கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வரதர் கதை மலர் - 1

அவன் பெரியவன்

சிறார்களுக்கான கதை
 
 

அநு. வை. நாகராஜன்

 

வரதர் கதை மலர் - 1

பதினைந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கதை

அவன் பெரியவன்

அநு. வை. நாகராஜன்

அடர்ந்த காட்டின் நடுவே மரங்களை வெட்டி அனுப்பும் ஒரு பாடி வீடு. அங்கே 'ஹாஜா' என்று ஒரு சிறுவன். 'கஜா' என்ற யானைக்குட்டி. அவர்களைப் பற்றிய மிகச் சுவையான கதை இது!

------------------------------------------------

வரதர் கதை மலர் - 1

அவன் பெரியவன்

சிறார்களுக்கான கதை

அநு. வை. நாகராஜன்

----------------------------------------------

வரதர் கதை மலர் - 1
நூல்: அவன் பெரியவன்
எழுதியவர்: அநு. வை. நாகராஜன்
வெளியீடு: வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்
முதற் பதிப்பு: யூலை 1993
அச்சுப்பதிவு: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறைச் சாலை, யாழ்ப்பாணம்
விலை: ரூபா 12/=


பதிப்புரை

இளம் சிறார்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது ஒரு தேசீயக் கடமையென்று கருதுகிறேன்.

சிறுவர்கள் கதைகளைத்தான் விரும்பிப் படிப்பார்கள். - இது என் பட்டறிவு.

எனவே, 'வரதர் கதை மலர்' என்ற ஒரு தொடர் வெளியீட்டைத் தொடங்கியிருக்கிறேன்.

இத்தொடரின் முதலாவதாக, 'அவன் பெரியவன்' என்ற இந்நூல் வெளிவருகிறது.

நாடறிந்த சிறந்த எழுத்தாளர் அநு. வை. நாகராஜன், இதை எழுதியிருக்கிறார். திரு நாகராஜன் ஏற்கனவே சிறுவர்களுக்கான சில நல்ல நூல்களை எழுதி வெளியிட்டவர். அநுபவம் வாய்ந்த அவரது மொழிநடை சிறுவர்களுக்கு உவப்பானது.

தொடர்ந்து பல்துறைப்பட்ட கதைகளும் இத்தொடரில் வெளிவரும்.

தமிழ்ச் சிறார்களின் பேராதரவு இத் தொடருக்கு நிச்சயம் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில், இவ்வெளியீடுகள் யாவும் நன்மணம் வீசும் நறுமலர்களாக இருக்கும்; தேனீக்கள் தாமே தேடி வரும்.

அடுத்து வரும் கதை மலராக 'இராமன் கதை' (இராமாயணம்) வருகிறது. ஈழத்தின் மூத்த எழுத்தாளர் 'சம்பந்தன்' சிறுவர்களுக்காகவே இந்தக் கதையைப் பண்புடன் எழுதியிருக்கிறார். அடுத்த மாதம் வந்துவிடும்.

அன்புடன்,
- வரதர்.
யாழ்ப்பாணம்,
1-7-93.

--------------------------------------------

அவன் பெரியவன்


1.காட்டுக்குள் ஒரு பாடி

அந்தப் பெரும் காடு நாட்டின் தென்திசையாக வடமத்திய மாகாணத்தில் இருக்கிறது. அங்குவானுயர்ந்த மரஞ் செடி கொடிகள் பின்னிப் பிணைந்திருக்கும்.

வானத்துச் சூரியன் அங்கு நிலத்தைக் காணமுடியாது. அதனால் அங்கு பகலும் இரவும் ஓரே இருள் மண்டிக்கிடக்கும்.

அது ஒரு வரண்ட நிலக் காட்டுப் பிரதேசம் பருவ மழை பருவந் தப்பாமற் பெய்வதால் அங்கு தாவர வளர்ச்சி பருவ காலத்தை ஒட்டிச் செழித்தும் வரண்டும் இருக்கும். அங்கு சிறுத்தைப்புலி, யானை, பன்றி, கரடி போன்ற கொடிய விலங்குகள் சுதந்திரமாகத் திரியும். காட்டெருமை களுடன் மான் மரைகள் கூட்டங் கூட்டமாக உலாவும் பிணந்தின்னும் நரிக்கூட்டம் எங்கும் நடமாடும் காட்டு முயல்கள் பொட்டல் வெளிகளின் புற்றரைகளில் துள்ளித் துள்ளிக்குதித்தோடும்; காட்டுக்கோழிகளும் வண்ண மயில்களும் கூட்டங்கூட்டமாக வாழும்.

இத்தகைய பெரும் அருஞ் செல்வமாக இருப்பது அங்கு நெருக்கமாக வளர்ந்திருக்கும் பாலை முதிரை கருங்காலி போன்ற வைரமான மரவளமே.

இவற்றைத் தறித்தெடுக்க காட்டை அடுத்துள்ள கிராமத்தவர் அடிக்கடி அங்குவருவதுண்டு. அவ்வேளைகளில் மான் மரை பன்றி போன்ற விலங்குகளை அவர்கள் வேட்டையாடிச் செல்வது முண்டு. காட்டின் மரங்களும் அங்கு வாழும் விலங்குகளும் பறவைகளும் மற்றும் வளங்களும் அரச உடைமைப் பொருள்களாகும். அவற்றை கண்காணிக்க அரச திணைக்களங்கள் இருக்கின்றன. காட்டுச் செல்வத்தை மக்கள் அழிக்க முடியாது அதைத் தடுக்க இத்திணைக்களங்கள் காட்டில் ஆங்காங்கே காவல் மையங்களை அமைத்துக் கண்காணித்து வருகின்றன. இருந்த போதிலும் சட்டத்தை மீறுவோர் கள்ளத் தனமாக தமது வேலையைச் செய்யாமல் இல்லை.

மரத்தின் தேவை மக்களுக்கு இருப்பதால் அவற்றைத் தறித்தெடுக்க அரசாங்கம் ஒழுங்கு செய்திருக்கிறது. அதற்காக ஒப்பந்தகாரர்களுக்கு அனுமதி வழங்கி அவற்றைச் செயற்படுத்துகிறது. காலத்துக்குக் காலம் ஒப்பந்தகாரர்கள் கூறு விலையில் மரந்தறிக்கும் வேலையைச் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் காடுகளுக்குள் தங்கியிருந்து மரந் தறிப்பார்கள் தறித்த மரங்களை நாட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.

இவ்விதமாக மரந்தறிக்கும் ஒப்பந்த மொன்றை சிம்சன் மக்வூட் என்ற ஓர் ஒப்பந்தகாரர் இந்தக் காட்டை எடுத்திருந்தார். அவர் ஓர் ஆங்கிலேயர் மிகவும் கண்டிப்பானவர். கடமையில் கண்ணா யிருப்பவர். எங்கும் எதிலும் நேர்மையும் நிருவாக ஒழுங்கும் பேணுபவர் அதனாற் போலும் அவர் இந்தக் காட்டில் நீண்ட காலமாக தொடர்ந்து அரசாங்க ஒப்பந்தகாரராக இருந்து பொருளீட்டுகிறார். இங்கு மிகப் பெரிய பாடியொன்றை அமைத்து காலத்துக்குக் காலம் ஏராளமான மரங்ளைத் தறித்தெடுத்து நகருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சிம்சன் மக்மவூட்டின் காட்டுப் பாடி வனவிலங்குகளும் மரங்களும் செறிந்த இந்தக் காட்டின் நடுமையத்தில் அமைந்திருந்தது. ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அந்தப் பாடியின் எல்லை விரிந்திருந்தது. பாடியைச் சுற்றி இரண்டு அரண்கள் இருந்தன. முதலாவது அரண் காட்டோடு இணைந்திருந்தது இதற்கு காட்டின் பெரு மரங்களே இயற்கை வேலியாக அமைந்திருந்தன. இந்தக் காட்டினைக் கடந்தால் இருப்பது ஒரு சிறு பொட்டல் வெளி. இவ் வெளியை அடுத்து வெட்டிய மரக் கட்டைகளால் அமைக்கப்பட்ட இறுக்கமான வேலி ஒன்று பாடியைச் சுற்றி இருந்தது இந்தச் சுற்று வேலிக்குள்ளேயே சிம்சன் மக்வூட்டின் மரக்காலை இருந்தது. பாடியில் இருண்டு நீணட கொட்டகைகளும் ஒரு பரண் குடிலும் இருந்தன. பகற் பொழுதுகளில் இக் கொட்டகைகளில் வேலையாள்கள் வேலை செய்வார்கள் இராப் பொழுதுகளில் அவர்களுக்குரிய அந்தப் பரண் குடிலில் படுத்து உறங்குவார்கள். இக் கொட்டகைகளுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு பரண் வீடும் இருந்தது. இது முழக்க முழக்க மரப் பலகைகளாலும் தடி தண்டுகளாலும் அமைக்கப்பட்டிருந்தது. கூரை மட்டும் வைக்கோலால் வேயப்பட்டிருந்தது. அந்த வீடே சிம்சன் துரையின் பணிமனையாகவும் பாடியில் இருக்கும் காலத்தில் அவர் வசிக்கும் இடமாகவும் இருந்தது. இவருடைய பரண் வீடு வேலையாள்களின் பரண் குடிலிலும் சற்று உயரத்தில் இருந்தது.

