கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சிந்தனை எண்ணங்களும்
அவற்றின் விளக்கங்களும்
 
 

விநாயகர் தருமநிதியம் ஸ்தாபகர்

 

சிந்தனை எண்ணங்களும்
அவற்றின் விளக்கங்களும்






(விநாயகர் தருமநிதியம் ஸ்தாபகரின் அனுபவ சிந்தனை)







இலவச வெளியீடு இல - 5









விநாயகர் தரும நிதியம்
வியாபாரிமூலை,
பருத்தித்துறை.






விநாயகர் தரும நிதியம்




வியாபாரிமூலை, பருத்தித்துறை

“அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதலரிது
மானிடராயினும் கூன்குருடு செவிடு
பேடுநீங்கிப் பிறத்த லரிது
பேடுநீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயலரிது
தானமும் தவமுந்தான் செய்வ ராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே”

- ஒளவையார்


சமர்ப்பணம்

இம்மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தனது சக்தியை எந்நேரமும் உதவிக்கொண்டிருக்கும் உண்மைப் பொருளான சூரியபகவானுக்கும் (சிவம். அல்லது மெய்ப்பொருள், அல்லது இறைவன்)


உள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை, செயலில் மெய்ம்மை காந்தியை மாணிக்கமாய் திகழச் செய்தன.

காந்தியின் வாழ்வு ஆண்டவன் காட்சி கொடுத்ததாலோ கனவில் தோன்றியதாலோ உயரவில்லை.


நாம் உருவாவதற்குரிய அணுவளவான விந்தை ஈன்று எம்மை இந்நிலைக்கு ஆளாக்கிய மூதாதையர் வழி தந்தைக்கும்,

அவ்விந்தை கருப்பையில் கட்டி வளர்ந்து எமது உடல் உருவாக தமது உடலுழைப்பை நல்கிய அம்மைக்கும்,

எமது உள்ளத்திலுள்ள அறிவுப் பொருளது வணக்கத்தைச் செலுத்தி அவர்கள் பாதாரகமலங்கட்கு இந்நு}லை சமர்ப்பணம் செய்வதில் ஆத்ம திருப்தி அடைகிறோம்.

நன்றி

வியாபாரிமூலை, ஸ்தாபகர்
03 - 09 - 1990 விநாயகர் தரும நிதியம்

தங்களை இருகரம் கூப்பி வேண்டுகிறோம்!

இந்நு}ல் தங்கள் கையில் கிடைத்ததும் குறைந்தது மூன்று முறை வாசியுங்கள். உங்களுக்கு இதில் புலன் செல்ல வாய்ப்பு இல்லாது போனால் கூடிய விரைவில் உங்கள் சிநேகிதரிடம் இந்நு}லை கையளியுங்கள். இன்னும் வாசிக்க வேண்டிய மன எண்ணம் ஏற்படின் ஒன்பது முறை வாசித்த பின் அடுத்தவரிடம் ஒப்படையுங்கள். தங்கள் உதவிக்கு நன்றி.

வியாபாரிமூலை ஸ்தாபகர்
03-09-1990 விநாயகர் தரும நிதியம்


விநாயகர் தரும நிதியம்
வியாபாரிமூலை,
பருத்தித்துறை.

இத்தாபனம் 1990 ஜுலை மாதம் 2ந் திகதி பிரசித்த நொத்தாரிஸ் பருத்தித்துறை ச. ரவீந்திரன் அவர்களால் நிறைவேற்றப் பெற்ற 84ம் இலக்க தரும சாதனம் மூலம் நடைமுறைப் படுத்தப் பெறுகின்றது.

இச்சாதனத்தின் குறிக்கப்பெற்ற முக்கிய விபரங்கள்:-

இத்தாபனத்தில் தொழிலகத்திலிருந்து கிடைக்கப் பெறும் வருமானங்கள் முழுவதும் இப்பகுதி மக்களின் கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்கும், தமிழ் நு}ல்களை வெளியிடுவதற்கும் வசதி குறைந்த சிறுவர், முதியோர் ஊனமுற்றோருக்கான உதவிகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப் பெறல் வேண்டும்.

நியமிக்கப்பெற்ற தருமகர்த்தாக்கள் இத்தாபனத்தின் தொழிலகத்தை பேணிக்காத்து தரும முறையில் நடத்தப் பெறவேண்டும்.

அவ்விதம் நடத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படின் தொழிலகத்தை விற்று வரும் பணத்தையும் முதலீட்டுப் பணத்தையும் வங்கியில் சேமிப்புக்கணக்கில் இட்டு அதனால்; கிடைக்கும் வருமானத்தை மட்டும் கொண்டு இப்பணி நடைமுறைப் படுத்தப் பெறல் வேண்டும்.

அவ்விதமும் நடத்தமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்படின் இத்தாபனத்தின் சகல சொத்துக்கள், பணங்களையும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துவிடல் வேண்டும்.

இத்தாபன ஸ்தாபகரின் மரணத்தின் பின் அவரது உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கப்பெறல் வேண்டும்.

இத்தாபன ஸ்தாபகரின் கடைசி வேண்டுகோள் :-

அவரது இறுதிக்கிரியைகளில் செய்நன்றி மறந்தவர்களான அவரது மனைவி அருள்லட்சுமியும் மகன் விக்கினேசுவரனும் மகள் நிர்மலாதேவியும், அவரது கணவர் க. ஈஸ்வரபாதமும், 2ம் மகள் இராசேஸ்வரியும் அவரது கணவர் ந. வடிவேல்முருகனும் கலந்து கொள்ள எக்காரணம் கொண்டும் இத்தாபனத்தின் தருமகர்த்தாக்கள் அனுமதிக்கக்கூடாது.

இவர்களின் சந்ததியினர் இத்தாபனத்தின் உறுப்பினர்களாக எக்காலமும் எக்காரணம் கொண்டும் இடம்பெறக் கூடாது.

வியாபாரிமூலை, ஸ்தாபகர்.
3-9-1990 விநாயக தரும நிதியம்


உங்கள் சிந்தனைக்கு….

உள்ளத்தைத் து}ய்மைப்படுத்தி ஞானத்தைப் பெறுவதற்காகவே நாம் செயல் புரிகிறோம்.

நல்வினையை வளர்த்துக் கொண்டு வருபவர்கள் நல்ல பிறவிக்கு வழி தேடுகின்றனர். கர்மயோகி தனது வாழ்வு அனைத்தையும் பொது வாழ்வு ஆக்கி விடுகிறான்.

அல்லல்பட்டுத் தேடிய பொருளிடம் நமக்கு ஆர்வமும், பற்றும் அதிகம்.

அரசன் தனி இடத்தில் அரசாட்சி செய்வதுபோல் ஆண்டவன் கயிலாயத்திலோ சத்திய லோகத்திலோ வசித்து உலகைப் பாதுகாக்கவில்லை.

ஒரு சிலரைத் தண்டிக்கவும் வேறு சிலருக்கு சன்மானம் செய்யவும் ஆண்டவன் பரலோகத்தில் இருக்கவில்லை.

பல தெய்வங்கள் இருப்பதாகப் பேசிக்கொள்ளுதல் அஞ்ஞானத்தின் விளைவு. அண்டகோடி அனைத்துக்கும் மூலப் பொருளாயிருக்கும் தெய்வம் ஒன்றே ஒன்றுதான்.

பிரபஞ்சமாகத் தென்படுவது உண்மையில் ஈசனே. நிகழ்கின்ற நிகழ்ச்சிகளெல்லாம் அவன் செயல். கண்ணில் தெரிவதெல்லாம் கடவுளின் தோற்றம்.

உயிர்கள் அனைத்திலும் வியாபித்திருக்கும் தெய்வத்தை சுய அனுபவத்தில் காண்பவன் ஞானியாகின்றான்.

உயிர்கள் அனைத்திலும் தெய்வ சன்னியத்தை காண்கின்ற அளவு நம்மை நாம் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

ஒருவனுடைய மனப்பான்மையை மாற்றி அமைப்பதே அவனது துன்பத்தைத் துடைப்பதற்கு ஏற்ற உபாயம்.

அறிவு பண்படாத போது சுவதர்மம் தெரியவதில்லை.

அறிவைத் து}ய்மை செய்ய மனம் து}ய்மையாகும்.

மனம் து}ய்மையாக அறிவு து}ய்மையாகும்.


பகுத்தறிவின் விளைவு

உலகிலேயுள்ள உயிர்கள் வௌ;வேறு இயல்புகளை உடையன. ஒவ்வொரு உயிரின் ஆத்மாவிலும் வினைப்பயன் புள்ளிகள் வௌ;வேறாகவே அமைந்திருக்கும். ஒன்று போல் மற்றொன்றுக்கு இருக்கமாட்டாது ஆனால் 1, 2, 3, 4, 5 அறிவுள்ள உயிரினங்கள் எல்லாம் சுகத்தை விரும்புவது கிடையாது. அவை அவைக்குத் தேவையானவற்றை அவை அவை தொழில் செய்தே பெறுகின்றன. மரம் முதல் கொண்டு மிருகம் ஈறான அனைத்து உயிரினங்களும் செயல்பட்டே தங்கள் காரியத்தைக் கழிக்கின்றன. மரங்கள் செயல்பட்டு மற்றைய உயிரினங்கட்கு சேவை செய்கின்றன. அதே போல் மற்றைய உயிரினங்களும் செயல்பட்டு ஒன்றுக் கொன்று சேவையாற்றுகின்றன. ஆனால் நாகரிகமடைந்த மனிதன் சுக வாழ்வை விரும்பி எத்தனையோ தந்திரங்களைக் கையாளுகின்றான். மனிதனுக்கு கொடுக்கப்பெற்ற 6வது பகுத்தறிவை சகல உயிரினங்களையும் அடக்கமி ஆள முற்படுத்துகின்றான். இங்கு மனித வர்க்கத்தையும் அடக்கி ஆள முற்பட்டு தீவினையை வளர்த்துக் கொள்ளுகின்றான். குடும்ப வேற்றுமை முதல் வேற்றுமை வளர வளர இடவேற்றமை, இன வேற்றுமை, சாதிவேற்றுமை, கிராமவேற்றுமை, நகர வேற்றுமை, மாவட்ட வேற்றுமை, மகாணவேற்றுமை, தேசவேற்றுமை என பரந்தளவில் வேற்றுமைப்படுவதைக் காண்கிறோம். உண்மைப் பொருளின் இயல்பை அறியாமல் வேற்றுமையை வளர்க்கிறோம். எந்த உயிரினமும் செயல்படாமல் (தொழில்படாமல்) வாழ முடியாது. செயல்படாமல் வாழ்வதற்கு உரிமையும் கிடையாது. மனிதன் சுக வாழ்வு என்பதற்கு சரியான விளக்கம் தெரியாமல் அலைகிறான். இக் காரணங்களால் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி அப்பிரச்சினைகளை தீர்க்கும் வழி தெரியாமல் மேன்மேலும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றான். இங்கே தந்திரங்களைக் கையாளும் முறையை எல்லாரும் பின்பற்றுவதால் உண்மைப் பொருளுக்கு வர விரும்புகின்றார்கள் இல்லை. உண்மைக்கு வந்தால் ஏதோ பெரு நஷ்டம் வந்தது போல் எண்ணி திரும்பத் திரும்ப தந்தரங்களைக் கையாளுகின்றார்கள். சுகமாக வாழ விரும்புபவர்கள் இப்படியாக உண்மையை உணராமல் செயல்பட்டு எல்லா மக்களுக்கும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கடமையைச் சரிவரச் செய்து சுகம் பெறலாமேயன்றி பொன்னாலும் பொருளாலும் பெண்ணாலும் பிள்ளையாலும் சுகவாழ்வை அடைய முடியாது. உண்மைப் பொருளால் வரும் சுகம் ஆனந்தமானது.


உண்மைதான் இறைவன்

இப்படியாக எத்தனை கோயில் கும்பிட்டாலும் அவரவர் செய்த நல்வினை தீவினைப் பயன் அவரவர் அடைந்தே தீரவேண்டும் என யோசிக்காமல் பிழையான வழிகளைக் கையாண்டு விட்டு கடைசி நேரத்தில் சங்கரா சங்கரா என்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. இவர்கள் வழியைப் பின்பற்றி இவர்களது புத்தரர்களும் நடக்க முற்படுவதால் எதிர்வரும் சந்ததியார்களையும் கஷ்டத்துக்குள்ளாக்குகின்றனர். இவர்கள் ஒருகாலத்தில் எல்லாரையும் அடக்கி ஆண்டார்கள். இன்று அவரது சந்ததியினர் அடக்கி ஆளப்படுகிறார்கள். கோவிலைகட்டி ஆடம்பர திருவிழாக்கள் செய்தார்களேயன்றி, உண்மைதான் இறைவன் என்பதை உணராமல் கோவில் சந்நிதானங்களிலும் சுயநலம் கருதி பொய் பேசி வந்தார்கள். பிரமா அடைந்த நிலையை அடைகிறார்கள். சீராக ஆராய்ந்து நடந்திருந்தால் இந்த அவலநிலை ஏற்படஇடமில்லை. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி உண்மை என்பதை உணர மறுக்கிறார்கள். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார். அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர். சிவ சிவ என்கிலர் தீவினையாளர் என்பனவற்றின் சரியான உட்பொருளை திரும்பத் திரும்ப ஆராய்ந்து அறிய பஞ்சிப்படுகிறார்கள். எல்லாரும் உண்மை பேசி நடக்க ஆரம்பித்துவிட்டால் 75 வீதமான பிரச்சினைகள் அற்றுப் போய்விடும். எல்லாரும் சமநிலை எல்லாரும் உடலுழைப்பு, எல்லாரும் அடியார்கள், எல்லாரும் உளநலம் பெற்றவர்களாய் வாழ்க்கையில் வாழலாம். எங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் பெலத்தை நாங்கள் அறிய முடிவதில்லை. நன்றாய் ஆராய்ந்தால் “டே” என்று சொன்ன ஒரு சொல் வரவர விரிந்து அதாவது மற்றவர் மடையா என்று சொல் அதற்குப் பதில் தடி எடுக்க அதற்குப் பதில் கத்தி எடுக்க அதற்குப்பதில் வாள் எடுக்க அதற்குப் பதில் துவக்கு எடுக்க அதற்குப் பதில் செல்லடிக்க அதற்குப் பதில் அணுக்குண்டை எடுக்க எல்லாம் முடிவடைந்து விடுகிறது. டே என்று சொன்ன சொல்லுக்குள்ள சக்தியைக் கண்டு கொண்டோம். அதற்குப் பதிலாக தம்பி என்று சொன்னால் அது வர வர விரிவடைந்து அன்பு, உண்மை, நியாயம், நீதி, ஞானம் என எல்லாரும் இன்பவாழ்வு வாழ்வதைக் காணமுடியும்.

நோய்க்கு மருந்து கொடுக்கும் போது சக்திகளை எவ்வளவு சிறிதாக அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை அறிகிறோம். அது போல் அழிப்பதற்குரிய சக்திகளையும் எவ்வளவு சிறிதாக அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டோம்.

