகளில் அநுதாபத்தோடு சித்தரிக்கப்பட்டுள்ளனர். சீமாட்டி, விட்ட முதல், விசாதீர், திருட்டு முதலிய கவிதைகள் இத்தகைய நகர்ப்புற மத்தியதரவர்க்கத்தினரின் வாழ்வும் மனப்பாங்குகளும்கூட இவரது கவிதைகளிற் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

நவீன தமிழ்க் காவிய வளர்ச்சியிலும் மஹாகவியின் பங்கு கணிசமானது. குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காவியங்களின் மூலம் பாரதி தொடக்கி வைத்த நவீன காவிய மரபை ஒட்டித் தமிழில் தாரளமான காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பெரும்பாலானவை இலக்கியச் செய்திகளையம் புராண இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்புக்களாகும். தற்கால வாழ்க்கையோடு சம்பந்தமற்றவை அவை. தற்கால வாழ்க்கை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன தமிழ்க் காவியங்களைப் படைத்தவர்களுள் மஹாகவி முதன்மையானவன். ஆரம்பத்தில் இவர் எழுதிய கல்லழகி (1959) ஒரு கற்பனைக் காவியமே. அதைத்தொடர்ந்து அவர் எழுதிய சடங்கு (1962) யாழ்ப்பாணக் கிராம வாழ்வை யதார்த்தமாகச் சித்திரிக்;கும் ஓர் அரிய படைப்பாகும். தமிழில் இதற்கு முன் உதாரணம் எதுவும் இல்லை. மிக உயர்ந்த நுணுக்கும் கொண்டது அது. இதைத் தொடர்ந்து மஹாகவி எழுதிய கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம். கந்தப்ப சபதம் ஆகியன மஹாகவியின் கவித்துவ ஆற்றலையும் வாழ்க்கைத் தரிசனத்தையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த படைப்புக்களாகும். தமிழில் இவை மிகுந்த தனித்துவம் உடையவையாகும்.

காவியங்களைப் போல் தமிழில் பாநாடக வளர்ச்சியிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. ஆரம்பத்தில் வானொலிக்காக இவர் பல பாநாடகங்களை எழுதினார். அடிக்கரும்பு, சிற்பி ஈன்ற முத்து, பொய்மை, சேனாபதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் ஆகியவை அவரது வானொலிப் பாநாடகங்களாகும். பிற்காலத்தில் மேடைக்காகக் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய பாடநாடகங்களை எழுதினார். கோடை, புதியதொரு வீடு ஆகியவை பலமுறை மேடையேற்றப்படட பாநாடகங்களாகும். ஈழத்து நாடக வளர்ச்சியிலே இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. மஹாகவியின் யதார்த்தப் போக்கை அவரது மேடைப் பாநாடகங்களிலும் காணலாம். சமகால வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு யதார்த்த ப+ர்வமான மேடைப் பாநாடகங்களை எழுதிய முதல்வராக மஹாகவியைக் கருதுதில் தவறவில்லை.

தமிழ்ச் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவியின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரை நடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப் படுத்துவதில் மஹாகவி பல வெற்றிகள் கண்டுள்ளார். அன்றாட வழக்கில் உள்ள சாதாரண சொற்களையே அவர் கையாண்டார். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் வழக்குகளை வழக்குகளை அவர் இயல்பாகவும் பிரக்ஞை ப+ர்வமாகவும் தம் கவிதைகளில் பயன்படுத்தினார். இன்றைய உரை நடையில் கையாளப்படும் வாக்கிய அமைப்பை ஒட்டிய சிறுசிறு வாக்கியங்களையே அவர் செய்யுளில் கையாண்டார். இத்தகைய பண்புகள் மஹாகவியின் செய்யுள் நடைக்கு உரை நடை போன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளை விடத்தற்காலக் கவிதைகளிலேயே இப் பண்பு முனைப்பாகக் காணப்படுகின்றது. தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருக்கும் செய்யுளுக்கு ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப்பட்டது. மஹாகவியிலே அதில் தலையாயபங்கு வகித்தார் எனலாம்.

தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிலே மஹாகவிக்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆயினும் மஹாகவி பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அவரது படைப்புக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும். அவர் பற்றிய ஆய்வுகள் பெருக வேண்டும். அப்போதுதான் மஹாகவியின் முக்கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும்.