கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  மடுமாதா திருப்பதியின்
சரித்திரச் சுருக்கம்
 
 

E. A. பெர்னாந்து

 

மடுமாதா திருப்பதியின்
சரித்திரச் சுருக்கம்

ஆக்கியோன்
E. A. பெர்னாந்து அவர்கள்
(சலாபப்பகுதிக் கோட்டுச் சக்கிடுத்தார்)
ஆங்கிலத்தில் எழுதியதின் மொழிபெயர்ப்பு

யாழ்ப்பாண மேற்றிராணியாரான
மாவந். ஜே. ஏ. கியோமார், ஓ. எம். ஐ.
ஆண்டவரவர்களின் அபிஷேக வெண்பொன்
யூபிலியின் ஞாபகமாக

சலாபத்தைச் சேர்ந்த பிட்டிபண்ணைவீதிக்
கிறீஸ்தவர்களால் பிரசுரிக்கப்பட்டது.

----------------------------------------------------------

Imprimatur:
J. A. GUYOMAR, O. M. I,
Espiscopus Jaffnesis
6-4-49.

-----------------------------------------------------------

(புகைப்படம்)
மகா. வந்தனைக்குரிய
ஜே. ஏ. கியோமார் ஆண்டவர்
யாழ்ப்பாண மேற்றாணியார்

-------------------------------------------------------------

மருதமடுத் திருப்பதியின்
சரித்திரச் சுருக்கம்

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அரசன் செங்கோல் செலுத்திவந்த காலத்திலேயே (கி. பி. 1519-1561) மன்னார்வாசிகள் கததோலிக்கு சமயத்தின் மட்டில் சார்புகாண்பித்தார்கள். போர்த்துக்கேயர் இலங்கையில் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கிய காலத்தில் மன்னார் ஓர் விhபாரத் துறைமுகமாகத் தலையெடுக்கத் தொடங்கியது. முத்துக்குளிக்குந் தலமான படியாலும் அது உண்மையாகவே வியாபாரப் பிரயாணத் துறைமுகமென்று தனிப் பெருமை பெற்றிருந்தது.

தென் இந்தியாவில் மலபார் கரையிலுள்ள சனங்களை அர்ச். பிரான்சீஸ்கு சவேரியார் சத்தியவேதத்திற்கு மனந்திருப்பியசெய்தி மன்னார் வாசிகளிடையே பரம்பியது. இவர்களின் வாஞ்சையான வேண்டுதற்கிசைந்து, சத்தியமறையைப் போதிப்பதற்காக வண. பிரான்சீஸ்கு சேவியர்சுவாமியார் மன்னாருக்கு அனுபப்பட்டார். மன்னார்ப்பிரதேசம் வேதவாக்கியத்தை விதைப்பதற்கு ஏற்ற செழிப்பான பூமியாக அவர் கண்டார். பிரான்சீஸ்கு சேவியர் சுவாமியாரால் வெகு சீக்கிரத்தில் மன்னார் முழுவதும் சத்தியவேதத்தைத் தழுவிக்கொண்டது. புதிதாய்வந்த வேதம் மன்னாரிலே மாத்திரமல்ல அதன் சுற்றுக்கிராமங்களிலும் பரம்ப மருதமடு மாதாவின் புராதன தலமாகிய மாந்தையும் புராதன கத்தோலிக்க கிராமமாய் மாறியது. போர்த்துக்கேயருடைய உதவியுடன் மாந்தைக்கிறீஸ்தவர்கள் செபமாலைமாதாவின் பேரால் ஒரு பெரிய கோவிலைக் கட்டினார்கள். மன்னாருக்கு அண்மையிலிருந்த பட்டிண் என்ற கிராமத்திலுள்ள அறுநூறு எழுநூறு தொகையான ஆண் பெண் பாலர்களைச் சத்தியவேதத்தைத் தழுவியதற்காக சங்கிலிஇராசா வதைத்துக்கொன்றது. மாத்திரமல்ல, வேதத்தைப் போதித்த வண. பிரான்சீஸ்கு சேவியர் சுவாமியாரையும் வாளுக்கு இரையாக்கினான். அதையறிந்த மாந்தைவாசிகள் தங்கள் மாதா கோவிலை மிகுந்த கவலையுடன் காத்துவந்தார்கள். சங்கிலியனின் இந்தக் கொடுங்கோன்மைக்காக இந்தியாவின் போர்த்துக்கேயத் தேசாதிபதியான தொம் கொன்ஸ்தந்தீன்தெ பிரகான்ஸா யாழ்ப்பாணக் குடாநாட்டில் பழிவாங்கினான். டச்சுக்காரர் வருமளவும் எளிமை மிகுந்த மாந்தைக் கத்தோலிக்க மக்கள் செபமாலைமாதாவின் பாதுகாவலில் தங்கள் வேதத்தை அனுசரித்து வந்தார்கள்.