அதே விதமாகவே எங்கள் மன எண்ணங்களும், நாங்கள் சொல்வன நினைப்பன எங்கள் ஆத்மாவில் பதிவாகின்றன. தேவையென நினைத்த உடனே வெளிவருகின்றன. நாங்கள் சொல்கின்ற நினைக்கின்ற காண்கின்ற கேட்கின்ற எல்லாம் இமைப்பொழுதில் எங்கள் சிந்தனைக்கு வருகின்றன. ஆகவே இவைகள் எல்லாம் எங்கள் ஆத்மாவில் பதியப்பட்டுள்ளன என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. இவ்வாறு ஆத்மாவில் பதியப்படும் எண்ணங்கள் நல்லனவாயிருந்தால் அதாவது உண்மை, நியாயம், ஞானம் இவைகட்கு மாறுபடாமல் இருந்தால் அவை ஆத்மாவில் நல்லனவுக்குரிய ஒரு புள்ளியை இடுகின்றன. இந்தப் புள்ளிகள் எங்கள் மூக்கிலோ காதிலோ கண்ணிலோ ஏதோ ஒரு தகாத செயல் மாற்றங்களைச் செய்கின்றன. மாங்கனிக்குள் எவ்வாறு ஒரு வண்டு உண்டாகி வளர்ந்து வருகிறதோ அவ்வாறே எங்கள் அசுர எண்ணங்களும் எங்கள் ஆத்மாவில் ஏதோ ஒன்றை உண்டாக்கி வளர்ந்து வருகிறது. நாங்கள் எண்ணும் எண்ணங்கள் உண்மைமயமாயிருந்தால் இவைகளால் பாவநிலை ஏற்பட மாட்டாது. பொய்மயமாயிருந்தால் செயல்; மாறுபடும். எவ்வாறு அப்பர் நல் எண்ணத்துடன் உழவாரத் தொண்டு செய்து உண்மை நிலையடைந்தாரோ நாமும் நல்எண்ணமுடன் உண்மையான சேவையைச் செய்தோமானால் இறைவனை அடையலாம். எங்கும் வியாபகமாய் எல்லா உயிரினங்களிலுமுள்ள இறைவனுக்கு எங்கள் உடலுழைப்பை அர்ப்பணிக்க முடியுமேயன்றி அவன் படைத்துள்ள சமான்களை அர்ப்பணிப்பதில் எவ்வித உண்மையுமில்லை. பூசனிக்காய் உள்ளவனுக்கு பத்துப் பூசனிக்காய் அன்பளிப்பதில் அவனுக்கு எவ்வித பிரயோசனமில்லை. கத்திரிக்காய் தோட்டக்காரனுக்கு கத்தரிக்காய் அன்பளிப்பதில் பொருளில்லை. பூசனிக்காய் தோட்டக்காரனுக்கு அரிசியைக் கொடுத்தால் உடன் பிரயோசனமுண்டு. நெல் வயல்காரனுக்கு அரிசியைக் கொடுப்பதில் எவ்வித பலனுமில்லை. அவனுக்குக் காய்கறி கொடுத்தால் உடன் பிரயோசனமுண்டு. இவ்வாறே எல்லாவற்றையும் படைத்துக்காக்கும் இறைவனுக்கு உடலுழைப்பை அர்ப்பணிப்பதே பலன் தரும் செயலாகும். அவன் படைத்த உயிரினங்கட்கு அது அதற்குத் தேவையானதை உதவி செய்யலாம். இறைவன் எல்லா உயிரினங்களிலும் நிறைந்துள்ளான். மனிதரிலும் அவ்வாறே நிறைந்துள்ளான். முன்வினைப் பயன் காரணமாக இவர்களின் அங்க அனாப்புக்கள், செயற்பாடுகள், அறிவுவகை ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன. எவ்வாறு ஒரு அணுவான கற்பனையிலும் கணக்கிட முடியாத விந்துவில் இருந்து உற்பத்தியாகி மனிதன் உருவாகி வளர்ந்தானோ அவனது முன்னைய எண்ணப் புள்ளிகளும் அவ்வாறே வளர்ந்து வினைப்பயனுக்குரிய பலனை அடைவதற்குக் காரணமாய் அமைகின்றன. உள்ளத்திலே கோவில் மூலஸ்தானம் மண்டபம் கட்டி உள்ளத்திலே செயல்பட்டு இறைவன் திருவடியை யடைந்த நாயன்மார் சரித்திரம் படித்தோம். அதை கதையென நம்பினேமேயன்றி அப்படி நாமும் வாழலாம் வாழ முடியும் என்பதை ஆராய்ந்தறியவில்லை. எங்கள் சிரிசிலுள்ள ஆறு வாயில்களும் (கண், மூக்கு, செவி) சிவபெருமான் குடும்பத்திலுள்ள ஆறு தெய்வத்தின் இருப்பிட வாயில்கள் என்பதை உணரவில்லை. இந்த அகச் சக்திகளை நாம் பெலவீனப்படுத்துவதால் யுறச் சக்திகளின் செயல்பாடுகள் உக்கிரறடைந்து நாடக பாணியில் புறவாழ்வு வளர்வது போல் தோற்றமளிப்பதைக் காண்கிறோம். இப்படி பிற்காலப் புறவாழ்வில் வீழ்ச்சியடைந்தவர்களை நேரில் கண்டும் மனம் மாற மறுக்கிறோம்.


உண்மையின் உண்மை

ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சியையும் அப்பகுதி மக்களின் வளர்ச்சியையும் கணிக்க வேண்டுமானால் அங்குள்ள சனசமூக நிலையங்களின் வளர்ச்சியை வைத்தே கண்டு பிடிப்பது சுலபம். நு}ல் நிலையங்களை பாலர் பாடசாலைகளை நிறுவுவது பெரிதல்ல. இவற்றை அறிய விடாது காப்பதே பெரும் பொறுப்பாகும். கிராம மக்களின் பிரச்சினைகள் அக்கிராம மக்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

தத்துவங்களையும் பழம் குடும்பப் பெருமைகளையும் பேசிக் கொண்டிப்பதால் மட்டும் தனிமனிதனோ சமூகமோ முன்னேறிவிட முடியாது. குடும்பப் பெருமைகளைப் பேசிப் பேசி மனோவியாதி (மூளைப்பெலவீனம்) ஏற்பட்டதேயன்றி வேறு பலன் எதுவுமில்லை. நல்லவற்றை கூட்டாகச் செயல்படுத்தும் ஆற்றலிலே தான் சமுதாய மாற்றம் ஏற்படும். எங்கள் கிராமத்தில் உருவாக்கப்பெறும் எல்லாவிதமான பொதுப்பணி மன்றங்களும் குறைந்த காலத்தினுள் செயலிழந்து பெயரற்றுப் போகின்றன. வாசிகசாலை, கிராம முன்னேற்றச் சங்கம், கோவில் பொதுப்பணி மன்றங்கள் இவை அடிக்கடி செயலிழந்தும், பெயரற்றும் போனதைக் காண்கின்றோம். இவைகட்கு ஏதோ ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும். அக் காரணத்தைக் கண்டு பிடித்து காக்கும் பொறுப்பு யாருடையது? எல்லாரும் பெயரையோ, லாப நோக்கத்தையோ கருத்தில் கொண்டு செயல்படுகிறோம். சேவை மனப்பான்மையுடன் செயலில் செய்ய முடிவதில்லை. எந்த ஒரு மனிதனும் லாபமில்லாமல் வாழ முடியாது. ஆனால் அது தொழில் தானத்துக்கு மட்டும்தான் உரியது.

பொது சேவைகளில் இம்மனப்பான்மை மாற வேண்டும். இங்குள்ள மக்கள் ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் பேரவாக் கொண்டிருப்பதால் விலாசமின்றி செயல்பட விரும்புவோர் பின் நோக்கிச் செல்ல வேண்டி ஏற்படுகிறதை காணுகிறோம். அம் மன்றங்கள் செயலிழந்து போகின்றன. சமுதாய நிலையை உணர்ந்து மனதை மாற்ற மறுக்கிறோம். வெளியாரின் அத்து மீறல்களுக்கு ஆட்பட்டு இன்னலுறும் இவர்கள் வசதி குறைந்த மற்றவர்களையும் அதே நிலைக்கு ஆளாக்குகிறார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சிறிதளவாகுதல் காண முடிவதில்லை. அகங்காரத்தை வளர்த்து ஆன்மாவுக்கு கேடு விளைவிக்கிறோம். மீண்டும் கீழான பிறப்பெடுத்து உழல ஏற்றுக் கொள்ளுகிறோம். 5ம் வகுப்பு சோதனையில் முன்னேற முடியாமல் திரும்பத் திரும்ப 5ம் வகுப்பு ஆரம்ப நிலைக்கு போகிறோம். எங்களால் 6 அறிவுள்ள மனிதனாக உயர்ச்சியடைந்து 5 அறிவுள்ள மிருக வர்க்கத்திலிருந்து பகுத்தறிவுள்ள 6 அறிவு மனிதனாக மாற முடிவதில்லை. மெய்ப் பொருள் காண்பது அறிவு என்கிறார் வள்ளுவர். கடந்த கால சுற்றுமாற்று களைக் கைவிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் உள்ளதை உள்ளவாறு கூறி திடமான செயலில் இறங்குவதில் தயங்கவோ தாமதிக்கவோ கூடாது. பிரிட்டன் அரபு-இஸ்ரேல் சச்சரவில் இஸ்ரேல் பக்கம் இருக்கிறது. ஆனால் ஆயுதங்களை அரபு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விளையாடுகிறது. அரபு நாடுகள் எல்லாம் (சவுதி, சிரியா, சோர்டான், ஈராக், ஈரான்) சேர்ந்தால் அவைகளிடம் இஸ்ரேலைப் போல் ஐந்து மடங்கு டாங்கிகள், போர் விமானங்கள் உள்ளன. ஆனால் அரபு நாடுகள் தங்களுக்குள் பகை கொண்டு செயற்படுவதால் காற் பங்கு ஆயுத படை வலிமையுள்ள இஸ்ரேல் அரபு நாடுகளை எல்லாம் ஆட்டிப் படைக்கிறது. நாங்கள் சிறுவயதில் படித்த சிங்கமும் எருதுகளும் கதையை நேரில் காண்கிறோம். ஒரு சிங்கம் இரு எருதுகளை தந்திரமாகப் பிரித்து பகையூட்டி ஒவ்வொரு எருதாய்ப் பிடித்து இரு எருதுகளையும் தின்று பசியையும் பயத்தையும் போக்கியதைக் கதைகளில் படித்தோம். கதை என்பதால் செயலில் எல்லா இடங்களிலும் ஏற்படும் என நினைக்கவில்லை. தற்சமயம் அல்லற்பட்டு அகதிகளான நேரத்திலும் பழங்கதை கதைக்கிறோம். அட்டூழியம் தாங்காது கதறுகிறோம். ஒற்றுமை பற்றி நினைக்க மறுக்கிறோம். ஒற்றுமை என்பது சிறுசிறு குடும்பத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும் உண்மையை எல்லாரும் நேசிக்க வணங்க பழகிக் கொண்டால் ஒற்றுமை தானாகவே வளரும். அரபு நாடுகளைப் பலவீனப்படுத்த குண்டர் மாதிரி இஸ்ரேலைப் பயன்படுத்தும் அமெரிக்கா ஞானம் பேசுகிறது. இதேவிதமாக நாங்களும் எங்கள் கிராம மக்களும் இதேபாணியில வெளிப்பாசாங்காக நடந்து வருங்கால சமுதாயத்துக்குக் கேடு விளைவிக்கிறோம். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் பாம்பும் கீரியுமாக மாறி வருகிறார்கள். தந்தை தாய் உறவோ சகோதர ஒற்றுமையோ பலவீனப்பட்ட நிலையில் மாற்றாரின் தந்திரோபாயத்துக்கு ஆளாகி எருதுகளின் நிலையை அடைகிறார்கள். இந்த நிலையையிட்டு எவரும் ஆராய்வதாகத் தெரியவில்லை. ஒரு குடும்பத்திலுள்ள இரு சகோதரர்கள் தங்கள் தகப்பனின் கடை வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். அக்காலத்தில் தகப்பன் பொய்கள் சொல்லி வியாபாரம் செய்கிறார். வியாபாரப் பொருட்கள் வாங்குபவர்களுக்கு லாப நோக்கம் காரணமாக பொய் சொல்லிப் பழகுகிறார்;. அதேபோலவே உத்தியோகத்திலுள்ளவர்கள் சிலரும் சில காரணங்களுக்காகப் பொய் சொல்லிப் பழகுகிறார்கள். உண்மையான இறைவனை நினையாமல் இப்படிப் பழகுகிறார்கள். காலஞ்செல்ல அவரது மக்களும் தகப்பன் நடைமுறையை பின்பற்றி வாழப்பழகுகிறார்கள். தாங்கள் பிறம்பான குடித்தனம் நடத்த வேண்டிய காலம் வந்ததும் தங்கள் சதோதர ஒற்றுமையைப் பற்றி யோசியாமல் குடும்பத்துள்ளும் பொய் பேசுகிறார்கள். முன்வாழ்ந்தவர் பொய் பேசி அடைந்த பலனை அறியாத படியால் என்ன கஷ்டம் வந்தபோதும் அது முன்வினைப் பயன் என ஆராய மனமின்றி குடும்பத்துள் பிரச்சினை செய்து அக்குடும்ப ஒற்றுமையைச் சிதைக்கிறார்கள். கஷ்டம் வரும் போது அது தமையனாலோ தம்பியாலோ வந்ததென நினைத்து குடும்பப் பிரிவை பெரிதுபடுத்துகிறார்கள். எக் கஷ்டத்துக்கும் அவரவர் வினைப்பயன் என்பதை அறிவதில்லை.

சக்தி

அறிவு கல்வி மூலம் வளர்வது. பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் பயில்வதால் மட்டும்தான் கல்வி அறிவு பெறலாம் என்பதில்லை. பள்ளிப் படிப்பால் மட்டும் ஒருவருக்குத் திறமை வருவதில்லை. விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் திறமையை வளர்க்கலாம். அனுபவத்தால் அதனை மேலும் வளர்க்கலாம். அறிவு திறமையும் எல்லோருக்கும் வாய்த்துவிடும் என்பதல்ல. அவை இயற்கை வழங்கும் வரங்கள், ஆண்டவன் அருளும் வரம் பல்கலைக் கழகம் செல்லாது சொந்த முயற்சியால் அறிவொளியாகத் திகழ்பவர் பலர். திருமுருக கிருபானந்தவாரியாரும் ஒருவர். உண்மையான அறிவும் திறமையும் உள்ளவர்களை கௌரவிக்கும் பண்பு எம் மத்தியில் வளர வேண்டும்.

சுவாமி சிவானந்த கடைசிப் பிறந்த தின அறிவுரை:- “முதலில் கடவுள் அப்புறம் உலகம், கடைசியாகவே நீ. புறத்தில் மட்டும் கடவுளைத் தேடினால் போதாது என்று எமது நுண்ணறிவானது எமக்குப் புகட்டுகின்றது. நுண்ணறிவானது காலத்திற்கு உட்பட்டதன்று. கடவுளை எல்லாவற்றிற்கும் மேலான சக்தி என உணர்பவர்களிடம் தமக்குரிய கடவுள் என்ற கருத்து இராது. கடவுளைப் பற்றிய இயல்புகளை மனிதனே கற்பனை செய்வதினால்தான் ஒரே கடவுளை அதன் பல இயல்புகளிற்காக பல கோயில் வாசற்படிகளில் ஏறியிறங்குகிறான். முதலில் உண்மையை - கடவுளை வெறும் சமயமாகவும், கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும் கொண்ட தப்பான கருத்துக்களை மனிதன் களைய வேண்டும்.

உண்மையானது குறிப்பிட்ட ஸ்தானத்திற்கோ மதத்திற்கோ உரியதன்று. பிரபஞ்சத்தை அளவிட வியலாது. அதைப் படைத்தவன் எந்த ஒரு உருவத்துக்கும் அப்பாற்பட்டவனாகவே இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனைச் சக்தி என்று அழைக்க விரும்பினால் அச்சக்தியானது எந்த ஓர் உருவத்திற்கும் அப்பாற்பட்ட அளவிட முடியாத சக்தியாகவே இருக்கவேண்டும். அறியாமை மன்னிக்கக் கூடியது. ஆனால் அறியாமையை உடையவர்களாக இருக்க விரும்பும் அவர்களது மனத் திடத்தை மன்னிக்க இயலாது. அளவிட முடியாத சக்தியை சோதனைக்குழாயில் போட்டு ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்ய முடியாது. அவர்கள் உண்மையைத் தேடி அண்டவெளிக்குச் செல்லவேண்டியதில்லை. பதிலுக்கு தத்தமது அகங்களுக்குள் ஊருவிச் செல்ல வேண்டும். நுண்ணறிவு ஒன்றினால் மட்டுமே இது முடியும்.

ஒளியைப் படைக்காமல் பிரபஞ்சத்தை இறைவனால் படைக்க முடியவில்லை. உண்மை என்ற ஒன்றே முதலில் இப்பிரபஞ்சத்தில் இருந்திருக்கவேண்டும். வேறு ஒன்றுமில்லாத இப்பிரபஞ்சத்தில் உண்மையால் எவ்வாறு ஒளியைப் படைத்திருக்க முடிந்தது என்ற வினா எம்முள் எழவே செய்யும். தன்னிலிருந்து ஒளியைப் படைக்காமல் வேறு எவ்வழியில் உண்மையால் ஒளியைப் படைத்திருக்க முடியும் என எம்முள் சந்தேகம் எழுவது இயற்கையே. சிலந்தி தனதுடலில் இருந்தே கூடுகட்டுவது போலவே உண்மையும் தன்னுள் இருந்தே ஒளியைப் படைத்திருக்க வேண்டும். இதிலிருந்து ஒளியானது உண்மையிலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்று எனத் தெரிகிறது. சுருங்கக் கூறின் ஒளியே உண்மை - கடவுள்.

இலத்திரன்களின் சுழற்சியால் எழுந்த சக்தியே இன்று நாம் காணும் சகல உருவமுடைய பொருள்களின் அடிப்படை. இதிலிருந்து கடவுள் அனைத்திலும் சக்தி வடிவமாய் உள்ளான் என்ற உண்மை எமக்குப் புலப்படுத்தப்படுகிறது. சிவமானது எந்த மதத்திற்கோ மனிதர்களுக்கோ சொந்தமான தனியுரிமைக் கடவுளன்று. நாம் எப்பொழுதும் உண்மைக்கு அண்மையிலும், அதனுள்ளும் இருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நுண்ணறிவு படைத்த அகஒளியைக் கண்ட ஞானிகளால் உரைக்கப்பெற்ற உண்மை இன்றுதான் விஞ்ஞானிகளால் நிறுவப் பெறுகின்றது. மனத்தைக் கடந்து உள்ளே சென்றால் இருள் அகலும். உண்மை துலங்கும் என்பதைக் காட்டவே கடவுள் என்ற சொற்பதம் உபயோகத்தில் வந்தது என்பதை நாம் உணர வேண்டும். உண்மையோ தொடக்கமும் முடிவும் அற்றது. இந்த உண்மையை, உள்ஒளியின் மகத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் கற்பூரம், மெழுகுவர்த்தி தீபங்கள் உபயோகிக்கப்பெறுகின்றன. இவற்றை எல்லாம் வெளியில் காட்டப்பெறும் ஒளியாகக் கருதி அகத்தில் இருளைத் தாராளமாகத் தேக்கி வைத்துக் கொண்டு புறவாழ்வில் மயங்கி பகட்டை விரும்பி வெறும் கற்பனைகளையும் கோட்பாடுகளையும் கூறிக் கொண்டு அகந்தையுடன் மனிதன் தன் பொன்னான காலத்தைக் கழித்துக் கொண்டு குது}கலிக்கின்றான். அக ஒளியைத் தான் கோயில்களில் புற ஒளியாய்க் காட்டுகிறார்கள் என்ற உண்மையை மனிதன் உணர மறுக்கிறான். அகத்திலுள்ள ஒளியை எமது அகத்தினுள் நிறைந்திருக்கும் அறியாமை என்னும் இருள் மறைந்து விட்டது தான் தனது என்ற ஆணவ இருள் மனிதனைக் குருடனாக்கி விட்டது. நியாய உணர்வு. தர்ம சிந்தனையுடன் பிறந்தால் தான் நாடு உய்யும்.

