கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  மலையக மக்களும்
எதிர்காலமும்
 
 

 

 

மலையக மக்களும்
எதிர்காலமும்







புதிய பூமி வெளியீட்டகத்துடன்
இணைந்து


சவுத் ஏசியன் புக்ஸ்

++++++++++++++


Malaiaga Makkalum Ethirkalamun
First Edition : January 1992
Printed at : Surya Achanga, Madras.
Published in association with
“Puthiya Bhoomi Veliyeetagam”
by
South Asian Books
6/1, Tharyar Sahib 11 Lane,
Madras - 600 002.

Rs. 5-00


முகப்பு ஓவியம் : ஜான் பிகர்ஸ், யு. எஸ்.ஏ.

மலையக மக்களும் எதிர்காலமும்
முதற் பதிப்பு : ஜனவரி 1992
அச்சு : சூர்யா அச்சகம், சென்னை.
வெளியீடு : புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ்
6ஃ1, தாயார் சாகிப் 2வது சந்து?
சென்னை - 600 002

ரூ. 5-00

+++++++++++++++++++++




மலையக மக்களும் - எதிர்காலமும்

• பிரசாவுரிமையில் இரண்டாம் தரமற்ற நிலை
• மாதச் சம்பளமும் சம்பள உயர்வும்.
• குல்வி, சேலைவாய்ப்பில் பாகுபாடற்ற முறை
• காணியும், வீடும்
• தேசிய சிறுபான்மை இன் அடிப்படையில் சுயாட்சி உள்ளமைப்பு.



கடந்த 265-12-1991 அன்று புதிய ஜனநாயகக் கட்சியின் மலையகப் பிரதேச 2-ஆவது மாநாடு ராகலையில் நடைபெற்றது. மேற்படி மாநாடு மலையகத்தின் தற்போதைய நிலைமைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது. இன்றைய சூழலில் நாடும் மக்களும் எதிர்நோக்கி நிற்கும் பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் மலையக மக்களின் பிரச்சினைகளையும் அவற்iறை தீர்ப்பதற்கான அரசியல் மார்க்கத்தினையும் அரசியல் அறிக்கை ஸ்தாபன அறிக்கைகள் மூலம் மாநாடு தெளிவுபடுத்தியது.

மேற்படி பிரதேச மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல், தேசிய அமைப்பாளர் தோழர் இ. தம்பையா ஆகியோர் மத்தியகுழு சார்பாக கலந்துகொண்டு உரையாற்றினர். முழுநாள் நடைபெற்ற இம்மாநாடு முடிவில் மலையகப் பிரதேசக் கமிட்டியையும் தெரிவு செய்தது, இவ்அரசியல் அறிக்கையின் முக்கியத்துவம் கருதி அதனை நு}லாகா வெளியிடுகின்றோம்.


ருhகலை
25-12-1991


புதிய - ஜனநாயக கட்சி
முலையகப் பிரதேசக் கமிட்டி.























மலையக மக்களும் - எதிர்காலமும்


(புதிய - ஜனநாயக கட்சியின் மலையக பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதேச மாநாட்டின் அரசியல் அறிக்கை)

எமது புதிய - ஜனநாயக கட்சியின் 2-வது தேசிய மாநாடு கடந்த மே மாதம் 4-ஆம். 5-ஆம் தேதிகளில் நடைபெற்றபின் இம்மலையகப் பிதேசப் மாநாடு நடைபெறகிறது. இம்மாநாட்டின் மூலம் மலையகப் பிரதேசத்தின் நிலைமைகளை ஆராய்ந்து, எமது அரசியல் வெகுஜன வேலைகளையும் ஸ்தாபன வேலைகளையும் முன்னெடுப்பது இன்றைய தேவையாகும். இதன் அடிப்படையிலேயே இவ்வரசியல் அறிக்கையை முன்வைக்கின்றோம்.

தோழர்களே!

இன்றைய நிலையில் நமது நாடு தேசிய, சர்வதேசிய, ஏகபோக முதலாளிவர்க்கத்தின் கோரப் பிடிக்குள்ளகப்பட்டு அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார, பண்பாட்டு அடிப்படைகளில் பெரும் சீரழிவினை எதிர் நோக்கியுள்ளது. எப்பகுதியிலும் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இல்லை. கடந்த சுமார் பதினைந்து வருட கால யூ.என்.பி. ஆட்சியின் கீழ் தேசிய பொருளாதாரம் பெரும் சீரழிவுக்குட்பட்டுள்ளது. பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டல், திறந்த சந்தை, ஏகாதிபத்திய ஊடுருவல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய நவகாலனித்துவ முறைக்குள் எமது நாடு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த முதலாளித்துவ பொருளாதார முறையினை தொடர்ந்து பேணிக்கொள்ள பாசிச யூ.என்.பி. அரசாங்கத்தினால் பல அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அடிப்படை ஜனநாயக - தொழிற்சங்க - மனித உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு மக்கள் மோசமாக அடக்கப்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் எமது நாடு நவகாலனித்துவ, பிரபுத்துவ, பெருமுதலாளித்துவ அமைப்பாக காணப்படுகின்றது. இதை உடைத்தெறிவதற்கும், மக்களைக் காப்பாற்றவும் இந்நாட்டிலுள்ள சகல முற்போக்கு சக்திகளும் ஐக்கியப்படவேண்டியது அவசியமாகும். இதன் மூலம் புதிய ஜனநாயக அமைப்பையும், அத்துடன் இணைந்த சோஷலிஸ அமைப்பையும், அத்துடன் இணைந்த சோஷலிஸ அமைப்பையும் வென்றெடுத்து நிலைநிறுத்த முடியும்.


எமது மலையகப் பிரதேசத்தை பிரதேச hPதியாக எடுத்து நோக்கும்போது மேற்கூறப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளால் மட்டுமன்றி நீண்ட காலமாகவே புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளாலும் மலையக மக்கள் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் தேசிய hPதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வெற்றி பெற நாம் ஏனைய மக்களோடு கரத்தினை இறுகப் பற்றிக்கொள்வதோடு எமது பிரதேசத்துக்கே உரித்தான பிரச்சினைகளை இணங்கண்டு அவை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை செலுத்தி உறுதியுடன் செயற்பட்டு மிகப்பெறிய மக்கள் சக்தியை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

ஆங்கிலேயர் எம்மை வெறுங் கூலிகளாக கொண்டு வந்ததிலிருந்து நாம் இந்நாட்டில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். மன்னார் துறையில் இறங்கி கால் நடையாக மத்திய மலைநாட்டுப் பகுதிக்கு வந்த வழியிலேயே பலர் இறந்து விட்டனர். அடர்ந்த மலையக காட்டுப் பகுதியை பசுஞ்சோலைகளாக மாற்ற கடுமையாக உழைத்தபோது பலர் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து உயிரிழந்தனர். அன்று முதல் இன்றுவரை உழைப்பதைத் தவிர வேறெந்த உரிமையுமில்லாத மக்கள் கூட்டமாக வாழ்ந்து வருகின்றோம்.

காலனித்துவ ஆட்சியாளராகவிருந்த ஆங்கிலேயர் இலங்கையிலுள்ள எல்லா மக்களுக்கும் வாக்குரிமை கொடுத்தனர். எனினும் எமது மக்களை ஒதுக்கி வைக்கும் நோக்கத்துடன், இனவாத யூ.என்;.பி. அரசாங்கம் 1948-ஆம் ஆண்டில் எமது மக்களின் குடியுரிமையை பறித்தது. அன்றிலிருந்து நாம் இந்நாட்டில் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்பட்டு வருகின்றோம். இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து திட்டமிட்ட வகையில் விலக்கி வைக்கப்பட்டு வருகின்றோம். எம்மக்களின் வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் இந்த ‘குடியுரிமை பறிப்பு’ பெருந்த தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதைக் காணலாம்.