1656-ம் ஆண்டளவில் போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில் முற்றாக அகற்றுப்போக வேத விரோதிகளான ஒல்லாந்தர் இங்கே ஆதிக்கஞ்செலுத்தத் தொடங்கினார். அவர்கள் கத்தோலிக்க கோவில்களை டச்சுக்காரத் துருப்புகளின் மண்டபங்கள், கிட்டங்கிகள் முதலியனவாக மாற்றியதையும் சத்திய வேத அனுசரணைகளைத் தடுக்க அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளையுமறிந்த மாந்தைக் கிறீஸ்தவர்கள் தங்கள் செபமாலைமாதா சுரூபத்தைப் பாதுகாப்பான வேறோரிடத்துக்குக் கொண்டுபோக வேணுமென்று கவலைகொள்ள லானார்கள். ஆனால் அவர்கள் மனந் தளர்ந்துபோயிருந்தார்கள். அவர்களுக்கு ஞானத்தைரித்தையும் உற்சாகத்தையுமூட்டக் குருமார் இருக்கவில்லை. சத்துராதியின் கையிற் சுரூபம் அகப்படாமற் பாதுகாக்கக் கண்டியரசனின் இராச்சியம் வாய்ப்பாக இருக்குமென்றெண்ணி ஊரவரின் சம்மதத்துடன் இருபது பத்தியுள்ள குடும்பங்கள் சுரூபத்தை எடுத்துக்கொண்டு 1670ல் கண்டி இராச்சியத்துக்குப் புறப்பட்டார்கள்.

சத்துருவுக்குப் பயந்து அந்தச் சிறுகூட்டம் மாதாவின் பாதுகாவலில் அங்குமிங்குமாக வன்னிக் காட்டில் அலைந்துதிரிந்தது. இராமேசுரத்திலிருந்து கண்டிக்குப்போகும் இராசபாதையில் பழைய குளமொன்றிருந்தது. அதற்கண்iமிலிருந்த கிராமத்துக்குத் தெய்வா தீனமாக வந்துசேர்ந்தது அந்தக்கூட்டம். அந்தக் கிராமத்தின் பெயர் மருதமடு. அங்கே கண்டியரசனுக்குச் சொந்தமான திறைசேரியுமிருந்தது. அங்கு வந்துசேர்ந்த மாந்தைக் கிறீஸ்தவர்கள் மாதாவுக்குத் தோத்திரம்பண்ணி, வேதத்தை அங்கு முதல்முறை நாட்டும் தினமாக அதனைச் செபத்தில் செலவழித்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் வேதகலாபனை காட்டாக்கினி போற் பரந்தது. மருதமடுவோ அமைதி நிறைந்திருந்தது. அங்குவந்து சேர்ந்த சொற்பகத்தோலிக்கரின் குன்றாத விசுவாசமும் காந்தலான பத்தியும், மாதாவின் மனதை எவ்வளவாகக் குளிர்ப்பண்ணியதென்றால், அலவுடைய சலுகையினால் அவர்கள் சேமமே பாதுகாக்கப்பட்டார்கள். டச்சுக்காரரின் கொடுவினையயினின்று விலகிக்கொள்ளுவான் வேண்டி 700 வேதக்காரர் ஏழு குருமாருடன் குடா நாட்டைவிட்டு தாய்நாட்டிலிருந்த பூநகரியைக்கடந்து வன்னிக்காட்டில் அமைக்கலம் புகுந்தார்கள். பயப் பிராந்திகொண்டவர்களாப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்து அவர்களும் புதுமையாக மருதமடுவை அடைந்தார்கள். ஆ! என்ன ஆச்சரியம். அடர்ந்த காட்டில் என்ன அதிசயமான சந்திப்பு. என்ன ஒருமனமான பயணம். வந்தவர்களும் மாதாவின் பாதநிழலில் மடுவையே தங்கள் அடைக்கலபுரமாக்கிக் கொண்டார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்துவந்த கிறீஸ்தவர்களுள் போர்த்துக்கேய தளகர்த்தனின் மகளான எலேனாவுமிருந்தாள். அவளிடம் விளங்கிய பத்தியையும் சீவிய முன் மாதிரிகையையும் கண்டவர்கள் அவளை "அர்ச்சியசிட்டவன்", அல்லது சந்தலேனா என்று அழைப்பார்கள். காலகதில் மடுவில் திறைசேரி உத்தியோகமாயிருந்தவனைச் சந்தனோ மணந்துகொண்டாள். அவ்விடத்தில் மாதாவின் பேரால் முதற்கோவில் கட்டுவித்த பாக்கியமும் அவளுக்கேயுரியது. அந்தத் தருமத்திற்காக அவளுடைய ஞாபகத்தை நிலைபரப்படுத்த எண்ணிய கிறீஸ்தவர்கள் மடுப்பதிக்கு இன்றும் வழங்கிவரும் பெயர்களுள் ஒன்றான'சிலேன மருதமடு" வென்ற புகழ்நாமத்தையுமிட்டார்கள்.