ஒலியும் மனமும்

நாம் எழும்பும் ஒலியானது மனதிற் புகுந்து சூட்சும வடிவமாகவும் நாவில் புகுந்து ஸ்து}ல வடிவமாகவும் தோற்றமளிக்கிறது. அந்த ஒலி அதற்குத் தகுந்த அலைகளை வாயு மண்டலத்தில் உண்டு பண்ணுவதுமல்லாமல் நிலம், நீர், தீ ஆகிய பூதங்களுடன் கலந்து வௌ;வேறு உருவங்களை அடைகின்றன. நம்முடைய புனிதமான எண்ணங்கள் தீ தத்துவத்துடன் கலக்கும் பொழுது நாம் ரிஷிகளைப் போல் ஆகிறோம். புனிதமான எண்ணங்களும் புனிதமான ஒலிகளும் வாயு மண்டலமூலம் உலகைப் புனிதப்படுத்துகின்றன.

இன்று உலகம் புனிதத் தன்மையில் குறைந்து வருவதையும் காண்கிறோம். இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் மனம் அசுத்தமானதுதான். மனம் அசுத்தமானது அசுத்தமான உணவின் காரணமேயாகும். உணவு அசுத்தமானது பூமி அசுத்தமாக இருப்பது காரணமே. பூமி அசுத்தமானது நீர் அசுத்தமான காரணமே. நீர் அசுத்தமானது தீ அசுத்தமான காரணமே. தீ அசுத்தமானது காற்று அசுத்தமான காரணமே. ஆக இவ்வுலகை புனிதப்படுத்துவதும் எல்லோரும் இன்புற்று வாழ்வதும்தான் நமது விருப்பம் என்றால் பொய் வார்த்தைகளைப் பேசுவதையும் கெட்ட ஒலிகளையும் முதலில் நிறுத்த வேண்டும்.

எமது உண்மை அல்லாத பேச்சுக்களின் ஒலி அலைகள் காற்றை மாற்றமடையச் செய்கின்றன. காற்று நெருப்பையும், நெருப்பு நீரையும், நீர் பூமியையும், பூமி எமது உணவுகளையும், உணவு எமது மன நிலைகளையும் மாற்றமடையச் செய்து வரும் சந்ததியினருக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன.

எமது முன்னோர்கள் முனிவர்கள் - முட்டாள்கள் அல்லர். இன்று விஞ்ஞானம் வளர்ந்துள்ளதா - அர்த்தமுள்ள கேள்வி. திருவிழா, விரதங்கள், தபஜெபம் நிகழும் இடங்கள் இன்று களியாட்டம் நிகழும் இடங்களாய் மாறியுள்ளன.

நோய் மாற்றும் மருந்துகள் புதுப்புது நோய்களாக மாற்றப்படுகின்றன. ஆஸ்பத்திரிகள் புது நோய்களை தரும் ஆஸ்பத்திரிகளாக மாறியுள்ளன.

யூதர்களை அழிக்க முற்பட்ட ஷிட்லர் எவ்வாறு மறைந்தான் என ஆராய்வுகள் நடைபெறுகின்றன.

நெஞ்சிற் கல்வி சேர்ந்தவரின் நரிப்புத்தி. புது நோய்கள் உற்பத்தி.

செல்வர்களின் திமிர்ப் போக்கு - இன பேதங்களின் அக்கிரமம் இவை அறிந்திருந்தும் பேசாத கற்றோர்கள்.

ஆக இவ்வுலகு புனிதமாக வேண்டுமானால் எல்லாரும் இன்படைய வேண்டுமானால் உண்மை ஒளி உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும்.

உண்மை வழிவழியே நாம் உற்பத்தியானோம். அந்தந்த உண்மை வழியில் செயல்பட்டாலே இரத்தோட்டம், சீரணம் முதலியவை உண்மை வழியில் செயல்படும். எண்ணங்களில் பொய் புகுந்து விட்டால் எமது உடல் வாழ்விலும் பொய் புகுந்து இரத்தோட்டம் முதலியவை மாறுபட்டு நோய்கள் உண்டாகும்.

மிருகத்தனம்

உலகில் தற்போது மலிந்து கிடக்கும் பாவங்களையும் துயரங்களையும் பார்த்தால் உள்ளம் திடுக்கிடுகிறது. உலகம் சாந்தியடைந்து தர்ம நெறியைப் பின்பற்றும் என்று எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்யாயிற்று. முன்பு இருந்த மிருகத்தனத்தையும் தோற்கடிக்கும் படியான புது மிருகத்தனம் இன்று தோன்றியிருக்கிறது. கொலையும் காருண்யமற்ற மனோபாவமுமே மேலோங்கி நிற்கின்றன. யோக்கியர்களின் உள்ளத்தில் இனிஅசைக்க இடமேது. உலகம் வரவர இவ்வாறு கெட்டுப்போவதாயிருந்தால் எதற்காகக் குழந்தைகளைப் பெற்று கஷ்டப்பட்டு வளர்க்கவேண்டும். இனத்துவேசமும் கொலை பாதகமும் மலிந்து கிடக்கும் உலகத்தில் அவர்கள் வாழத்தான் வேண்டுமா? உலகத்திற்கு கதி மோட்சமே இல்லைப்போல் தோன்றுகிறது என மலைபோல் வளர்ந்து நிற்கும் அதர்மத்தைப் பார்த்து உள்ளம் வருந்துகிறது. என்றாலும் ஒவ்வொரு மனிதனும் பாவத்தைத் தடுக்க ஓரளவு வேலை செய்யலாம். ஓரிருவர் என்ன செய்துவிட இயலும் என எண்ணி முயற்சியைக் கைவிடலாகாது. ஒவ்வொருவராக பலர் செய்யும் செயலே உலக நிலைக்குக் காரணம். உலகத்தின் பாவக் குவியலை நீக்கி அறவாழ்வு உண்டாக்குவதில் ஒவ்வொருவனுக்கும் பங்குண்டு. அதற்குப் பயனும் உண்டு. ஒவ்வொருவனும் தான் செய்ய வேண்டிய கடமையை செயலில் செய்தால் பயன் கிடைக்காமல் போகாது. அவனவன் வாழ்க்கையில் அவனவன் சுற்றுப்புறத்தில் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல் அவனவன் தொடர்புகொண்ட மக்களிடையே அவனவன் வழிகாட்டலாம். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு மூடத்தனத்தையும் பாவத்தையும் எதிர்த்து விவேகத்தையும் தர்மத்தையும் வளர்த்து வந்தால் உலகத்தில் துக்கம் துன்பம் போய்ச் சுமமே உண்டாகும். அவரவர் தன்னால் செய்ய முடிந்தளவு செய்யலாம். அவகாசம் அதிகம் உள்ளவர்கள் அதிகமாகச் செய்யலாம்.

நீ பெற்ற குழந்தையை நீ சரியாக வளர்க்கலாம். விவேகமும், சுகத்திலும் அனுதாபமும் கொண்டவனாக அவனை நீ வளர்த்தாயானால், உலகத்தின் சுகத்திற்கு நீ செய்ய வேண்டிய ஒரு பெரிய சேவையைச் செய்தவனாவாய்;. பரஸ்பர துவேஷமும் பொறாமையும் உலகத்தில் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றில் நீயும் கலந்து கொண்டு விடாமல் வேற்றுமைக்கிடையில் சினேகபாவமும் அனுதாபமும் உண்டாக உன்னாலானதைச் செய்வாயானால் உலகத்தில் வாழ்க்கை நடத்தும் சமுதாய நிலையை உண்டாக்குவதற்கு உன் பங்குக்குரிய தேவையை நீ செய்தவன் ஆவாய். இதெல்லாம் என்ன வீண் பேச்சு. ஒருவன் என்ன செய்ய முடியும். பெரிய துவேஷப் பிரவாகம் புரண்ட ஓடுவதை ஒருவனால் தடுக்க முடியுமா என்று சொல்ல வேண்டாம். தீமைக்குப் பலம் அதிகம் என்று எண்ணாதே. ஒருவன் மட்டும் உலகத்தைக் கெடுக்கவும் முடியாது. விடுவிக்கவும் முடியாது.

சமுதாயத்திலுள்ள சாதாரண மக்கள் ஆண் பெண் ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்களோ அதுவே மொத்த நன்மையையும், தீமையையும் உண்டாக்கும். இவ்வுலகில் அதர்மம் நீங்கி தர்மமும் சுகமும் நிலைபெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் முயல வேண்டும். முயற்சி இல்லாமல் முடியாது. அநியாயம், பொய், அக்கிரமம் இவற்றைக் காரிய ரூபத்தில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சில் பயனில்லை. நம்முடைய நல்ல எண்ணங்கள் தைரியமான செயல்களில் உருக்கொள்ளவேண்டும். உலகத்திற்கு விமோசனம் உண்டாக்கும் வழிகளில் அந்தச் செயல்களின் வேகம் செல்ல வேண்டும். உலகத்தில் பெரும் அநீதிகளைப் பார்த்து அதிர்ச்சி அடையும் வேளை உலகத்தில் நல்லவர்களும் பலர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடலாகாது. நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொண்டு மங்கலப் பொருட்களை எல்லாம் பார்த்து மகிழவேண்டும்.

நன்மையும் தீமையும் கலந்து நிற்கும் இந்த உலகத்தின் இரகசியத்தை யார் அறிவார். ஒன்றும் பயனில்லை என்று நிராசைப்படுவதும் தவறு. எல்லாம் தாமாகவே சீர்பட்டுவிடும் என்றிருப்பதும் தவறு. கொலையும், பாவமும்;, ஆணவமும் அதிகம் இருக்கின்றன. ஆனால் அன்பும், அனுதாபமும், அறமும், தெய்வபக்தியும் மிகுந்த அளவிலேயே இருக்கின்றன. இன்று நிகழும் நிகழ்ச்சிகள் பெருங்கடலில் சிறு அலைகள் போல் நடைபெறுகின்றன. இவற்றைக் கண்டு தயங்க வேண்டியதில்லை. மனித உள்ளத்தில் தைரியம் இருக்கிறது. வீரம் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் நாம் விமோசனம் இல்லையென ஏன் எண்ண வேண்டும்? உலக வரலாற்றில் நல்ல கட்டங்களும் உண்டு. துக்க கட்டங்களும் உண்டு. இப்போது நாம் துக்க கட்டத்தில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை நினைவில் வைத்து அறிவிலிகளின் அபவாதத்திற்கு அஞ்சாமல் நடந்து கொண்டோமானால் இந்தத் துக்கக் கட்டம் சீக்கிரமாகத் தீரும். முயற்சியில் கஷ்டமுண்டு. ஆயினும் பயனும் உண்டு. உறுதியை இழக்காமல் அறிவின் துணை கொண்டு உண்மையை உணர்ந்து கடமையைச் செய்வோமாக.

எமது எண்ணங்கள் மக்களுக்குப் பயன்படக்கூடிய அவித்தநெல் தரத்துக்கு செல்ல வேண்டும்.

உண்மைப் பொருளில் இருந்து வந்த ஒரு பொறி ஆத்மா. உறுதிப் பொருள் இல்லாமல் ஆத்மா செயல்பட முடியாது. அன்னை பராசக்தி (பூமிதேவி) பொறுமையின் சின்னம். உண்மைப் பொருளின் வித்து இன்றி எந்த உயிரும் உற்பத்தியாக முடியாது. உறுதிப் பொருளின் ஆதரவின்றி எந்த உயிரும் உருவம் எடுக்க முடியாது. ஆகவே ஆத்மா ஒரு கருவில் சேர்ந்ததும் அக் கருவை வளர்க்கும் சக்திப் பொருள் அக்கருவைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறது. இக்காலத்தில் தாய்மையின் பங்கு மிக முக்கியம். அக்கரு தெய்வப் பண்பு பெறுவதும் மனிதப் பண்பு பெறுவதும், விலங்குப் பண்பு பெறுவதும் அத்தாயின் (சக்தியின்) உறுதியைப் பொறுத்தது. அணுவாயுள்ள கரு வளர்ச்சியடைந்து சூழ்நிலைக்கேற்ப மரமாகவோ ஊர்வனவாகவோ நீர்வாழ்வனவாகவோ பறவையாகவோ மிருகமாகவோ மனிதனாகவோ முன்வினைப் பயனுக்கேற்ப பூமித்தாயில் உருவாகிறது. இவ் ஆத்மா அக்காலத்தில் வினைப்பயனையும் தான் வந்த கடமையையும் உணருகிறது. அந்நேரத்தில் மனித தாயானவள் அவ் ஆத்மாவின் உடல் வளர்ச்சிக்கேற்ற செயல்முறைகளைக் கையாளுகிறாள். ஆனால் அவ் ஆத்மாவின் உண்மை நிலையை விளங்காத் தன்மையினால் புறவாழ்வு வாழ்க்கையில் பயிற்றுவிக்கிறாள். ஆனால் ஓரறிவுள்ள மர வகைகளில் இத்தன்மை இல்லை. மரமானது தான் வந்த வினைப்பயனுக்கேற்ற மரமாக வளர்ந்து பூமித்தாயின் கட்டளைக்கு அடிபணிந்து தன்னைச் சுற்றியுள்ள ஓரளவு நிலப்பரப்பு வட்டத்திலுள்ள தனக்குத் தேவையான நிலம், நீர், காற்று, நெருப்பு இவைகளிலிருந்து தனக்குத் தேவையான விகிதாசாரங்களை எடுத்து மரமாக வளர்ந்து மற்றும் 2, 3, 4 அறிவு உயிரினங்கட்கு தேவையான சேவையை விருப்பு வெறுப்பின்றி தனது கால எல்லை வரையில் ஈந்து தனது வாழ்க்கையைப் பூர்த்தி செய்து என்னமாதிரி ஒரு அணுவாக வந்ததோ அவ்வாறு ஒரு அணுவுருவில் வெளியேறுகின்றது. தனது இலை, காய், பழம் இவைகளுடன் உடலையும் தானம் செய்து செல்கிறது.

காத்தல் தொழிலைச் செய்யும் அரிசியை எடுத்து ஆராய்வோமானால் அரிசி என்ற பெயர் காத்தல் தொழிலைச் செய்யும் அரியின் பெயரையும் முதலாவதாக உடையது. நெல்லானது சக்தியாகிய பூமிதேவியை அடைந்ததும் நெல் ஆத்மா மணி பூமியிலுள்ள பஞ்சபூதங்களில் தனக்குத் தேவையான விகிதாசாரங்களை எடுத்து நெல்லாக வளர ஆரம்பித்து பூத்து, காய்த்து, முற்றி விட்டமீன் டீ சத்துள்ள ஆத்மா அணு சேர்ந்ததும் நெல் காய்ந்து விடுகிறது. காய்ந்த நெல்லினுள் ஆத்மா இருக்கிறது. இந்த நெல்லை வறுத்தால் வெடித்து ஆத்மா அற்றுப் போகிறது. ஊற வைத்து அவித்தால் (டீ சத்த கெடாமல்) மனித வர்க்கத்திற்கு சத்துள்ள முதல்தர உணவாகிறது. இதேவிதமாகவே மனித எண்ணமானது அகங்காரம் கொண்டால் காரவெக்கை காரணமாக ஆத்மா அழிந்துபட ஏதுவாகிறது. எண்ணத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டால் அவித்த நெல்லரிசி எவ்வாறு மனித உடல் வளர்ச்சிக்கு பயன்படுகிறதோ அவ்வாறே பக்குவ எண்ணம் மற்றைய உயிரினங்களில் பரம்பொருளைக் காணும் ஆற்றலை அடைகிறது. அரிசிச் சோறானது ஆத்மாவை அறிவை வளர்ப்பதுடன் அரிசிக் கழிவுப் பொருள் மலமாக வெளியேறி நிலத்துடன் சேர்ந்து மற்றும் மரவகை வளர உதவுகிறது. நெல் உமியானது சாம்பலாகி பிற்பாடு நெல் ஆத்மா, புல் ஆத்மா வளர்ச்சிக்கு உதவுகிறது. இங்கு வறுத்த நெல்லுக்கும் அவித்த நெல்லுக்கும் உள்ள வேறுபாடு கண்டோம். இதேவிதமாகவே எமது எண்ணங்களும் வறுத்த நெல் தரத்துக்கு போகாமல் மக்களுக்குப் பயன்படக்கூடிய அவித்த நெல் தரத்துக்கு செல்ல வேண்டும். தவிடு மிருக வர்க்கத்துக்கு உணவாகி எமக்குத் தேவையான பாலாகிறது. நெல்லானது தனது சுற்றுவட்டத்திலுள்ள நிலம், நீர், தீ, காற்று என்பனவற்றுள் சிக்கனமாக தனது சக்திக்கு தேவையானதை எடுத்து தான் எவ்வளவு கடமை செய்ய முடியுமோ தன்னால் முடிந்த முழுவதையும் விருப்பு வெறுப்பின்றிச் சமத்துவ ரீதியில் ஈந்து ஏராளமான ஆத்மா மணிகளையும் உற்பத்தி செய்து எவ்வாறு ஒரு அணுவாய் வந்ததோ அவ்வாறு ஒரு அணுவாய் மாறி ஓய்வு நிலையைச் சென்றடைகிறது.