அது நிலத்தில் இருந்தது. இருபது இருபத்தைந்து அடி உயரத்தில் இருந்தது. இதற்கு மரப்படிகள் கொண்ட உயரமான ஏணி ஒன்றும் இருந்தது. காட்டில் அதுவும் கொடிய விலங்குகள் உலாவும். வனத்தில் மனித நடமாட்டம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் மனித வாடை என்றாலே வன விலங்குகளுக்குப் பிடிக்காது. அப்படி இருக்க காட்டு விலங்குகள் சுதந்திரமாக உலாவும். இந்த நடுக்காட்டில் சிம்சனின் பாடி ஒரு குடிமனைபோல் இருப்பதென்றால் மிகவும் துணிகரமான விடயம்தான். இதற்காகவே சிம்சனின் பாடி அங்கு மிகவும் தற்பாதுகாப்புடன் அமைந்திருக்கிறது.காட்டின் மையத்தில் இயற்கை அரணோடு செயற்கை அரணோடு செயற்கை வேலிகளும் பரணில் வசிப்பிடங்களும் இருந்தன. பகற் பொழுதுகளில் யானை புலி கரடி காட்டுப்பன்றி போன்ற இராக்கணங்களுடன் வாழ்வது சிரமத்திலும் சிரமமே! அந்த வகையிலேயே இந்தப் பாடியில் உள்ள பரண்கள் நல்ல பாதுகாப்பை தந்தன.

சிம்சன் துரையின் காட்டுப் பாடிக்கு அண்மையில் உள்ள கிராமத்துக்குப் பத்து மைல் தூரம் இருந்தது. அக்கிராமம் நகரத்தோடு தொடர்பு கொள்ள பல பாதைகள் இருந்தன ஆனால் சிம்சனின் பாடிக்கும் கிராமத்திற்கும் ஒரேயொரு காட்டுப்பாதை மட்டுமே இருந்தது அது இருபக்கமும் காடுகள் செறிந்த கரடு முரடான பாதை.

சிம்சன் துரை பாடி அமைத்து காட்டு மரங்களை வெட்டி ஏற்றி இறக்கிய காலம் கனரக வாகனங்கள் இல்லாத காலம் காட்டு மரங்கள் காட்டின் பல பாகங்களிலும் வெட்டிச் சேகரிக்கப்பட்டு பாடிக்கு எடுத்து வரப்படும் பாடியிற் சேகரிக்கப்பட்ட மரங்கள் அளவளவாக நறுக்கப்பட்டு கிராமத்தின் ஊடாக நகரத்துக்கு எடுத்துச் செல்லப்படும் இப்பெரும் பணியை மனிதர்களே செய்வார்கள். இவர்களுக்கு உதவியாக பெரிய காளை மாட்டு வண்டிகளும் யானைகளும் இருந்தன.

யானைகளின் பணியே இங்கு பெரும் பணியாக இருந்தது. இதற்காக இப்பாடியில் ஒரு பெண் யானையும் இரண்டு கொம்பன்களும் இருந்தன. இவற்றைப் பேணிப் பராமரிக்கவும் வேலைகளைச் செய்விக்கவும் மாவுத்தர் சின்னப்பு இருந்தார். அவருக்கு உதவியாளர்களாக இரண்டு மாவுத்தர்களும் இருந்தார்கள். அவர்களுடன் அந்த யானைகளும் அந்தப் பாடியில் நிரந்தரமாக இருந்தன. மாவுத்தர்களின் குடும்பங்கள் கிராமங்களில் வாழ்ந்தன.

சின்னப்புவுக்குச் செல்லப்பிள்ளைகள் இருவர் அவர்களில் ஒருவர் அவருடைய அருமைமகன் ஹாஜா. மற்றவர் கஜா என்ற கொம்பன் யானை.

ஹாஜா பிறந்த மாதத்தில் தான் கஜா காட்டில் குட்டியானைக் கன்றாகப் பிடிக்கப்பட்டுக் கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அது பால்குடி மறந்து தாயைவிட்டுத் தூர விலகித் திரிந்த காலம். ஓருநாள் குழி என்று தெரியாமல் யானை பொறியொன்றில் விழுந்தது. பிடிபட்டு சின்னப்புவால் கொண்டு வரப்பட்டது.

கஜாவின் நினைவில் சின்னப்பு தன் மகனுக்கு ஹாஜா என்று பெயர் வைத்திருந்தார். குழந்தை ஹாஜாவும் குட்டிஜாவும் ஒன்றாய் வளர்ந்தன. ஒருவரை ஒருவர் பிரியாது உறவாடினர். இணைபிரியா நட்பிலும் அன்பகலாப் பாசத்திலும் அவர்களது உடல் உளவளர்ச்சிகள் நாளும் பொழுதும் வளர்ந்தன. இப்பொழுது கஜா மிகவும் வீரியமுள்ள கொம்பனாகி விட்டது சின்னப்புவின் தொழில் நுட்பத்திறனால் அது ஒரு சிறந்த பழக்கப்பட்ட கொம்பனாக மற்ற யாரனைகளிலும் துடிப்புள்ள வேலையாளாகி விட்டது சிம்சன் பாடியில் தலைமை யானையாக ஏனைய இரண்டு யானைகளுக்கும் முன்மாதிரியாக நின்று வேலை செய்தல் கஜா சின்னப்புவின் அங்குசத்துக்கு வேலை இல்லாமல் அது அவருடைய சொற்களுக்குக் கட்டுப்பட்டு விசுவாசமுள்ள தாசனாக் கடமை செய்தது.

கஜாவின் பக்குவத்துக்கு மூலகாரணம் ஹாஜா தான். அவன் எப்பொழுதும் கஜாவுடன் இருப்பான். ஹாஜாவின் வார்த்தைக்கும் வழிநடத்தலுக்கும் இணைபிரியாத் தோழமைக்கும் கஜா எப்பொழுதும் அடி பணிந்து இருந்தது. அதனை சின்னப்புவும் நன்கு அறிந்திருந்தார்;. அதன் பேரில் தன்னுடைய வேலையை ஹாஜா மூலம் செய்வித்துக் கொண்டிருந்தார்.

கஜாவுக்கு வேண்டிய இலை குழைகளைத் தருவதும் சோட்டை உணவுகளான தென்னோலை கரும்பு மாங்காய் தோங்காய் என்பவற்றைக் கிராமத்துக்குச் சென்று தேடிக் கொடுப்பதும் காட்டாற்றில் கஜாவை நீண்டநேரம் விட்டுக் குளிப்பாட்டிக் கொண்டு வருவதும் ஹாஜாவின் விருப்பமான பொழுது போக்காக இருந்தது. இப்பணியை அவன் ஒரு வேலையாகச் செய்யாமல் தன் உற்றதோழனுக்குச் செய்யும் ஓர் உதவியாகச் செய்தான்.

இவற்றை எல்லாம் கஜாவும் நன்குணர்ந்து தன் தோழமையை ஹாஜாவுடன் பேணிக் கொண்டிருந்தது. இவர்களது உறவு எல்லோருக்கும் வியப்பாகவே இருந்தது.

ஹாஜா இப்பொழுது, வயதில் பதினைந்தைக் கூடக்கட க்கவில்லை. ஆனாலும் வலுவான உடல் வனப்பிலும் வினைத் திறனிலும் துடிப்புள்ள வண்டு போல் சிம்சன் துரையின் பாடியில் தன் கஜாவுடன் உலாவினான். கஜா எங்கேயோ அங்கே ஹாஜாவும். ஹாஜா எங்கேயோ அங்கே கஜாவும் என்றநிலை அங்கு பிரசித்தமானது.

---------------------------------------------------

2. புயல் வீசியது

காலம் உருண்டது.