சிலேன மருதமடுவில் கத்தோலிக்கரின் தொகை அதிகரித்திருந்தபோதிலும், மாதாவுக்குத் தோத்திரமாக வருடாந்த உற்சவமொன்றை நடத்த அவர்களுடைய வருவாய் இடங்கொடுக்கவில்லை. டச்சுக்காரர் குருமாரை விரட்டித்திரிந்தபடியால் 30 வருடங்காளக (1655-1686) ஞான விசாரணை செய்யக் குருமாரில்லாமல் கிறீஸ்தவர்கள் கைவிடப்பட்டவர்களானார்கள். ஆசாரத்துக்குரிய யோசேவாஸ் முனிவரும் அவருடைய தியான சம்பிராதாயக் குருமாரும் இலங்கையில் வந்திறங்கியதிலிருந்து சத்தியவேதம் திரும்பவும் தழைக்கத் தொடங்கியது. குருமார் தொகை அதிகரிக்க இலங்கைத்தீவின் பல பாகங்களிலும் "மீசாம்"கள் தொடங்கப்பட்டன.

1695-ம் ஆண்டில் இலங்கைக்குவந்த பெத்று பெறாவு சுவாமியார் மருதமடுவையும், மாதோட்டப் பகுதியிலுள்ள மந்தையையும் பராமித்தார். 1706-ல் மாதோட்டக் கிராமங்களை சிலேன மருதமடுவை மத்தியதானமாகக்கொண்ட ஒரு "மீசாம்" பெறாவுசுவாமியாரின் மேற்பார்வையிலிருந்து வந்தது, தியானசம்பிரதாயக் குருமார் காலத்திலே மேற்சொன்ன சுவாமியார் மடுவிலே முதற்கோவிலைக் கட்ட, அவருக்குப்பின்வந்த வண. அந்தோனியோ தெ தவோறாசுவாமியார் அதைப்பெருப்பித்தும் திருத்தியும் வைத்தார். இவர் அதிக பலன்நிறைந்த பல வருஷங்களாக மிஷனறியாயிருந்து காலஞ்சென்றவர் "அவர் அநேக ஆண்டுகளும் பலன்களும் நிறைந்தவராய்த் தம்முடைய பிரயாசைக்கோர் ஞாபக சின்னமாகக் கட்டிய பல கோவில்களில் விசேஷமாக சிலேன மடுக்கோவிலையும் கட்டிவிட்டு மரணத்திரையுள் மறையலானார்". ஆங்கிலேயர் இலங்கைக்குவந்ததும் வேதகலாபனை ஓய்ந்து இடையூறில்லாமல் வேதத்தை அனுசரிக்கக் கத்தோலிக்கருக்கு விடுதலை கிடைத்த ஓர் நவ யுகம் உதயமாயிற்று. கோவைச்சுவாமிமாரின் மேற்பார்வையில் செழித்துவந்த மடுக்கோவிலுக்கு "நடு உழவில் நந்தை அறுந்தது" போன்ற இடையூறு நேர்ந்தது. 1834ல் தியான சம்பிரதாயச் சபை குலைக்கப்பட்டது.