ஒரு யந்திரம் சுத்தமான பெற்றோலில் நிதானமாக ஒடுகிறது. பெற்றோலின் தண்ணீரோ கழிவுகளோ கலக்கப்பெற்றால் நிதானமிழந்த நிலையை அடைகிறது. அவ்வாறு எண்ணமானது உள் ஒடுங்கி நின்று செயல்பட்டால் நிதானமாக வாழ்க்கை செயல்படும் செம்மைப்படுத்தா எண்ணங்கள் அசுரப் பண்பு நிலைக்கு நம்மைக் கொண்;டு செல்கின்றன.


எண்ணும் இலக்கை
அடைபவனே மனிதன்

ஒரு கற்பக தருவானது அணுவுக்கணுவான ஒரு கருவிலிருந்து உற்பத்தியானது என்பதை அறிய விரும்பினால் பனம் குரும்பையை எடுத்து வெட்டிப் பாருங்கள். அச்சமயத்தில் நுங்கு ஆரம்பமாக வில்லை. ஆனால் அதற்குரிய கரு அதில் சேர்க்கப்பெற்றுள்ளது. ஆனால் எம்மால் அதைக் கண்டு கொள்ள முடியாது. நுங்கு பள்ளம் தோன்றிய காலத்தில் தான் அது வரப் போகிறது என்பது எம் கண்களுக்கு விளங்கும். அணுவுக்கு அணுவான ஆத்மாவிலிருந்து தோன்றிய நுங்கு வரவர முற்றி காலப்போக்கில் பனம் பழமாகி விடுகிறது. அப்பனம் பழத்தை நிலத்தில் நட்டதும் அது தன்னகத்தேயுள்ள சக்தியினால் மண், நீர், தீ காற்று ஆகியவைகளில் தனது தேவைக்கேற்பதை எடுத்து கிழங்காக மாறுகிறது. அக்கிழங்கிலுள்ள பீலியை எடுத்துப் பார்த்தால் கற்பகதருவின் ஆரம்பத்தை அறியலாம். அக்கிழங்கானது தனது மூலவேரை நிலத்தில் பற்றிப்பிடித்து பனைமரமாக வளர ஆயத்தமாகிறது. இவ் ஆத்மாவானது தனது உதவும் உள்ளம் என்னும் தெய்வப் பண்பை வெளிக்காட்ட ஆரம்பிக்கிறது. நு}று, இருநு}று வருடங்களாகத் தன்னால் உதவக்கூடிய சக்தி சகலதையும் குறிக்கப்பெற்ற நிலப்பரப்பு வட்டாரத்திலிருந்து எடுத்து மற்றும் உயிர்வாழ் ஆத்மாக்களுக்கு உயர்வு தாழ்வின்றி சமத்துவ ரீதியில் ஈந்து தனது பணியை நிறைவேற்றி இறந்தபின் உள்ள உடல் பகுதிகளையும் நினைவுச் சின்னமாக ஈந்து அணுவாக மாறி ஓய்வு நிலையைச் சென்றடைகிறது.

ஒரு மாமரத்தை எடுத்துக்கொண்டால் பூக்கும் காலத்தில் எல்லாப் பூவும் காயாவதில்லை. அணுவுக்கு அணுவான ஒரு ஆத்மா இப்பூவில் வந்து சேருகிறது. இவ் ஆத்மா முன்வினைப் பயனுக்கேற்ப தான் எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு சென்றடைகிறது. பூ பிஞ்சாகிக் காயாகிப் பழமாகிறது. இக்காலத்தில் மக்களின் உடல் உள்ள வளர்ச்சிக்கேற்ற சத்துக்களைத் தான் நிற்கும் நிலப்பரப்பு வட்டாரத்தில் இருந்து எடுத்து பிற உயிரினங்கட்கு சிறந்த சத்துள்ள பழமாக வழங்குகிறது. ஒரு மாங்கனி பரம்பொருளின் கையில் கிடைத்ததும் அக்கனிக்கு இருபிள்ளைகள் போட்டியிடுகிறார்கள் அதாவது அறிவுக் கடலும் (விநாயகனும்) ஞானக்கடலும் (வேலனும்) அக்கனியைப் பெற முயலுகிறார்கள்.

அப்போட்டியில் அறிவுக்கடலாகிய விநாயகனை சென்றடைகின்றது. ஆகவே மாங்கனி அறிவை வளர்க்கும் பணியைச் செய்வதுடன் விட்டமின் டீ நிரம்பப்பெற்றதாயும் அமைந்து எல்லா உயிரினங்கட்கும் சமத்துவ ரீதியில் சென்றடைகிறது. தனது கனி, இலை, உடல் சகலதையும் ஈந்து ஆரம்பத்தில் எவ்வாறு ஒரு அணுவாய் வந்து சேர்ந்து சேவை செய்ததோ அவ்வாறே நிலம், நீர், தீ, காற்;று என்பன அவ்வவ்விடம் போய்ச் சேர அணுவான ஆத்மா மட்டும் ஓய்வு நிலையைச் சென்றடைகிறது.

ஒரு அறுகம் புல்லை எடுத்துக் கொண்டால் அறுகம்புல்லில் வேர்விடும் தன்மை ஒவ்வொரு கணுவிலும் உள்ளது. இவ்ஆத்மா அறிவை வளர்க்கும் சக்தி செறிந்ததாய் மிருக வகைகட்கு உணவாகி மனித வர்க்கத்திற்கு சுத்தமான பாலாகவும் சாணமாகவும் உருமாறி அணு அணுவாய் மாறி ஓய்வு நிலையைச் சென்றடைகிறது.

இவ்வாறே தாவர வர்க்கமெல்லாம் இலையாகவும் காயாகவும் பழமாகவும் மற்றும் உயிரினங்கட்கு சமத்துவ ரீதியில் ஈந்து எவ்வாறு அணுவாய் வந்ததோ அவ்வாறே மாறி ஓய்வு நிலையைச் சென்றடைகிறது.

ஈரறிவுள்ள ஊர்வனவும், மூவறிவுள்ள நீர் வாழ்வனவும் நாலறிவுள்ள பறவையினங்களும் ஐந்தறிவுள்ள மிருக வர்க்கங்களும் அணுவான ஆத்மாவிலிருந்து வினைப்பயனுக்கேற்ற உடலை எடுத்து, தமது கடமைகள் பூர்த்தியானதும் ஆத்மாவானது அணுவாக மாறி ஓய்வு நிலையைச் சென்றடைகிறது. ஆறு அறிவுள்ள மனிதனும் இவ்வாறே முன்வினைப் பயனுக்கேற்ப அணுவளவாயுள்ள ஆத்மாவிலிருந்து தோன்றி தனது கடமைகள் பூர்த்தியானதும் பஞ்சபூதங்களும் அவ்வவ் இடங்களை அடைந்து விட ஆத்மா மட்டும் அணுவுக்கணுவாகி ஓய்வு நிலையைச் சென்றடைகிறான். ஆனால் மனிதனுக்கு மட்டும் உண்மைப் பொருளை அறியும் அறிவு கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வறிவை அவன் உரிய காலத்தில் அறியத் தவறுவானாகில் கடமையை உணராதவனாகிறான். அக்கடமையைச் சரிவர நிறைவேற்றாத தண்டனைக்கு ஆளாகிறான். அதற்காக கீழ்வகுப்புக்கு 5, 4 அறிவுள்ள வர்க்கங்கட்கு மாற்றம் பெறுகிறான். மனித வர்க்கத்திலும் அசுரப் பண்புள்ள அகங்காரம் பெற்று பொய் நிலையடைகிறான். (பொய் என்பது ஒன்றும் இல்லாமை)

உண்மையை அறிய வேண்டிய அடைய வேண்டிய மனிதன், ஒன்றுமே இல்லாத பொய்யை அடைகிறான். இவ்வுலகத்திலே ஆசை காரணமாக எவ்வளவோ கஷ்டப்பட்டு உண்மையை மறைத்து, கோடி ரூபாய்களைச் சம்பாதித்து, பொய் காரணமாக பொய் நிலையை அடைகிறான். அதைக் கடைசியில் உணருகிறான். அந்நேரம் அவன் அதை உணர்வதில் பிரயோசனமில்லை. இவ் ஆசை காரணமாக அதற்குரிய தண்டனைகளையும் கடைசிக் காலத்தில் அடைந்தே தீருகிறான். அதாவது அவனது சந்ததியாரிடமிருந்து அடி உதைகளையும், அகங்கார வார்த்தைப் பிரயோகங்களையும் தன் கண் முன்னே பெறுகிறான். கோடி ரூபாய்களைச் சம்பாதிக்க என்ன உபாயங்களைக் கையாண்டானோ, அதே பிரதிப் பலன்களை ஒன்றும் செய்யமுடியாத மரணப் படுக்கையில் அனுபவிக்கிறான். தனது வாழ்நாளில் எந்தப் பண்புள்ள வர்க்கத்தை நாடினானோ அதே வார்க்கத்தைச் சென்றடைகிறான். தான் முன் எண்ணிய எண்ணத்தையே அடைகிறான். தனது குடும்ப அங்கத்தவர்களின் வேற்றுமை மனப்பான்மைக்கு காரண கர்த்தாவாகிறான். அக்குடும்பத்தவரின் வீழ்ச்சிக்கும் காரணகர்த்தாவாகிறான். இதிலிருந்து ஒருவன் எந்த எண்ணத்தை நினைக்கிறானோ அந்த எண்ணத்தை அடைகிறான் என்பது சொல்லாமலே விளங்கும்.

உயர்வு விரும்பும் மக்கள்
உணர்வு மாற வேண்டும்

ஒருமனிதன் அகங்காரத்தை ஒழிப்பானானால் அவனுக்கு சுவர்க்கம் கிடைப்பது நிச்சயம். இயற்கையாக மனிதன் தனது ஆத்மா தெய்வத்தின் ஒருபகுதி என்பதை உணராமல் வேறு எங்கேயோ சுவர்க்கத்தை நாடுகிறான். மனிதன் தனது சுயரூபத்தை இழப்பதற்கு மூலகாரணம் பேராசை, அதற்குக் காரணம் மனம், மனத்தை திடப்படுத்தி காரியம் செய்யலாம். எனினும் மனத்தை அடக்குவது சுலபமன்று ஒரு விநாடிதானும் மனம் ஓரிடத்தில் இருக்காது. ஆசைகள் அடங்கிய மனம் அதை விட்டு இருக்குமானால் எங்கும் சாந்தியைக் காணலாம். நெய்வேத்தியத்தில் உட்கார்ந்து ஈ மறுவிநாடி மலத்தில் உட்காரும் அதே விதமே பவித்திரமான எண்ணங்களை எண்ணம் மனமும் மறுகணம் நேர்மாறான எண்ணங்களை நினைக்கும் பழக்க காரணங்களால் மாறும் இவ்வித மனத்தை நிலைப்படுத்த முயற்சித்தல் சுலபமான காரியமல்ல. மனத்தை உண்மைப் பொருளின்பால் செலுத்தித்தான் கட்டுப்படுத்தலாம். தெய்வீகம் கமழும் து}ய்மையான மனத்தின் கண் பேராசை கிடையாது. மனிதன் இயற்கையாகவே தெய்வத்தன்மை படைத்தவன் என்பதை உணர்கின்றான் இல்லை. சிசு பிறந்த உடன் தாய் ஊட்டும் தாய்ப்பால் சிசுவின் அத்திவாரமாகின்றது. அவ்வேளை தாயானவள் நல்நோக்கம், நற்பழக்கம் அமையுமாறு நல்எண்ணத்துடன் பாலை ஊட்டுவாளானால் அம்மனிதன் இங்கேயே மன ஒருநிலைப்பாட்டுடன் தெய்வீகப் பண்பு மேலோங்க வாழ்வான். ஏழு கிரகங்களில் இருந்து வரும் சக்திகளும் தாயிடத்து ஊறிவரும் முதற் பாலும் அந்நேர வெளிச்சூழ்நிலையும் சிசுவின் அத்திவாரமாக அமைகின்றது. இதன் பிற்பாடு அமையும் கிராமச்சூழ்நிலையும் சமயச் சூழ்நிலையும் முதல் அத்திவாரத்தை பலமுள்ளதாக்க உதவக்கூடியதாய் அமைகின்றது.

உண்மையைக் கைக்கொண்டொழுகும் தவவலிமை படைத்தோர் சொன்னது பலிக்கும், அவர்கள் சினந்தால் உலகம் தாங்காது. தேவேந்திரனையும் கௌதம முனிவர் சொல்வன்மையால் தண்டித்தார்.

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீரபிற. என்றார் வள்ளுவர்.

மனம் உண்மைக்கு மாறாய் செயல்படக் கூடாது. நாங்கள் செய்யும் செயலில் - தொழிலில் இறைவனைக் காணும் (உண்மை) மன எண்ணம் நாளாந்தம் சிறுகச் சிறுகக் கூடி ஏற்படவேண்டும். அப்படியான மன எண்ணம் கூடுதலாய் அமைந்துவிட்டால் அவர் செய்யும் தொழிலில் இறைவன் அமைந்திடுவார். அவர் ஆலயம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. உண்மைக்கு மாறாய் அதாவது ஏமாற்றுபவராய் உள்ளவர்கள் சொல் நிலையானதாய் இராது. உண்மையை இழக்க விரும்பாதவர்கள் என்ன நஷ்டம் வந்தாலும் சொன்ன சொல் மாறமாட்டார்கள். செய்யும் தொழிலில் உயிர்கொலையையும் கருணை மனப் பக்குவமாய் செய்யும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவன் பாவத்தைக் குறைத்துக் கொள்ளலாம். ஜீவனோபாயம் காரணமாய் மீன்பிடித் தொழில் செய்பவர்களும் அத்தொழிலைக் கருணை உள்ளத்துடன் செய்வார்களானால் அவர்களும் உண்மையான இறைவனை அடையலாம். நாம் ஏன் பிறந்தோம். இனிமேல் பிறவாமல் இருக்க இறைவன் (உண்மை) திருவடியை அடைதலைக் குறிக்கோளாகக் கொண்டு உண்மையை நேசித்து வாழ்ந்தால் உண்மையான இறைவனை அடையலாம். நாங்கள் கோவிலுக்கு போகிறோம் அங்கேதான் இறைவன் உள்ளான் என எண்ணுகிறோம்.