அப்பொழுது மழைக்காலம். சிம்சன் துரையின் காட்டுப் பாடியில் வேலைகள் குறைவு. இருந்தாலும் காட்டில் ஆங்காங்கே கோடையில் வெட்டித் துண்டாக்கிய மரங்களைப் பாடிக்கு இழுத்து வந்து வேகரிக்கும் வேலை அதிகமாக இருந்தது. இவ்வேலையை யானைகளும் அவற்றின் பாகர்களும் கால நேரம் பாராது மழை பனி குளிர் என்று பாராது செய்தார்கள்.

மரங்களைக் காட்டில் இருந்து இழுத்து வரும் வேலையை கோடை காலத்திற் செய்வதிலும் மாரியிற் செய்வதும் சுலபமாக இருக்கும் நிலம் ஈரமாகவும் சகதியாகவும் இருக்கும் போது மரங்களை யானைகள் இழுத்து வருவது இலகுவாக இருக்கும் அப்பருவ காலத்தில் பாகர்களுக்ச் சிரமம் இருந்தாலும் யானைகள் மிகவும் குதாகலமாக வேலை செய்யும்.

அத்தகைய ஒரு காலநிலையில் தான் ஒரு நாள் அங்கு காற்றும் புயலுமாக மழை பெய்தது. புயற்காற்றால் மரங்கள் அங்கும்மிங்கும் வளைந்து வளைந்து ஊசல் ஆடின. புயலைத் தாக்குப் பிடிக்க முடியாத மரங்கள் தத்தளித்தன. பல மரங்கள் வேரோடு பாறி நிலத்திற் சாய்ந்தன. மழையும் சோனாவாரியாகப் பொழிந்துதள்ளியது.

அந்தப் பொல்லாத வேளையில்தான் நடுக்காட்டில் சின்னப்புவும் மற்ற மாவுத்தர்களும் ஏற்கனவே வெட்டிய மரத் துண்டங்களைப் பெரிய சங்கிலியாற் பிணைத்து யானைகள் மூலம் இழுத்து வரும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் முதல் இரண்டு யானைகளும் மாவுத்தர்களுடன் மரங்களைஇழுத்துக் கொண்டு பாடியை நோக்கிச் சென்று விட்டன.

சின்னப்பு மட்டும் ஓர் ஆலமரத்துக்கு கீழ்நின்று மரமொன்றைச் சங்கிலியாற் கட்டி அதனை கஜாவின் வாய்க்குள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் மழையையும் புயலையும் பொருட்படுத்தவில்லை. கருமமே கண்ணாயிருந்தார்.

அந்த நேரத்தில்
பேய்ப்புயலாக வீசியகாற்று அவர் பக்கமாகச் சுழன்று அடித்தது. அந்தச் சுழலிற் சிக்கிய மரஞ் செடிகள் எல்லாம் மேலுங் கீழுங் கரணமடித்தன. காற்று வரவர உக்கிரமாக வீசியதை அவதானித்த சின்னப்பு மரத்தின் கீழ்தான் ஒதுங்கி நிற்பது ஆபத்தாய் முடியும் என உணர்ந்தார். அதனால் சட் என்று கஜாவின் வாயில் திணித்துக் கொண்டிருந்த சங்கிலியை இழுத்து அப்படியே நிலத்திற் போட்டு விட்டு அதை மட்டும் இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த பொட்டல் வெளிக்குச் செல்ல முற்பட்டார்.

என்ன துரதிஷ்டம் சின்னப்பு பாதுகாப்புத் தேடிச் செயற்படமுன் புயலின் அகோரத் தாண்டவம் முந்தி விட்டதே புயலின் உக்கிர வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாது தத்தளித்த அந்த ஆலமரமும் சுற்றிச் சுற்றிச் சுழன்று நின்றாடியது. விழுதுகள் அதன் அடிமரத்தைத் தாக்கிய போதிலும் கிளைகள் காற்றில் அலை மோதின சூறாவளியிற் சிக்கிய பாரிய கிளையொன்று சடார் என்று முறிந்து கீழே விழுந்தது.

அதிஷ்ட வசமாக கஜா தப்பித் தூரச் சென்றுவிட்டது. ஆனால் சின்னப்பு முறிந்த ஆலங்கிளைக்குள் அகப்பட்டுக்கொண்டார். காற்றின தாக்குதலினால் விழுந்த அக்குழைக்குள் அவர் மயங்கிக் கிடந்தார்.

புயல் சற்று ஓய்ந்தது. ஆனால் மழைத்தூறல் நிற்கவில்லை. கஜாவைத் தவிரஅங்கு வேறு யாரும் இல்லை. தூரத்தில் புயலுக்காக ஒதுங்கிய கஜா தன் எயமானைத் தேடியது. அங்குமிங்கும் பார்த்தது. சத்தம் போட்டுப் பிளறியது.வழமையாக தன்னோடு நிற்கும் ஹாஜாவும் அன்று அங்கு வரவில்லை. தன் எசமானுக்கு ஏதோ நடந்து விட்டது என்று சந்தேகித்த கஜா ஓரிடத்திலும் நில்லாது அங்குமிங்கும் ஓடிஓடிப் பிளிறியது பின்பு தன் எசமானைக் கடைசியாகக் கண்ட அந்த ஆலமரத்தடிக்கு அது வந்தது.

புயல் முறிந்த அந்த ஆலங்கிளைக்குள் அப்பொழுது சின்னப்பு கிடந்து முணகிய சத்தம் சிறிது சிறிதாக அதற்குக் கேட்டது. சத்தம் வரும் திசையை நோக்கி விரைந்த கஜா அங்கே அவரைக் கண்டு மகிழ்ந்தது. தன் எசமான் மரக் கிளைக்குள் கிடந்தாலும் அவருக்கு ஒன்றும் நடக்கவில்லை என்ற மகிழ்வில் கஜா அதைச் சுற்றி இரண்டு மூன்று முறை வலம் வந்தது.இடம் பார்த்து கிளையைத் தூர எறிந்தது. சின்னப்புவின் தலை தப்பியது. ஆனால் நாரி அடிபட்டு விட்டது. கால் கை அசைக்க முடியாது கிடந்தார். எழும்;ப முடியவில்லை. கண்விழித்து நன்றியோடு கஜாவைப் பார்த்தார். கஜாவும் கண்ணீர் விட்டது. அது கவலைக் கண்ணீh அல்ல தன் எசமான் உயிர் தப்பிவிட்டார் என்ற ஆனந்தக் கண்ணீரே அது.

புயலும் மழையும் ஓய அந்திப் பொழுது சிறிது சிறிதாகக் கவியத் தொடங்கியது. ஆதற்கு மேல் அங்கு நிற்பதில் பிரயோசனம் இல்லை என்று உணர்ந்த கஜா தன் முனைப்பில் இயங்கியது. மயக்கத்திற் கிடந்த தன் எசமானை குழந்தையைத் தூக்கும் தாய் போல் தன் துதிக்கையால் மிகவும் பக்குவமாகச் சுற்றித் தூக்கிக்கொண்டு புறப்பட்டது. அது பழக்கப்பட்ட யானை பாடியின் திசையை நோக்கி அதன் கால்கள் வேகமாக நடந்தன.

அதே நாளில் புயலிற் சிக்கிய சிம்சனின் காட்டுப் பாடியும் மிகவும் அலங்கோலமாகச் சின்னா பின்னப்பட்டு விட்டது. வேலையாள்களின் கொட்டகைகளுள் ஒன்றின் மீது ஒரு பாரிய மரம் பாறி விழுந்தது. அதனைச் சிதைத்திருந்தது. சிம்சன் துரையின் பரண் வீடும் ஒரு புறம் கவீழ்ந்து கிடந்தது. மழையும் புயலும் ஓய்ந்ததால் பாடியைச் சீராக்கித் துப்பரவு செய்யும் வேலையில் அங்கிருந்த வேலையாள்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டு தினங்களுக்கு முன் ஏதோ அலுவலாக நகருக்குச் சென்றிருந்த சிம்சன் துரையும் இன்னும் திரும்பவில்லை.

இந்த நிலையில் சின்னப்புவை கஜா தூக்கிக் கொண்டு அங்கு வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இருள் கவிந்து கொண்டிருந்த நேரம் வழமையாக இரா வேளைகளில் பாடியின் மையத்தில் மூட்டப்படும். தீச்சுடர் மூட்டப்பட்டு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீஒளியில் சின்னப்புவுக்கு என்னவோ எதுவோ என்று பதை பதைத்த சகவேலையாள்கள் கஜா தூக்கி வந்த சின்னப்புவின் உடலை சேதப்படாமல் இருந்த கொட்டகையின் ஒரு புறமாகக் கிடத்தினார்கள்.