மாறி மாறி பதவிக்கு வந்த யூ.என்.பி. சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கங்களினாலும் இந்த குடியுரிமை பிரச்சினை பூரணமாக தீர்க்கப்பட வில்லை. சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம். சிறிமா - இந்திரா ஒப்பந்தம், ஜே.ஆர்- ராஜீவ் இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் அவ்வப்போது செய்யப்பட்டாலும் குடியுரிமைப் பிரச்சினை பூரணமாக தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது. கடந்த பதினைந்து ஆண்டு காலமாக பிரசா உரிமை தொடர்பாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த பாசிச. யூ.என்.பி அரசினால் அவை பூசிமெழுகப்பட்டு வந்துள்ளமையை நாம் அறிவோம். தொண்ணு}றாயிரம் பேருக்கு பிரசா உரிமை வழங்கப்படும் என்றும், இலங்கை பிரசா உரிமைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும், இந்தியாவுக்கு விணண்ப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் இலங்கை பிரசாவுரிமை வழங்கப்படுமென்றும் வாய்ப்பேச்சாக கூறப்பட்டதேயன்றி அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் உறுதியாக மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை பிரசாவுரிமைக்கான சான்று பாத்திரம் நாற்பது நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் விண்ணப்பித்த எவருக்கும் அத்தகைய சான்று பத்திரம் வழங்;கப்பட வில்லை. இதனால் கல்வி கற்ற இளைஞர்கள், யுவதிகள் விரக்தியடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் இன்றும் இலங்கை பிரசாவுரிமைக்கான சான்று பத்திரம் கேட்கப்படுகின்றது. இதனால் எம்மத்தியிலுள்ள தொழிலற்றவர்கள் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர். நாம் பிறந்த மண்ணிலேயே உரிமையுடன் வாழ முடியாமல் இருக்கின்றோம். ஒன்றுக்கு மேற்பட்ட சட்டங்கள் ஆக்கப்பட்டதன் மூலம் அண்மையில் எமக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பிரசா உரிமை கூட எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் பழைய நிலையே நீடித்து வருகின்றது.

1948-ஆம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் மலையக மக்கள் எக்காரணமுமின்றி தாக்கப்பட்டார்கள். 1970-இல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் தவறான நடைமுறைகள் காரணமாக எம்மக்கள் பெருந்துன்பத்தை அனுபவித்தனர். தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்திருந்த உற்பத்தி முறைக்கு ஏற்றதாக அவர்களது உணவு உற்பத்திக்கான நடைமுறைகள் அமையாததே இதற்கு அடிப்படை காரணமாகும். இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

1977-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசாங்கத்தின் ஆட்சியில் மலையக மக்கள் எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அக்கட்சி பதவிக்கு வந்தவுடனேயே இந்நாட்டில் பெரும் இனவன்முறை கட்டவிழ்த்த விடப்பட்டது. அந்த இனவன்முறையில் மலையக மக்கள் உயிர் உடமைகளை இழக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து 1983-ஆம் ஆண்டு மிகப்பெரிய இனவன்செயல்- இனப்படுகொலை நடைபெற்றது. இவ்வினவன்செயலில் தோட்டத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டனர். லயங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயூட்டப்பட்டது. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். உயிர் வாழ்வதற்கென வைத்திருந்த ஓரிரு உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வருடா வருடம் திட்டமிட்டவைகயில் இனப்படுகொலைகள் நடைபெற்றன. அண்மையில் கூட மொனராகலை பகுதியில் லயன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். லயன்களை கொள்ளையடிப்பது, தொழிலாளர்களைத் தாக்குவது என்பது தற்போது பதுளை, மொனராகலை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை போன்ற பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. இப்பகுதிகளிலிருந்து தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நோக்கத்துடனேயே இவை நடைபெற்று வருகின்றன.

அண்மைக் காலத்தில் புதுவிதமான இன அடக்குமுறை எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புப் படை எனக் கூறிக் கொண்டு லயன்களில் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறி தோட்டத் தொழிலாளர்களின் லயன்களை பரிசோதிப்பதாக கூறிக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களிடமுள்ள அற்ப சொற்ப சொத்துக்களையும் கொள்ளையடித்துக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. இது தோட்டப் பகுதியில் அடிக்கடி நிகழும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக உள்ளது. இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் நிகழாமலிருப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை.

தோட்டப் பகுதியில் இளைஞர்கள் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்படுகின்றனர். இச்செயல் அண்மைக் காலத்தில் உக்கிரமடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இம்மாதம் பதுளை பகுதியில் பெருந்தொகையான தோட்டப்புற இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒருசில இளைஞர்கள் தீவிரமான அரசியல் ஈடுபடவும் ஆயுதக் கவர்ச்சியில் ஈர்க்கப்படுவதற்கும் காரணமான சூழ்நிலைகளை ஆராயாது, எவ்வித அரசியலிலும் ஈடுபடாத அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது பெருந்தோட்டப்பகுதியை அழிக்கவென புறப்பட்டடுள்ள இன்னொரு நோய் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகளும் இனவாத குடியேற்றத்தை நோக்கமாகக் கெண்டனவுமாகும். மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, பண்டாரவளை, வெலிமடை, கலகா, கம்பளை போன்ற பகுதிகளில் எல்லாம் தோட்டங்கள் மூடப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இப்பகுதியில் இனவாத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில் மட்டுமின்றி தற்போது அட்டன், மஸ்கெலியா, தலவாக்கெல்லை, பூண்டுலோயா, நுவரெலியா, இராகலை போன்ற பகுதிகளிலும் பெருந்தொகையான இனவாத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டமிட்ட வகையில் பெருந்தோட்டங்களை நட்டமடையச் செய்து தோட்டங்களை மூடி குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன. கலகா, கேகாலை, பதுளை போன்றபகுதிகளில் எந்தவித முன்னெறிவித்தலுமின்றி தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளைகூட கொடுக்காமல் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட பெருந்தொகையான தொழிலாளர்கள் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒரு புறம் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்த பலவந்தமாக வெளியேற்றப்படுகின்ற அதே ஆவேளையில் மறுபுறம் வேறு தோட்டங்களில் புதிய தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளும், வயதடைந்தவர்களை தொழிலாளர்களாக பதியும் நிலைமைகள் காணப்படவில்லை. இதனால் தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள தொழிலாளர்கள் பெருந்துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்திய கடவுச்சீட்டு பெற்ற தொழிலாளர்கள் திடீரென கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் இரண்டுங்கெட்ட நிலைக்காளாகியுள்ளனர். பல தோட்டங்களில் இவ்வாறான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சில தோட்டங்களில், சலுரக ஏதுமில்லாத தற்காலிக தொழிலாளர்கள் பலர் உழைத்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் நீண்டகாலமாக மரக்கறி செய்கைப் பண்ணி வரும் காய்கறி தோட்டங்கள்கூட அண்மைக்காலத்தில் ‘மர நடுகை’ என்னும் போர்வையில் தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. தலவாக்கொல்லை, பணியஸ்கல்பா, நானுஓயா தோட்டத்திலும், பூண்டுலோயா, வடக்கு பூண்டு லோயா தோட்;டத்திலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரித்தாகவிருந்த காய்கறித் தோட்டங்கள் மரக்கறிசேனைகள் மேற்கூறப்பட்ட வகையில் பறிக்க முற்பட்ட போது எமது கட்சியும், வாலிபர் இயக்கமும் அதில் தலையிட்டு தொழிலாளர்களையும் பலமாகக் கொண்டு அத்திட்டத்தை கைவிடச் செய்தமை இவ்வேளை நினைவு சொள்ளத்தக்கதாகும்.