இறைவனுக்கு அர்ச்சனை செய்து தேங்காய் உடைத்தால் போதும் இறைவன் எங்கள் கஷ்டத்தைக் குறைப்பான் 2 ரூபா அர்ச்சனையை 10 ரூபா கொடுத்துச் செய்யவேண்டும். பூசைக்கும் அதிகம் கூடக் கொடுக்கவேண்டும் என எண்ணுகிறோம். அப்படியே செய்கிறோம் கோவிலை விட்டு வீட்டுக்கு வரும் வழியிலே எங்கள் அகங்காரத்தை வளர்க்கிறோம். வழியிலே பிச்சைக்காரரோ, வேறு சாதியினரோ எதிர்ப்பட்டால் அவர்களை வேண்டத்தகாதவர்களாய் கருதி அவர்கள் எவ்வளவு உடல் சுத்தமானவர்களாய் இருந்தாலும் வெறுக்கிறோம். எல்லா உயிர்களிலும் தான் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை மறந்து செயல்ப்படுகிறோம். வீட்டிக்கு வந்ததும் கோவில் ஞானம் போய் விடுகிறது. உண்மையை மறைத்து எடுத்ததற்கெல்லாம் மூடி மறைத்து பிரட்டிக்கதைக்கிறோம். இதை தினசரிப் பழக்கமாக்கிக் கொள்ளுகிறோம். இக்காரணங்களால் கோவில் கும்பிடும் பழக்கத்தை எல்லா மக்களும் நாடகபாணியில் பழக்கி வருகிறோம். கோவிலுக்குப் போகும்போது நல்ல உடுப்புகள் அணிந்து வெளிவேடதாரிகளாக நடந்துகொள்கிறோம். வெளிச் சுத்தத்திலும் பார்க்க உள்மனச்சுத்தமே மேலானது என்பதை மறந்து விடுகின்றோம். மனத்துக்கண் பொய் இல்லாத அறத்தை நினைப்பதில்லை இவ்விதமாக மற்றவர்களும் எம்மைப் பின்பற்றி கஷ்டபலனை அனுபவிப்பதற்கு நாம் காரணகர்த்தாவாகிறோம். ஆகவே அவர்களை கெடுத்த பலனையும் நாம் ஏற்கவேண்டியதே உண்மையின் முறை. ஆனால் அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆண்டவன் அதை வியாதி மூலமோ, வன்செயல் மூலமோ, சீருடையின்ர் மூலமோ உணர்த்தும் போதும் எம்மனம் ஏற்றுக்கொள்வதில்லை. 60ம் அண்டுகளின் முன் இருந்த நிலைமைகளையும் 80ன் பின் உள்ள நிலைமைகளையும் நன்றாக உணர்ந்து ஆராய்ந்தால் உண்மைகள் தெரியவரும் ஆனால் நாம் உண்மையை மதியாத காரணத்தால் அதையும் ஆராய மறுக்கிறோம். 60 காலங்களின் முன் இறைச்சிக்கடைகள் எங்காவது மருந்துக்கு ஒன்று இருந்திருக்கும். ஆடு, மாடு வெட்டுவதும் மிகக்குறைவு. ஆனால் 80 காலங்களின் பின் பார்க்குமிடமெல்லாம் ஆட்டிறைச்சி -மாட்டிறைச்சிக் கடைகள் உள்ளன. 50 காலங்களில் செலவுகள் குறைந்த வருவாய் கூடிய காலத்தில் இல்லாத இறைச்சிக் கடைகள் இன்று பெருகியதற்குக் காரணம் என்ன? இக்காலத்தில் மக்கள் அகதிகளாய் வருவாயின்றி, தொழில் இன்றி வீடுவாசலின்றி மிருகங்களாய் அலையும் காலத்தில் இறைச்சி சாப்பிடுவதற்குரிய வருவாய் எப்படி வந்தது. ஆடுகளை வெட்டும் முறைகளை றோட்டோரம் காணும் போது எம் கண்ணில் இரத்தம் சொரிகிறது. ஆகவே நாங்கள் எவராயினும் எத்தனை கோவில்களைக் கும்பிட்டாலும் உண்மையை மதியாத குற்றத்திற்குரிய தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும்.

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு”
என்கிறார் திருவள்ளுவர். சாப வாக்கு இது. கட்டாயம் பலிக்கும்.

மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு என்று சொல்லும் போது எங்கள் மக்களுக்கு ஏன் உயர்வு வரவில்லை. உள்ளந்தான் காரணம். ஆகவே உயர்வு விரும்பும் மக்கள் உள்ளத்தை மாற்றியே ஆகவேண்டும்.

நல்லு}ர் உள்வீதியில் தரிசனம் செய்து நின்ற எட்டுப்பெண்களின் சங்கிலி காணாமல் அவர்கள் தரிசனம் செய்த மன எண்ணம் சடுதியாக மாற்றமடைந்த காரணமென்ன? இவைகள் எல்லாவற்றிற்கும் காரணம் இல்லாமல் இல்லை. காரணம் உண்மையை இறைவன் என எண்ணாமல் வேறு எங்கோ இறைவனைத் தேடுவதேயாகும்.

மாந்தர் உள்ளத்தில் கருணையாகிய உண்மை நிறைந்திருக்;குமானால் உயர்ச்சி குறைவுபட மாட்டாது.

மனித வாழ்க்கையிலே இரு நிலைகள் உள்ளன. ஒன்று வெறுமனே உண்பதும் உறங்குவதுமான இலட்சியம் அற்ற கீழான வாழ்க்கை. இரண்டாவது உயிரை மேம்படுத்தும் இலட்சியம் உள்ள மேலான வாழ்க்கை. மனிதனுடைய அகச் சீர்திருத்தம், புறச் சீர்திருத்தம் இரண்டையும் உள்ளடக்கிய நிலைதான் உண்மையான கலாசாரம். அகச் சீர்திருத்தம் உயிர் என்றால் புறச் சீர்திருத்தம் உடல் ஆகும்.

எம்மூதாதையர் ஒளவையார், திருவள்ளுவர், நாயன்மார்கள் முதலியோரின் அறிவாற்றலின்படி ஒழுகி நோய் இல்லாதவர்களாயும் பொய் இல்லாதவர்களாயும் நியாயம் நீதிக்குக் கட்டுப்பட்டு ஞானவாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அந்த நாட்களில் எழுத்து கணக்கில்லாமலே உண்மையை நேசித்து வாழ்ந்து வந்ததால் வாய்ப் பேச்சே உறுதியாய் இருந்தது. பேராசை இருக்கவில்லை. இக்காரணத்தால் மாந்தருக்குள் நோய் பிணியுமிருக்கவில்லை. இறைவனைத் தங்கள் உள்ளத்திலே இருத்தி உள்ளத்தில் கோயில் கட்டி வாழ்ந்து வந்தார்கள். மாதம் மும்மாரி பெய்தது. மக்கள் பூரண ஆயுளுடன் வாழ்ந்தார்கள். காலஞ்செல்ல மனிதனின் மனதில் ஆசையும் பொறாமைக் குணமும் எற்பட்டு ஒருவரை ஒருவர் அடக்கி ஆள முற்பட்டார்கள். அதற்காகப் பொய் சொல்ல முற்பட்டார்கள். பொய் சொல்லிக் காரியம் சாதிப்பவர்களைச் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருத முற்பட்டார்கள். காலஞ் செல்லச் செல்லக் கூடிய பகுதியினர் இவர்களின் சாமர்த்தியத் திறத்தில் கவரப் பெற்று தாமும் ஒன்றிரண்டு பொய் கூற முற்பட்டு கூடுதலான பொய் சொல்லப் பழகி விட்டார்கள். உண்மையின் நிலைப்பாட்டை மறந்து விட்டார்கள். லாபம் கிடைக்குமானால் எவ்வளவு பொய்யும் சொல்லப் பழகிவிட்டார்கள்.

எதேச்சாதிகரமாக நடப்பவன் மனம் போன போக்கில் நடப்பான். படுகுழியி;ல் விழுந்த போது தன்குற்றத்தை உணராமல் வேலைக்காரனையே குறை கூறுவான். இக் காரணங்களால் சண்டை சச்சரவுகள் மலியலாயின. வாய்ச் சொல்லை உறுதியாக எடுத்த காலம் நீங்கி எழுத்தில் கொடுத்த உறுதியையே புறக்கணித்து, பொய் பேசி பொய்யை உண்மையாக்க முனைந்தார்கள். இந்தப் பொய்யானது இவர்களின் ஆத்மாவில் என்னங்கள், மாறுதலை உண்டாக்கும் என்பதை உணரவில்லை. ஆனால் இவர்களுக்கும் இவர்களின் சந்ததியார்களுக்கும் வீழ்ச்சியையும் முன் காலத்திலில்லாத புதுவிதமான நோய்களையும் அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்பம் கூடுதலாக ஏற்பட்டது. வல மூக்கு வழியாக உண்மைப் பொருளையும், இட மூக்கு வழியாக சக்திப் பொருளையும் அடையலாம். வலக்கண் வழியாக அறிவுப் பொருளையும், இடக்கண் வாயிலாக ஞானப் பொருளையும் அடையலாம். வலச் செவி மூலமாக நியாயப் பொருளையும், இடச்செவி மூலமாக நீதிப் பொருளையும் அடையலாம். இங்கே சிவபெருமான் குடும்ப சமேதராக மேருமலையிலே வீற்றிருக்கும் காட்சியைக் காண்கிறோம். சிரசின் கண் கங்கை பாயும் காட்சியையும் காணுகிறோம். அங்கு என்றும் அழிவில்லாத சந்திரனின் ஒரு கலையையும் காணுகிறோம். அதே போல் மனித சிரசின் கண் மூளையாகிய ஆறு பாய்கிறது. இறைவனின் கலையான அழிக்க முடியாத சந்திர கலையை ஒத்த ஆத்மா அங்கே அமைக்கப்பெற்றுள்ளது. இந்த ஆத்மாவின் முன்வினைப் பயன்படியே இவைகள் செயல்படுகின்றன. இவற்றை ஆராய்ந்து உணர்ந்து உண்மையை நேசித்து செயல்படுமிடத்து இங்கேயே சுவர்க்கத்தை அடையலாம். ஆனால் இவற்றிற்கு பொறுமை மிக மிக முக்கியம். கல்விக்குரிய சரஸ்வதி நாக்கிலே வீற்றிருந்து சொல்லும் சொற்களை எல்லாம் உடனுக்குடன் மூளையில் பதியச் செய்கிறார். அந்த நாக்கிலே உள்ளவளுக்கு இவர் சொல்வது மெய்யா பொய்யா என்பது விளங்கும். அதனால் அதற்குரிய குறி மூளையிலுள்ள ஆத்மாவில் இடம்பெறுகின்றன. இவற்றை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் உண்ணும் உணவும் தொழிற்சாலையில் பிரிக்கப்பெற்று நீர்ப் பதார்த்தம் சலத்துடனும் கழிவுகள் மலக் குடலுக்கும் செல்கின்றன. உணவிலுள்ள சக்திப் பொருள் சிரசிற்கு அனுப்பப்பெற்று அங்கே அமிர்தமாக மாற்றம் பெறுகிறது.

இந்த அமிர்தமானது மன எண்ண மாற்றத்தினால் விந்து வாக்கப்பெற்று சலவாசல் வழியாக கருப்பையினுள் செலுத்தப்பெற்று சலவாசல் வழியாக கருப்பையினுள் செலுத்தப்பெற்று பிள்ளைச் செல்வமாக உருவாக்கப் பெறுகின்றன. உண்மை தான் இயற்கை. அவ்வழியே நாங்கள் சென்றால் எங்கள் பிறவி;ப் பயனை நீக்கி உண்மையை அடையலாம். பழைய முடியுடை அரசர்கள் எவ்வாறு பெயரெடுத்து வாழ்;ந்தாலும் இன்று அவர்கள்பெயர் இல்லை. பெயர் இருந்தாலும் அதனால் அந்த அரசனாயிருந்த ஆத்மாவுக்கு எவ்வித பயனும் இல்லை. 1960 காலங்களின் பின்பும் கொடிகட்டிப் பறந்த மன்னர்களை அறியலாம். ஈரான் மன்னர் ஷா எங்கள் கற்பனைக் கெட்டாத சுகபோகம் அனுபவித்தவர். பணியாட்கள் ஏராளம். இன்று அவரோ அவரின் சந்ததியினரோ இருக்குமிடம் அறியமாட்டோம். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸ் 3000 கோடி டாலர்பணம் உள்ளவர். ஆனால் இன்று இருக்குமிடம் தெரியாது. இன்னும் எத்தனையோ அரபு நாட்டு ஜனாதிபதிகள், அமைச்சர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள். இதிலிருந்து ஒரு அறிவை விநாயகன் தருகின்றார். அதாவது உண்மைக்கு மாறுபாடாய் எதுவும் எந்த விஞ்ஞானமும் எந்த தந்திர மந்திரங்களும் உண்மையை மீறிய வகையில் செயல்பட முடியாது. “யாகாவாராயினும் நாகாக்க” என்று அறிவுறுத்துகிறார். எந்தச் செயல்களும் அதாவது மனம் வருந்தும் சொல்லுகள், பேச்சுகள் முதல் அணுகுண்டு வரை உண்மையின் ஆட்சிக்குட்பட்டவையே. உண்மையை நோக்குமிடத்து எண் விஞ்ஞானமாகவும், எழுத்து இலக்கியமாகவும் அமைக்கப்பெற்றுள்ளது. ஆத்மாவானது சிறு அணுவிலிருந்து உற்பத்தியாகி பெரிதாக வளர்ந்து பின் காலஞ் செல்ல சிறு அணுவாக தேய்ந்து மாற்றமடைகிறது. அதேமாதிரி அந்த ஆத்மாவின் வினைப்பயனுக்கேற்ற எண்ணப் புள்ளிகளும் வளர்ந்து காலஞ்செல்ல சிறு அணுவாக மாற்றமடைந்து அடுத்த பிறவிக்கும் போய்ச் சேருகிறது. இங்கு எண்ண அலைகளானவை சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன. ஒருவர் மனம் நோக ஒருவரை ஏசினால் இருவரிடத்தும் அதற்குரிய புள்ளிகள் பதிவாகின்றன.

அதாவது ஏசியவரிடம் நோக்காடுப்புள்ளியாகவும் ஏசப்பட்டவரிடம் அவரது மனநிலைக்கேற்ற புள்ளியாகவும் பதிவாகின்றன. ஆனால் ஏசியவர் ஏசப்பட்டவரைச் சந்தித்து தான் விட்ட தவறுக்கு வருந்துவதாகவும் மன்னிக்கும்படியும் கேட்கிறாரென்றால் ஏசியவரது நோக்காடுப் புள்ளி உணர்ச்சிப்புள்ளியாகவும் ஏசப்பட்டவரின் புள்ளி இரக்கம் காட்டும் புள்ளியாகவும் மாறி சமநிலையான நீதியாயிருந்தால் இருவரது புள்ளிகளும் மாற்றம் பெறுகின்றன. ஆனால் ஏசியவர் செயல்பாடு உண்மையை விட்டு பொய்யால் வெல்லலாம் என எண்ணி மாறுபாடாய்ச் செயல்பட ஆரம்பித்தால் பொய் விரிவடைந்து அதற்குரிய புள்ளிகள் உடனுக்குடன் பதிவாகின்றன. ஏசப்பட்டவர் தனது மனத்தில் சகிப்புத் தன்மையுடன் உண்மைநிலையிலிருந்து மாறுபடாமல் செயல்படுவாரானால் ஏசியவரின் பொய்ப்புள்ளிகள் எவ்வாறு ஒரு அணுகுண்டு வெடித்து சிறிது நேரத்தில் அற்றுப்போகின்றதோ அவ்வாறு பொய் அழிந்து போகிறது. பொய்யின் அடிச்சுவடுகள் அவரையும் அவரின் சந்ததியாரையும் அணுக்குண்டின் சக்தி சூழலை பாதிப்பதுபோல் பாதிக்கச் செய்கின்றன. ஏசியவரின் சந்ததியினரை நோக்காடுப்புள்ளிகள் தாக்காமலிருக்க வேண்டுமானால் உண்மையின் ஆட்சிக்கு அடிபணியவேண்டும். உண்மையின் ஆட்சியை எந்தச் சக்தியாலும் மாற்றமுடியாது. இறைவன் எல்லா உயிரினங்களையும் சம உரிமையோடே படைத்துள்ளான். சம உரிமையோடு வாழும்படி விநாயகன் அறிவைத்தருகிறான். அந்த அறிவை வலக்கண் வாசல் மூலம் தருகிறான். சரியான உண்மையின்படி நடக்காது போனால் எமது அங்கத்தில் அதற்குரிய புள்ளிகள் இடம் பெறுகின்றன. கண்கெடுவானே என சிலர் ஏசுவதைப் பார்க்கிறோம். இதற்குப் பொருள் உண்டு கண்கெட்டால் அறிவு கெடும் சிறிது செல்ல உண்மைப்பொருளாகிய வாய், மூக்கு, சுவாசத்திலும் மாறுபாடு ஏற்படுகின்றது. திடீரென காட்நின்றது எனக் கூறுகின்றோம். அதற்கு அடக்கமான காரணம் முன் கூறியவையே.

கடமை

பெரியவர்கள் செய்கின்ற தவறுகளுக்கெல்லாம் மன்னிப்புக் கொடுத்துக் கொண்டே போனால் தவறை வளர்த்துக் கொண்டு போனவர்களாகிறோம். மண்ணுலகில் பிறந்தவர்கள் யாவரும் துன்பப்பட்டேயாக வேண்டும். துன்பத்திலிருந்து விலகி யாரும் வாழ்ந்திருக்க முடியாது. துன்பம் ஏன் வந்தது என்று ஆராய்ச்சி செய்கின்ற திறமை மனிதனுக்கு உண்டு. துன்பப்பட்டுக் கொண்டிருப்பதற்கிடையில் துன்பம் ஏன் வந்தது என்று முறையாக ஆராய்ச்சி செய்வானானால் அவன் செய்த குற்றம் அவனுக்கு விளங்கும். எந்தக் காரணத்தினால் துன்பம் வந்திருக்கிறது என்பதையும் அவன் அறிந்து கொள்வான். வினைக்கேற்ற வினைப்பயன் உண்டென்ற உண்மையை அறிந்து கொண்டால் தீமையை விலக்குகின்ற விவேகம் தானாகவே அமைந்துவிடும். நலம் செய்கின்றவர்கள் எல்லாரும் நலனடைகிறார்கள். கேடு செய்கின்றவர்கள் கேட்டை அடைகின்றார்கள். இந்த நியதியை விட்டு யாரும் விலகிப் போக முடியாது என்பதை பராசக்தியின் ஆட்சித் திறமையை எடுத்துக் காட்டுகிறது. புத்திர சத்தானத்தினாலோ செல்வச் செழிப்பினாலோ அழியாப் பெருநிலையை அடைந்துவிட முடியாது தியாகத்தினாலே அழியாப் பெருநிலையை அடைய முடியும். நு}ல்களை நன்றாகப் படிக்க வேண்டும் படித்த பிரகாரம் வாழ்க்கையில் நடக்க வேண்டும். நல்ல கருத்துக்களை அடுத்தவர்களுக்கு மட்டும் எடுத்துக் கூறிவிட்டு தாங்கள் மட்டும் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் சிலர் இருக்கிறார்கள். இவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பயன் இல்லாத வெற்று வார்த்தைகளாகும்.