அவருக்கு இன்னும் சரியான தெளிவு வரவில்லை. மரக்கட்டைபோல் சோர்ந்து கிடந்தார். சில வேளைகளில் மட்டும் கண்விழித்துப் பார்ப்பதும் மூடுவதுமாகக் கிடந்தார். இந்த நேரம் அங்கிருந்த மதியவரான இரத்தினப்பாட்டா தீச்சட்டியும் ஏதோ காட்டுச் செடியின் இலைக் கொத்துமாக அங்குவந்தார். தீச்சட்டியில் அந்த இலைக் கொத்தை வாட்டி வாட்டி சின்னப்புவின் உடல் முழுவதும் தடவித் தடவிச் சூடேற்றினார். அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தபோதிலும் அவர் கண்திறவாது மயங்கிக் கிடந்த கோலத்தைக் கண்டு எல்லோரும் கண்கலங்கி நின்றார்கள்.

சின்னப்பு அந்தப் பாடியின் மூத்த வோலையாள்களுள் ஒருவர். அதுமட்டுமல்ல அவரே அங்கிருந்த வேலையாள்கள் அனைவருக்கும் தலைவர். அவர் நல்லவர் வல்லவர். சிம்சன் துரையின் கண்டிப்புக்கும் நேர்மைக்கும் நிர்வாகத்துக்கும் ஈடுகொடுத்து சக தொழிலாளர்களின் சுகதுக்கங்களிற் கண்ணும் கருத்துமாக நின்று எல்லாவற்றையுஞ் சமாளித்து நிற்பவர். அங்கிருந்த மாவுத்தர்களும் ஏனைய மரமரியுந் தொழிலாளாகளும் அவரை ஒரு தந்தைக்குச் சமமாகநினைத்து அவர் தலைமையை ஏற்று இருந்தார்கள். அவரை சிம்சன்துரை முதல் அனைவரும் பெயர் கொண்டு அழைப்பதில்லை அவர் எல்லோருக்கும் அப்புச்சி.

அப்புச்சிக்கு நேர்ந்த இந்த விபத்தை யாரும் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு என்ன நடந்தது என்றே அறியாது ஒவ்வொருவரும் தத்தமது ஊகத்திற் பேசிக்கொண்டார்கள். அன்று ஏதோ அலுவலாகக் கிராமத்திற்குச் சென்ற ஹாஜாவும் இன்னும் திரும்பவில்லை. அன்று வீசிய புயலும் பொழிந்த மழையும் அந்தக் கிராமத்தை என்ன பாடு படுத்தினவே அதுவுந் தெரியாது சின்னப்புவின் நிலைமையை அவர் குடும்பத்துக்கு அறிவிக்கவோ அல்லது அவரை அங்கு அனுப்பவோ முடியாத சூழ்நிலை காட்டுப் பாதை வன விலங்குகள் நடமாடும் அகாலவேளை இவற்றை எல்லாம் யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கும் வரமுடியாமற் கலங்கி நின்றார்கள் அந்தப்பாசமுள்ள சகதொழிலாளர்கள்.

நடுநிசியாயிற்று. அப்பொழுது சின்னப்பு சின்னப்பு சிறிது கண்விழித்தார். இரத்தினப் பாட்டாவின் இலைக்கொத்து வருடல் வேலை செய்து கொண்டது. சின்னப்பு தமது கால் கைகளை அசைத்து எழும்ப முயன்றார் ஆனால் அவருடைய வலது காலும் வலது தோள்பக்கமும் அசைக்க முடியாது திணறினார். கைச்சை கையால் குடிக்க நீர்கோட்டார். இரத்தினப்பாட்டாவின் சொற்படி காய்ச்சி எடுத்த கசாயத்தைக் கொடுத்தார்கள். அதைக் குடித்துச் சிறிது நோரத்துக்குள் அப்புச்சி மிகவும் தொளிவாகப் பேசினார்.

ஆனால் படுக்கையை விட்டு அவரால் எழும்ப முடியவில்லை. படுத்த படுக்;கையிற்கிடந்து தனக்கேற்பட்ட விபத்தைப் பற்றிச் சிறிது சிறிதாக அங்கிருந்தவர்களுக்குக் கூறினார். என்னவோ எதுவோ என்று ஏங்கிய சகதொழிலாளர்களுக்கு அது ஆறதலாக இருந்தது.

மறுநாள் பொழுது புலர்ந்தது.

கிராமத்திற்குச் சென்றிருந்த ஹாஜா வந்துவிட்டான் வரும்வழி யிலேயே தந்தையின் விபத்தைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தான்.

தந்தையைக் கட்டிப்படித்து ஓ வென்று கதறினான். தந்தையும் அழுதார். ஆதேவேளை தன்துணைவன் கஜா தந்தைக்குச் செய்த பேருபகாரத்தையும் மகிம்ந்தான்.

சின்னப்புவைக் கிராமத்துக்கு எடுத்துச் சென்று சைத்தியம் பார்ப்பதிலும் வைத்தியரை இங்கு அழைத்து வருவது நல்லது. என்று இரத்தினப்பாட்டா ஆலொசனை கூறினார். அதன்படி ஹாஜா மீண்டும் கிராமத்துக்குப் போய்வரப் புறப்பட்டான்.

அன்று மதியத்துக்ககு மேல் சிம்சன்துரையும் பாடிக்குத்திரும்பி வந்தார். பாடியில் புயல்புரிந்த அட்டகாசத்தைக் கண்டு திகைத்தார். இருந்துங் கலங்கவில்லை. தான் இல்லாத போதிலும் நிலை மையைச் சமாளித்த வேலையாள்களைப் பாராட்டினார்.பாடியைத் துப்பரவுசெய்து சீராக்கியதை மெச்சினார். புயலால் பொருட்சேதம் ஏற்படடாலும் உயிர்ச் சேதம் ஒன்றும்மில்லை என்று திருப்திபட்டார். அவர்மனம் ஆறதலடைந்தது. ஆனாலும் சின்னப்பபுவுக்கு ஏற்பட்ட விபத்தைக் கண்டு கலங்கினார். ஏதற்கும் கலங்காதவர் சின்னப்பு வின் நிலையைக் கண்டு வேதனைபட்டார். அவரிடஞ்சென்று உடலைத் தடவித் தடவி ஆறதல் சொன் னார். இரண்டொரு நாளில் எல்லாஞ் சரியாகிவிடும் என்று நம்பினார். ஆதை அவருக்குஞ் சொல்லி நம்பிக்கை ஊட்டினார். வைத்தியரின் வரவை எதிர்பார்த்து இருந்தார்.

மாலையாயிற்று இருள்கவியக் சில் வண்டுகளின் நொய் ஒலி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஓட்டமும் நடையுமாக ஹாஜா நாட்டு வைத்தியர் ஒருவருடன் வந்தான். ஆதவனைக் கண்ட செந்தாமரை போல் பாடியில் இருந்த எல்லோருடைய முகங்களும் வைத்தியரின் வரவால் மலர்ந்தன. பாடியின் மனறில் மூட்டப்பட்டிருந்த தீச்சுடரின் ஒளி எங்கும் பரவிக்கொண்டிருந்தது.

வந்த வைத்தியர் சாமான்யர் அல்லர் அந்நப் பிரதேசத்தில் மிகவும் பிரபல்யமானவர் கைதேர்ந்தவர் நோயாளியைப் பார்காமலேயே நோயாளியின் குணங்குறிகளைக்கேட்டு வைத்தியஞ் செய்யும் மாவிண்ணர். அவர் கைப்பட்டால் எந்தநோயும் இருந்த இடம் இல்லாது பறந்தோடிவிடும்.

வைத்தியர் சின்னப்புவைப் பரிசோதித்தார். தட்டித்தடவிப் பார்த்தார். வைத்தியருக்குப் புரிந்துவிட்டது அவருக்கு என்னநோய் என்று சிம்சன்துரையிடம் சென்றவைத்தியர் சின்னப்புவுக்கு உள்ள நோயின் தன்மையைத் தனக்கு தெரிந்த மொழியில் கண்ணாலும் கைச்சைகையாலும் சொன்னார். இரத்தினப்பாட்டாவும் உடன் சென்றிருந்தார். அவரும்துரையின் மொழி தெரியாதிருந்தும் தன் மட்டில் தெரிந்ததை வைத்துக்கொண்டு சின்னப்புவுக்கு பாரிசவாதம் என்றும் இனி அவர் எழும்பி நடமாடமுடியாத நிலைக்கு ஆளாகி விட்டார் என்றும் சிம்சன் துரைக்குத் தொரியவைத்தார்.