எமது மக்கள் இலங்கைக்கு வந்தது முதல் இன்று வரை எதிர்நோக்கிவரும் இன்னொரு முக்கியப்பிரச்சினை சம்பளப் பிரச்சினையாகும். மிகக் கோரத்தனமாக சுரண்டப்பட்டு வரும் ஒரு மக்கள் கூட்டமாக எமது மக்கள் இருந்து வருவதை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் என்னும் அம்சம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தோட்டத் தொழிலாளருக்கு அவ்வப்போது வழங்கப்பட்ட சம்பளத்தின் அளவையும் அவ்வக்காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு இருந்த விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தொழிலாளர்களுக்கு மிகச் சாதாரணமான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய அச்சம்பளம் போதாமையாக இருந்து உள்ளமையைக் காண முடியும். இந்த யூ.என்.பி. அரசாங்கம் பதவிக்கு வந்த கடந்த பதினான்கு வருட காலப்பகுதியில் பொருட்களின் விலைகள் வானளவ உயர்ந்தளள்மையினால் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான சாதாரண உழகை;கும் மக்கள் கடும் வாழ்க்கைக் கஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளமையை நீங்கள் அறிவீர்கள். இந்நிலைமையை மூடிமறைக்க அரசாங்க ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டது. 1989-ல் ரூபா 75-ம், 1990-ல் 200 ரூபாவும் 1991 - ல் ரூபா 300-ம் 1992-ல் 100 இவ்வாறு வழங்கப்பட்டது. அனால் இந்த சம்பள உயர்வில் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இந்த விடயத்தில் யூ.என்.பி. அரசாங்கத்தின் நரித்தன விளையாட்டையும் நாம் அவதானிக்க முடிந்தது. அதாவது இலங்கையில் பொதுவேலை நிறுத்தங்கள் நடைபெறும் போது பெருந்தோட்டத்துறையும் அரசாங்கத்துறையாகக் கருதப்பட்டு வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று அரசாங்கத்தால் கூறப்படும்.

ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் போது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் அந்த வரையறைக்குள் அடக்கப்பட மாட்டார்கள். யூ.என்.பி. அரசாங்கத் தலைவர்களும் அதனைச் சார்ந்து நிற்போரும் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என அடிக்கடி வாய் கிழிய கத்திய போதிலும் அது நடைமுறை சாத்தியமில்லாத விடயமாகவே இருந்து வருகின்றது. நீண்டகாலமாக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக இன்று ஆண்-பெண் சம சம்பளம் வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, உயிர்வாழ்வதற்குப் போதுமான அளவு மாத சம்பளத்தினை வென்றெடுக்க வேண்டும்.

எமது மக்கள் எதிர்நோக்கும் இன்னொரு முக்கியப் பிரச்சினை வேலை நாட்களோடு தொடர்புடையதாகும். பெரும்பாலான தோட்டங்களில் அதிலும் சிறப்பாக தனியார் தோட்டங்களில் வாரத்தில் வேலை வழங்கும் நாட்களின் எண்ணிக்கை சில வேளை இரண்டு நாட்களாக இருப்பதுண்டு. இதனால் சம்பளம் குறைந்து தொழிலாளர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர். தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல தோட்டங்களில் இத்தகையை வேலை குறைப்பு நடைபெற்று வருகின்றது. அத்தோடு சம்பளம் வழங்குவதிலும் தனியார் தோட்டங்களுக்கும், அரசாங்க தோட்டங்களுக்கும் இடையே பலத்த வேறுபாடு காணப்படுகின்றது. தனியார் தோட்டங்களில் வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதோடு சம்பளத்திலும் வேறுபாடு காணப்படுவதால் தொழிலாளர்கள் பெருந் துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.

இந்த சம்பள விடயத்தில் நாம் உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் எமது மக்களின் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இது தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. தோட்டத் தொழிலாளர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரிக்க கோரியும், உயர்ந்த மாத சம்பளத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் நாம் உறுதியான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது.

அண்மைக் காலங்களில் இலங்கை சர்வதேச hPதியான தேயிலை ஏற்றுமதியில் முதலாவது இடத்தை வகிக்கின்றது. கடந்த வருடம் 2000 கோடி ரூபாவுக்குமேல் தேயிலை ஏற்றுமதி வருமானமாக இலங்கை பெற்றுக் கொண்டது. ஆனால் இதனால் தோட்டத் தொழிலாளருக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை. இலங்கையின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது மலையகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வாகவே உள்ளது. தோட்டங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் நாட்டில் எந்தமூலையிலாவது ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் இங்கு பல மடங்கு விலை உயர்ந்து விடுகின்றது. அதேவேளை இராகலை, கந்தப்பளை, வெளிமடை, பண்டாரவளை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்கு மிகக் குறைவான விலையே தரப்படுகின்றது. உள்@ர் தரகர்களும் கொழும்பு முதலாளிகளுமே மரக்கறியின் விலையினைத் தீர்மானிக்கின்றனர். கொள்வனவு விலை மிக மிகக் குறைவானதாகவே உள்ளது. பெரும்பாலும் கொழும்பு விலையை விட இப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் மரக்கறியின் விலை அரைவாசியாக அல்லது கால்வாசியாக இருப்பதுண்டு. ஏற்றுமதி அபிவிருத்தி கிராமம் போன்ற திட்டங்கள் நாட்டில் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவை மலையகத்தில் அமுல் செய்யப்படவில்லை.

ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கும் தொழிலாளர்கள் கூட அண்மைக்காலங்களில் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மலையத்தின் எல்லைப்புற தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இக்கால்நடை உற்பத்தியிலேயே பெருமளவு தங்கியிருந்தனர். இப்பகுதியில் வேலை நாட்கள் குறைவாக இருப்பதாலும், சம்பள வேறுபாடு காணப்படுவதாலும் ஆடு, மாடு வளர்ப்பதன் மூலமே மக்கள் தமது வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இவ்வாறான பகுதிகளில் இனவாதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் புல் தீவனத்தைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். லயன்களைச் சுற்றி ‘கொலனிகள்’ அமைக்கப்படுவதால் தொழிலாளர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.

பெருமுதலாளித்துவ பாசிச யூ.என்.பி. அரசாங்கம் அண்மைக் காலத்தில் சகல அரச துறைகளையும் தனியார் மயப்படுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். இப்போது தோட்டங்களை தனியார் மயப்படுத்தும் ஏற்பாடுகளைச் தமக்குள் பங்கு போட்டுக் கொள்வதற்காக உள்@ர், வெளியூர் பண முதலைகள் தமக்குள் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளனர். தோட்டங்களைத் தனியாருக்கு கையளிக்கும் இந்தத் திட்டத்தினால் நமது மக்களின் வாழ்க்கையில், எதிர் காலத்தில் பெருந்தாக்கம் ஏற்படப்போகின்றது. தற்போது அரச தோட்டங்களில் நாம் அனுபவித்து வரும் ஒருசில உரிமைகள்கூட இல்லாமல் போய்விடும். தோட்டங்கள் முன்னர் வெளிநாட்டுத் தனியார் கொம்பனிகளிடம் இருந்த போது நாம் பட்ட துன்பங்களை யாரும் மறந்துவிட முடியாது. தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டதோடு, தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட அந்த வரலாற்றினை யாரும் மறக்க முடியாது.