கட்டுப்பாடற்ற சமுதாயத்தை வழி நடத்துவதற்கு கட்டுப்பாடற்ற சமூகத்துக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை. வழி நடத்துவோர், வழி நடத்தும் தகுதி பெற்றோர் வழி காட்டாது போனால் சமுதாயம் நெறிகெட்டுப் போய்விடும். வழி காட்டுவதற்கு வழிகாட்டுவோர் தேவைப்படுகின்றனர். தகுதியுடைய ஒருவர் கைமாறு கருதாமல் வழி நடத்துவதைத் தம்முடைய கடமையாக மேற்கொள்கிறார். வழிகாட்ட வேண்டும் என அவர்களை யாரும் வற்புறுத்துவது இல்லை. வழிகாட்டினால் இன்ன பரிசு கிடைக்கும் என ஆசை வார்த்தை சொல்பவர்களும் இல்லை. அப்படியே சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.

பிரதிபயன் எதிர்பார்க்காமல் இயற்கை தன்னுடைய கடமையைச் செய்கிறது. அதுபோன்று பதில் உதவி எதையும் நினைத்துக்கூடப் பார்க்காமல் சான்றோர்கள் சமூகத்துக்கு வழிகாட்டுகின்றனர். அப்படி வழிகாட்ட வேண்டும் என்றும் உள்ளுணர்வு அவர்களை உந்தித் தள்ளுகிறது. அந்து உந்து உணர்ச்சி காரணமாக அவர்கள் அறநெறி புகட்டுகிறார்கள்.

அறிவையும், நல்லொழுக்கத்தையும், இறை உணர்வையும் மேம்படுத்துகின்ற கல்வியை வணிகப் பொருள் ஆக்குவதைப் போலப் பாவச் செயல் வேறு எதுவும் இல்லை. கல்வி மனத்தைப் பயன்படுத்தி அறிவை நெறிப்படுத்தி உள்ளிருக்கும் ஆன்மாவை துலங்க வைக்கின்றது. அத்தகைய கல்வியை ஊன் உடம்பை பெருக்குவதற்கு உதவும் ஒரு கருவியாக ஆக்கிவிடக் கூடாது. காலத்தின் கோலத்தில் கல்வியும், ஆலயங்களும் கடைச் சரக்காக மாறி இருப்பது தவிர்க்க வேண்டியதாகும்.

சிறுவயதில் இருந்தே ஒருவனை ஒழுக்கம் உள்ள வகையில் பயில்விப்பதும், ஒழுங்குள்ள குடிமகனாக இருக்க வேண்டும் என்னும் ஆவலுடையவனாகச் செய்வதும், நீதிமுறை வழுவாமல் ஆள்வதற்கும், ஆளப்படுத்தற்கும் வழிகாட்டுவதற்கும் எதுவோ அது தான் கல்வி.

மூடர்களுடைய மூடத் தன்மையை உணராமல் அறிவு நு}ற் பொருளைக் கற்பித்துப் பயன் இல்லை. நல்ல விசயங்களைப் படிக்காத மூடர்களின் காதில் நுழைப்பதால் ஏற்படும் அவமானக் குற்றத்துக்கு அவ் ஆசிரயர்களே காரணம் ஆகிறார்கள்.

மனிதன் அறிவுடையனாகும் பொழுது மனம் விரிவடைகின்றது. அப்பொழுது அவன் மயக்கத்துக்கு ஆளாகிறான். மயக்க நிலையில் இருக்கும் மனிதன் பொருந்தாத சில ஆசைகளை தன் உள்ளத்தில் வளர்த்துக் கொள்ளுகிறான். அவ் ஆசைகளை நிறை வேற்றுவதற்கு ஒழுக்கத்திலிருந்து தவறுகிறான். கட்டுப்பாடான வாழ்விலிருந்து பிசகிப் போவதற்கு ஆசை படைத்த மனிதன் முயல்கிறான். மக்களுக்கிடையில் பிணக்கு வந்து விட்டால் அவர்களிடமிருந்து பெருந்தன்மை பறந்தோடிப்போய் விடுகிறது.

பிரமா படைத்தல் தொழிலைச் செய்பவர். நாவிலே சரஸ்வதியைச் சக்தியாயுள்ளவர். தாமரைப்பூ ஆசனத்தையுடையவர் இவர் பேராசை காரணமாக தானே முதற் கடவுள் என மாலுடன் வாதாடுகிறார். மெய்ப் பொருளின் அடிமுடியைக் காணுபவரே முதற் கடவுள் என பரம்பொருள் அருளியதும் அன்ன வடிவம் எடுத்து முடியைக் காணப் புறப்படுகின்றார். மால் பன்றி வடிவ மெடுத்து அடியைக் காணாது திரும்பியதும் உண்மையைக் கூறுகிறார். பிரமாவோ தாழம்பூவையும் முருக்கம்பூவையும் சாட்சியாக வைத்து முடியைக் கண்டேன் எனப் பொய் கூறுகிறார். ஆகவே பொய் கூறியதற்குப் பலனாக அவரது தலையில் ஒருதலை இழப்பு ஏற்படுகிறது. நீதியாகிய வயிரவர் ஒரு தலையை அழித்து விடுகிறார். பிரமாவுக்கு ஆலயம் இல்லாமல் போனதுடன் பொய்ச் சாட்சி சொன்ன பூவகைகள் உதவாத பூவகைகளாக சாபமடைகின்றன. படைத்தல் தொழில் செய்யும் இவருக்கு பூசை முதலிய இல்லாதபோதும் இவரது சக்தி சரஸ்வதி கல்விக்குரியவளாக அமையப்பெற்று விழாக்களால் கொண்டாடப்படுகிறாள். படைத்தல் செய்யும் ஒரு கடவுள் பொய் சொன்ன காரணத்தினால் ஆலயம் இல்லாததுடன் ஒரு தலையையும் இழக்கும் நீதியை அடைவதை சிந்தித்துப் பார்ப்போமானால் நாங்கள் பொய் சொல்வதற்கு என்ன தண்டனை அடைவோம் என்பதை அறியலாம். எங்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

கருணை

உன் தந்தையும், தந்தையின் தந்தையும் எங்கே சென்றிருக்கின்றனர். பணம், பாக்கியம் அல்லது உறவினர்கள் உதவினார்களா? ஆகவே உனது இதய குகையில் மறைந்து உறையும் உண்மைப் பொருளை நாடு, நம்மிடத்தில் கடவுளைத் தியானிக்க வேண்டும். (மெய்ப்பொருள்) என்ற ஆசை இருந்தாலும் முற்பிறவியில் நாம் செய்த காரியங்களின் பலனாக மனம் உண்மைப் பொருளை நினைக்க முடியாமல் உலக ஆசைகளின் நடுவே அலைந்து கொண்டிருக்கும். ஆனால் உண்மைப் பொருளைச் சிந்திக்கும் விருப்பம் ஆழமானதாகவும் வலிமையானதாகவும் அமைந்து போகுமானால் மனம் உண்மைப் பொருளின் திருவடிகளில் தவழுகிற ஆற்றலைப் பெறும். நாம் எம் மனதில் கருணையைப் பெறுவோமானால் உண்மைப் பொருளின் கருணையை அடைவது சுலபமாகும். எண்ணிக்கையில் அடங்காத எல்லாவிதமான அம்சங்களையும் அகற்றவல்லது தெய்வ பக்தி ஒன்றே என்னும் உண்மையை மக்களுள் சிலரே அறிய வருகின்றனர். திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் பணம் வந்து குவிகிறது. ஆசை என்னும் அரக்கன் அவர்கள் உள்ளத்தில் புகுந்து விடுகிறான். பிறகு ஆசையை நிறைவேற்ற அந்த மனிதன் படாதபாடுபடுகிறான். பணத்தைச் சம்பாதிப்பதில் சில வேளைகளில் நெறி தவற ஆரம்பிக்கிறான். ஆனால் சாந்தமான வாழ்க்கைக்கும் அத்தகைய பேராசைக்காரனுக்கும் வெகுது}ரம், பேராசை காரணமாக அமைதியிழந்து அல்லல்படுகிறான்.

இன்பமும் துன்பமும் அவரவர் செய்த வினையின் விளைவாகும். மனிதன் கருமம் செய்யாமல் கணப்பொழுதும் வாழ்ந்திருக்க முடியாது. மூச்சு விடுவது கருமம். உணவு உண்பது கருமம். நீர் அருந்துவது கருமம். நீராடுவதும் கருமம். ஜீரணக் கருவிகள் செயல்படுவதும் கருமம். எண்ணங்களை எண்ணுவது கருமம். உள்ளத்தில் உணர்ச்சி ததும்பி எழுவது கருமம். ஆதலால் கருமம் செய்யாமல் எந்த சீவனும் கணப் பொழுதாவது இருக்க முடியாது. அங்ஙனம் மனிதன் புரிகின்ற கருமங்களுள் தனக்கு அனுகூலம் இல்லாதவை துன்பத்தை வளர்க்கின்றன. எனவே அவரவர் செய்த செயலின் நன்மை தீமைக்கேற்ப இன்ப துன்பங்கள் விளைகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். இறைவன் அருள், மனித பிரயத்தனம், சூழ்நிலை ஆகிய மூன்றும் எங்கே ஒன்று சேர்ந்து இருக்கின்றதோ அங்கு வெற்றியும் விரிவும் நல்வாழ்வும் சேர்ந்து அமைந்திருக்கின்றன.

ஆத்மாக்கள் பொதுப்பட மரணத்தின் மூலமாக ஓய்வு நிலையை அடைகின்றார்கள். அந்த ஓய்வு நிலை முடிந்தான பிறகு பொருத்தமான சூழ்நிலை வரும்பொழுது தோற்றத்துக்கு வருகின்றார்கள். நாம் செய்த செயல் ஒரு சென்மத்தோடு முடிந்து போகாது. தொடர்ந்து வினைக்கு ஏற்ற வினைப்பயனை அனுபவித்துக் கொண்டே வருகின்றோம். ஆதலால் உண்மையைவிட்டு பிசகலாகாது. உண்மையைக் கையாளுவதன் மூலம் படிப்படியாக மேலே வந்து கொண்டிருக்கிறோம்.

சிறு குழந்தைகள் பொம்மை விளையாட்டில் ஆசை கொள்கிறது. ஒருபடித் தரம் வந்த பிறகு அந்த ஆசை விட்டுப் போகிறது. உலகத்தில் பற்று வைத்திருக்கும் வரையில் ஆசை வளர்ந்து கொண்டே போகிறது. ஆசையை அனுபவித்துப் பார்த்ததின் பின் இது வெறும் விளையாட்டு என்ற ஆசையின்மை வருகிறது. அன்றைக்குத்தான் நாம் ஞானமார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் ஆகிறோம். சிறுபான்மையினோர்தான் ஆசையை வென்ற நிலையில் இருக்கின்றார்கள். ஆசையை முறையாக ஆராய்ந்து பார்ப்போமா நாம் கொண்டுள்ள ஆசைகள் பல பொருளற்றவைகளாக எண்ணி மயங்கலாகாது. ஆராய்ந்து பார்க்கப் பார்க்க எமது ஆசை சிறுபிள்ளைத்தனம் என்பது விளங்குகிறது. சுத்தமான கற்பூரம் எரிந்தால் தட்டில் கரியையோ சாம்பலையோ காண முடியாது. அவ்வாறே சுத்த ஆத்மாவிடம் ஆசைப் பாக்கி இருப்பதில்லை. ஆசை என்னும் வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் மிஞ்சுவது ஒன்றுமில்லை. அவனிடம் எம்மை ஒப்படைத்துவிட்ட மனநிலை அடையலாம். தியாகம் என்பது சோம்பித் திரிவது அல்ல. கத்தி பாவியாமையினால் துருப்பிடித்துப் போகிறது. மற்றொன்று தேய்கிறது. தேய்வது சிறந்தது. துருப்பிடித்துப் போகலாகாது. நம்முடைய செயல் பயன்படுகிற பாங்கில் தேயவேண்டும். துருப்பிடிக்கும் பாங்கில் நம் வாழ்வு வீணாகிவிடக் கூடாது.

உயர்வு தாழ்வு பற்றி ஆராய்வோமானால் இறைவன் படைப்பில் எல்லா ஆத்மாக்களும் சமத்துவமானவையே. உண்மையை நேசிக்கும் நாங்கள் எம் அகங்காரத்தை வளர்க்கிறோம். உண்மைப் பொருளிலிருந்து உண்டான நாம் உண்மைப் பொருளில் உண்டான உயிரினங்களை வெறுப்பதால் கடவுளை வெறுத்தவர்களாகிறோம். தீண்டத்தகாதவர்கள் என்றால் சுத்தமற்றவர்கள் என்பது பொருள். சுத்தமான நடைபாவனையுடைய மனிதப்பண்புள்ள எவரும் தாழ்ந்தவர்களாக முடியாது. அசுரப் பண்பு நிறைந்தவர்களை தாழ்ந்தவர்களாகக் கூறலாம். (மனதில் திருப்தி இல்லாமை) குறைநிலை இருக்கும் வரையில் பேத புத்தி இருந்து கொண்டே இருக்கும். உயர்வு தாழ்வு என்பது அப்போது மனதில் இடம் பெறுகிறது. மனதிலுள்ள குறைநிலையை நீக்கும் போது (போதுமென்ற மனம்) எங்கும் இறைவனைக் காணும் நிறைநிலை உண்டாகிறது. நிறைநிலையை அடையும்பொழுது நாம் தெய்வப் பண்பை அடைகிறோம். இங்கு சமத்துவ மனப்பான்மை மேலோங்குகிறது.

சத்தியசாயிபாபா கூறுகிறார்.

இயற்கையின் இரகசியங்களை அறிய முற்பட்ட மனிதன் காற்று, நீர், பூமி, நெருப்பு ஆகியவற்றை தனக்கு அடிமையாக்கி விட்டான். இயற்கையைக் கட்டுப்படுத்தப் பழகிய மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தப் பழகவில்லை. இதுதான் இன்றையமனிதனின் பரிதாப நிலை. தந்தையே நீங்கள் உலகங்களை எல்லாம் கைப்பற்றி உள்ளீர்கள். ஆனால் நான், எனது என்னும் அகந்தையைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என பிரகலாதன் இரணியனுக்குக் கூறினான். அன்பு இருவகை. ஒன்று இயற்கையான அன்பு, மற்றது தெய்வீக அன்பு. பிரதியுபகாரம் கருதுவது சாதாரண அன்பு. விளைவு கருதாமல் மற்றவர்களுக்கு வழங்குவது தெய்வீக அன்பு. (நெஞ்சங்களுக்கு மனித மனங்களுக்கு, ஆத்மாக்களுக்கு இடையே விளைவது தெய்வீக அன்பு) பேச்சினில் அன்பு உண்மை, செயலில் அன்பு, தருமம், சிந்தையில் அன்பு மதம் என்ற ஒரே சமயமும் தான் உண்டு என்பதை இளைய சமுதாயம் உணரவேண்டும். சுயநலம் அற்ற அன்புணர்ச்சியை இளையோரிடத்தே வளர்க்க வேண்டும்.

தமிழர் மதம்

மறைமலை அடிகள்

ஒவ்வோர் ஆண்மகனும் பெண்மகளும் எல்லா உயிர்க்கும் வந்திருக்கும் இப்பிறவியின் நோக்கத்தையும் பயனையும் சிறிது ஆராய்ந்து பார்ப்பார்களானால் தாம் அறிவும் இன்பமும் பெறுவதில் வேட்கையுடையவராக இருத்தல் போலவே ஏனையவுயிர் ஒவ்வொன்றும் வேட்கையுடையனவாய் இருத்தலை எளிதில் அறிந்து கொள்ளலாம். நாம் அறிவும் இன்பமும் பெறுதல் பொருட்டு நமக்கு ஆகாத உயிர்களின் பிறவியை அழித்து விடுதல் எவ்வளவு தீயதென்பது நம்மைப் பிறர் அழிக்க வருங்காலன்றோ தடுத்ததுடன் நமது உணர்வுக்குப் புலனாகின்றது. ஆகவே எந்த உயிரின் பிறவியையும் அழிக்காமல் நமது பிறவியின் அறிவையும் இன்பத்தையும் பெருகச் செய்வதற்கு ஏற்ற வழியாகும். அன்பும் அருளும் ஒருங்களாவிய அறவாழ்க்கையாகும் என்றுணர்ந்து கைக்கொண்ட பெருங்கொள்கையே தமிழ் மதத்திற்கு பேர் உறுப்;பாய் விளங்குகின்ற தென்பது உணரற்பாலது.