சின்னப்புவின் பரிதாபநிலை சிம்சன்துரையின் உள்ளத்தைத் தொட்டது பாவம் தன்னோடு முப்பது வருடங்களுக்கு மேலாக தனதொழில் விருத்திக்குக் கைகொடுத்த ஒருதொழிலாளிக்கு இப்படி ஒருபரிதாப நிலையா? என்று கலங்கினார்.துரைதன் கவலையை வெளிக்காட்டாது சின்னப்புவை அவர் வீட்டுக்கு அனுப்புவதே நல்லது என்றமுடிவுக்கு வந்தார்.அவருடைய இடத்திற்கு ஒருவரும் இல்லை.இருந்தாலும் இழப்புகள் சகஜம் வருவதை ஏற்போம் என்று உணர்ந்தார் அத்துரைமகனார். அவர்தீர்மானித்தபடி மறுநாட் காலையில் வைத்தியருடன் சின்னப்புவைக் கட்டை வண்டியில் ஏற்றிகக் கிராமத்துக்கு அனுப்பினார். அவர் மகன் ஹாஜாவிடம் பணமும் பொருழும் கொடுத்து தந்தையைக் கவனமாகப் பராமரிக்குமாறுங் கூறிவழி அனுப்பிவைத்தார் சிம்சன்துரை.

---------------------------------------------------

3 திசைமாறியது


சன்னப்புவைக் கிராமத்துக்கு எடுத்டுச் செல்வதற்கு முன்பு கட்டையில் கட்டப்பட்ட கஜா இன்னும் அக்கட்டையிலேயே இருந்து உணவு உண்ணவில்லை கொத்த இலைகுழை எல்லாம் அப்படி அப்படியே கிடந்தன பக்கத்தில் இருந்து தொட்டியில் தண்ணிரை மட்டும் எப்போழுதாவது ஒருமுறை அல்லது இருமுறை அது உறிஞ்சிக் குடித்துக்கொள்ளும். ஆனால் நிலை குலைந்தது அவதிப்பட்டது ஓலமிட்டுப் பிளிறியது யாரும் தன்னருகில் வரவிடாது துதிக்பையை ஆட்டி ஆட்டி அட்டகாசம் செய்தது அதன் எசமானின் பிரிவு அதை அந்த நிலைக்கு உள்ளாக்கி இருந்தது.

ஆரம்பத்தில் கஜாவின் உண்ணா நோன்பையும் அட்டகா சத்தையும் சிம்சன்துரை அவ்வளவாகப் பொருட் படுத்தவில்லை எசமானின் பிரிவுதான் அதனை அப்படிச் செய்விக்கிறது என்று தனக்குள்ளேயே ஆறதல் அடைந்தார் அவர் இருந்தும் நாள்கள் செல்லச் செல்ல கஜாவின் அட்டகாசம் பன்மடங்காகி காட்டையே அதிரவைத்தது.

சின்னப்புவுடன் கிராமத்துக்குச் சென்ற ஹாஜா மூன்றாம் நாள் பாடிக்குவந்தான் அவன்வருகையை ஆவலோடுவரவேற்ற முதல் பிறவி கஜாதான். தூரத்தில் அவனைக்கண்டதும் தன்செவிகளை ஆட்டி அசைத்து தன்னருகில் வருமாறு அவனை கஜாஅழைத்தது-பிளிறியது-கண்ணீர்விட்டது.

ஹாஜாவும் தாயைக் கண்ட கன்றுபோல் அதனருகில் ஓடினான் அதன் பரிதாபநிலையைக் கண்டு விம்மி வம்மி அழுதான். பெருமூச்சு விட்டான். கஜா...உன்னை...இனிநான் பிரியமாட்டேன் அப்புச்சிக்கு வருத்தம் அவர் இனிஎழும்பமாட்டார் என்று வைத்தியர் சொல்லிவிட்டார். இனிநான் உன்னோடுதான்! கவலைப்படாதே! என்று தனது கண்களைத்துடைத்துக் கொண்டு சொன்னான் ஹாஜா.


அவன் கூறிய வார்தைகளை கஜா புரிந்துகொண்டதோ என்னவோ! ஆனால் தன் செவிகளை ஆட்டி ஆட்டி துதிக்கையால் அவனை வருடியது. அவன் எடுத்துக் கொடுத்த இலை குழைகளை தன்துதிக்கையால் ஏந்தி எடுத்து உண்டது.

இந்தக் காட்சியை அங்குவந்த மாவுத்தர் கண்ணுச்சாமி மகிழ்ச்சி பொங்கக் கண்டார். ஹாஜாவைக்கட்டி முத்தமிட்டு (ஹாஜா..உன் நண்பன் பட்டபாடு உனக்குத் தெரியுமா? ஆப்புச்சியும் உண்னையும் காணாது இது எங்களை என்ன பாடுபடுத்திவிட்டது தெரியுமா?)... என்றார்.

ஓம் கண்ணுமாமா.... எனக்குத்தெரியும்! என் கஜா என்னையும் அப்புச்சியையும் விட்டுப் பிரியமாட்டான். நான் தான் மடையன்! அப்புச்சியின்ரை வருத்தத்தால்.. இவனை மறந்து விட்டேன்... அப்புச்சி இனி வரமாட்டார்...அவர் எழும்பமாட்டார். என்று வைத்தியர் சொல்லிவிட்டார். என்ரைகஜா தனிச்சுப் போனான். இனிநான் எப்பொழுதும் இவனுடனேதான் இருக்கப்போகிறேன் என்றான் ஹாஜா நீ வந்ததுநல்லது ஹாஜா இப்பகஜா அடங்கிநிற்கிறான் உணவும் உண்கிறான் இனிநீ எங்கேயும் போகாதே போவதென்றால் கஜாவையும் கூட்டிக் கொண்டு போ என்றார் கண்ணுச்சாமி.

அவர் மேலும் தொடர்ந்து-நீ வந்தது துரைக்குத் தெரியாது இப்பொழுதே போய்...நீ வந்த செய்தியைச் சொல்லிவிட்டு வருகிறேன்.. என்று அவசர அவசரமாகப் போனார். அவர் சென்றபின் இன்னும் ஏராளமாக இலைதழைளை எடுத்துப் போட்டு கஜாவின் பசியை ஆற்றமுனைந்தான்.ஹாஜா.

அந்நேரம் அவனுடைய சிந்தனையில் வேறு ஒருயோசனையும் தீடீர் என்று தோன்றியது. பல நாள்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்த கஜாவை அவிமழ்ந்து காட்டாற்று வெள்ளத்தில் குளிப்பாட்டினால் நல்லது என்று யோசித்தான் அவன் அதற்காக யானையின் பின்னங்காலிற் கட்டியிருந்த சங்கிலியைக் கழற்றிவிட முன் சென்றான்.

அப்பொழுது

ளுவழி! லுழர டவைவடந டீழல! ளுவழி! ளுவழி! (நிறுத்து! நீசின்னப் பொடியன்! நிறுத்து! நிறுத்து!) என்று சிம்மகர்ச்சனை போல் சிம்சன்துரை கத்திக்கொண்டு அங்குஓடி வந்தார். அவரைத் தொடர்ந்து கண்ணுச்சாமி இரத்தினப்பாட்டா இரண்டொரு வேலையாள்களும் அங்கு வந்தார்கள். ஹாஜா அப்படியே யானையின் பின்னங்கா லடியில் நிலைக்குத்தாக நின்றான்.

கஜா கொழுத்துப் போச்சுது நாலைஞ்சு நாள் கட்டையில் கிடந்தால் தான் அதுக்குப்புத்தி வரும் அதை அவிழ்க்காமல் விடு! என்று படபட என்று உரத்தகுரலில் கத்திவிட்டு திரும்பிவிட்டார் சிம்சன்துரை.

செய்வது என்னவென்று அறியாமல் ஹாஜா கலங்கினான். அப்புச்சியையும் தன்னையும் பிரிந்த ஆற்றாமையால்தான் கஜா தொந்தரவு செய்தது. தன்னைக் கண்டதும் அது அமைதி ஆகிவிட்டதே! இனி என்ன? ஏன் இப்படிதுரை பிடிவாதமாக நிற்கிறார்? அவருக்கு இந்த நிலைமை தெரியாதா? ஏன்றெல்லாம் தனக்குத்தானே கேள்விமேல் கேள்வி கேட்டு விடை காணமுடியாது அங்கேயே நின்றான் ஹாஜா.

அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. சிம்சனின் கட்டளையை மீறியாரும் எதுவும் செய்யமுடியாது! அவருடன் அவருடன் வந்தவர்களும் அவரவர் கரமங்களுக்குப் போய்வி ட்டார்கள். ஹாஜா மட்டும் அங்கே கிடந்த இருபெரிய மரக்கட்டை மீதமர்ந்து கஜாவையே பார்த்துக்கொண்டு நெடுநேரம் இருந்தான். பொழுது சாயும்நேரம் சிம்சன்துரையின் வேலையாள் ஒருவன் அங்கு வந்து ஹாஜாவை துரை அழைப்பதாகக் கூறினான். அப்பொழுதும் அவன் அசையவில்லை. நட்டகல்போல் இருந்தான். பெரியவர் இரத்தினப்பாட்டாவும் வந்தார்.

ஹாஜா மகனே ஏன்இப்படி அடம்பிடிக்கிறாய்? துரைக்குக் கோபம் வராமல் நடந்துகொள். என்னசெய்கிறது? துரைசொன்னமா திரி கஜாவைக் கட்டையில் கட்டிப்போட்டால் அது அடங்கி வேலை செய்யும் இப்படித்தான் அவர் நினைக்கிறார் அவருடைய கருத்து அவருக்குச் சரிதானே? அப்புச்சி இல்லாவிட்டால் என்ன? அவருக்கு வேறு ஒருவர் இல்லையா? அவரைக் கொண்டு கஜாவை வேலை செய்விப்பார். என்று இரத்தினப்பாட்டா கூறிமுடிப்பதற்குள் பாட்டா அது எப்படி முடியும்? நான் இல்லையா? அப்புச்சி சுகமில்லாமல் இருக்கின்றார் அவர் இனிவேலைக்கு வரமாட்டார். நான்தான் கஜாவைப் பார்ப்பேன்! அதக்கு இலை குழைகொடப்பேன் குளிப்பாட்டுவேன் என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சென்னான் ஹாஜா. எல்லாம் நீசெய்வாய்! ஆனால் துரை விரும்பவில்லையே! ஏன் பாட்டா? என்று வியப்போடு கேட்டான் ஹாஜா. நீ சின்னப் பொடியன் உன்னால் இந்தக் கொம்பனைக் கொண்டு எதுவும் செய்யமுடியாது என்று துரை தீர்மானித்து விட்டார். அப்படியா? நான் சின்னப் பொடியன் சின்னப் பொடியன்! என்று வாய்விட்டுக் கூறி ஓ வென்று கத்தினான் ஹாஜா. அதற்கு மேல் ஹாஜாவால் ஒன்றும் பேசமுடியவில்லை. அங்கு நிற்கவும் முடியவில்லை நான் சின்னப் பொடியன் நான் சின்னப் பொடியன் என்று ஒலமிட்டுக்கொ ண்டு காட்டுப்பக்கமாக ஓடினான். இரத்தினப்பாட்டா எவ்வளவோ தடுத்தும் அவன் நிற்கவில்லை. காட்டிருளோடு கலந்து மறைந்துவிட்டான்!

கஜா கட்டையில் நின்று பிளிறியது. துதிக்கையையும் கால்களையும் ஆட்டிஆட்டி அட்டகாசம் போடத்தொடங்கியது. அதன் அலறல் அந்தப் பிரதேசம் முழுவதும் அவலமாக ஒலித்தது. மறுநாள் பொழுது புலர்ந்தது. சிம்சன்துரை கிராமத்திற்குச் சென்று மாவுத்தர் சின்னப்புவைச் சந்தித்தார். சுகம்விசாரித்தார். அவருக்கு இனி சின்னப்புவால் வேலை செய்யமுடியாது என்று விளங்கி விட்டது. சின்னப்பு இனி நீ வேலை செய்யமுடியாது போலிருக்கு அந்தக் கொம்பனை வழிநடத்த நான் வேறு ஓர் ஆளைப் பார்க்கப் போகிறேன் என்றார். ஏன்துரை இன்னுங் கொஞ்ச நாளைக்குப் பார்ப்பம். நான் சுகமாகி விடுவோன் என்று சின்னப்பு சொல்லி முடிப்பதற்குள் -

சின்னப்பு எனக்குத் தெரியும் இது மாறக்கூடிய வருத்தம் இல்லை உனக்கும் வயதாகிவிட்டது. இது பாரிசவாதம் உன்னை மடக்கிப் போட்டுது இங்கேபார் உன்னுடைய ஒருகையும் குரண்டிப் போச்சுது அதுதான் இனி கஜாவைப் பார்க்க வேறு ஆள் வேணும் அதுக்கும் இப்ப கொஞசம் கொழுப்பு அதிகமாகப் போச்சுது கட்டில கட்டிப் போட்டோன். அதை அடக்கி வேலை செய்விக்க வேணும் என்றார் சிம்சன்துரை.

அதற்குமேல் சின்னப்புவால் பேசமுடியவில்லை. அவருக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு துரை உங்களுக்கு மறுப்பில்லை என்றால் என்ரை மகன் ஹாஜாவை வைத்து வேலை செய்யுங்கோ என்று சின்னப்பு மிகவும் நிதானமாகச் சொல்லி முடிப்பதற்குள் -

ஆ! என்ன சின்னப்பு! உனக்கென்ன பைத்தியமா? அந்தப் பெரிய அலியனை உன்ரை சின்னப் பொடியன் பார்ப்பதா? அது முடியுமா? என்று எக்காளத்தோடு கோட்டார் சிம்சன்துரை.

அதுவரை அங்கு எவர் கண்ணிலும் படாமல் ஒளிந்து நின்று அவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஹாஜாவின் செவிகளிலும் சிம்சன்துரையின் இறுதிவார்த்தைகள் கேடடன ஹாஜாவுக்கு சிம்சனின் வார்த்தைகள் முன்னரிலும் நாராசம் போல் உள்ளத்தைத் தைத்தன.

முதல் நாள் இரவு காட்டுக்குள் மறைந்த ஹாஜா மறுநாள் கிராமத்ததுக்;குத் திரும்பினான். தந்தையிடம் கஜாவின் நிலைமைகளைக் கூறி ஆறதல் பெற நினைத்தான். அதற்காக அங்கு வந்த இடத்தில் எதிர்பாராவிதமாக சிம்சனைக் கண்டதும் அவர் கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று ஒளிந்து கொண்டான். அவனுக்குத் துரையின் போக்குப் பிடிக்கவில்லை. அவரை நேருக்கு நேர் சந்திக்கவும் அவன் விரும்பவில்லை.அதற்காக தந்தையும் சிம்சனும் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த பொழுதுதான் சிம்சனின் அந்த இறுதி வார்த்தை அவனை மேலும் குழப்பிக் கொண்டன.

அதற்கு மேலும் அவனால் அங்குநிற்க முடியவில்லை. ஆத்திரத்தோடு திரும்பினான். பாடிக்குச் சென்று தன் கஜாவுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் சிம்சனின் கண்ணில் எதிர்படாமல் அவன் அங்கு எப்படி இருக்கமுடியும்? இதனைத் தனக்குள்ளேயே அவன் கேட்டுக்கொண்டான். மனம் குமுறினான். விம்மி விம்மி நெடுமூச்செறிந்தான்.

அதன் பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு வெளியேறினான். காடு மேடெல்லாம் அவன் கால்கள் நடந்தன. ஓரிடத்திலேனும் நிலை கொள்ளாது பைத்தியம் பிடித்தவன் போல் அலைந்தான்.

இருந்தபோதிலும் யார் கண்ணிலும் படாமல் பாடிக்கு வந்து கஜாவை தூரத்தில் நின்றுபார்த்து கண்ணீர் விடுவான். பின் வந்தசுவடே தெரியாமல் காட்டக்குள் மறைந்து விடுவான். சிம்சன் எடுக்கும் எந்த முடிவுக்கும் பின்னால் யாரும் மூச்சு விடமுடியாதே!

--------------------------

4. கஜா எங்கே?

சிம்சன்துரை கிராமத்துக்குச் சென்று பாடிக்குத் திரும்பிய மறு தினமே, அங்கிருந்த ஏனைய இரு மாவுத்தர்களையும் அழைத்தார். அவர்களுள் இளையவரான கண்ணுச்சாமியைப் பார்த்து "கண்ணுச்சாமி.. நீ.. அந்தக் கொம்பன் கஜாவைப் பாரமெடுத்து... வேலை செய்ய வேண்டும்...." என்று கடளை இட்டார், சிம்சன்.