கோவைக்குருமார் காலத்தில் மன்னாரிலும் அதைச் சூழவர இருந்த இடங்களிலுமிருந்த கிறீஸ்தவர்கள் மருதமடுவுக்கு யாத்திரையாய்ச் சென்றார்களென்று காணக்கிடக்கிறது. மன்னார்க் கோட்டில் சக்கிடுத்தாராய் இருந்த பறங்கியரான ஸ்ரீ மொயிஸ் என்பவர் கோயிலின் இடவசதியீனத்தைக்கண்டு விசுவாசிகளின் உபயோகத்துக்காக 1823-ல் மண்சுவர் எழுப்பி ஓர் குடிசைக்கோயிலைக் கட்டிவிட்டார். அக்குடிசைக்கோவில் 8 அடி உயரமுள்ள 3 சுவர்கள் உடையதாய் குதிரை லாடன்போன்ற வடிவத்தில் அரைகுறையாய்க் கட்டியிருந்தது. அதன்நடுவில் ஒரு மேசையிருந்தது. அது பீடமாகப் பாவிக்கப்பட்டது. கோயிலின் பின்புறத்தில் குருமார் தங்குவதற்குச் சிறு அறை ஒன்றும் இருந்தது. "டச்சுக்காரருடைய கோபாவேசத்தினின்று காக்கப்பட்டதும் மாந்தையில் போர்த்துக்கீசருடைய கோயிலின் நடுபிடமாக மன்னாரைச் சேர்ந்தவரும் பத்தியுள்ளபறங்கியருமான ஸ்ரீ மொயிஸ் என்பவர் கட்டிய ஆலயம் அதுவே." பிற்காலம் பாரியவோர் கட்டிடமாக எழும்பிவிருந்ததும் அகில இலங்கைக் கத்தோலிக்க சமூகத்திற்குப் பிரதானவோர் புண்ணியN~த்திரமாக விளங்கவிருந்ததும் அந்த எட்டடி உயரமுள்ள மண்கோவிலே என்பது ஆச்சரியத்துக்குரியது. தேவ செயல்களெல்லாம் அதிசயமானவையன்றோ.

கோவைக் குருமார்சபை குலைக்கப்பட றோமையிலுள்ள திருச்சபை அதிகாரிகள் இலங்கைத் திருச் சபைக்கு வேறு ஏற்பாடுகள் செய்தார்கள். பெற்றக்கினி ஆண்டவரின் தலைமையில் 1846-ல் வடபாக விக்காரியம் ஆக்கப்பட்டது, திருச்சபையைவிட்டுப் பிரிந்துபோன பிரிவினைச்சபையார் 1849-ல் மடுக்கோயிலுக்கு உரிமைபாராட்டத் தொடங்கியபடியால் யாழ்ப்பாண மேற்றிராசனத்திலுள்ள அமலோற்பவ மரியநாயகிசபை என்றறியப்படுகிற "ஓபிளேற்" சுவாமிமாருக்கும் பிரிவனைச்சபையாருக்குமிடையில் 1851 தொடக்கம் வழக்கு நடந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் மடுவில் மீசாம்பார்த்துவந்த வண. ஜே. புசான்சுவாமியாரைப் பிரிவினைச்சபையாரிற் சிலர் அடித்து வெளியே துரத்தியபோதிலும் அவர் கோவிலை விட்டகல மறுத்துவிட்டார். 1874-ஆம் ஆண்டு ஆவணிமாசம் 26-ந்தேதி பிரிவினைக்காரர் சார்பாக மன்னார்க்கோடு தீர்ப்புச்சொல்ல அத்தீர்ப்புக்கு மாறாக விசுப்பாண்டவர் கொழும்புச் சுப்பிறீங்கோட்டுக்கு (அப்பீல்) மனுப்பண்ணியிருந்தார். இருபத்திநான்கு வருடங்காளக வழக்கு நடந்தது. கடைசியாக யாழ்ப்பாண விக்கார் அப்போஸ்தொலிக்குவே அதற்கு உரிமைக்காரர் என்று 1875-ம் ...... ஆனி 24-ந்தேதி சுப்பிறீங்கோடு தீர்த்தது.