இன்றைய தமிழ் மக்கள் பார்ப்பனரைப் பார்த்து குலவேற்றுமை மிகுதியாய் பாராட்டி ஆடவரையும் மகளிரையும் கட்டாய மணத்தில் புகுத்தி வருதலின் அதில் புகுந்த ஆண் பெண் பாலார் பெரும்பாலும் துன்ப வாழ்க்கையிலேயே உழன்று மாய்கின்றனர். ஒத்த அன்பில்லாத தம் வயிற்றிலிருந்து நற்குண நற்செய்கை வாயாத நோய் கொண்ட மக்களைப் பெற்று உலக வாழ்க்கைக்கே பெருந்தீமை விளைவிக்கின்றனர்.

தாம்பெற்ற புதல்வர்க்கு கல்வியறிவு புகட்டி அவர் அது கொண்டு தமது வாழ்க்கைக்கு வேண்டும்பொருள் தேடிக் கொள்ளுமாறு செய்து பின் அவரை இல்லற வாழ்க்கையிலே நிலைப்பிக்கும் அவ்வளவே பெற்றோர் மக்கட்குச் செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள். அவர்க்குத் தீமையே செய்தவராவார். தமது குடும்பச் செலவுக்கு மேற்பட்ட பொருளைத் வித்தியா விருத்திச் செயல்களுக்கு உதவியாகக் கொடுத்தல் வேண்டும். இக்காலத்தில் உணவளிக்கும் அறம் பயன் தராமையுடன் அறச்சோறு தின்பார் பல தீச்செயல்கள் புரியுமாறு அவரை ஏவுகின்றது. பிணிபட்ட ஏழைகட்கும் கல்வி பயிலும் ஏழை மாணவருக்கும் வறிய ஆசிரியருக்கும் நு}ல்கள் இயற்றும் நு}லாசிரியர்கட்கும் துறவிகட்கும் உவந்து நல்குதலே உண்மையான அறமாகும்.

நாம் அணுவளவான ஒரு விந்துவிலிருந்தே உற்பத்தியானோம் அவ்விந்து மூலம் எம் உருவத்திற்குரிய அதாவது கண், மூக்கு. செவி, தலை, மயிர், கை, கால், நகம், தசை, எலும்பு, இரத்தம் யாவற்றுக்குமுரிய மூலப்பொருள் செறிந்து அவை ஓர் உண்மைக் கோட்பாட்டுக் கமையவே உருவானோம். இந்த உண்மைக்கோட்பாடு அணுவளவு மாற்றம் ஏற்படின் நாம் மனிதனாய் உருவெடுத்திருக்க முடியாது. எமது தந்தையின் விந்து கருப்பையில் செல்கையில் (விந்து - உண்மைப் பொருள், கருப்பை - சக்திப்பொருள்) அவரது மன எண்ணத்தின் பிரதிபலிப்புக்கேற்ப எமது உருவங்கள் அமைந்து விடுகின்றன. நாம் உண்மைக்கு மாறாய் செயல்பெற முயற்சிக்கும்போது எமது உருவநிலையில் எமக்குத் தெரியாமலே உள் தொழிற்பாடுகள் மாறுபாடாய் செயல்பெற்று எமது விதியை மாற்றியமைக்கின்றன. இவைகளை ஆராய்ந்து அனுபவத்தில் கண்டறிய நுண்ணறிவு தேவை. உண்மைக்கு மாறாய் செயல் பெற்றிருந்தால் அந்த நுண்ணறிவினாலும் உண்மையை கண்டறிய முடியாது. நாம் உண்மை பேசாமல் மறைக்கும் போது உள் (இரத்தோட்டம் முதலில்) செயற்பாடுகள் கோட்பாடுக்கமையாத காரணத்தால் நோயாகவும் அங்க மாற்றங்களாகவும் உருவெடுத்து எம்மை பொய்நிலைக்கு கொண்டு செல்லும் செயலை உடலின் உள்ளேயே அமைக்கின்றன. ஞானஅறிவினால் மட்டுமே இவற்றை உணரமுடியும்.

தற்கால உலகம்

இளைஞன் ஒருவனுடைய தாய் அவன் ஆத்ம சிந்தனை விரும்புவதை மறுக்கிறான். நீ என்னைக் கொன்று என் ரத்தத்தை குடிப்பதற்கு நிகர் எனத் தடை சொல்லுகிறான். ராம பக்தியில் ஈடுபட்டிருந்த பரதன் தன் தாயின் சொற்படி நடந்து கொள்ளவில்லை. ராம சேவையிலுள்ள விபீசனன் தன் தமையன் இராவணனுடைய சொற்படி நடந்து கொள்ளவில்லை. கடவுள் (உண்மை) நாட்டம் ஒன்றில் மட்டும் பெற்றார் உற்றார்களை ஒருவன் மீறிப் போகலாம். அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசித்த கண்ணன், புலனடக்கம் இல்லாதவர்களுக்கும், பக்தி இல்லாதவனுக்கும், தொண்டு புரியாதவனுக்கும் என்னை (தொழில்) இகழ்பவனுக்கும் இப்பேருண்மையை இயம்பாதே என்றான். இவர்கள் சரியான விளக்கம் தெரிந்து கொள்ளாது உலக ஆசைகளை நிறைவேற்ற இவ்வுண்மைகளை முறை தவறிப் பயன்படுத்துவார்கள் மனத் து}ய்மையும், ஞான வேட்கையும் சிரத்தையும் ஒருவனிடம் அமைந்திருந்தால்தான் அவர் பேருண்மைகளை தெளிவாகக் கிரகிக்க முடியும். ஆத்மாவைப் பற்றிக் கேட்பவர்கள் பலர் அதை அறியமுடியாத நிலையில் இருக்கிறார்கள் என உபநிஷதங்கள் கூறுகின்றன.

இயற்கையில் உள்ள ஜடசக்தி சித் சக்தியாக மாறமுடியும். சூரியனின் வெப்பமும் வெளிச்சமும் ஜடசக்தியின் கூறுகள். அவை இரண்டும் உயிரைப் பேணுகின்றன. அச்செயலின் வாயிலாக அது சக்தியாக மாறுகிறது. இச்சக்தி உயிர்களில் இன்ப துன்பமாகவும் விருப்பு வெறுப்பாகவும், காம குரோதமாகவும், அமைகிறது. இவை இயற்கைச் சக்திகளின் கூறுகள். ஐம்பொறிகளை தம் போக்கில் செயல்பட விடுவதுபோகம். இவற்றை கட்டியாளுதல் யோகம். யோக சாதனத்தால் மனிதன் காமம் குரோதம், துயரம், பொறாமை, பொய். பேராசை ஆகிய கீழ்ப்பண்புகளை அடக்கி அமைதி, பேரன்பு, ஞானம் ஆகிய தெய்வீகசக்தியாக மாற்றியமைக்க முடியும்.

வெப்பம் என்னம் சக்தியைக் கொண்டு நீரைக் கொதிகலனில் ஆவியாக மாற்றி அதனைப் பிடித்து அடைத்து வைக்கலாம். அப்படி அடைத்த ஆவியைக் கொண்டு இரும்புப்பாதையில் வண்டியை ஓட்டிச் செல்லலாம். இதே விதத்தில் மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள ஆசை, சினம், பொறாமை, வெறுப்பு முதலிய கீழ்ப்பண்புகளை யோகசாதனத்தின் மூலம் நியாயம், உறுதி, உண்மை ஆகிய தெய்வப் பண்புகளாக மாற்றமுடியும். மேல்நிலை அடைய யோக சாதனம் இன்றியமையாது. கொடிய விலங்கின் செயலைப் பெறுதலும், கீழோனாக இருப்பதும், மோலோனாவதும், தெய்வீகமாவதும் மனிதனுக்கு முடியும். தெய்வீகமானது ஒப்புயர்வற்ற பெரிய நிலையாகும். கடமை உணர்ந்து செயல்படல் உயிர்களை அன்போடு நேசித்தல், கடவுள் பக்தியை வளர்த்தல் ஆகிய பேரியல்புகளை கையாளுவதன் மூலம் தெய்வீகப் பண்புகளை அடையலாம். ஆனால் மனிதன் அறியாமையினால் உண்மைப் பொருளை (கடவுளை) புறவுலகமாகிய பிரபஞ்சத்தில் தேடித்திரிகிறான். பிறவிகள் பல எடுத்து தன் முயற்சியில் தோல்வியடைந்த பிறகு உண்மைப் பொருள் புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது என்பதை அறிய வருகிறான். அந்த அறிவு உறுதி பெறுவதற்கேற்ப புறவுலகப் பற்று குறைகிறது. உண்மைப் பொருளை தன் அகத்தில் நாடுகிறான். அருள் தாகம். ஆத்ம பரிபாகம் அடைகிறான். அத்தகையவன் தன்மீது வைத்திருந்த பற்றுதலும், உலகத்தின் மீது வைத்திருந்த பற்றுதலும், தெய்வப் பற்றாகத் திருந்தியமைகின்றது. சாதனையின் மூலம் தன்னைப் பர சொரூபமாகத் திருத்தியமைத்து இறுதியில் பரம்பொருளில் ஒன்றுபட்டு முத்தியடைகிறான்.

சிசு கர்ப்பத்தில் இருக்கும் பொழுது கல்வி ஆரம்பமாகிவிடுகின்றது என்பதை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். கர்ப்பத்தில் சிசு உருவாகிக் கொண்டு வரும் பொழுது தாயின் எண்ணம் மறைமுகமாகச் சிசுவுக்கு உதவுகிறது. தெய்வப்பண்பு பேரியல்பு படைத்தவளாகத் தாய் இருந்தால் அக்குணம் சிசுவுக்கும் அமைகிறது. கீழ்ப்பண்பு உடையவளாய் இருந்தால் அக்குணம் அமைகிறது.

இயற்கைத்தாய் அமைத்துள்ள இயற்கை நியதியிலிருந்து மனிதன் பிசகுவானானால் அக்கணமே அதற்குரிய தண்டனை கிடைத்து விடுகிறது. பொய் சொல்லக்கூடாது என்பது இயற்கையின் திட்டம். அது மனிதன் போட்ட திட்டமன்று. பொய் சொல்லுகிற அக்கணமே மனச்சாட்சி கெட்டுப் போகின்றது. நாம் எப்பொழுதெல்லாம் மனச்சாட்சியை மீறி நடந்து கொள்கின்றோமோ அப்பொழுதெல்லாம் சீhகேடு அடைகின்றோம். சீர்கேடு அடைவது நமக்குத் தெரியும். அது மற்றவர்களுக்குத் தெரியாது. உடல் அமைப்பில் முற்றும் வளர்ச்சியடைந்த அமைப்பு மனித அமைப்பாகும். மனிதப் பிறவி பெற்றபின் மனிதப் பிறவிக்கேற்ற கடமையை உணர்ந்து செய்யாமல் போவானாகில் வாழ்க்கையை வீணாக்கியவனாகிறான்.

விலங்கு நிலையிலுள்ள மக்களை மனித நிலைக்கும், மனிதநிலையிலுள்ள மக்களைத் தெய்வ நிலைக்கும் உயர்த்துவதே தமிழ்த் தாய் செய்யும் மறுமலர்ச்சியாகும். நாகரீகம் படைத்த ஒவ்வொரு நாட்டிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலக ஆசையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். பணத்தில் அவர்கள் மயங்கிக் கிடக்கின்றார்கள். பணத்திலும் போகத்திலும் உள்ள மயக்கத்திலிருந்து விடுபடுவதற்குரிய போதனையை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்கால உலகம் பணத்தைத் துதி செய்து கொண்டிருக்கிறது. சமூக இயக்கங்களில் உள்ளவர்கள் பலர் வேதாந்தம் தான் சமூகத்துக்கு நலன் செய்யும் என்பதை அறிகிறார்கள். இவ் இயக்கங்கள் யாவும் ஆன்மீக மயமாக்கப்படும் பொழுதுதான் அவை உயர்ந்த நலனைத் தரும் என்பதையும் அறிகிறார்கள். நம் நாட்டில் ஏதாவது பணி நிகழவேண்டுமாயின் அப்பணி ஆன்மீக மயமாக்கப்பட வேண்டும். கலியுகத்திற்கு கருமமே சிறந்த அறமாகும். கருமத்தினால் சித்த சுத்தி செய்து கொள்ளாதவர்கள் ஆன்ம ஞானத்தைப் பெறமுடியாது. ஆகவே சமய உணர்வை எல்லாக் குழந்தைகளுக்கும் புகுத்த வேண்டும். ஆபாசம் உள்ள சினிமாப் படங்களை, பாடல்களைத் தடை செய்ய வேண்டும். குழந்தைகள் அவற்றைக் கேட்க அனுமதிக்கக் கூடாது. பக்தி வீரம், நீதிக் கருத்துடைய பாடல்களை இசையுடன் பாடச் செய்யவேண்டும். நம் இதிகாசப் புராணங்களில் உள்ளவற்றை புரியுமளவு சிறுதமிழில் கூறவேண்டும். தனியார் நடத்தும் பாடசாலைகளில் ஓரளவு ஒழுங்கு, கட்டுப்பாட்டைக் காண்கிறோம். அரசு நடத்தும் பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டைக் காண முடிவதில்லை. அரசு பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் பொறுப்புணர்ந்து கடமையுடன் செயல்படுவது குறைவு.

உண்மைக்கு மாறாய் நடவாதே

“அவுணர் குடிகெடுத்த ஐயா எமைக் காப்பாற்றுவதில் ஏன் இந்தத் தயக்கம்?” இக்கேள்வியைத் திரும்பத் திரும்பச் சிந்திக்க வேண்டும். பொய்யுள்ள அவுணர்களைத் தண்டித்தாய். ஆகவே பொய் பேசுபவர்களைத்தண்டிக்கும் ஆற்றல் உனக்கேயுரியது. எம்மைக் காப்பாற்று என்று சொல்வதால் அதாவது நாமும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஏன் அனுபவிக்கிறோம். இதை ஆராய நாம் விரும்பவில்லை. எம்மைக் காப்பாற்றுவதில் தயங்காதே என அலறுகிறோம். நல்லு}ர் சம்பவங்கள் தினசரி பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொடியேற்றத்தன்று 8 பெண்கள் சங்கிலி காணாமல் அதை அணிந்த பெண்கள் அடைந்த திடீர் மனமாற்றம், தேர்த் தினத்தன்று மூன்று தாலிக்கொடி, ஒன்பது சங்கிலி காணாமல் அப் பெண்கள் அடைந்த திடீர் மனமாற்றம், தீர்த்தத் தினத்தன்று இளைஞர்கள் தண்ணீர் வாரி இறைத்ததால் திடீரென இளம் பெண்கள் அடைந்த மனமாற்றம் நீர்வேலி அச்செழு அம்மன் கோயிலின் கும்பாபிசேக எண்ணெய் சாத்தும் வைபவத்தில் இடம்பெற்ற திடீர் மனமாற்றம் இவைகளை அறிகிறோம். மூலகாரணத்தை ஆராய மறுக்கிறோம். தரிசனம் செய்யப் போகும் போது இவ்விதம் நேரலாமென எண்ணவில்லை. இதற்கும் ஏதும் காரணமிருக்குமோ என ஆராய முயலவில்லை. இதேவிதமாகவே நெடுக நடப்பதை விரும்புகிறோமா? கலியுக தர்மம் கருமத்தில் தான் தங்கியுள்ளது. கலியுகக் கடவுள் ஞான முருகன் எனக் கதைக்கிறோம். ஞான வாழ்வு என்றால் என்ன என்பதைப்பற்றி சரியான விளக்கம் வாழ்வு என்றால் என்ன என்பதைப்பற்றி சரியான விளக்கம் பெற முடியவில்லை. ஞானம் என்றால் வாழு வாழவிடு என்பதாகும். வாழு என்றால் உண்மையான உரிமைகளுடன் வாழு என்பதாகும். உண்மைக்கு மாறாய் நடவாதே என்பதாம். வாழவிடு என்றால் மற்றைய எவ்வுயிர்க்கும் இடரில்லாமல் உண்மையாய் வாழ வழிவிடு என்பதாகும்.

காலையில் எழுந்தவுடன் முதலில் மலசலம் கழித்து புதுத் தொழில் ஆரம்பிக்க ஆயத்தமாகிறோம். நேற்றைய தொழில்பாட்டால் ஏற்பட்ட கழிவுகளை நீக்குகிறோம். அடுத்து பல் விளக்கி முகம் கழுவுகிறோம். நாக்கைக் காப்பதற்காக நாக்கில் உள்ள சரஸ்வதியின் காவல் அரணான பல்லைச் சுத்தம் செய்கிறோம். அடுத்து எமது சரீரத்தின் அகப்பொருள் அமைந்த ஆறுவாயில்களையும் கழுவி (மூக்கு, கண், செவி) அன்றைய தினத்தை நல்வழியில் செயற்பட ஆயத்தம் செய்கிறோம்.