'அப்படியே செய்கிறேன்... துரை.... ஆனா... அது இப்ப கொஞ்சம் முரண்டு பண்ணிது, துரை..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னார், கண்ணுச்சாமி.

"அதுக்கென்ன, இன்னுங் கொஞ்ச நாளைக்கு அதைக் கட்டில போட்டு பட்டினி போடு; .... எல்லாம் சரியாகி விடும்" என்றார், துரை.

"அப்படி என்றா ... கண்ணுச்சாமி பார்க்கிற மற்ற யானைக்கு ஓர் ஆள் வேணுமே, துரை?..." என்று இரத்தினப் பாட்டா மெதுவாகச் சொன்னார்.

"ஓம்! அதுக்கு வேறு ஓராள் வேணுந்தான்! ... அதுக்கும் ஓராளை ஒழுங்கு செய்யப் போறன்... கிராமத்தில் இருந்து ஒரு மாவுத்தன் வருவான்... அதுவரைக்கும் இந்த யானையுடன் அதையும் பார்க்கட்டும் கண்ணுச்சாமி!"

அதற்குமேல், அங்கு ஒருவரும் பேசவில்லை. அவரவர் பக்கம் போய்விட்டார்கள்.

என்ன செய்தும் கஜா அடங்கவில்லை; கண்ணுச்சாமி ஒரு முறைக்குப் பல முறை அதன் அருகிற் சென்றும் அதை நெருங்க முடியவில்லை. வரவர அதன் மூர்க்கமும் அட்டகாசமும் வலுத்துக் கொண்டிருந்தன. அதைக் காணக் காண சிம்சன் துரைக்குக் கோபமும் ஆத்திரமும் பெருகிக் கொண்டிருந்தன.

கிராமத்தில் இருந்து கைதேர்ந்த மாவுத்தன் ஒருவன் வந்தான். குத்திக் குத்திக் கஜாவை அடக்கிப் பார்த்தான்; ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுந் தன்னால் 'ஒன்றுஞ் செய்ய முடியாது' என்று சொல்லி விட்டு, கிராமத்துக்குப் போய் விட்டான்.

நாள்கள் வாரங்களாயின. வாரங்களும் மூன்று கழிந்து விட்டன. கஜா வரவரத் துரும்பாகிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் அட்டகாசமும் பிளிறலும் அடங்கவில்லை. முன்னரிலும் பன்மடங்காக அது ஆர்ப்பரித்ததே ஒளிய அடங்கவில்லை.

சங்கிலியை இழுத்து இழுத்து, தன் பலங் கொண்ட மட்டும் அதை அறுக்க முயன்று கொண்டிருந்தது. இதன் அவல நிலையை யார் கண்ணிலும் படாமல் ஹாஜா அடிக்கடி வந்து பார்த்துப் போவான். இடையிடையே அவன் கொடுக்கும் இலை குழைகளை மட்டும் வாங்கி உண்ட, கஜா இப்பொழுது அதையும் செய்வதில்லை.

நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.

அன்று இரவு. நட்ட நிசியின் போது, சங்கிலி அறுந்தது. கஜாவுக்கு விடுதலை கிடைத்தது. உரத்த குரலில் பிளிறி விட்டு, அது ஓடியது.

நேராகக் கிராமத்துக்கு அது போனது. சின்னப்புவின் குடிசைப் படலை வரை வந்த கஜா, அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே நின்று பிளிறியது. அந்த நேரம், அகால நேரம். கிராமமே உறங்கிக் கொண்டிருந்தது.

படுக்கையிற் கிடந்தும் உறக்கமின்றிக் கிடந்த சின்னப்பு, கண் விழித்தார். அந்த ஒலி, தன்னுடைய கஜாவின் ஒலிதான் என்று தெரிந்து கொண்டார். அவரால் எழும்பிச் சென்று அதைப் பார்க்க முடியவில்லை.

வீட்டில் எல்லோரும் எழுந்து ஆரவாரப் பட்டார்கள். அந்தக் கிராமமே விழித்துக் கொண்டது.

சின்னப்புவுக்கு விஷயம் விளங்கி விட்டது. கட்டையில் கட்டப்பட்டிருந்த கஜா சங்கிலியை அறுத்துக் கொண்டு இங்கு வந்து விட்டது. அதற்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. தன்னையும் ஹாஜாவையும் தேடிக் கொண்டு அது வந்து விட்டது. அதைப் பிடித்து வைப்பது தான் நல்லது என்று எண்ணி,

"கஜா!.... கஜா!" என்று கூவி அழைத்தார் சின்னப்பு. ஆனால் கஜா அருகில் வரவில்லை. படலையடியிலேயே நின்றது. பின்பு, என்ன நினைத்ததோ, தெரியாது, வந்த வழியே திரும்பிவிட்டது. போகும் போது, வெறி பிடித்த மதயானை போல், மரஞ்செடிகளை எல்லாம் பிய்த்து எறிந்தது; மிதித்தது; வீசி அடித்தது. அதைக் கண்டவர்கள், "யானைக்கு வெறி பிடித்து விட்டது!... ஓடுங்கள் ஓடுங்கள்!..." என்று அலறிக் கொண்டு ஒதுங்கி ஓடினார்கள்.

கஜாவும், இருளோடு இருளாக காட்டுப் பக்கம் ஓடி மறைந்தது.

விடிந்த பின்புதான், கஜா சங்கிலியை அறுத்துக் கொண்டு போன செய்தி சிம்சனுக்கும் மற்றவர்களுக்கும் தெரிய வந்தது. சிம்சதுரைக்கு இருந்த கோபம் மேலும் உச்சியை அடைந்தது. காட்டுடை தரித்தார். அவர் வழமையாகப் பாவிக்கும் துப்பாக்கியை எடுக்காது, காட்டு யானைகளைச் சுடும் 'ரைவில்' துப்பாக்கியை எடுத்தார். காட்றிஜஸ் (தோட்டா) அடங்கிய 'பெல்ட்' பட்டியை எடுத்து இடுப்பில் இறுகக் கட்டிக் கொண்டு, காட்டுப் பக்கம் புறப்பட்டார்.

அவருக்குத் தெரியும் நாட்டில் வளர்ந்த பழக்கப்பட்டயானை காட்டில் தனித்தே உலாவும் அது காட்டுயானைகளுடன் சேராது. அதனை எப்படியும் தோடிக்கண்டுபிடித்துவிடலாம். காயப்படு த்தியாவது பாடிக்குக் கொண்டு வரலாம். என்ற நம்பிக்கையோடு சிம்சன் காடெல்லாம் கஜாவைத் தேடி அலைந்தார்.

பகல்போய், மதியந் திரும்பியது. கஜாவைத் தோடித்திரிந்த சிம்சனால் அதைச் சந்திக்க முடியவில்லை. அங்குமிங்கும் அலைந்தார். பொழுதுசரிய அவர் மனமும் தளர்ந்தது. பாடியை நோக்கி ஏமாற்றத்தோடு திரும்பினார் சிம்சன்.

இதனிடையில் -

அன்று இரவானதும் வழமைபோல் தன் கஜாவைக்காண பாடிக்குவந்த ஹாஜாவுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. கட்டையில் கட்டப்பட்டிருந்தகஜாவைக் காணவில்லை.முதல்நாள் நடுநிசியில் நடந்த சம்பவம் ஒன்றும் அவனுக்குத்தெரியாது அவன்தான் எங்கு ஏதென்று இல்லாமல் அலைபவன் ஆயிற்றே!

கஜாவைக் கட்டியிருந்த சங்கிலி அறுபட்டிருந்த கோலத்தைக் கண்டு விடயத்தை ஊகித்துக் கொண்டான் ஹாஜா.

கஜா பாடியைவிட்டுப் போய்விட்டது ஆனால் அது எங்கும் போய்விடாது தன்னைத் தேடிக்கொண்டு வீட்டுக்குத்தான் போய் இருக்கும். நான்தான் அங்கும் இருப்பதில்லையே! அதற்கு இது எப்படித் தெரியும்? நான்தான் வீடுவாசல் இல்லாமல் அலைபவன் ஆயிற்றே? எதற்கும் அங்கு போய் பார்ப்போம் என்று நினைத்தவுடன் அவன் கால்கள் கிராமத்தை நோக்கி விரைந்தன. வீட்டுக்குவந்த பொழுது அறிந்த செய்திகள் அவனை மேலும் கலக்கின.

என் கஜா! என் கஜா! என் கஜா எங்கே? என்று கத்திக் கொண்டு வெறி பிடித்தவன் போல் மீண்டும் காட்டுக்கு ஓடினான் ஹாஜா!