பெற்றக்கினி ஆண்டவருக்குப்பின்வந்த செமேரியா மேற்றிராணியார் கோயிலுக்கு அதிகந் திருத் தஞ்செய்ய முடியவில்லை. செமேரியா ஆண்டவருக்குப் பின் 1868-ல் பொஞ்ஜீன் ஆண்டவர் மேற்றிராணியாராய் வந்தபின் 1870-ல் மடுயாத்திரை தொடங்கியது. 1872-ல் புதுமேற்றிராணியார் மடுவிற்குமுதற் தரிசனை தந்தபோது அது இருந்த கேவலநிலையைக் கண்டார். மண்கோவிலைக்கண்டவேளை அவர்மனம் சோகம் கொண்டது. "அந்தப் பேர்போனதும் இழிகோலம் நிறைந்தலுமான புண்ணிய N~த்திரத்தைக் கண்டதும் என் உள்ளம் துக்கத்தில் மூழு;கியது. ஒரு ஓபிளேற் மேற்றிராணியார் தம்மாசில்லாத் தாயாருடைய வீட்டை அப்படிப்பட்ட கேவல நிலையிலிருக்க விட்டாரென்ற பழிச்சொல்லிற்கு இடங்கொடேன் என்று அன்றே அங்கே கபதஞ்செய்தேன். அதி பரிசுத்த இராச கன்னிகைக்கு அந்த வன்னிக்காட்டில் ஒரு அலங்காரமான கோவில் நிருமாணிக்க வேணு மென்று தீர்மானித்தேன்" என்ற பொஞஜீன் ஆண்டவர் சொன்னாராம்.

உடனே மேற்றிராணியார் புதுக்கோவிலுக்கு முதற்கல்லு ஆசீர்வதித்து, இப்போது நாங்கள் காணும் கோவில்கட்டிடத்திற்கு 1872-ம் ஆண்டு ஆவணிமாசம் 8-ந் திகதி அத்திவாரக் கல்லு நாட்டினார். அவருக்குப்பின் வந்த மெலிசன் ஆண்டவர் அந்த வேலையைத் தொடர்ந்து நடத்தினார். அதிகப்பற்றான கட்டிடவேலை "யூலன்" விசுப்பாண்டவர் மேற்பார்வையிலேயே நடந்தது. வண, பூலாங்சுவாமியார் கோவிலுக்கு விசித்திரமான முகப்பு அமைத்தார். பரிபாலனசுவாமிமாரின் அயராத முயற்சியின் பலனே, நாம் இப்பொழுது காணும் எழில் நிறைந்த தேவாலயம். 1870-ம் வருஷம் பொஞ்ஜீன் விசுப்பாண்டவர் மடுக்கோவில் வருடாந்த உற்சவம் ஆடிமாசம் 2ந் திகதியில் நடைபெறவேண்டுமென ஏற்பாடு செய்தார். "அந்நாட் தொடக்கம் இந்த உற்சவம் ஆயிரம் பதினாயிரக் கணக்கான தொழும்பர்களை வருடாவருடம் கவர்ந்துகொண்டே வருகிறது." நான்கு வருடங்களின் பின் அவர் (மேற்றிராணியார்) பிள்ளைக்குரிய தம் வணக்கத்திற்கும் அன்பிற்கும் அடையாளமாக பொன்னிற் செதுக்கி நவரத்தினங்கள் பதித்து சித்திர வேலைப்பாடுசெய்த மணிமகுடமொன்றை மடுமாதாவின் அற்புதமான சுரூபத்தின் சிரசில் புனைந்தார்.