நட்டத்தில் இயங்கும் தோட்டங்களை இலாபத்தில் இயங்கச் செய்ய நிருவாக hPதியாக மாற்றம் தேவை என்றும், தோட்டங்களைத் தனியாருக்கு ஒப்படைப்பதால் தொழிலாளரகு;க ‘எவ்வித பாதிப்பும் ஏற்படாது’ என்றும் ‘தொழிலாளர்களின் தலைவர்கள்’ என்போர் கூறி வருகின்றனர். நிர்வாக மாற்றம் என்பது குறைபாடுகளைக் கலைத்து மேலும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாக இருக்க வேண்டுமேயன்றி நயவஞ்சகமாக பணமுதலைகளுக்குத் தோட்டங்களையும், அங்குள்ள தோட்ட மக்களையும் தீனி போடுவதாக அமையக் கூடாது. அரசாங்கத்தின் இந்தக் கபட நாடகத்தை நாம் அனுமதிக்கக் கூடாது’ தனியார் நிறுவனங்களுக்கு தோட்டங்களின் நிர்வாகம் மட்டுமே கையளிக்கப்படவிருப்பதாக கூறினாலும் நாளடைவில் தோட்டங்களை தனியார் நிறுவனங்களே சொந்தமாக்கிக் கொள்ளும் நிலையே ஏற்படும்.

1977- ஆம் ஆண்டு தோட்டங்களை கூறுபோட நினைத்த போது நாம் அணி திரண்டு, சிவனு இலட்சுமணனின் இறப்போடு வலிமைமிக்க போராட்டத்தை நடாத்தியது போன்று மேலும் ஒருபடி முன்னே சென்று ஸ்தாபன hPதியாக தொழிலாளர்களை அணிதிரட்டி உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். முக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்டு தோட்டங்களை தனியார் முதலாளிகளுக்கு ஒப்படைக்கும் யூ.என்.பி. யின் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

நூம் இந்த நாட்டுக்கு வந்து நான்கு தலைமுறைகள் கழிந்த பின்னரும் கூட நமக்கு வீட்டுரிமை வழங்கப்படவில்லை. அன்று ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத “எட்டடிக் காம்பிராக்களிலேயே” இன்றும் வாழ்ந்து வருகின்றோம். ‘பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டம்’, ‘பதினைந்து இலட்சம் வீடமைப்புத் திட்டம்’ போன்ற திட்டங்கள் நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் மலையக தோட்டப்பகுதிகள் இவற்றிவிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. முனித வாழ்க்கைக்கு உதவாத இந்த லயன்களின் வாழும் மக்கள் பல்வேறு உடலியல், உளவியல் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளனா. புல லயன்கள் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் ஏற்படும் மண் சரிவின் காரணமாக பலர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கை கூடிய குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குடும்பங்களில் வீட்டுப் பிரச்சினை மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான லயன்கள் நு}ற்றைம்பது வருடங்களுக்கு மேலாகப் பழுது பார்க்கப்படாத நிலையிலேயே உள்ளன. தொழிலாளர்கள் தங்களது அற்ப சொற்ப வசதிக்காக மிகச் சிறிய ‘குசினிகளை’ கூட அமைக்க அனுமதிக்காத நிலையிலேயே உள்ளனர். அண்மையில் இராகலை பகுதியில் தற்காலிக சிறு குசினிக் குடிசையை அமைத்த தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்கள் அமைத்த இந்தக் குடிசைகள் ஒரே நாளில் தகர்தெறியப்பட்டன. இது முழு மலையகம் முழுவதிலும் இடம்பெற்று வரும் ஒரு நிகழ்வாக உள்ளது.


தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயன் அறைமுறை மாற்றியமைக்கப்படுவதோடு அவர்களுக்கான சராசரி வசதிகளைக் கொண்ட வீடுகளையாவது அமைத்துக் கொடுப்பதோடு அவற்றை அவர்களுக்கு உரிமையாக்க வேண்டும். அத்தகைய வீடுகளைச்சுற்றியுள்ள நிலமும் அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். தோட்டங்கைள தனியாருக்கு கையளிக்கும் அதே வேளையில் அவர்கள் வாழும் லயன்களைக்கூட ‘சமாஜம்’ என்ற அடிப்படையில் யாருக்காவது கொடுக்கும் யோசரனயும் உள்ளதுபோல் தெரிகின்றது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது.

தற்காலத்தில் நாடு முழுவதும் மின்சார மயமாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பெருந்தோட்டத்துறை இதிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றது. ஒரு சில தோட்டங்களில் இதை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளரிடமிருந்து ரூபா 15,000 - க்கு மேற்பட்டத் தொகை அறவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களினால் இவ்வளவு பெரிய தொகையினைத் தாங்கிக் கொள்ள முடியுமா? நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்போது இவ்வாறுதான் அங்குளள்வர்களிடமிருந்து அறவிடப்படுகின்றதா? ஏன் இத்தகைய பாகுபாடு?

அடுத்து கல்வி, மற்றும் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக் கொள்வோம். “சகலருக்கும் கல்வி” “கல்வியில் சமவாய்ப்பு” என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால் இது எந்தளவிற்கு நடைமுறையில் உள்ளது என்பது கேள்வியாகவே உள்ளது. மலையகத்திலுள்ள பெரும்பாலான ‘பாடசாலைகள்’ ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். அவர்களால் அமைக்கப்பட்ட ‘பாடசாலைகள்’ தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளை அடைத்துவைக்கும் நோக்குடனேயே அமைக்கப்பட்டன. அன்று அந்நோக்கத்தோடு அமைக்கப்பட்ட கட்டிடங்களே இன்றும் மலையக பாடசாலைகளாக இருந்து வருகின்றன. எவ்வித வசதிகளுமின்றி காணப்படும் இப் பாடசாலைகள் கல்வி கற்க வரும் குழந்தைகளின் உள வளர்ச்சியில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதை பல கல்வி உளவியலாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

மலையகத்தில் கல்வியோடு தொடர்புள்ள இன்னொரு பிரச்சினை அரசியல் - தொழிற்சங்கதலையீடாகும். குல்வியின் மகத்துவம் புறக்கணிக்கப்பட்டு, மலையகக் கல்வியின் சகல மகத்துவம் புறக்கணிக்கப்பட்டு, மலையகக் கல்வியின் அம்சங்களிலும் அரசியலே செல்வாக்குடையதாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம் தங்குமிடம் வழங்கல், வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் பணத்தினை செலவு செய்தல், பாடசாலைக் கட்டிடங்களுக்கான செலவு ஒதுக்கீடு போன்ற இன்னோரன்ன விடயங்களில் அரசியல் தலையிடுவதால் மலையகப் பாடசாலைகளுக்குள்ளேயே தர வேறுபாடு காணப்படுகின்றது. அதிபர் நியமனம், கல்வியதிகாரிகளின் நியமனம் போன்ற நடவடிக்கைகளில் பூரணமாக அரசியல் தலையிடுவதால் பாடசாலைகளில் கல்வித்தரம் குறைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. முலையகக் கல்வியை பெருமளவு சீரழித்துள்ள தொழிற்சங்க- அரசியலிலிருந்து விடுபட்ட சுதந்திரமான கல்வி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை நாம் காண வேண்டும். கல்வி வளர்ச்சியில் தடையினை ஏற்படுத்தக்கூடிய அரசியலிலிருந்து விடுபட்ட கல்விக் குழு மலையகக் கல்வியின் சகல அம்சங்களையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

மலையகத்தில் தமிழ் மொழி மூலம் ‘மத்திய மகாவித்தியாலயம்’ என்ற தரத்துக்கு இதுவரை ஒரு பாடசாலையும் உருவாக்கப்படவில்லை. அதிலும் சிறப்பாக நுவரெலியா மாவட்டத்தில் நாம் செறிந்து வாழும் பகுதியில் சுமார் நான்கு மத்திய மகா வித்தியாலயங்கள் சிங்கள மொழி மூலம் அமைந்துள்ள அதே வேளை தமிழ் மொழி மூலம் கற்றல் நடைபெறும் பாடசாலை ஒன்றுகூட அவ்வாறு இன்றுவரை அமையாதது வேதனைக்குரிய விடயமாகும்.