----------------------------------

5. அவன் பெரியவன்


கிராமத்தில் இருந்து புறப்பட்ட கஜா, கண்கடை தெரியாமல் காட்டுக்கே ஓடியது. காடுமேடெல்லாம் நடந்தது. முன்பின் தெரியாத அந்தக் காட்டின் எல்லைக்கே அதன் கால்கள் சென்றன. மறுநாளும், அதற்கு மறுநாளும் சிம்சன் துரை கஜாவை காட்டில் தேடினார். அதை எப்படியாவது கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு காட்டின் மேடு பள்ளங்கள் எல்லாம் பகலோடு இரவும் இரவோடு பகலுமாகத் தேடினார்.

அதே வேளையில்

ஹாஜாவும் கஜாவைத் தேடினான். அதற்கு விருப்பமான காட்டு மாங்காய் ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு 'கஜா!... கஜா!...' என்று கத்திக் கொண்டும் அவனும் காடு மேடெல்லாம் கஞாவைத் தேடி அலைந்தான்.

கஜா யார் கண்ணிலும் படாமல், கால்கள் போன திசையில், காட்டின் மறு கோடிக்குப் போய் விட்டது. அந்த எல்லைக் காட்டில் நெருக்கமான மரங்கள் குறைவு. ஆனால், ஆள் அளவு உயரமான நாணல்கள் நிறைந்து காணப்பட்டன. ஆங்காங்கே பொட்டல் வெளிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குட்டை மரங்கள் இருந்தன. காட்டெருமைகளுடன் மான் கூட்டங்கள் அங்குமிங்கும் உலாவின. இப்புல்வாய் இனங்களைப் பதுங்கி இருந்து கொன்றுண்ணும் சிறுத்தைகளும் அங்கு உலாவுவதுண்டு.

முன்பின் வந்து போகாத இந்தக் காட்டுக்கு வந்த கஜா அன்று, எதிர்பாராத சங்கடத்தைச் சந்தித்தது.

நெடிதுயர்ந்த நாணல் பற்றைக் காட்டுக்கு மேற்குப் புறமாக இருந்த பொட்டல் வெளியில் ஒரு மான் கூட்டம் வெருண்டு ஓடி வந்தது. அப்புள்ளி மான் கூட்டத்தில் கலையும்; பிணையும் கன்றுகளுமாக முப்பது நாற்பது மான்கள் கஜா நின்ற பக்கமாக ஓடி வந்தன. மான் கூடத்தின் வெருட்சி கஜாவை நிலை குத்தி நிற்க வைத்தது. தூரத்தில் சிறுத்தை ஒன்று பாய்ந்து பாய்ந்து வந்ததோடு உறுமிக் கொண்டும் வந்தது.

கஜாவுக்கு நிலைமை விளங்கி விட்டது. சிறுத்தை மான்களைப் பிடிக்க ஓடி வருகிறது. மான்கள் தப்பி ஓடி வருகின்றன. சிறுத்தைக்குக் காட்டு யானை பயப்படுவதில்லை. இருந்தாலும், நாட்டில் வாழ்ந்த கஜாவுக்கு என்னவோ போல் இருந்தது. தான் வந்த திசையிலேயே திரும்பி உரத்த குரலில் அந்தக் காடே அதிரும்படி பல தடவைகள் பிளிறிவிட்டு திரும்பி ஓடியது... 'மான்கள் பின்னே; கஜா முன்னே' என்று அந்த காட்டைக் கிழித்துக் கொண்டு அவை ஓடின.

மதியவேளை திரும்பிக் கொண்டிருந்த பொழுது, கால்கள் போன திசையில் நடந்து வந்த ஹாஜா, அந்த நாணற் காட்டின் எல்லையில் இருந்த காட்டுக் குட்டை ஒன்றுக்கு வந்தான். காட்டுக் குட்டையில் இருந்த தெளிந்த நீரை அள்ளி முகத்தைக் கழுவி, அந் நீரையே அள்ளிப் பருகிக் கொண்டு நிமிர்ந்த போது, தூரத்தில், காட்டின் இடையே ஓர் அசைவைக் கண்டான், ஹாஜா.

காட்டின் அசைவூடே கஜா ஓடி வருவதைக் கண்ட ஹாஜா மகிழ்சியால் துள்ளிக் குதித்தான்!

"கஜா! கஜா!" என்று கூச்சலிட்டுக் கூவினான்.

ஓடி வந்த கஜா நின்றது. திரும்பி ஒருமுறை பார்த்தது. தனக்குப் பின்னால் வந்த மான் கூட்டம் அங்கு வரவில்லை. நின்ற இடத்திலேயே நின்று, குரல் வந்த திசையை அது உற்று நோக்கியது. அதற்கு மேல் ஓர் அடியும் எடுத்து வைக்காது, நட்ட நெடுமரம்போல் நின்றது கஜா.

ஹாஜா, கையில் ஏந்திய மாங்காயுடன் முன்னேறி ஓடி வந்தான். வேகமாக ஓடி வந்த 'கஜா என் நிற்க வேண்டும்? தன்னை இன்னும் அடையாளங் காணவில்லையா? அல்லது தன்னை அது மறந்து விட்டதா? அல்லது தான் காண்பது வேறு காட்டு யானையா?' என்று ஓடி வரும்போதே அங்கலாய்த்தான், ஹாஜா.

'அது கஜா அல்ல என்றால் ஒரு காட்டு அலியன்! தனித்து நிற்கிறது. தன்னை அடித்து விழுத்த அல்லது தாக்கி எறியத் தருணம் பார்க்கிறது' என்று நினைத்தான், அவன்.

அதற்கு மேல் அவனால் ஓரடிதானும் எடுத்து வைத்து ஓட முடியாது தயங்கி நின்றான்.

ஹாஜாவுக்கும் கஜாவுக்கும் சுமார் இருபது மீற்றர் இடை வெளித் தூரம்தான் இருந்தது.

இதனிடையில், தனது துதிக்கையை நீட்டிக் கொண்டு பின்னங் கால்களை மடித்து கஜா நிலத்தில் குத்தியது. அவ்வளவுதான்!

தனது ஆசைக் கஜாவிடம் ஓடினா, ஹாஜா. அவன் நீட்டிய மாங்காயை துதிக்கையால் ஏந்திய கஜா மிகவும் பாசத்தோடு தன் வாயுள் வைத்துக் கொண்டது. அதன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது.

பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டுமா?

இந்த அருங் காட்சியைக் காண அக் காட்டின் நடுவெ, மேலும் மூன்று, மானிடச் சோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன!

அச் சோடிக் கண்களுக்கு உரிய மூவரும் முன்வந்தார்கள். அப்பொழுது, கஜாவின் தலையைத் தடவிக் கொஞ்சிக் கொண்டிருந்தான், ஹாஜா.

"ஹாஜா!...... ஹாஜா!...... நான்தான் பிழை செய்து விட்டேன்!... நீ சின்னப் பொடியன் இல்லை! சின்னப் பொடியன் இல்லை! You are a Great Man! No... No... You are the Greatest Man!...." (நீ மாமனிதன்! இல்லை இல்லை! மாமனிதனிலும் மாமனிதன் நீ!....)

என்று கூவிக்கொண்டு ஓடி வந்தார் சிம்சன் மக்வூட் துரை. அவரைப் பின்தொடர்ந்து, கண்ணுச்சாமி மாமாவும், இரத்தினப் பாட்டாவும் ஓடி வந்தார்கள்.

எதிர்பாராத இச்சந்திப்பைச் சந்தித்த ஹாஜாவும் கஜாவும் சிறிது நேரம் திகைத்தார்கள்.

அந்த இடையில்,

'ஹாஜா!... துரை... உன்னை, மாமனிதன் ஆக்கி விட்டார்! அவர் மட்டுமல்ல... நாங்களும்தான் உன்னை மாமனிதன் என்று கண்டு விட்டோம்! .... அப்புச்சியின் இடத்துக்கு இனி நீதான்!...' என்று முகம் மலர, கண்ணீர் மல்கக் கூறிவிட்டு, சிம்சன் துரையின் முகத்தைப் பார்த்தார் இரத்தினப் பாட்டா.

துரைமகனாரின் முகம் அன்றலர்ந்த தாமரை போல் மலர, அவர் தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்தார்.

+++++++++

வரதர் கதை மலர் - 2

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்
"சம்பந்தன்"
சிறார்களுக்காக எழுதிய

இராமன் கதை
(இராமாயணம்)

விலை ரூபா 12/=

ஓகஸ்ட் 93 இல்
வெளிவருகிறது!

***