பாலம்பிட்டியிற் சுட்ட செங்கற்களைக் கொண்டு புவாசோ சுவாமியார் குருமனையையும் சமையற்சாலையையும் கட்டினார். வண. கூர்டொன் சுவாமியார் கோவில் அத்திவாரத்தைப் பாலம்பிட்டிpலிருந்து கொண்டுவந்த கருங்கல்லாற் கட்டினார். வண. கூர்டொன் சுவாமியார் கோவில் அத்திவாரத்தைப் பாலம்பிட்டிpலிருந்து கொண்டுவந்த கருங்கல்லாற் கட்டினார். முடுவில் முதற்கிணறு வெட்டியவரும் அவரே. இரண்டாவது கிணறு வண. குறெற் சுவாமிhரால் வெட்டப்பட்டது. நற்குணைச் சிற்றாலயத்தையும் அத்துடன் சேர்ந்த அறைகளையும் வண. மசியே சுவாமியார் கட்டிவிட்டார். அவரே மூன்றாவது கிணறு வெட்டியவர். "மசியே" சுவாமியார் தொடக்கிவிட்ட பீடஸ்தானக் கட்டிடப்பகுதியைச் சிலதிருத்தங்களுடன் வண. மேரி சுவாமியார் செய்துமுடித்தார். கோயிற் கூரைக்கு வேண்டியவைகளைச் சேகரித்ததும் முன்றில் அத்திவாரக் கட்டிடத்தைத் தொடங்கியதும் வண. டினோ சுவாமிhர். கட்டிடவேலைக்குத் தேவையான செங்கற்களை அங்கேயே சுடுவித்துக் கோவிலின் அதிகப்பற்றான வேலையை வண. அந்தோனிச் சுவாமியார் முடித்தார். இலங்கையிலுள்ள கோவில் தூண்களில் ஆக உயரமான இந்தக் கோவில் தூண்கள் வவுனியா, திரிகோணமலைப் பாதையிலுள்ள மணியர்குளத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. மற்றச் சகலவேலைகளுக்கும் பொதுவில் பொறுப்பாளியாய் இருந்தவர் வண. ஒலிவடசுவாமியாரே. குருமாருக்கு அறைகளும் மற்றும் வசதிகளும் செய்து யாத்திரிகருக்குச் சிலவீடுகளைக் கட்டியவரும் இவர்தான். யாத்திரிகர் வசதிக்காகக் கட்டியிருக்கும் மற்றக் குடிசைகளும் வீகளும் அவருக்குப்பின் வந்த குருமாருடைய வேலை. மடு நந்தாவனத்திற்கு எழிலைக் கொடுப்பதும், தற்போது யாத்திரிகர் குளிப்பதற்கு வசதியாயிருப்பதுமான தடாகம் வண. ஒலிவ்சுவாமியாரின் நீர்ப்பாசன நிர்மாண நிபுணத்துவத்திற்கு ஓர் சான்றென்றால் மிகையாகாது.

மடுப்பதியில் உள்ள லூர்துகெபியும் விசேஷ கவர்ச்சிக்குரியது. குளிப்பதற்கென்று சிமென்றால் அமைத்திருக்கும் தண்ணீர்த்தொட்டிகள் குறிப்பிடத்தக்கவை. வண. உக்தின், வண. புறோகான்சுவாமிமார் யாத்திரிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொறுப்புடையவர்கள். கோவிலில் இருந்த மரப்பீடத்திற்குப் பதிலாக 1944-இல் பளிங்குக்கற் பீடம் அமைத்ததும், 1947-இல் மின்சார இயந்திரமொன்று நிறுவி வீதிகள், வீடுகள்தோறும் வெளிச்சந் தந்து தவியதும் வண. புறோகான் சுவாமியாரின் பெரும் முயற்சியின் பயனாம். இலங்கையில் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கும் சிறுதொகையான கோயில்களும் மடுக்கோயிலுமொன்று, அதை 1944-ம் ஆண்டு ஆனிமாசம் 25-ந் திகதி கியோமார் விசுப்பாண்டவர் அபிஷேகஞ் செய்துவைத்தார்.

தற்போது மேற்றிராணியாராயிருக்கும் மகாவந் கியோமார் ஆண்டவரின் மேற்பார்வையில் மடுக்ஷேத்திரம் திருப்திகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆண்டவர் அவர்கள் 1924-ம் ஆண்டு பங்குனிமாசம் 9-ந்திகதி மேற்றிராணித்துவ அபிஷேகம்பெற்றுத் தமது கன்னிக் கைங்கிரியமாக மடுக்கோவிலின் சதாப்த விழாவை அவ்வருடம் ஆடிமீ 2-ந்திகதி கொண்டாடினார். திருவிழா முன்னில்லாத பக்தி ஆடம்பர வைபவங்களுடன் நடந்தது மாத்திரமின்று, யாத்திரிகரின் தொகையும் முந்திய வருடங்களிலும் பார்க்க அதிகரித்திருந்தது. ஆண்டவர்தாமே பார்க்க அதிகரித்திருந்தது. ஆண்டவர்தாமே சிறப்பாய் ஒழுங்குபடுத்திய "மகா மனந்திரும்புதலியக்க" மென்னும் மடுமாதாவின் மகா சுற்றுப்பிரகாரத்தை நாம் எந்நாளுமே மறக்கமுடியாது. சரித்திரத்தில் முதல்முறையாக மடுமாதாவின்சுரூபம் 1948-ம் ஆண்டு பங்குனித்திங்கள் 15-இல் திருப்பதியைவிட்டுப் புறப்பட்டு வைகாசி 3-ந்திகதி வரையும் யாழ்ப்பாண உத்தியானம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.