மலையகத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ்மொழி மூலம் ஆசிரியர் பயிற்சி கல்லு}ரி எவ்வித வசதியுமற்ற நிலையில் காணப்படுகின்றது. போக்குவரத்து, சுகாதாரம், வதிவிடம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படைத் தேவைகள் அங்கு பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. பழைய தேயிலைத் தொழிற்சாலையைத்தான் மலையகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லு}ரியாக்க வேண்டும் என்பது நியதி போலமைந்து விட்டது. ஆண்மையில் செளிநாட்டு நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சிறிபாத கல்விக் கல்லு}ரியிலும் இன hPதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. நுவரெலியா தொழில்நுட்பக் கல்லு}ரியிலும் இந் நிலைமையே காணப்படுகின்றது.

அடுத்து மலையகத்தில் தமிழ்மொழி அமுலாக்கல் எந்தளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை எடுத்து நோக்குவோம். மலையகத்திலுள்ள எந்த அரச நிறுவனங்களோடும் தமிழ்மொழி மூலம் தொடர்பு கொள்ள முடியாது. சிறப்பாக கிராம சேவை, பிறப்பு இறப்புப் பதிவு, தபாற் கந்தோர், பொலிஸ், வங்கி, கல்விக்கந்தோர் போன்ற முக்கியமான இடங்களில் நாம் தமிழ்மொழி மூலம் தொடர்பு கொள்ள முடியாது. சகல தொடர்புகளையும் சிங்கள மொழி மூலமே மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்விடத்தில் நாம் இன்னொரு விடயத்தையும் கவனிக்க முடியும். “அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்போது மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வேலை வாய்ப்புகளில் இன விகிதாச்சாரம் பேணப்படுவதில்லை. இதனால் எமது இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

நமது வறுமை, வாழ்க்கை வசதி குறைவு, கல்வியறிவில் மந்த நிலையிருத்தல் போன்றவற்றைச் சாதகமாகக் கொண்டு தற்போது புற்றீசல்கள் போல் வந்துள்ள அந்நிய மத சமூக நிறுவனங்கள் நமது மக்களை மதம் மாற்றும் “புனிதப்பணியில்” ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் யார் உள்ளனர்? போன்ற விடயங்களை நாம் விரிவாக ஆராய வேண்டும். இச்சக்திகளின் பிரதான நோக்கம் எமது மக்களின் உண்மையான விடுதலைச் சிந்தனையை மழுங்கடித்து அவர்களை “வேறொரு உலகத்துக்குக்” கொண்டு செல்ல முயல்வதாகும். இவ்விடயத்திலும் நாம் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

நூட்டு மக்களை சிறப்பாக இளஞ் சந்ததியினரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருட்கள், பாலியற் படங்கள் போன்றன நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளன. மலையகத்தில் சாராயம், மினி சினிமா போன்ற வடிவங்களில் இக்கலாசார சீரழிவு அம்சங்கள் புகுந்துள்ளன. அண்மைக்காலங்களில் இவை எமது இளஞ்சந்ததியினரின் வாழ்வில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. அன்றாட வாழ்க்கை, சிந்தனை, போராட்ட உணர்வு, செயற்பாடு, மனித நேயம் போன்றவற்றில் இந்த கலாசார சீரழிவு அம்சங்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூட எமது இளஞ் சந்ததியினரின் கவனத்தை திசை திருப்பி வருகின்றன. இவர்களை சரியான மார்க்கத்தில் அணிதிரட்டி, முன்கொண்டு செல்லுதல் எமது உடனடிக் கடமையாக உள்ளது.

எமது மலையக சமூகத்தில் பெண்ணடக்கு முறை மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. தொழிலாளர்களைப் பொறுத்த மட்டில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உழைக்கின்றனர். இலங்கையில் உடலால் மிக நீண்ட நேரம் உழைக்கின்ற ஒர் வர்க்கமாக எமது மலையகப் பெண்கள் காணப்படுகின்றனர். இவர்களின் நாளாந்த உழைப்பின் பெறுமதி மிகக் கூடியதாகும். ஆரசியல் சமூக விழிப்பின்றி வாழ்ந்து வரும் இவர்களை ஸ்தாபனப்படுத்தி கல்வியறிவூட்டி வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமையாகும். முலையகப் பெண்கள் போராட்டத்தில் பழக்கப்பட்டவர்கள். குடும்பச் சூழல் சமுதாயச் சூழல் சாரணமாக அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்றனர். இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை மலையக மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ப பிரச்சினைகளை நாம் நோக்கினோம். இனி இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான அரசியல் மார்க்கம் பற்றி ஆராய்வோம்.

தோழர்களே! மலையகத்தின் அரசியல் நிலைமைகளை விளங்கிக்கொள்வதன் மூலமே நமது பாதையினை தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். நமது பகுதியின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது மூன்று முக்கிய காலப் பகுதியினு}டாக வளர்ந்து வந்துள்ளமையை காணலாம்.

1. தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது முதல் 1948-ம் ஆண்டு குடியுரிமைப் பறிக்கப்பட்ட வரையுள்ள காலப்பகுதி.

2. 1948-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதி.

3. 1977-ம் ஆண்டு முதல் யூ.என்.பி. அரசாங்கத்தின் ஆட்சியின் கீழான காலப்பகுதி.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கை வந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்ப காலத்தில் பெருந்துன்பங்களை அனுபவித்தனர். அவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டனர். தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட முயன்றவர்கள் தோட்ட நிர்வாகங்களால் தண்டிக்கப்பட்டனர். 1935 - ம் ஆண்டுக்கு பின்னரே அவர்கள் தொழிற்சங்க போராட்டங்களை ஆரம்பித்தனர். இலங்கை - இந்தியன் காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் இந்த தொழிற்சங்கப் போராட்டங்களை ஆரம்பிப்பதில் பெரும் பங்கு வகித்தனர். வேலைத் தளங்களில் தொழிலாளருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், மருத்துவம் போன்ற விடயங்களில் காட்டப்பட்ட அநீதிகள் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தமை போன்றவற்றிற்கு எதிராக தொழிலாளர்கள் உறுதிமிக்க போராட்டங்களை நடத்தினர். இக்காலப் பகுதியில் நான்முல்லோயா தோட்டத்தில் தொழிலாளி கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்காலப்பகுதியில் தொழிலாளர்கள் பெரும்பாலும் தொழில் தொடர்பான விடயங்களிலும் தொழிற்சங்க உரிமைகளைக் கோரியுமே போராட்டங்களை முன்னெடுத்தனர். 1935 - ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கத்திலும் அதன் பின் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்திலும் அணிதிரண்டனர்.