ஆறு வாயில்களும் கழுவி முடித்து விபூதி தரிக்க வருகிறோம். விபூதியைத் தரிக்கும் போது எமது ஆத்மாவின் நிலை என்ன என்பதை எண்ணுவதில்லை. எமது உடலின் முடிவு இந்த நீறான விபூதியே. ஆகவே நாம் என்னதான் தலைகீழாய் செயல்பட்டாலும் முடிவு இந்த நீறாகும் உண்மையே. நீறாகும் நாம் அகங்காரமின்றி நடப்பதற்காக ஒவ்வொரு கணமும் நினைப்பதற்காகவே திருநீறு பூசும் பழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தி விபூதி வாங்கும் போதும் தரிக்கும் போதும் உண்மையை வணங்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அத்துடன் விபூதியை பிரதானமாக சிரசாகிய அறிவுக் கங்கையுடைய நெற்றியில் இடும் வழக்கத்தை பழக்கப்படுத்தினார்கள். சிரசிலேயுள்ள மூளைக்கு இத் திருநீற்றின் சக்தி சென்று உடலைப் பக்குவப்படுத்தி உள்ளத்தையும் பக்குவப்படுத்துமென விரும்பினார்கள். அன்றைய வாழ்க்கையில் உண்மைக்கு மாறாய் எள்ளளவும் செய்ய மாட்டோம் என விரும்பி சிவ சிவ சிவ என திருநீறு தரித்த நாம் சில நொடியில் மாறான வகையில் செயல்படுகிறோம். சிவ உண்மை இச்செயல்களிலான கதைகள் வார்த்தைகள் வாயில் வந்ததும் நாவில் உள்ள சரஸ்வதிதேவியின் கட்டளைப்படி எமது மூளையிலுள்ள ஆத்மாவில் பதிவாகின்றன. உண்மைக்குரிய குறியீட்டுப் புள்ளிகள் போல பொய்க்குரிய குறியீட்டுப் புள்ளிகளும் ஆன்மாவில் உடனுக்குடன் பதிவாகின்றன. அதற்குரிய பலன்களின்படியே எமது வாழ்க்கையின் பலாபலன்கள் அமைகின்றன. எந்த விதியையும் நோவதில் பயனில்லை. இந்தப் பலன்களை எந்த விஞ்ஞானத்தாலோ மந்திர தந்திரங்களாலோ மாற்ற முடியாது என்பதை உணரவேண்டும். நாங்கள் முன்நடந்த செயல்களை யோசிக்கும் போது முன்பதிவு செய்யப்பெற்ற நினைவுகள் உடன் வெளிவருகின்றன. முன்பதிவு இருப்பதால் எவ்வளவோ விசயங்கள் எம் ஆத்மாவில் பதியப்பட்டுள்ளன என்பது விளங்கும்.

எங்களின் கணக்கிலடங்காப் பதிவுகள் எவ்வாறு நடைபெற்றன? எவ்வாறு நினைத்தவுடன் வருகின்றன? எவ்வாறு சிலவேளை வரப் பிந்துகின்றன என்பதை ஆராய்ந்தால் இவற்றின் பதிவுகள் எவ்வளவு நுணுக்கமாக நடைபெற்றிருக்கின்றன. நடைபெறுகின்றன என்பதை உணரலாம். உண்மை எப்படி பதிவு செய்து பின் வருகிறது. பொய் எப்படிப் பதிவு செய்து சிக்காக வரப் பார்க்கிறது என்பது நமக்கு விளங்கும். இருந்தாலும் சமாளித்து பின்பும் சிக்காக்குகிறோம். பிரச்சினைகள் வளர்கின்றன. நமக்கும் சந்ததியினர்க்கும் அவிழ்க்க முடியாத சிக்காக்கி வைத்து நீறாகிப் போகிறோம். இவற்றினால் நாம் அடைந்த பயன் என்ன? அடுத்த பிறப்பில் ஆத்மாவில் பதியப்பெற்ற நல்வினை, தீவினைப் புள்ளிகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுக்கிறோம். இவற்றை அனுபவித்து முடிக்க வேண்டிய காலத்தில் பொறுமையுடன் அனுபவித்து முடியாமல் இன்னும் பொய்களை வளர்த்து அசுரப் பிறப்பெடுக்க ஆயத்தமாகிறோம். வினைப் பயன்களைப் பொறுமையுடன் அனுபவித்து முடிக்க விரும்பி கஷ்டங்களை அனுபவிக்குமிடத்து முன்வினைப்பயன் புள்ளிகள் அழிந்து போகின்றன. சிக்கன வாழ்க்கையைக் கையாண்டு சமத்துவத்துடன் உடல் வேலை செய்து பழக்கப்பட்டால் வினைப்பயன் அற்றுப்போவதுடன் புதிதாகவும் பொய் கூறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படமாட்டாது. ஆத்மா இறைவன் திருவடியடைய எவ்விதத் தடையுமில்லை. குற்றவாளியான வழக்கில் தெண்டப்பணம் கட்டியதும் மன எண்ணத்தில் நான் குற்றப் பணம் கட்டிவிட்டேன் என்று கூறுவான். ஆகவே குற்றம் செய்ததையும் தெண்டம் கட்டியதையும் மனம் ஏற்று இனிமேல் குற்றம் செய்யக்கூடாது என உள் மனதுக்கு கட்டளை இடப் பெறுகிறது. குற்றம் செய்யாதவன் குற்றவாளியாக வருமிடத்து பொய் வழக்காடியவரின் ஆத்மாவின் எண்ணப் புள்ளியில் இத்தீவினைப் புள்ளிகள் இடம்பெற்று அதற்குரிய சூழ்நிலை வரும் வேளை அதை அனுபவிக்க வேண்டி ஏற்படுகிறது. இப்படியாக எமது காலத்தில் தீவினை செய்து இறந்து பிறந்தவர்கள் முன் சென்ம வினைப்பயனை அனுபவித்ததை நன்றாக அறிந்திருக்கிறோம். தீவினை செய்தவர்கள் இறக்கும் காலத்தில் அடைந்த கஷ்டங்களையும் அறிவோம். ஆகவே இப்படிக் கண்டு கொண்ட பின்பும் ஆத்மாவைப் பற்றி அறியாமல் பொய் கூறி அதிக லாபமடைய விரும்புகிறோம். அதிக லாபமடைய விரும்பி செய்யும் செயல்களில் நஷ்டங்கள், அழிவுகள், வெள்ள அழிவு, சூறாவளி அழிவு வரும் போதும் இவை எமது முன்வினைப் பயனாயிருக்கலாம் என எண்ணுவதில்லை.

கண்ணகி கோவலன் கதை படித்திருக்கிறோம். கண்ணகி எப்படித் தெய்வமானார்@ கோவலன் ஏன் தொண்டிப்பெற்றான் மாதவி ஏன் தெண்டம் அடையவில்லை? பாண்டியன் செங்கோல் ஏன் வீழ்ந்தது? நன்றாக ஆராய வேண்டும்.

கண்ணகி தனது கணவன் கோவலனை தெய்வமாகக் கருதினான். மாதவி வீட்டில் கோவலன் இருந்த போதும் மனம் சீறவில்லை. தன் வியாபாரக் கடமையிலிருந்து தவறிய கோவலன் பணமிழந்து கண்ணகியிடம் வருகிறான். கண்ணகி தனது தெய்வமான கோவலனுக்கு பணம் கொடுப்பதற்காக தன்னிடம் வேறு ஏதும் இல்லாமையால் காற்சிலம்பில் ஒன்றைக் கொடுக்கிறாள். காற்சிலம்பை விற்கப்போன கடமை தவறிய கோவலன் தண்டிக்கப்படுகிறான். இங்கு மாதவியும் எக்குற்றமும் செய்யவில்லை. தனது தொழிலிலும் உண்மையைக் கொண்டு நடந்தாளேயன்றி கோவலனை ஏமாற்றவில்லை. இக்காரணங்களால் அவள் தண்டிக்கப்பெறவில்லை. கண்ணகி தன் கணவனே தெய்வமெனக் கொண்ட கற்பின் வலிமையால் நியாயம் கேட்கிறாள். தனது உண்மையை அழித்து விட்டாயே. அகங்காரம் உனது அறிவுக் கண்ணை மறைத்து விட்டது. நீதியைச் செலுத்த முற்படுகிறாள். பாண்டியன் நியாயம் ஆராய்ந்து நீதியைச் சரியான முறையில் வழங்கத் தவறி சுற்றவாளியைக் குற்றவாளியாக்கிய செங்கோல் சில கணங்களில் அழிந்து வீழ்கிறது.

இங்கு நாம் உணரவேண்டிய அகப்பொருள் நிலை பல. தனது தொழில் கடமையிலிருந்து விலகிய கோவலன் தெண்டிக்கப்பெற்றமை. கணவனைத் தெய்வமாகப் போற்றும் கண்ணகியின் செயல்திறமை. (உண்மை என்றும் அழியாது என்பதை உணர்த்துகிறது) ஆராய்ந்து கருமம் செய்யாதவனின் செங்கோல் வீழ்ந்தமை. அரசனின் காணாமல் போன சிலம்பு இது எனக் கூறி உண்மையாளனை பொய்யாக்கிய பத்தன் முதல் மந்திரி வரை சகலரும் ஒரு நொடியில் அழிந்து முடிந்தமை. (உண்மை கொண்டு நடப்பவர்தான் நினைத்ததை அடைவர் என்பது நிருபிக்கப் பெறுகிறது) அத்துடன் டாம்பீக வாழ்வு வாழ்ந்த கோவலன் சில நேரங்களில் அழிக்கப்பெற்றமை டாம்பீக வாழ்வு கொண்டுவரும் தாழ்வு என்பதை உணர்த்துகிறது. இங்கு இன்னும் ஒன்றை நாங்கள் உணர வேண்டும். கண்ணகியின் கணவனை உண்மைப் பொருள் காப்பாற்றியிருக்கலாம். கண்ணகியின் கற்பின் வலிமை அவளுக்கு வேலை செய்யுமேயன்றி கணவனுக்கு வேலைசெய்யமாட்டாது. ஒருவருக்காக ஒருவர் வினைப்பயனை அனுபவிக்க முடியாது. தாம் தாம் செய்த வினை தாமே அனுபவிப்பார்.

மனதில் உறுதி வேண்டும்

இன்றைக்கு சுமார் 40 வருடங்களின் முன் 1940 காலங்களில் உள்ள அறிவுக்கும் இன்றைய அறிவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. அதற்கும் முன்னைய காலங்களில் மக்கள் மிகவும் அறிவீன நிலையில் இருந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். அக்காலங்களில் மக்கள் அச்சம் காரணமாகவும், அகங்காரம் காரணமாகவும் மனித மங்கையர்களை கடவுளுக்கு பலி கொடுத்து வந்தார்கள். காலஞ்செல்லச் செல்ல அறிவு கூட அப்பழக்கம் சமயக் கொள்கைக்கு முரணானது எனக் கருதி ஒரு சிலர் கைவிட்டதும் மற்றையோரும் அப்பழக்கத்தைக் கைவிட்டனர். இன்றும் இருண்ட கண்டங்களில் அப்படி இருப்பதாக அறிகிறோம். இக்காலம் நீங்க மக்கள் ஆடு! மாடு, கோழிகளைப் பலி கொடுக்க முற்பட்டார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் இவை பலி கொடுக்கும் பல கோயில்கள் இருந்ததை எங்கள் காலத்தில் கண்ணாரக் கண்டோம். பேய், முனி, பிசாசு இவை உலவுவதையும் சிலர் சொல்லக் கேட்டு அவ்வழியே எமது மனநிலையும பயிற்றுவிக்கப் பெற்ற மன நிலையில் இருந்து வந்தோம். பலி காரணங்களால் எங்கள் கிராமங்களில் சச்சரவுகள் இருந்ததும் சாதிச் சண்டைகள் இருந்ததும் எமக்குத் தெரியும். ஆனால் இப்பலியை நிறுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் அறிவு விருத்தி அடையாத நிலையில் இன்றும் சில இடங்களில் அப்பலி நடப்பதை அறிய வருகிறோம். பேய், முனி, பிசாசு இவைகள் இன்று இருக்குமிடம் அறியமாட்டோம். பேய், முனி, இரவு சாம வேளைகளில் பிரயாணம் செய்த கதைகளையும் அவைகள் இருக்கும் மரங்களையும் கூறக்கேட்டு அச்சமடைந்து இறந்து போனவர்களையும் நன்றாய் அறிந்திருந்தோம். ஆனால் தற்சமயம் இக்கருத்துக்கள் எவருக்கும் மிக மிகப் பெரிய அறிவீனம் என்பது நன்றாய் விளங்குகிறது. பலி கொடுக்கும் பழக்கமும் மிகவும் பெரிய அறிவீனம் என்பது வரும் கிட்டிய காலங்களில் முற்றாக விளங்கி அச்செயல் அற்றுப்போய் விடும். ஆகவே அறிவு என்பதற்கு எல்லையில்லை. எமக்குத் தெரியும். அறிவு மிகவும் சொற்பமே. ஏன் எப்படி என்ற கேள்வியை எழுப்புவதின் மூலம் அறிவு விருத்தியடைகிறது. அறிவைக் குறுக்கு வழியில் லாபமடைய செயல்படுத்துவதால் முன்னோர்களின் முதுமொழிகள் மீறப் பெறுகின்றன. அதற்குரிய பலன்களை அனுபவிக்கிறோம். முன்னோர்கள் வகுத்து வைத்த கருத்துக்களை தவறான பாதையில் பாவிக்கிறோம். சமய நெறிகள், சோதிடக் கருத்துகள் முழுவதும் முற்றும் துறந்த முனிவர்களாலும், நாயன்மார்களாலும், ரிசிகளாலும் வகுக்கப்பெற்றுள்ளன. இவை தேவ வாக்குகள் ஆகும். இவற்றின் கருத்துக்களை மறைபொருளாய் வைத்து சுயநலத்துக்கு பயன்படுது;துவோரையே மிகுதியாகக் காணுகிறோம். உட்பொருளை விளங்கிக் கொள்ள காலங் காணாமையினால் சுயநலவாதிகளின் கருத்துக்களை முழுதாக ஏற்று குறுக்கு வழியில் லாபமடையும் வழிவகைகளை வகுத்து வருகிறோம்.

மனிதனுடைய உடல், உள் ஆத்மீக வளர்ச்சி, அவனின் வயது, உடல், உள் ஆத்மீக வளர்ச்சி, அவனின் வயது, உடல் நிலை, உட்கொள்ளும் உணவு. சுற்றாடல், பழக்க வழக்கங்கள், செய்தொழில் ஆகியவற்றில் தங்கியுள்ளன. எனவே மனிதனின் வளர்ச்சி சீரான நிலையை அடையாவிட்டால் அவன் பிரச்சினைக்குரியவன் ஆகிறான். பிரச்சினைகள் விரிவடைகின்றன.

பிறப்பு, இறப்பு இரண்டும் இயற்கையானது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சீராகவும், சிறப்பாகவும். வளர்ச்சிக்குரிய வழியில் அமைப்பதற்கும் போதிய அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் பரந்த நோக்குடனும், கடமையுணர்ச்சியுடனும் சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டு வேதனம், அறியாமை, அனுபவமின்மை ஆகியவற்றால் உந்தப்பட்டும் செயற்பட்டுவரும் சிறார்களுக்கு வழிகாட்டிகளாக அமைவதும் நல்லதொரு மனித குலம் உருவாக வழிகாண உதவுவதும் சாலவும் சிறந்ததாகும். உலக வாழ்வில் மனிதர்களாகிய நாம் துன்ப முறும் நமது சகமனிதர்களுக்காகப் பணியாற்றப் புறப்படும் போதும் உள்ளத் து}ய்மையும் இலட்சியத்தில் உறுதியும் கொள்ள வேண்டும் என்பதை யேசுநாதனின் புனித வாழ்வு எமக்கும் எடுத்துக் காட்டுகிறது. தனி மனித வாழ்வில் சுயநலமும் சுயவிளம்பரமும் தன்முனைப்புப் பெறும் போது இலட்சியங்கள் இடறுண்டு போகின்றன. மன உறுதி தளர்ந்து போகும்.

முற்றும்.


விநாயகர் தரும நிதியம்
வியாபாரி மூலை
பருத்தித்துறை.

விநாயகர் ஸ்ரீ பிள்ளையார், அறிவுப்பொருள், எண்களில் 3, கிரகங்களில் வியாழபகவான், மனித அவயத்தில் வலக்கண் இவைகளைக் குறிக்கும்.

ஞாபகார்த்த நிதி ஸ்ரீ திரு. சி. ஆ. சிவக்கொழுந்து
திருமதி ஆ. சி. இராசம்மா
(வ. க. கோ. சரவணமுத்துவின் மகள்)
செல்வன் ஆ. சி. மு. சுப்பிரமணியன்

நோக்கம் - அறிவு வளர்ச்சிப் பணி
ஊனமுற்றோர் உதவிப்பணி,
கரும யோகப்பணி

தருமகர்த்தா சபை

திரு. ஆ. சி. முருகுப்பிள்ளை.
ஸ்தாபகர். நிர்வாகி, ஆயுட்காலத் தலைவர்

திரு. வ. கு. கணபதிப்பிள்ளை
டீ. யு. (டழனெ) சட்டத்தரணி. உப தலைவர்.

திரு. வ. ச. செல்வராசா
செயலாளர் - பொருளாளர்

திரு. க. தங்கராசா
நிர்வாகப் பொறுப்பதிகாரி

கௌரவ உறுப்பினர்கள் :

திரு. அ. துரைசிங்கம்
திரு. சு. வேதாரணியம்
திருமதி. கோ. கண்மணி

கௌரவ உப உறுப்பினர்கள்

திரு. வி. கணேசநாதன்
திரு. ஆ. க. சிவப்பிரகாசம்

அபிராம் - அல்வாய்.