மாதா சுரூபம் போன இடமெங்கும் மங்களமான வரவேற்பு; இருகரம் கூப்பி இறைஞ்சிய வரவேற்பு; அந்நாட்களில் உளுத்து, வாடிவதங்கியிருந்த உள்ளங்களெல்லாம் புத்துயிர்பெற்றன். குளிர்ந்து போயிருந்த இருதயங்களெல்லாம் ஞானக் கொழுந்து விட்டெரியத் தொடங்கின. வருஷக் கணக்காய்க் கோயில், கொம்பிசமில்லாமல் அலைவாய்ப்பட்ட ஆத்துமாக்களை மாதா தேடிவந்து மனந்திருப்பிய மேரையை வருணிக்க வாக்குண்டோ? பிதாவின் வீட்டிற்குத் திரும்பிய ஊதாரிகள் எத்தனை? இரவிரவாய்த் தீர்ந்த ஞானப்பிணிகள் எத்தனை? பாவப்பழி ஒழித்து பரமன்பதம் பணியப் படித்த மனம் எத்தனை? தேவ ஊழியத்தில் தீவரமுயற்சி எடுக்கத் தைரியங்கொண்ட இளம் இதயங்களெத்தனை? பரமன் திருப்பலியில் பலன் நிறையப் பங்குகொள்ளப்பயின்ற பக்தர் எத்தனை? செபத்துடன் தபஞ் செறிந்த செபமாலைகள் எத்தனை? மாதாவின்மாலை ஓதுகையில் ஞானமதுவுண்ட மதுகரங்கள் எத்தனை? இந்த நன்மை யெல்லாவற்றையும் செய்தது மடுமாதாவின் திருச்செயலே.

இலங்கைக் கத்தோலிக்கர் தேவதாயாரில் உருக்கமான பத்தியுள்ளவர்கள். அப்பத்தியின் உச்சநிலையை மருதமடுவில் நடக்கும் பல திருவிழாக்காலங்களில் காணலாம். மடு யாத்திரை ஒரு ஞானஒடுக்கம். யாத்திரி
கர் தம் பாவங்களுக்கு விமோசனம்தேடி, பச்சாத்தாபத்துடன் பாவசங்கீர்த் தனஞ்செய்து சற்பிரசாதம் உட்கொண்டு அடிக்கடி செபஞ்செய்து தேவ நற்கருணை சந்தித்தும் செபமாலையைத் தியானித்தும் வருவார்கள். பாவிகளின் தஞ்சம் மடுமாதா: பச்சாத்தாபிகளின் அடைக்கலமும் அவ. சஞ்சலப்படுவோருக்கும் ஆறுதல் தந்து, அண்டிவந்தோருக்கு அபயங்கொடுத்து அனைவரைம் பரமன் அடிசேர்க்கும் பரம நாயகி. இது சம்பந்தமாக உத்தரவாதம் பெற்ற நூலாசியர் பின்வருமாறு எழுதுகிறார். மாதா பக்திக்கு மடைதிறந்துவிடுவது மடுப்பதி. மேற்றிராணியார் மாதாவிற் கொண்டிருந்த பக்தி அநேகரை அப்பதிக்கு வரத் தூண்டியது. "வன்னிக்காட்டின் புதுமை" என்னும் சிறப்புநாமம் பெற்ற அப்பாரி கோவிலை அதிக செலவிட்டுக்கட்டி அலங்கரித்தார். தாமே நின்று திருநாட்களை நடத்தி அவைகளிற் தாமும் பங்குபற்றி நோவினைவேளைகளில் பிரசங்கமுஞ் செய்வார். வருடந்தோறும் இந்தத் தலத்திற்கு வரும் யாத்திரிகரின் தொகை இளம்பிறைபோல் வளர்ந்துகொண்டே இருந்தது. ஆடி 2-ந் திகதி சிவவேளை நூறாயிரம் சனம் வரையிலும் வருவார்கள். கத்தோலிக்கர் மாத்திரமல்ல பல பிரிவுபட்ட புறொட்டெஸ் தாந்தரும், இந்துக்கள், புத்தர், சோனகரும் பைசாச கணங்களையும் இயற்கைப் பொருட்களையும் வணங்குவோரும் அருகே இருந்து தம் வித்தியாசங்களை மறந்து, மாதாவை வாயார வாழ்த்தவர்கள், பல சாகியத்து ஆண் பெண் பாலரும் மடுமாதாவிற்குத் தோத்திரஞ் செலுத்தியபின் திருநாள்முடிவில் அநேக வருடங்களாக நடத்தப்படும் 'விருந்து' உண்பார்கள். ஆயிரக் கணக்கானோர் பாவசங்கீர்த்தனஞ்செய்து மாதாவின் பாத நிழலில் முற்றாக மனந்திரும்பி விடுவார்கள். பிறசமயத்தவர்களும் சத்தியவேதத்தின் உண்மையை உணரத் தொடங்குவார்கள். இதற்கென்று ஆயத்தமாய் வந்தவர்கள் மடுவிலேயே ஞானத்தீட்சைபெற்று சத்தியமறையில் சேருவார்கள்.