1931 இல் ஆங்கிலேயர் இலங்கையிலுள்ள எல்லா வயது வந்த பிரஜைகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கிய போது பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. இதன்படி நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக ஏழு உறுப்பினர்கள் பாராளு மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்கள். தோட்டத் தொழிலாளர்கள் மீது இனவெறிப் பார்வையைக் கொண்டிருந்த ஏ. ஈ. குணசிங்கா, டி.எஸ். சேனநாயக்கா போன்றோருக்கு இவ்விடயம் பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்கள் அல்லர் என்ற கருத்தை முன் வைத்து தோட்டத் தொழிலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குரிமையையும், குடியுரிமையையும் பறிப்பதற்கு திட்டம் போட்டனர். இக்குடியுரிமைப் பறிப்புக்கு வர்க்க, இன அடிப்படைகளே பிரதான காரணிகளாகும். இதன்படி 1948- ஆம் ஆண்டு யூ.என்.பி. அரசாங்கம் பதவியிலிருந்த போது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டது. இந்த ஈனச் செயலுக்கு தமிழ் எம்.பிக்களில் ஒரு சாரார் உடந்தையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1948 முதல் 1977 வரை தோட்டத் தொழிலாளர்கள் தமது சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது தெரிவு செய்ய முடியாத நிலையிலிருந்தனர். குடியுரிமை பறிக்கப்பட்டதன் காரணமாக எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டனர். இக்காலப்பகுதியில் நாடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிறிமா-சாஸ்திரி, சிறிமா- இந்திரா போன்ற ஒப்பத்தங்கள் செய்யப்பட்டன. இவ் ஒப்பந்தங்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்களில் குறைந்த தொகையில் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

எனினும் நாடற்றோர் பிரச்சினை பூரணமாக தீர்க்கப்படவில்லை. ஆரம்ப காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்கையும், சந்தாவையும் நாடி நின்ற பாராளுமன்ற சந்தர்ப்பவாத இடது சாரிகளும் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டனர். பிற்காலத்தில் மலையக மக்களை மட்டும் மையமாகக் கொண்டு ‘அரசியல் செய்ய’ முனைந்த ‘முன்னணி’ அமைப்பாளர்களும் காலப்போக்கில் சேர்வடைந்து விட்டனர். இவர்களுள் பலர் பிற்காலத்தில் இந்தியா சென்று விட்டனர். இக்காலப்பகுதியிலும் தோட்டத் தொழிலாளர்கள் பல உறுதியான போராட்டங்கழளை நடத்தினர். பதுளை பகுதியில் நடைபெற்ற இத்தகைய போராட்டமொன்றில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இக்காலப்பகுதியில் அதிதீவிரவாத இடது சாரிகளும் அவர்களது பிழையான நடைமுறை காரணமாக மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்தனர்.

1977-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்கனவே பெற்ற வாக்குரிமையைப் பயன்படுத்தி நீண்ட காலத்துக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு உறுப்பினரை தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்தனர். அவர் யூ.எனி.பி. அரசுடன் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார். இக்காலப் பகுதியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள சகல மக்களும் பெருந்துன்பத்தை அனுபவித்து வந்தனர். இன்று மனித உயிர்கொலை என்பது நாட்டில் எப்பகுதியிலும் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது. துpறந்த தாராளச்சந்தை முறை காரணமாக அந்நிய சக்திகள் எமது நாட்டில் ஊடுருவி விட்டன. பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்து விட்டன. அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறல் சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்படாது வடக்கு கிழக்கு பகுதியில் நாள்தோறும் பல நு}ற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஜனநாயக உரிமைகள் யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. அதேவேளை மலையக மக்கள் அடிப்படை ஜீவாதார உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.


1977-ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பின்னர் மலையக மக்களின் பெரும்பாலானோர் இந்தியா சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். இதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் ஊக்கமளித்தனர். சிலர் வன்னிப் பகுதியில் சென்று குடியேற முயற்சி செய்தனர்.


ஆனால் 1983-ஆம் ஆண்டு இனப்படுகொலையின் பின்னர் அனைவரும் இந்தியா சென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உருவாகியது. இதற்கு முன்னர் நடைபெற்ற இன வன்முறைகளை விட இந்த இனவன்முறையில் தோட்டத் தொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும் இந்தியா அதனது கப்பல் சேவையை திடீரென நிறுத்தியமை, இலங்கையிலிருந்து ஏற்கனவே இந்தியா சென்றவர்கள் பட்ட துன்பம் போன்றவற்றால் படிப்படியாக தொழிலாளர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டது. முலையகம் நாம் உருவாக்கிய பிரதேசம், பரம்பரையாக நாம் இங்குதான் வாழ்கிறோம் என்ற எண்ணம் உறுதியாக மனோநிலையாக மாறியது.

பிரதேச நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை தேசிய இன உணர்வு காரணமாக நாம் எப்படியும் இலங்கையில் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் தோட்டத் தொழிலாளர்களிடையே வேர் ஊன்றி வளரலாயிற்று. இந்நிலை உருவாக எமது கட்சியும் ஏனைய முற்போக்கு எண்ணம் கொண்ட சக்திகளும் தமது பங்களிப்பை வழங்கின.

பெருந்தோட்டப் பகுதிகளை உருவாக்கியவர்கள் நாங்கள். நூட் இந்நாட்டுக்காக உழைத்தவர்கள், நாம் இதைவிட்டுப் போக முடியாது என்ற நியாயபூர்வமான பிரதேச உணர்வு நமது மக்களிடையே தோன்றியது. இது வட பகுதியில் தோன்றிய குறுந்தேசியவாத உணர்வு போலல்லாது தேசிய ஓட்டத்தோடு, தேசிய ஐக்கியத்தோடு இணைந்த ஒன்றாகவே காணப்பட்டது. பிரதேச வெறியாக அல்லாமல் நியாயமான உரிமைகளுக்கான உணர்வாக மனித வாழ்வுக்கு தேவையான உணர்வாகவும் உள்ளது. இதனை மலையகத்தில் சில குறுகிய அரசியல் லாப நோக்கு கொண்ட சக்திகள் பிரதேசவெறியாக மாற்றவும் முயன்று வருகின்றன. என்பது கவனத்திற்குரிய தொன்றாகும்.


மலையகத்தில் நாம் ஒரு சிறுபான்மை இனமாக சமூக, பொருளாதார கலாசார, பண்பாட்டு, தனித்துவங்களையும், தன்னடையாளங்களையும் கொண்டு காணப்படுகின்றோம். முலையகத்தில் மத்திய, ஊவா, சப்பிரகமுவா, மாகாணங்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாகிய நாம் நீண்ட காலமாக செறிந்து வாழ்கிறோம். கொழும்பு, வன்னி மாவட்டம், கிழக்கு மாகாணத்தில் சில இடங்களிலும் நமது மக்கள் வாழ்கின்றனர். நாம் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்ற hPதியில் எமது பிரச்சினைகள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு வாழும் எம் மக்களிடையே காணப்படும் தேசிய உணர்வோடு இணைந்த பிரதேச நலன் சார்ந்த உணர்வினை அரசியல் hPதியாக இரண்டு முக்கிய பாதைகளில் து}ண்டி முன் தள்ள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

1. பிரதேச அடிப்படையில் மலையக மக்களைத் தனிமைப்படுத்திப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் அம்சங்களை முன்னெடுத்தல், அதன் மூலம் ஒருவகை பிரதேசவெறி உணர்வை ஊட்ட முயல்வதாகும்.

2. அதி தீவிரப் போக்கு ஆயுதக் கவர்ச்சியில் ஈர்த்து அதனோடு தொடர்புள்ள நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்த முயற்சித்தல்.

தோழர்களே! இவ்விரண்டு அம்சங்களையும் நாம் நிதானமாக ஆராய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய அணுகுமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எமக்கு நல்ல படிப்பினைகளைத் தந்துள்ளன. மேற்குறித்த வழிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதே நாம் அறிவோம்.

மலையக மக்கள் ஒரு தனித்தேசிய சிறுபான்மை இனமாக வாழ்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் “மலையகம்” என்ற வரையறைக்குள் மட்டுமே நின்று அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே. முலையக மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தேசிய பிரச்சினைகளோடு இணைந்ததேயாகும். எனவே தேசிய நீரோட்டத்தோடு இணைந்த வகையிலேயே எம்மக்களின் பிரச்சினைகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது.

இரண்டாவது ஆயுதக் கவர்ச்சியுடன் கூடிய அதிதீவிர போக்காகும். கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவன் செயல்களும் தற்காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இன அடக்குமுறை நிகழ்வுகளும் இளைஞர்களை தீவிரவாத போக்கிற்கு இழுத்துச் சென்றுள்ளது. நீண்ட காலமாகவே இளைஞர்களுக்கு உகந்த அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய தலைமையினை கொடுக்காததும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும் மக்களைச் சார்ந்திராத, மக்களை பலமாகக் கொள்ளாத எந்த ஒரு ஆயுதப் போராட்டமும் வென்றதில்லை என்பதை இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் எந்தப் போராட்டமும் சரியான கொள்கை வழிகாட்டலுக்கு உட்படாது விட்டால் தோல்வியைத்தான் தழுவ நேரிடும் என்பதும் நிரூபணமாகியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1935-ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இவற்றால் மலையக மக்களுக்கு சரியான அரசியல் தலைமை கொடுக்கப்படதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தொழிற்சங்கம் இவர்களுக்குச் சரியான அரசியல் கல்வியைய10ட்டி, பொருத்தமான அரசியல் பாதையில் வழி நடத்திச் சென்றதா என்பதுவும் ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது. தொழிற்சங்கங்கள் பல தங்களது சந்தாதாரரை கூட்டிக்கொள்வதற்கும், சங்கப்பகைமையை தொழிலாளர்களிடையே ஊட்டி, அவர்களை முட்டி மோதிக்கொளள் வைப்பதற்கும் முயன்றனவேயல்லாமல் வேறு எதனையும் அரசியல் hPதியாக சாதித்துவிடவில்லை. தோட்டத்தில் வேலையில்லாவிடின் எவரும் தோட்டத்தில் வசிக்க முடியாத அதாவது தோட்டத் தொழிலாளர்களும் அவரது பரம்பரையினரும் நிரந்தர வசிப்பிடமில்லாதவர்கள் என்ற நிலையிலேயே தொடர்ந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைமையே இன்றும் காணப்படுகிறது. இரண்டிற்கு மேற்பட்டோர் தோட்டத்தில் வேலை செய்தால்தான் ஒரு லயன். ஆறையில் ஒரு குடும்பத்தினர் வசிக்க அனுமதிகக்ப்படுவர். ஒரு குடும்பத்தில் ஒருவரும், தோட்டத்தில் வேலை செய்யாதவிடத்து அந்த தொழிலாளர் குடும்பம் இருப்பிடமில்லாமல் நடு வீதியில் விடப்படுகின்ற நிலையே இன்றும் காணப்படுகின்றது என்பது மிகவும் கவலையுடன் நினைவில் நிறுத்தப்பட வேண்டியதாகும். இன்று நம் முன்னே உள்ள பாரிய பணிகளில் ஒன்று மலையக மக்களை சரியான அரசியல் பாதையில் அணிதிரட்டிச் செல்வதாகும். புhட்டாளி வர்க்க தலைமையிலான அரசியலை மக்களிடையே முன்னெடுக்க வேண்டும். இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

கடந்த பதிமூன்று வருடகால அனுபவத்தில் கடுமையாக வேலை செய்வதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களை அரசியல் hPதியாக வென்றெடுத்து அவர்களை ஸ்தாபன வடிவத்தில் அணிதிரட்டலாம் என்பதை நாம் கற்றுக்கொண்டுள்ளோம். எமது கட்சியின் தலைமைக் குழு இப்பணிக்கு சரியான வழிகாட்டலை மேற்கொள்கின்றது. இந்த வழிகாட்டலின் அடிப்படையில் நாம் மிகப் பெரிய மக்கள் சக்தியினை வர்க்க உணர்வுடன் கட்டி வளர்க்க வேண்டியவர்களாக உள்ளோம். அதேவேளையில் மலையக மக்களின் ஆகக் குறைந்தளவு கோரிக்கைகளையாவது வென்றெடுக்கத் தயாராக இருக்கின்ற சகல சக்திகளுடனும் இணைந்து பரந்துபட்ட ஐக்கிய முன்னணி வேலைகளில் ஈடுபட வேண்டியவர்களாகவும் உள்ளோம். பல்வேறு முனைகளிலும் இப் பரந்த ஐக்கியம் கட்டி எழுப்பப்படுவது தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்கான பாதையில் மிக முக்கியமானதாகும்.

முலையக மக்கள் இன்றைய நிலையில் பெரும் அரசியல், பொருளாதார, சமூக கலாசாரப் பிரச்சினை எதிர் நோக்கியுள்ளனர். இதனால் மலையக மக்களின் விடுதலையின் அக்கறையுடைய சக்திகளும் ஐக்கியப்பட்ட வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டியதும் அவசியமாக உள்ளது. இதன் மூலமே மலையக மக்களின் “மக்கள் விரோத சக்திகளை” மக்களுக்கு அடையாளம் காட்டி மக்களை அணிதிரட்ட முடியும்.

இதே வேளை வடக்கின் பல மாவட்டங்களிலும் கிழக்கில் சில இடங்களிலும் குடியேறியுள்ள இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அங்குள்ள மக்களில் பலர் இன்று அகதிகளாக இந்தியா சென்று விட்டனர். அவர்களின் வீடுகள் உடைத்தெறியப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. அவர்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அப்பகுதியிலும் எமது வேலைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமானதாகும்.

இந்திய வம்சாவளி பரம்பரையைச் சேர்ந்த பலர் கொழும்பு போன்ற இடங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். வியாபாரிகளாகவும், கற்று வெளியேறி தொழில் நிமித்தமும் அப்பகுதியில் கணிசமான மலையகத்தவர் வாழ்கின்றனர். அவர்கள் மலையகத்துடன் தொடர்புடையவர்களாகவே இருக்கின்றனர். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மலையக மக்களில் அவர்களும் ஒர் அங்கமே என்பதை மேலும் அவர்களுக்கு வலியுறுத்தி அரசியல் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பினையும் ஊக்குவிக்க வேண்டும். அதேவேளை அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

மலையகப் பகுதிகளில் நீண்ட காலமாகவே வாழ்ந்து வரும் சிங்கள, முஸ்லீம் மக்களின் நலன்களையும் மேம்படுத்துவது அவசியமாகும். இனவாத அடிப்படையில் அல்லாது பரஸ்பரம், நன்னம்பிக்கை அடிப்படையில் திட்டங்கள்முன் வைக்கப்படுவது அவசியமாகும்.