ஆடி 2-ந்திகதி நடக்கும் பிரமோற்சவதினத்தில் வந்து குவியும் சனக்கும்பலின் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கத்துடன் வேறுபல தினங்களிலும் திருவிழா நடத்த ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. பங்குனிமாதம் நான்கு திருவிழாக்களும் வைகாசி, ஆவணி, ஐப்பசி, மாதங்களில் முறையே ஒவ்வொரு திருவிழாவும் நடக்கின்றன. வருடா வருடம் பங்குனிமாதம் 11-ந்திகதி ஒரு திருநாள் நடத்தும்படி 1943-இல் உத்தரவுதந்ததற்காக சலாபத்தைச் சேர்ந்த பிட்டிப்பண்ணைவீதிக் கிறீஸ்தவர்கள் ஆசாரத்துக்குரிய கியோமார் ஆண்டவர். அவர்களுக்கும் வண. ஜே. புறோகான் சுவாமியார் அவர்களுக்கும் விசேஷித்த கடப்பாடுடையவர்கள். இத்திருநாளைச் சிறப்பலங்காரத்துடன் கொண்டாட இக்கிறீஸ்தவர்கள் காட்டும் உற்சாகம் போற்றற்பாலது.

மடுப்பதி பிரபலியம்பெற்றோங்குவது யாழ்ப்பாண மேற்றிராசன ஓபிளேற் சுவாமிமாரின் அயரா உழைப்பின் பயனேயாகும். வருஷந்தோறும் யாத்திரிகரின் தொகை அதிகாரித்துக்கொண்டே வருகிறது. யாத்திரிகரின் வசதிகளை விசாரித்து உணவுப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதுமல்லாமல் அவர்களுக்குக் காட்டப்படும் அன்பாதரவும் மழைவேளைகளில் செய்யும் உதவிகளும் மடுப்பதியின் மறக்க இயலாத நாட்கள். இப்புனித புண்ணிய தலத்தைப்பற்றி வாசகநேயர் உய்த்துணரும்படி சொற்பகாலத்திற்குமுன் வெளிவந்த நூலிலிருந்து சிலவற்றை ஈண்டு தருகிறோம்.

"கோவைக் குருமார் தேவதாயாரின் பேரால் இலங்கையில் அடியிட்ட கோவில்கள், புண்ணியதலங்கள் யாவற்றிலும் மாதோட்டப்பகுதியிலுள்ள மடு ஆலயத்தைப்போல் கீர்த்திவாய்ந்தது வேறில்லை. அக்குருமார் காலத்திலேயே மருதமடு புதுமைநிறைந்த தலமாகப் பெயர்பெற்றிருந்தது. மடுக்கோயில் எல்லைக்குள் எந்த விஷப்பாம்பு தீண்டினாலும் வினை நேராது என்பது மக்களின் பொது நம்பிக்கையாய் இருந்து கொண்டே வருகிறது. முன்னிருந்த குருமார் நன்றாய்ப் பரப்பியிருந்த மாதா பக்தியை மாசில்லா மரியாயின் பரித்தியாகிகள் சென்ற இடமெல்லாம் செழித்து வளரச் செய்யும் முயற்சியே மடுப்பதியையும் பிரபலிய யாத்திரைத் தலமாக ஓங்கப் பண்ணினது. மருதமடுவைச் சார்ந்த அம்முயற்சியின் கொடுமுடியான வைபவம் இலங்கையில் கத்தோலிக்க கொண்டாட்டத்தில் முன்னொருபோதும் கண்டிராத சனத்திரளின் சமுகத்தில் புதுமை வாய்ந்த செபமாலை மாதாவின் திருச்சுரூபத்திற்கு 1924-ம் ஆண்டு ஆடிமாசம் 2-ந்திகதி முடிசூட்டியதேயாம்.

----
St. Joseph's Catholic Press, Jaffna. 339-49

-----------------------------------------------------------