முலையக மக்கள் தொழிற்சங்கங்களுக்கு சந்தா செலுத்துபவர்களாக, இன்று வாக்குரிமை கிடைத்தபின் வாக்களிப்பவர்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என சில தலைமைகள் விரும்புகின்றன. இதனை மாற்றி மலையக மக்கள் தமது வர்க்க அரசியலை விளக்கி அதன் அடிப்படையில் அணிதிரண்டு பரந்த வெகுஜன அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கும் தலைமை சக்தியாக மாறுவதையே எமது கட்சி இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

முலையக மக்களின் விடுதலை உணர்வினை மழுங்கடிக்கவும், மக்கள் விடுதலையை நாடி நிற்கும் தாபனங்களை முறையிலேயே கிள்ளியெறியவும் பல சக்திகள் முயன்று வருகின்றன. இவற்றையெல்லாம் சரியாக அடையாளங்கண்டு மலையக மக்களை புரட்சிகர வெகுஜன மார்க்கத்தில் அணிதிரட்டி மக்கள் சக்தியுடன் நாம் நீண்டகால தொழிலாளி வர்க்க அரசியல் பாதையில் துணிவுடன் முன்னேற வேண்டியவர்களாகவும் உள்ளோம். தொடர்ந்து போராடுவோம். இறுதியில் மக்களே வெற்றி பெறுவார்கள்.

மாக்சிசம் லெனினிசம் மாஓ - சேதுங்
சிந்தனை வாழ்க்!
பாட்டாளி வர்க்க சர்வதேசிய
போராட்டாங்கள் வெல்க!
புதிய - ஜனநாயக கட்சி நீடுழி வாழ்க!


தீர்மானங்கள்
புதிய - ஜனநாயக கட்சியின் மலையகப் பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதேச மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ருhகலை

25-12-1991

1. இந்திய வம்சாவளி மக்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டதாக கூறப்படும் பிரசாவுரிமையும், வாக்குரிமையும் எழுத்தில் மட்டுமே இருக்கும் நிலையை மாற்றி பொதுப் பிரகடனத்தின் மூலம் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. மலையக தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான மாதச் சம்பளமும், சம்பள உயர்வும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.


3. பெருந்தோட்டங்களை பல்தேசிய கம்பெனிகளிடம் ஒப்படைத்து தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் கடுமையாக சுரண்டல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளாக்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை நாம் வன்மையாக எதிர்ப்பதுடன், அதனை கைவிடும்படியும் கோருகிறோம்.

4. நீண்டகாலமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி அடைத்தும், தடுத்தும் வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள், யுவதிகள் அனைவரையும் நீதி விசாரணைக்குட்படுத்த வேண்டும். அல்லது விடுதலை செய்ய வேண்டும். அவசரகாலச்சட்டம், பயங்கரவாத தடைசட்டம் என்பன உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்.

5. மலையகத்தில் எக்காரணமின்றியும் அரசியல் தொழிற்சங்க, தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக கைது செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

6. மலையக மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு தேசிய சிறுபான்மை இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது தனித்துவங்களும், தன்னடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் மத்திய, ஊவா, சப்பிரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை இணைந்து ஒரு பலமான சுயாட்சி உள்ளமைப்புகள் ஏற்படுத்தப்ட வேண்டும். இதற்கு வெளியிலும், வடக்கு கிழக்கிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் சுயாட்சி உப உள்ளமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

7. மலையகத்தில் பெருகி வரும் வேலையில்லாத இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மலையகத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்பில் பாகுபாடற்ற விதத்தில் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

8. தமிழ்மொழியும் ஆட்சிமொழி என்ற hPதியில்; மலையகத்திலும் நிர்வாக நடைமுறை hPதியில் தமிழ்மொழியை பிரயோகிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. வேலைநிறுத்த உரிமை உட்பட சகல தொழிற்சங்க உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். மலையக மக்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடையாக இருக்கும் சகல தடைகளும் நீக்கப்பட்டு அவர்களின் அரசியல் உரிமைக்கு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.

10. தோட்டப்பகுதி சுகாதாரம் தேசிய சுகாதார சேவையுடன் இணைக்கப்பட வேண்டும். மோசாமான நிலையில் உள்ள தோட்டப்பகுதி சுகாதார விருத்தி செய்யப்பட வேண்டும்.

11. (அ) மலையக கல்வியில் எந்தவிதமான தொழிற்சங்க - அரசியல் தலையீடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் இடமளிக்கப்படக்கூடாது. கற்றவர்களைக் கொண்ட ‘கல்விக்குழு’ ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மலையக கல்வி அபிவிருத்திக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


(ஆ) மலையக தமிழ் பாடசாலைகளின் தரம் உயர்த்தப்பட்டு முன்னேறிய விஞ்ஞான தொழில்நுட்ப, உயர்கல்வி வாhய்ப்பை ஏற்படுத்தி பரவலாக்க வேண்டும். மலையகத்தில் இதுவரை தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஒன்றுகூட இல்லை என்ற நிலைமையை மாற்றி பல தமிழ் மத்திய மகா வித்தியாலயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

12. (அ) நீண்டகாலமாக இந்நாட்டின் வளத்துக்காக உழைத்த மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை சிறுதுண்டு காணி கூட வழங்கப்படவில்லை. இந்த அவர நிலையை மாற்றி அவர்களுக்கு அவ்வப்பிரதேசங்களிலேயே காணி வழங்கப்படவேண்டும்.

(ஆ) அவ்வாறு காணிகள் வழங்கப்பட்டு அக்காணிகளில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான வீட்டுத் திட்டம் ஏற்படுத்தப்படும் என நீண்ட காலமாகக் கூறி வரப்படுவது நநடைமுறையில் சாத்தியமாக்கப்படவேண்டும்.

(இ) மலையத்திலிருக்கும் சிங்கள மக்களின் நிலங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் பறிக்கப்பட்டன. அதேவேளை தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கூலிகளாக அடிமையாக்கப்பட்டார்கள். இன்றும் இந்த நிலைமை புதுப்புது வடிவங்களில் தொடரத்தான் செய்கிறது. ஆகவே மலையகத்திலுள்ள காணியற்ற சிங்கள மக்களுக்கு மலையகத்தில் காணி வழங்கப்பட வேண்டும். ஆனால் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்குவதை மறுக்கும் அல்லது இனவாத அடிப்படையிலான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மலையகத்தில் ஏற்படுத்தக் கூடாது.

13. மலையகத்தில் பின் தங்கிய நிலையில் தொழிலாளர்களாக, விவசாயிகளாக மற்றும் உழைப்பாளர்களாக, வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் உரியமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

14. மலையகப் பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் உப உள்ளமைப்பு hPதியிலான ஏற்பாடுகள் தகுந்த வழிகளில் செய்யப்பட வேண்டும்.


15. அ) இலங்கை நாட்டின் சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை என்பவற்றுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்யும் அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

ஆ) இலங்கையில் சிதைக்கப்பட்டுள்ள நிலையிலுள்ள அடிப்படை ஜனநாயக- தொழிற்சங்க - மனித உரிமைகளை மீட்டெடுக்கவும், மறுக்கப்படும் சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்குவும் சகல முற்போக்கு ஜனநாயக தெசபக்த சக்திகளின் பரந்த ஐக்கியத்தின் மூலமாக போராட்டத்திற்கு இப்பிரதேச மாநாடு முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றது.

+++++